Saturday, December 31, 2016

பில்லி, சூனியத்திலிருந்து உங்களைக் காக்கும் அரியவகை தெய்வீக மூலிகை! – அபூர்வ தகவல்!

பில்லி, சூன்யத்திலிருந்து உங்களைக் காக்கும் அரியவகை தெய்வீக மூலிகை! – அபூர்வ தகவல்!

பில்லி, சூன்யத்திலிருந்து உங்களைக் காக்கும் அரியவகை தெய்வீக மூலிகை! – அபூர்வ தகவல்!
நம்முன்னோர்கள் பல அரிய வகை மூலிகைகளை கண்டறிந்து, நமக்கு அளித்துச் சென்றுள்ள‍னர். ஆனால் நாமோ மேல்நாட்டு மோகம் காரண மாக அவைகளை புறந்தள்ளிவிடுகிறோம். மூலிகைகள் நோய்களில் இரு ந்து நம்மை
காப்பாற்றுவது மட்டும் அல்ல‍. பில்லி சூன்யத்திலிருந்தும் இவ்வ‍ளவு ஏன் கண் திருஷ்டியில் இருந்தும் நம்மை காத்து நிற்கிறது. அந்த தெய்வீக மூலிகை பற்றித்தான் இந்த பதிவு
ஆகாச கருடன் என்ற இந்த மூலிகை வித்தியாசமா னது தெய்வீகமானது. இந்த மூலிகை காற்றில் உள்ள ஈரக்காற்றை உறிஞ்சியே வளரும் தன்மை உடையது. இந்த கருடன் கிழங்கை வீட்டின் வாசலில் தொங்க விடுவதால் வீடு சுபிட்சமாகும். இந்த கிழங்கு சில மலைப் பகுதிகளில் மட்டுமே கிடை க்கிறது.
ந்த கிழங்கு வீட்டில் இருந்தால் விஷ ஜந்துக்கள் எதுவும் வீட்டில் வராது. இந்த கிழங்கை வீட்டில் தொங்க விடும்போது ஏவல், பில்லி, சூனியம், திரு ஷ்டி போன்றவற்றில் இருந்து நம்மை முற்றிலுமா க காக்கிறது. இதை மீறிகெட்ட சக்திகள் உள்நுழை யும்போது இதனின் உயிர்கொடுத்து நம்மை காப்பாற்றும் தன்மை உடையது இந்த மூலிகை.
இது அழுகிவிட்டால் நம்மை கடும் துர்சக்தியில் இருந்து காத்து அதன் உயிரை இழந்திருக்கிறது என உணர்ந்துகொள்ளவேண்டும். தாவரத்திற்கு உயிர் உள்ளதை இம்மூலிகைமூலம் மிக எளிதா க புரிந்து கொள்ளலாம். இந்த ஆகாச கருடன் ஆகாய பூதத்தின் சக்தியை அதிகம் கொண்ட கிழ ங்கு என்பதால் இதில் உயிர் சக்தி அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

மச்சம் – பல அரிய தகவல்கள்.

சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். அன்றாடம் செய் யும் ஒவ்வொரு செயலுக்கு ஒரு வழிமுறை வைத்தி ருக்கிறார்கள். இதை இப்ப டித்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கு சாஸ்திர, சம்பிரதாயம் என்று வைத் திருக்கின்றனர். ஆய கலைகள் 64&ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒருமரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்க ள் பல்வேறு கிளைக ளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையா க விளங்குவது அங்க லட் சண சாஸ்திரம்.
நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம் காலமாக நடை முறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும் பாலான பலன்கள் ஒத்துப் போவதை நடைமுறையில் காண்கிறோம். சில ருக்கு திடீர் அதிர் ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும் போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக் கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்று வதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிள களவு மற்றும் அதைவிட பெரிதா கக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையா ளமாக குறி ப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தர வல்லது.
ஆண்களுக்கான மச்ச பலன்
புருவங்களுக்கு மத்தியில் & நீண்ட ஆயுள்
நெற்றியின் வலது புறம் & தனயோகம்
வலது புருவம் & மனைவியால் யோகம்
வலது பொட்டு(நெற்றி) & திடீர் அதிர் ஷ்டம்
வலது கண் & நண்பர்களால் உயர்வு
வலது கண் வெண்படலம் & புகழ், ஆன் மீக நாட்டம்
இடது புருவம் & ஏற்ற, இறக்கம், செல வாளி
மூக்கின் மேல் & சுகபோக வாழ்க்கை
மூக்கின் வலதுபுறம் & நினைத்ததை அடை யும் அம்சம்
மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி & ஆவணம், கர்வம், பொறாமை
மேல், கீழ் உதடுகள் & அலட்சியம், காதல் வயப்படுதல்
மேவாய் (உதடுகளுக்கு மேல்) & செல்வாக்கு, இசை, கலைத் துறையில் நாட்டம்
வலது கன்னம் & வசீகரம், தயாள குணம்
இடது கன்னம் & ஏற்றத்தாழ்வு
வலது காது நுனி & சில கண்டங்கள் வர லாம்
இடது காது நுனி & தகாத சேர்க்கை, அவ மானம்
காதுகளின் உள்ளே & பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை & திருமணத்துக்கு பிறகு யோகம்
கழுத்தின் வலதுபுறம் & சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
இடது மார்பு & ஆண் குழந்தைகள் அதி கம், பெண்களால் விரும்பப் படுவார்
வலது மார்பு & பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு & பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
அடிவயிறு & திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை
புட்டம் & அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு
பெண்களுக்கான மச்ச பலன்
நெற்றி நடுவே & புகழ், பதவி, அந்தஸ்து
நெற்றி வலதுபுறம் & தைரியம், பணிவு இல்லாத போக்கு
நெற்றி இடதுபுறம் & அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
மூக்கின் மேல் & செயல்திறன், பொறுமை சாலி
மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண் களால் அவமானம்
மூக்கின் நுனி & வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் & ஒழுக்கம், உயர்ந்த குணம்
மேல் வாய் பகுதி & அமைதி, அன்பான கணவர்
இடது கன்னம் & வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
வலது கன்னம் & படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
வலது கழுத்து & பிள்ளைகளால் யோகம்
நாக்கு & வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் & கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் & சொத்து சேர்க்கை, தயாள குணம்
தலை & பேராசை, பொறாமை குணம்
தொப்புளுக்கு மேல் & யோகமான வாழ்க்கை
தொப்புளுக்கு கீழ் & மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
தொப்புள் & ஆடம்பரம், படாடோபம்
வயிறு & நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு& ராஜயோகஅம்சம், உயர்பதவிக ள்
இடது தொடை & தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
வலது தொடை & ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை
புட்டங்கள் & சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை.
மச்சம் பற்றிய மேலும் பல அரிய தகவல்கள்
கை ரேகையில் பெண்களுக்கு இடது கை, ஆண்களுக்கு வலது கை என்பது போல மச்சங்களிலும் உண்டா?
ஆம், மச்சங்களுக்கும் இது பொருந்தும். பெண்க ளுக்கு இடது கையில் இருக்கும் மச்சத்தினால் அதிக பாதிப்பும், ஆண்களுக்கு வலது கையில் இருக்கும் மச்சத்தினால் அதிக பாதிப்பும் ஏற்படும்.
முகத்தில் பொதுவாக மச்சம் இல்லாமல் இருப் பது நல்லது என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக உதடு, கண், புருவம், இமைகளுக்கு மேலே மச்சம் இருக்கக் கூடாது என்று கூறுகிறது.
நெற்றிக்கு மேலே தலையில் எல்லாம் மச்சம் இருக்கலாம். ஆனா ல் முன் தலையில் இருப்பதை விட, பின் தலையில் இருக்கலாம்.
சிலருக்கு கருப்பையும், பச்சையை யும் கலந்த மச்சங்கள் இருக்கும். அது பொதுவாக உடல் பகுதியில் உண்டாகும். அதுபோன்ற மச்சங்க ள் உடலின் பின்பகுதியில் ஏற்படுவது நல்லது.
என் தாத்தா சில ஜாதகங்களைப் பார் த்ததும் இந்த பெண்ணுக்கு நாகதோ ஷம் இருக்கிறது என்பார். அந்த பெற்றோர் கள் இல்லையே, எந்த தோஷமும் இல்லை என்று சொன்னார்களே என்று கூறுவார்கள். அதற்கு, முட்டியில் இருந்து தொடைக்கு இடைப்பட்ட பகுதி யில் பச்சையும், கருப்பும் கலந்த நிறத்தில் பாம்பு படம் எடுத்தது போன்ற ஒரு மச்சம் இருக்குமே என்று சொல் வார்கள். அவர்களிடம் கேட்டால் அது உண்மையாக இருக்கும்.
லக்னாதிபதியுடன் ராகு சேர்ந்தாலோ சந்திர னுடன் ராகு சேர்ந்தாலோ, பூர்வ புண்ணியாதி பதியுடன் ராகு சேர்ந் தாலோ இதெ ல்லாம் ஏற் படும்.
பொதுவாக கிரகங்களில் பார்த்தால் ராகு, கேதுதான் மச்சங்களை வெளி ப்படுத்தும் கிரகங்கள். அடுத்ததாக செவ்வாயை சொல்லலாம். செவ்வாய் ரத்தத்தை வெளிப்படுத்தும் கிரகம். 
செவ்வாய் நீச்சமாகி, ராகு கேதுவுடன் சேர்ந்து சனியின் பார்வை பெற்றா லே உடல் எங்கும் மச்சமாக – அகோரமாக காட்சி அளிப் பார்கள் என்று ஜோதிட அலங்கார நூல் சொல்கிறது. ஒரு உயரிய பதவியில் வகிப்பவரு க்கு அதுபோன்ற நிலை உள்ளது.
பெண், ஆண் உறுப்புகளில் மச்சங்கள் இல்லா மல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால், விரும்பி விபச்சாரத்தில் ஈடுபடுவது, விபச்சார விடுதிகளுக்குச் செல்வது போன்ற குணங்கள் இருக்கும்.
வாழவந்த பெண்ணிற்கு வலது பக்கம் மச்சம், ஏறு பிடிக்கிற மச்சானுக்கு இடது பக்கம் மச்சம் என்று ஒரு பழமொழி இருக்கிறது.
பொதுவாக ஆண்களுக்கு இடது பக்கம் மச்சம் இருப்பது அதிர் ஷ்டத்தின் வெ ளிப்பாடு என்று நூல்கள் சொல்கின்றன. பெண்க ளுக்கு வலது பக்கம் மச்சம் இருப்பதும் நல்லது.
அதேபோல நெஞ்சுப் பகுதியில் மச்சம் இரு ந்தால் கொஞ்சம் சுகவாசியாக இருப்பார்கள் என்று சொல் லலாம். பொதுவாக பின்புறம் இருக்கும் மச்சத்தால் திடீர் பணப்புழக்கம், அதிர்ஷ்மாகவும் இருப்பார்க ள் என்று சொல்வார்கள்.
பொதுவாக கால்களில் மச்சம் இருப்பவர்க ளுக்கு காலில் சக்கரம் என்று சொல்வார்க ள். ஒரு சிலர் உட்கார்ந்து கொண்டே காலை ஆட்டிக் கொண்டே இருப்பா ர்கள். அது உள்ளங்காலில் இருக்கும் மச்சத்தின் காரணமாகத்தான் இருக்கும். ஏனெனில் உள்ள ங்காலில் இரு க்கும் மச்சம் ஒரு அசை வைக் கொடுத்துக் கொ ண்டே இருக் கும். ஓடிக் கொண்டே இருப்பார் கள். 
மான் போன்று மச்சம், மீன் போன்று மச்சம் என்பதெல்லா ம் உண்மையா?
உண்மைதான். எந்த நட்சத்திரக் கூறில் ராகு, கேது, செவ்வாய் எல்லாம் அமைந்திருக்கிறதோ அதன் அடிப்படையில் மச்சத்தின் வடிவம் வேறு படும். மச்சம் என்றால் மீன் என்றும் ஒரு அர் த்தம் உண்டு.
மீனைப் போன்று இருக்கும் மச்சம் எல்லாம் வி சேஷம். உள்ளங்க¨யில் எல்லாம் மச்ச ரேகை கூட உருவாகும். மச்ச ரேகை உண்டானால் மன்னனாகக் கூட ஆவார்கள்.
மீனைப் போன்ற மச்சம் அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு. இப்போ தெல்லாம் அது அரிதாகிவிட்டது.
நெல்லிக்காய் போல, மாவடு போல எல்லாம் மச்சம் உண்டு. உலகத்தில் எங்கோ ஒருவர் இது போன்ற மச்சங்கள் கொண்டிருப் பர்.
பிறப்பில் காணப்படும் மச்சம்  Moles
 இது ஆங்கிலத்தில் மோல்/ நீவஸ் என அழைக்கப்படு ம். தற்போது செய்யப்பட் டுள்ள ஆய்வுகளின் பிரகாரம் இந்த மச்சங்கள் பொதுவாக ஒருவரது ஆயுளில் முதல் 20வருடங்களில் ஏற்படுகின்றன.  உலகில்  100  குழந்தைகளில் ஒரு குழந்தை இதனால் பாதிக்கப்படு கிறது. இவை பாதகமற்ற அதீத கல வளர்ச்சியால் ஏற்படுகின்றன. எனினும் பிறக்கும்போது காணப்படு ம் சில மச்சங்கள் பிற்காலத்தில் மெலனோமா எனப்படும் தோல் புற்று நோய் உருவாகக்காரணமா கின்றன.
இந்த மச்சங்கள் தோலின் கீழான அல்லது தோலின் மெற்பரப்பில் நிறப் பொருட்களால் நிறம் ஊட்டப்பட்டு காணப்படலாம். பெரும்பாலானவை மெலனினை உற்பத்தி செய்யும் மெலனோசைட்டுக்கள் எனப்படும் கலங் களால் ஏற்படுகின்றன. மெலனின் நிரப் பொருள் ஆனது இவற் றுக்கு கருமை நிறத்தை வழங்குகிறது.
இவற்றில் பல வகைகள் உள்ளன. அவைபின் வரு மாறு
தோலின் மேற்படைக்கும் அடியில் இருக்கும் இழை யத்துக்கும் இடையில் காணப்படும் மச்சம் – இது தட்டையாகவும் கறுப்பு அல்லது மண்ணிறமாகவும் காணப் படும்.
கூட்டு மச்சம் – இது தோலின் மேற்பரப்பு முதல் இழையம் வரை காணப்படும். இது சற்று உயர்ந்து காணப்படுவதுடன் கறுப்பு அல்லது மண்ணிறமாகக் காணப்படும்.  தோலின் கீழான இழையத்தில் மாத்திரம் காணப்படும் மச்சங்கள் சற்று உயர்ந்தும் தசையின் நிறமாகவும் காண ப்படும்
நீலமச்சம் – இது தோலின் மிக ஆழமான படையில் உள்ளதுடன் மெல னோசைட்டுகள் காரணமாக நீல நிறத்தைப் பெறுகிறது.
இராட்சத உருவமான மச்சம் – இவை பெரிய நிறமூட்டப்பட்ட உரோ மங்களைக் கொண்ட மச்சமாகும்.
மேலணியின் உள்ளே காணப்படும் மச்சம் – இது வாய் மற்றும் இலிங்க உறுப்புக்களில் காணப்படும். வாயில் பொதுவாக அண்ண த்தில் காணப்படும்
பிறப்பு முதலான மச்சம் – இது பிறப்பின்போது அல்லது அதனை அண்மித்து சிறிய அல்லது பெரிய அளவில் காணப்படும். சிறிய மச்சங்கள் மெலனோமா புற்று நோயை உருவாக்கக் கூடிய ஆபத்து குறைந்தளவு உள்ளவை. எனினும் இவற்றின் அளவு அதிகரிக்கும் போது புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு அதிகமாகும்.
மொங்கொலியன் புள்ளி – இது ஆசியாக் கண்ட குழந்தைகளில் உடலில் பிறப்பு முதல் கானப்படும் ஆழமான நீல நிற தோல் மாற்றங்களாகும்.
இவை உடலின் மரபணுக்களால் தீர்மானிக்கப்படும். சூரிய ஒளி யில் அதிக காலம் இருத்தல் அதிக அளவு மச்சங்கள் உருவாகக் கா ரணம் ஆகும். அத்துடன் தோல் புற்றுநோய் உரு வாகும் வாய்ப்பும் அதிகரிக்கும்
இந்த மச்சங்கள் சந்தேகத்திற் கிடமான வையாக காணப்படின் உடனடியாக தோல் மருத்துவர் ஒருவரை அணுகவேண்டும். அத்துடன் சிலவேளை களில் இவை அழுத்தல், நூல்மூலம் வெட்டுதல்,  அல்லது உருக்குதல் முறைமூலம் அகற்றப்படலாம்.
ஜோதிடர்களின் பார்வையில் மச்ச‍ம்
ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் எதிர்கா லத்தை எப்படி அறிவது? பிறந்த தேதி விவரமிருந்தால்  கம்ப்யூட்டரில் ஒரு நொடியில் கணித்துவிடலாம். அது தெரியாதவர்கள் என்ன செய்ய ? இங்கேதான் மச்சங்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது. அதிலும்
பலான இடத்தில் மச்சம் என்றால் அதற்கு விசேஷ பலன் உண்டு. அது என்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் எதிர்காலத்தை  அறிய பற்பல வழி முறைகள் உள்ளன. (நாடி ஜோசியத்தை நான் நம்புவதில்லை. நம்மிடமே விஷயம் வரவழைத்து  எவ்வித  இலக்கண விதிகளும் பொருந்தாத பாட்டில் பலன் தருகிறார்கள். எவரேனும் தமிழாசிரியரிடம் கொடு த்து பாருங்கள். தளை கிளை எதுவுமே பொருந்தாது)  
ஜாதகம் இல்லாதோர், பிறந்த தேதி இத்யாதி தெரியாதோ ர் தம் எதிர்காலத்தை அறிய என்ன தான் செய்வது? 
“எனக்கு ஜாதகமே இல்லிங்கோவ்” என துள்ளி குதிக்காதீர்கள். மெடிக்கல் ரிப்போர்ட் காணாமல் போன மாத்திரத்தில் வியாதிகள் காணாமல் போவ தில்லை அல்லவா? 
சரி ஜாதகமில்லாதோர் எதிர்காலமறிய உள்ள வழி முறைகளில் சில வற்றை டச் செய்து ஒரு விஷயத்தை பற்றி இப்பதிவில் விரிவாக பார் ப்போம்.
1.திருமணமானவராய் இருந்தால்:
திருமணமானவராய் இருந்தால் , மனைவிக்கு ஜாதகம்  இருந்தால் அதை வைத்து தம் எதிர்கா லத்தை அறியலாம்.  உங்கள் குடும்ப ஜோதிடரி டமோ என்னிடமோ தங்கள் மனவியாரின் ஜாதகத்தை கொடுத்து ” சாமீ .. நமக்கு ஜாதக மில்லே. இது சம்சாரம் ஜாதகம் . ஏழாமிட த்தை ஸ்கேன் பண்ணி ரெண்டு வார்த்தை சொல்லுங்க ” என்றால் போதும். நாங்கள் தங்கள் மனைவியா ரின் 7 ஆமிடத்தை லக்னமாக கொண்டு தங்கள் எதிர்காலத்தை சொல் லலாம். 
தர்க பூர்வமானது தானா?
கிராமத்து பக்கம் பையனுக்கோ ,பெண்ணு க்கோ வரன் அமையாதபட்சம் “ஹும் இனி இவனுக்கு னு/இவளுக்குனு பிறந்து வர வா போறாள்/ன்” என்பார்கள். இது 100 சதம் நிச்சயம். (சிலர் விஷய த்தில் மட்டும் இப்படிபிறந்து வருவதும் உண்டு. உம். ஈ. வெ.ரா பெரியார். மணியம்மை) 
கிராமத்தில்”தாயைப்போல் பிள்ளை நூலைபோ ல் சேலை ” என்று சொல்லி வந் தார்கள். இப்போ ஜெனட்டிக் எஞ்சினீரிங் என்று கூறுகிறார் கள் அவ்ளதான் வித்யா சம். 
இப்போ நம்ம மீன் துள்ளியானை உதாரணமா எடுத்துக்குவம்.. ( மீன் துள் ளியான்! தப்பா நினைக்க மாடிங்கதானே?) இவருக்கு மனைவியா வர ப்போறவங்க (வந்துட்டாங்களா?) இவரோட ஏழாவது இடத்தை பொருத் துதான் இருப்பாங்க. அதே மாதிரி அவிக ஜாதகத்துல ஏழாமிடத்தை பொருத்துதான் இவர் இருப்பார். 
1989 முதல் கணவன் மனவியர் ஜாதகங்க ளை ஆராய்ந்ததில் இது சரிதான் என்று தோன்றுகிறது
திருமணமாகாதவிக:
அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பி இப்படி யாரோட ஜாதகத்தையாவது (இருந்தா) வச்சி தங்கள் எதிர்காலத் தை தெரிஞ்சுக்கலாம். என்ன ஒரு வித்யாசம்னா அப்பா ஜாதகத்தை வச்சி பார்க்கும்போது 9ஆம் இடத்தை லக்னமா கொள்ளனும், அம்மா ஜாதகம் னா 4 ஆமிடம், அக்கா,  அண்ணன் ஜாதகம் னா 11 ஆமிடம், தம்பி தங்கச்சி ஜாதகம்னா 3 ஆமிடத்தை லக்னமா வச்சி பலன் தெரிஞ் சுக்கனும்
யாருக்குமே ஜாதகமில்லன்னா?
அதுக்கும் ஒருவழி இருக்கு. ஜோசிய ர்கிட்டே எப்போ போகனும்னு முன்கூட்டி ப்ளான்பண்ணாம , அவர்கிட்ட யும் ப்ரியர் அப்பாயிண்ட்மென்ட் வாங்காம,  திடீர்னு போங்க. ” சாமி !/ அய் யரே! ஆரூட சக்கரம் போட் டுப்பாருங்க”னு கேளுங்க. அதை வச்சி சொன்னாலும் ஒர்க் அவுட் ஆகுது. அதுலயும் இதுவரை ஜோஸ்ய ரையே பார்க்காதவங்க விசயத்துல ரொம்ப நல்லாவே ஒர்க்அவுட் ஆகுது . 
வெளியூர் ஜோசியர்ட்ட தபால்மூலம் பலன் கேட்கும்போது  நீங்க எம்.ஓ அனுப்பற நேரம், செக்கை போஸ்ட் பண்ற நேரத்தை கடிதத்துல குறிப்பிட்டும் பலன் கேட்கலாம்.
ஆரூடத்துல நம்பிக்கையில்லேன்னா?
1 1/2 (ஒன்னரை) வருசத்துக்கு மேல வசிக்கிற வீட்டை வச்சே உங்க எதிர் காலத்தை தெரிஞ்சுக்கலாம். அதுக்கு ஒரு நல்ல வாஸ்து நிபுணர் தேவை. என்னை பொருத்தவரை ஒரு குழந்தை பிறக்கும் போதே அது என்னமாதிரி வீட்டில் வசிக்கனும் னு முடிவு செய்யப்பட்டுருது. அதன் ஜாதகத்தில் எந்த கிரக ம் பலகீனமடைஞ்சிருக்கோ அந்த கிரகத்துக்குரிய திசை ல பிரச்சினை இருக்கிற வீட்லதான் வசிக்குது. அதை ரிசா ல்வ் பண்ணிட்டா அந்த வீட்டை யே காலி பண்ணிட்டு போற மாதிரி ஆயி ருது. 
மூச்சை கவனிங்க:
சில நேரம் உடனடியா முடிவெடுக்க வேண்டிய சந்தர்ப்பமிருக்கும். அப்ப ஜோசியரை தேடிக்கிட்டு இருக்க முடியாதில்லயா. அப்போ உங்க மூச் சை கவனிங்க
ஆண்கள்:
சுவாசம் வலது மூக்குதுவாரம் வழியா நடந்துக்கிட்டிரு ந்தா அந்த காரியத்தை செய்ங்க. இல்லாட்டி அம்பேல் தான்
பெண்கள்:
சுவாசம் இடது மூக்குதுவாரம் வழியா நடந்துக்கிட்டிருந்தா அந்த காரியத் தை செய்ங்க. இல்லாட்டி அம்பேல் தான்
அங்கத்துடிப்புகள்:
மனிதனின் அறிவு 100 சதம்  பொல்யூட்டட். (  நம்ம கல்வி அமைப்பும் , ஆசிரிய பெருமக்களும் அப்படி இருக்காங்க. சீட்டு நடத்தாத, ரியல் எஸ் டேட் பண்ணாத அரசு ஆசிரியர் உங்க ஊர்ல இருந்தா நீங்க புண்ணியம் பண்ணவுக) மன மும் பொல்யூட்டட் தான் ( எங்க பையன் ரொம்ப ஷை டைப், எங்க பொ ண்ணு பயந்த சுபாவம் இப்படி உங்க மனதை பெற்றோர் தான் வடி வமைக்கிறாங்க) 
ஆனால் மனித உடல் மட்டும் இயற்கையோடு இடை யறாத தொடர்பு கொண்டிருக்கிறது. என்னதான் நாம் உடைகளால் மூடி, வேண்டாத ரோமங்களை மழித்து, தலைமுடியை, நகங்களை  வெட்டி, கண்ட டால்கம் பவுடர், க்ரீம், போட்டாலும், கண்ட வேளையில் உண்டு கண்ட வேளையில் கழிந்து , ஜங்க்ஃபுட், பாஸ்ட் ஃபுட், நூடுல்ஸ் திணித்து இம்சை செய்தாலும் தூய இயற்கை சக்தி நம் உடலை வழி நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. 
பாவம் ! மனித உடல் அப்பாவி. அது இன்னமு ம் தன்னை இயற்கையில் ஒரு பாகமாகவே கருதுகிறது. பயாலஜிக்கல் க்ளாக் இன்னமும் வேலை செய்துகொண்டுதானிருக்கிறது. சூரியன் உதி த்தபோது கண்விழித்து, சூரியன் ஆஸ்தமித்ததும் படுக்கைக்கு போனா லே போதும் மனித உடல் இன்னமும் உன்னதமாக இயற்கையுடன் தொ டர்புறும். சரி அதை விடுங்க.
“அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு”  கிரகங்க ளின் சஞ்சாரம் அண்டை வெளியில் மட்டும் நடக்கவி ல்லை. இங்கே மனித உடலி லும் தான் நடக்கிறது.
நம் அறிவுதான் சூரியன். நம் மனம்தான் சந்திரன். ராசிச் சக்கரத்தை நிமிர்த்தி வைத்தால் மேஷம்தான்  நம் தலை, ரிஷபம் தான் தொண்டை, வாய், கண், மிதுனம் தான் காது, புஜம் . இப்படி யாக மீனம் நம் பாதத்தை காட்டுகிறது.
இது பொது விதி. உங்களை பொருத்தவரை உங் கள் லக்னம் தான் தலை. லக்னம் முதல் எண் ணும்போது 12 ஆவது பாவம் தான் பாதங்களை காட்டும். ராகு, கேதுக்களின் இருப்பை வைத்து மச்சங்களை கூட சொல் லலாம்.  (எட்டாமிடம்தான் மர்மஸ்தானம். இங்கு ராகு கேதுக்கள் இருந் தால் “அங்கே” மச்சமிருக்கும். அதனால் தான் “அங்கே ” மச்சமிருந் தால் தரித்திரம் என்று கூறுகிறார் கள்.
ஆக மனித உடலுக்கும், இயற்கை க்கும் தொடர் பிருக்கிறது என்பதை ஓரளவு புரிந்திருப்பீர்கள் என்று நம் புகிறேன். கலெக்டிவ் அன் கான்ஷிய ஸ் மைண்ட் என்று ஒரு கான் செப்ட் இருக்கிறது. அதாவது  நம் அடி மன தில் ஒட்டு மொத்தமாக நமக்கு ( ஓம்கார் ஸ்வாமிகள் முதற் கொண்டு இந்த அப்ஷ்டு வரை) என்ன நடக்க போகிறது என்பது பதி வாகியிருக்குமாம். 
நாம் தான் நம் மனதையே கண்டு கொள்வதில்லை யே. அடிமனதை எங்கே கண்டு கொள்ளபோகிறோம். ஆனால்  நம் உடல் ? அது அண்ட சராசர பிரபஞ்சங்க ளையும் கண்டுகொள்கிறது. ரேடியோரி சீவர் தனமாய் செய்திகளை கிரகித்துக்கொள்கிறது. அந்த செய்தியை அங்க துடிப்புகளின் மூலம் நமக்கும் சொல்ல முயற்சி க்கிறது.
ஜாதகம் இல்லாதவர்கள் இந்த துடிப்புகளின் மூலம் தம் எதிர்காலத்தை அறிந்து நடக்க லாம். 
ஆண்கள்:
வலது பாகம் துடித்தால் சுபம்
இடது பாகம் துடித்தால்   அசுபம்
பெண்கள்:
இடது பாகம் துடித்தால் சுபம்
வலது பாகம் துடித்தால் அசுபம்
அர்த நாரீஸ்வர தத்துவம்:
பிரதி ஆணிலும் பெண்மை, பிரதி பெண்ணிலும் ஆண்மையும் இருப் பதையே நம்மவர்கள் அர்தநாரீ ஸ்வர தத்துவமாக வைத் தார்கள். 

ஆண்களுக்கான முடி அழகு டிப்ஸ்!

முடி என்பது அனைவருக்கும் முக்கியமான விஷயம். அதை எந்த விதத்தில் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து உங்கள் மீதான வசீகரத்தை கூட்ட முடியும். இது ஆண்கள் பெண்கள் இருவருக்குமே பொருந்தும்
முடி விசயத்தில் முக்கியமான ஒன்று அனைவரும் நம் தலைவாகிற்கு எது பொருந்துமோ அந்த வகையான சடைகளையே தேர்வு செய்ய வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காக பொருத்தமில்லாத சடைகளை போட்டு மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி நடந்து கொள்ளக்கூடாது.
சரியான சடைகளை தேர்வு செய்வதன் மூலம் உங்களிடம் உள்ள மைனஸ்களை பிளஸ்களாக மாற்றலாம். எடுத்துக்காட்டாக முடி அடர்த்தியாக மற்றும் நீளம் இல்லாமல் இருப்பவர்கள்,ரொம்ப சொட்டையா இருப்பவர்கள், எனக்கு நல்ல தலை ஸ்ட்ரக்சர் இருக்குங்க ஆனா பார்த்தால் ஸ்மார்ட்டா செக்ஸியா இல்லைன்னு
நினைக்கிறவங்க இவங்க எல்லோருமே இந்த பிரச்னையை முழுவதும் இல்லை என்றாலும் ஓரளவு சரி செய்யலாம்.
முதலில் அடர்த்தியான முடி உள்ளவர்கள்.
இவர்களுக்கு தாங்க இருப்பதிலேயே ரொம்ப சிரமம், எந்த சடை போட்டாலும் திருப்தி இல்லாமலே இருப்பாங்க, அதற்க்கு காரணம் தங்கள் அதிகப்படியான முடி தான். எண்ணெய், லோஷன் அது இதெல்லாம் இருந்தாலும் நாம் எண்ணெயின் மூலம் எவ்வாறு ஓரளவு சரி செய்யலாம் என்று பார்ப்போம்.
மேல இருக்கும் படம் தேங்காய் எண்ணெய் போட்டு செஞ்ச சடை. அடர்த்தியா முடி – ஆனா குட்டையா முடி இருக்கவங்க , வழுவழுப்பான எண்ணெய்களை உபயோகிக்கவே கூடாது. அப்பறம் ரப்பர் பேண்ட் போட்டு கட்ட முடியாமயே போய்விடும். இல்லைங்க எனக்கு வழுவழுப்பான எண்ணெய்தான் வீட்டுல வாங்கித்தராங்கன்னு சொன்னா, ஏங்க, நீங்க ஐயோ பாவம். யூத்துன்னு எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்க கல்யாணமான பெருசுன்னு எல்லாரும் முடிவு செய்யலாம்.
நடுவில் சொட்டை சுத்தியும் முடி உள்ளவர்கள்.
இவர்களும் வழுவழுப்பான எண்ணெய்களை கண்டிப்பாக தவிர்த்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை. அதற்குப்பதில் சொட்டையில் கண், மூக்கு வரைந்தால், அலுவலகத்தில் பாஸை ஏமாற்றி தூங்க வசதியாயிருக்கும். நன்கு தூங்குபவர்கள் குறட்டையை தவிர்க்கவேண்டும்.
நான் முழு சொட்டையும் இல்ல முழு மொட்டையும் இல்ல , ஆனா தலையில பர்ஃபெக்ட் ஆன முடி வட்டம் இருக்குன்னு வருத்தப்படறீங்களா! இதற்கெல்லாம் காரணம் நீங்க சரியா வட்டத்தை மறைக்க சடை போடாததே.
இந்த கீழ இருக்க டிசைன் போடுங்க அலுவலகத்தில் தூங்கவும் வசதியாக இருக்கும்.
முக்கியமான விஷயம் ஆண்களின் மீசை. மூக்கிற்கு கீழ் மீசை வைக்காவிட்டாலும் தலையில் பின்னால் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது அனைவருக்கும் நன்றாக இருக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே நன்றாக இருக்கும்.
அதே போல இளைஞர்களுக்கே உள்ள எண்ணம் , வித்தியாசமாக தலைக்கு கலர் அடித்துக்கொள்வது. முடிக்கு தகுந்த மாதிரி கலர் அடித்துக் கொண்டால், உங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் கூட, இன்னும் கொஞ்சம் சிகப்பு க்கலரா இருந்தா நல்லா இருக்கும்னு சொல்வார்கள். அதே போல ஒரு முக்கிய விஷயம், முடி விஷயத்தில் ஆர்வம் இருப்பவர்களால் மட்டும் தொடர்ந்து இதை பின்பற்ற முடியும், மற்றவர்கள் ஆசைக்கு ஒரு வாரம் இருந்துவிட்டு வழக்கம்போல புலம்பி கொண்டு இருப்பார்கள். எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இருந்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும் என்பது அனைத்திற்கும் பொருந்தும் நம் முடி ஸ்டைல் தேர்வு உட்பட.
நான் கூறிய எல்லாவற்றையும் விட முக்கியமானது தலைக்கு மேல என்ன இருக்குங்கறதை விட தலைக்கு உள்ள என்ன இருக்கு என்பதுதான்.
பின் குறிப்பு:
மேற்கூறிய அனைத்தும் பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டுமே, மற்றவர்கள் இதை மனதில் வைத்துக்கொள்ளலாம், அதே போல ஓரளவு முடி உள்ளவர்களுக்கு மட்டுமே நமது முடி அழகை மாற்றி அமைப்பதின் மூலம் ஓரளவு சரி செய்யலாம், சொட்டையாக உள்ளவர்களுக்கு விக்கை தவிர வேறு வழி இல்லை.

மருத்துவக் குறிப்புகள்.............

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

இரட்டை இலை துவையல் செய்து சோற்றில் பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . .

இரட்டை இலை துவையல் செய்து சோற்றில் பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . .

‘இரட்டை இலை’ துவையல் செய்து சோற்றில் பிசைந்து சாப்பிட்டுவந்தால் . . .
சித்த‍ர்கள் அருளிய மூலிகைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க‍ அம்சங்கள் நிறைந்து காணப்படும் மூலிகைகளில் இந்த
இரட்டை இலையுடன் காணப்படும் இருவாட்சி செடி முக்கியத்துவம் வாய்ந்த‌தாக கருதப்படுகிறது.  இந்த இரட்டை இலைகளுடன் காணப்படும் ஒருவகை கத்துச் செடியை இருவாட்சி என்றே அழைக்கிறார்கள். ஆனால் இதன் நிஜப் பெயர் திருவாட்சி என்பதே!
இந்த இரட்டை இலைகளை நன்றாக‌ வதக்கி, பின் இதனுடன் சிறிது உப்பு, கொஞ்சம் புளி, சிறிது, காயம் தேவையானளவு உளுத்தம் பருப்பு ஆகியவற்றை எடுத்து ஒரு வாணலியில் போட்டு அடுப்பை பற்ற‍வைத்து, நன்றாக வறுத்து எடுக்க‍வேண்டும் . அதன்பிறகு வறுத்த‍தை அம்மியிலோ அல்ல‍து மிக்ஸியி லோ போட்டு, நன்றாக துவையலாகும் வரை  அரைக்க‍ வேண்டும். பிறகு, அரைத்த இந்த இரட்டை இலை துவையலை பதமான சோற்றில் சேர்த்து நன்றாக பிசைந்து  சாப்பிட்டுவந்தால் செரிமானம் ஏற்படும். செரிமானம் ஏற்பட் டால் மலச்சிக்க‍லும் தானாக குணமடையும் என்கிறார்கள் சித்த‍ மருத்துவர்கள்
மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ள‍வும்.

அடிக்கடி கறிவேப்பிலை துவையல் செய்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . .

அடிக்கடி கறிவேப்பிலை துவையல் செய்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . .

அடிக்கடி கறிவேப்பிலை துவையல் செய்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . .
நாம் அன்றாடம் காய்கறி கடைகளில் நமக்குத் தேவையான காய்களை வாங்கிவிட்டு, பின் கொசுறாக கொஞ்சம் கறிவேப்பிலை கேட்போம். இந்த கறிவேப்பிலை இலவசமாக கிடைப்ப‍தால்
நமக்கு அதன் மருத்துவ பண்பு தெரிவதில்லை. இந்த கறிவேப்பிலையை சும்மா சமையலின் சுவைக்காகவும் மணத்து க்காகவும் போட்டுவிட்டு, பின் சாப்பிடும் போது அதை தூக்கியெறிந்து விடுவோம். ஆனால் இந்த கறிவேப்பிலையில் தான் எத்த‍னை எத்த‍ னை சத்துக்கள் காணப்படுகின்றன• இதனை சாப்பிடுவதால், எத்த‍னை எத்த‍னை நோய்க ளை குணமாக்குகின்றன என்பதை அறிந்திருக் க‍ வாய்ப்பில்லை. இதோ அதன் மருத்துவ பண்புகளை பார்ப்போமா?
இந்த கறிவேப்பிலையை துவையாக செய்து, அதை வெறுஞ்சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கை குணப் படுத்தும். சர்க்கரைநோயையும் கட்டுப்படுத்துகிறது . மேலும் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்வதால் இன்சுலின் தேவை குறையும். உணவாக உட்கொள் ளும் மாவுப் பொருள்களை குளுகோசாக மாற்றி உடலுக்குத் தரும். சுண்ணாம்புச்சத்து இதில் அதிகம் இருக்கிறது.

இதை கறிவேப்பிலை துவையலாக மட்டுமே செய்து சாப்பிட வேண்டுமென்பதில்லை. பிற உணவு சமைக்கும் போது அதனுடன் இந்த கறிவேப்பிலை சேர்த்து சமைத்தால், அதை சாப்பிடும்போது, தூக்கி எறிந்து விடாமல் அதையும் நாம் மென்று சாப்பிட வேண்டும்

புளியாரைக் கீரையையும் சிறுபருப்பையும் சேர்த்து சமைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால். . .


புளியாரைக் கீரையையும் சிறுபருப்பையும் சேர்த்து சமைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால். . .

புளியாரைக் கீரையையும் சிறுபருப்பையும் சேர்த்து சமைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால். . .
சமையலறையே மருத்துவ அறையாக பயன்படுத்த நாம் பழகிக்கொள்ள‍ வேண்டும். சமையலறையில் இருக்கும் உணவுக்கான ஒவ்வொரு மூலப் பொருட்களும் மிகுந்த
மருத்துவத்தை கொண்டுள்ள‍து. இதனை தவறாமல் நாம் பயன்படுத்தி உடல்நலம் பேணிக்காக்க‍ முயற்சிக்க வேண்டும். சமையலறை மூலிகை களால் எண்ண‍ற்ற‍ நோய்களை நம்மால் குணப்படுத்த‍ முடியும். 
உதாரணமாக ஒருவருக்கு அதிகளவில் உடல் சூடு வந்தால், அதனால் ஏற் படும் நோய்களான‌ முகப்பரு, தோல் நோய்கள் , தலை முடி உதிர்தல், வயிற்று உபாதைகள் மற்றும் வலி, உடல் எடை வேகமாக குறைதல் போன்றவைகள் ஏற்பட்டு நமது ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கிறது. அதனால், அதிகமான உடல்சூட்டை தணித்து ஆரோக்கியத்தை பேணிக் காக்க, ஒரு எளிய வழியுண்டு. 
இந்த புளியாரைக் கீரையை எடுத்து அதனுடன் சிறுபருப்பு சேர்த்து, வாண லியில் போட்டு நன்றாக அவித்து, மத்து கொண்டு கடைந்து வைத்துக் கொண்டு சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு குறைய ஆரம்பிக்கும். இதையே அடிக்கடி சாப்பிட்டுவந்தால் அதீத உடல்சூடு தணி ந்து ஆரோக்கியம் பெறுவர். மருத்துவரின் ஆலோசனையைப்பெற்று உட் கொள்ள‍வும்.

அடிக்கடி கீரைத்தண்டு ரசத்தை குடித்தாலோ (அ) சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டாலோ . . .

அடிக்கடி கீரைத்தண்டு ரசம் வைத்து அதை அப்படியோவோ (அ) சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் . . .

அடிக்கடி கீரைத்தண்டு ரசம் வைத்து அதை அப்படியோவோ (அ) சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் . . .
அடிக்கடி கீரைத்தண்டு ரசம் வைத்து அதை அப்படியோவோ(அ) சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் நமக்கு
கிடைக்க‍க் கூடிய பலன் என்ன‌ என்பதை இங்கு பார்ப்போம்
ரு டம்ளர் கீரைத்தண்டு ரசம் அல்ல‍து சாதத்தில் கீரைத்தண்டு ரசத்தை பிசைந்து சாப்பிட்டாலோ நீண்டநாட்களாக இருந்துவரும் சிறுநீர்சிக்கலுக்கு மிகச்சிறந்த தீரவாக இது அமையும் நல்ல‍ குணம் தெரியும் மேலும் இக்கீரைத்தண்டு உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியுடன் வைக்க‍ உதவும். அது மட்டுமா பித்தம் அகற்றும். உடலில் உள்ள தேவை யற்றக் கொழுப்பை நீக்கி உடலின் கட்ட‍மைப்பை பாதுகாக்கும். பெண்களுக்கு தொல்லைக்கொடுத்துவரும் இந்த வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.

முருங்கை இலை, காம்புகளை நறுக்கி… ரசம் வைத்து, அதனை சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால்…


முருங்கை இலை, காம்புகளை நறுக்கி… ரசம் வைத்து, அதனை சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் . . .

இந்த முருங்கை மரம் மனிதர்களுக்கு ஏற்படும்  எண்ணற்ற வியாதிகளுக் கு பல வகைகளில்

மருந்தாகிறது. ஆகவே இந்த முருங்கை மரத்தை மருத்துவ புதையல் என்று வர்ணித்தாலும் அது மிகையாகாது.  
முருங்கை இலையைஉருவி எடுத்துக்கொண்டு அதன்பின் அதன் காம்புகளை சற்று பொடியாக நறுக்கிபோட்டு தேவையானளவு மிளகு சேர்த்து ரசம் தயாரித்து அத்துடன் சோற்றில் கலந்து சாப்பிட்டால், கை கால்களில் ஏற்பட்ட‍ வலி மட்டு மல்ல‍. உடலில் ஏற்ட்ட‍ வலிகளும் நிரந்தரமாக குணமாகும்.
மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ள‍வும்.

குடி , போதை என்னும் நஞ்சில் இருந்து காப்பாற்றுவோம்.

ஓம்
🐍ஆன்மீக ரீதியில் எந்த ஒரு மனிதரின் மனதையும் நேர்மறை எண்ணங்களால் நிரப்பச் செய்து மது , போதை போன்ற தீய பழக்கங்களில் இருந்து வெளிவரச் செய்திடலாம்.
1. தியானம் மனதை ஒரு நிலையாக, ஆரோக்கியமாக, திடமாக, சமநிலையாக வைத்திருக்கும்.
2. யோகா பயிற்சி உடல் மற்றும் மனதை இலகுவடையச் செய்து மனிதன் வாழும் விதத்தில் மேன்மை பெயர்த்திடும்.
3. 'மூச்சில் உள்ளது சூட்சமம்' .மூச்சுப்பயிற்சி செய்யும் மனிதனுக்கு பசி, பணி விழைவதில்லை. மனிதனுடைய பழக்க வழக்கங்கள் அவனுடைய மூச்சை சார்ந்தே அமைந்துள்ளது. ஆக நேர்த்தியான மூச்சுப்பயிற்சியின் மூலம் மனிதனுடைய கெட்ட பழக்க வழக்கங்களை எளிதில் மாற்றி அமைத்துவிடலாம்.
4. எண்ணங்கள் என்பது உணர்வுகளை மையமாக கொண்டது. ஆக நல்ல உணர்வுகளைக் கொடுக்கும் உணவுகள் மற்றும் மனோவசியக் கலைகள் மூலம் மனதனின் வாழ்க்கையையே மாற்றி அமைத்திட முடியும்.
🍳இனி எந்த ஒரு மனிதரையும் அவரைச் சார்ந்தவர்களையும் குடி , போதை என்னும் நஞ்சில் இருந்து காப்பாற்றுவோம்.
🌊புரிதல், அன்பு என்கிற இரு தாரக மந்திரத்தை மையமாக வைத்து எந்த ஒரு செயலையும் செய்து முடித்திடலாம்.

HAPPY NEW YEAR-2017

Dear All
...................புத்தாண்டு வாழ்த்துக்கள்
..................Wishing you all happy new year
In Arabic.....Kul ‘am wa antum bikhair
In Dhivehi.....Ufaaveri Aa Aharakah Edhen
 In Hindi.........Naye Varsha Ki Shubhkamanyen
In GuJarathi..Nutan Varshbhinandan
In Kannada...Hosa Varushadha Shubhashayagalu
In Telgu.........Noothana samvatsara shubhakankshalu
In Malayalam.Puthuvatsara Aashamsakal
In Oriya..........Nua Barshara Subhechha
In Marathi: Nveen Varshachy Shubhechcha.................

Friday, December 30, 2016

இனிமேல் யாரேனும் எட்ட முடியுமா???

60 - வருடங்கள்
17 - மொழிகள்
48000 - பாடல்கள்
4 - தேசிய விருதுகள்
32 - மாநில விருதுகள்
7 - தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
10 - ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
14 - கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
-இந்தியாவின் முதல் பெண் இசையமைப்பாளர்.
-டாக்டர் பட்டம் (மைசூர் பல்கலைக்கழகம்).
1986-தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது.
2002-கேரளா மாநில சிறப்பு விருது.
இளையராஜாவின் கற்பனைவீச்சை தன் குரலால் சென்று எட்டமுடிந்த ஒரே பாடகி எஸ்.ஜானகிதான்..
அளக்க முடியாத வானம் இளையராஜாவின் இசையென்றால், அந்த வானத்தின் ஒரே வானம்பாடி எஸ்.ஜானகியே!

*ஒவ்வொருவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு. ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதார் எண். இவ்வளவுதான்.*

📟 *அடுத்த அதிரடி.....!*
*Aadhar Enabled Payment .......!* 📠👈🏻
*பே டி எம் முதலான வாலெட் கம்பெனிகளுக்கும் கார்டு வழங்கும் பெரிய நிறுவனங்களுக்கும் ஆதரவான நடவடிக்கை என்று பேசினவங்க,*
*கார்டு இல்லாத சாதாரண மனுஷங்க என்ன செய்வாங்கன்னு பொங்கினவங்க –*
*எல்லாருக்கும் ஆப்புதான் இது.* 🏧✋🏻
*இது எப்படி செயல்படுகிறது?*
_ரொம்ப சுலபம்._
*ஒவ்வொருவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு. ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதார் எண். இவ்வளவுதான்.*
*உங்களது வங்கிக்கணக்கில் உங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதுதான் நீங்கள் செய்ய வேண்டியது. செஞ்சாச்சா? அவ்வளவுதாங்க....* 😎
*கடைக்காரர்கள் செய்ய வேண்டியது என்ன?*
*இந்த ஜியோ சிம் வாங்கும்போது கட்டை விரலை வெச்சோமே ஒரு தம்மாத்தூண்டு மெஷின் – பயோமெட்ரிக் சென்ஸார் – விலை ரூ.2000/- ... இதை வாங்கி வெச்சிக்க வேண்டியது... இதன் கூட ஒரு சின்ன டெர்மினல் இருக்கும்.*
*இதற்கு மாத வாடகை கிடையாது...*✔
*அதுக்கப்புறம்?*
நீங்க கடையிலே போய் சாமான் வாங்கறீங்க.... ரூ68/- குடுக்கணும். இப்போ கடைக்காரர் என்ன செய்வார்னா உங்களோட ஆதார் எண்ணைக் கேட்பார். இதனை நீங்களே கீ இன் செய்யலாம், அல்லது அட்டையைக் காட்டி கடைக்காரரையும் கீ இன் செய்யச் சொல்லலாம்.
*இது தற்போதைய டெபிட் / க்ரெடிட் கார்டை ஸ்வைப் செய்வது போல.*
*அதுக்கப்புறம் கடைக்காரர் உங்களோடது எந்த வங்கி என்று கேட்பார்.*
📟 *ஸ்க்ரீனில் தெரியும் பட்டியலில் இருந்து உங்களது வங்கியைத் தேர்ந்தெடுப்பார். அப்புறம் ரூ.68/- என்பதை அழுத்துவார்.*
*இப்போ நீங்க உங்க கட்டை விரலையோ அல்லது பத்து விரலில் வாஸ்துப்படி எந்த விரல் பிடிக்குமோ அதை வைத்து அழுத்தினால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.68/- கழிக்கப்பட்டு கடைக்காரரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.* 🖐🏻📠
*இதில் உங்கள் ஆதார் எண்தான் உங்களது டெபிட் / க்ரெடிட் கார்டு. டெபிட் கார்டின் பின் அல்லது க்ரெடிட் கார்டின் சிப் தான் உங்களது கை விரல்.* 👍
💳 *டெபிட் / க்ரெடிட் கார்டு போல தொலைந்து விடுமோ என்ற கவலையில்லை - உங்கள் ஆதார் எண் தெரிந்தாலும் உங்கள் கைவிரல் இல்லாமல் அது செல்லாது.* 🖐🏻
*முக்கியமாக இதில் செய்யப்படும் பணப்பரிமாற்றத்துக்கு*
*எந்தவிதக் கட்டணமும் கிடையாது. கிடையவே கிடையாது.* 👍
இதனால் 💳
*விசா / மாஸ்டர் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு நமது பணம் போவது தடுக்கப்படுகிறது.*
*கடைக்காரர்களுக்கு மாதாந்திரக் கட்டணமும் கிடையாது.*

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...