Thursday, August 31, 2017

Eid Mubarak...

Image may contain: food

உங்களுக்காக ஒரு நிமிடம் ... தெரிந்துகொள்ளுங்கள்...!!!

*ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.
*மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.
*'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.
*உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.
*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.
*ரகசியங்களைக் காப்பாற்று.
*புதிய நண்பர்களைத் தேடிக்கொள்:பழைய நண்பர்களை மறந்துவிடாதே.
*தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.
*உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.
*தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி
*ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.
*கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.
*கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.
*உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.
*மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.
*ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.
*வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.
*போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.
*ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.
*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.
*பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.
*'எனக்குத் தெரியாது', மன்னிக்கவும்', என்பதை சொல்லத் தயங்காதே..!!
* தொடர்ந்து 42 கப் காப்பி குடிச்சா நீங்க செத்துப் போவிங்க!
* நீங்க இந்த வரிய படிச்சு முடிப்பதற்குள் உங்க உடலின் 25,000,000 உயிர் செல்கள் இறந்திருக்கும்!!
* உங்களுடைய கம்பியூட்டர் கீபோர்டில் கழிவறை சீட்டைக் காட்டிலும் 60 மடங்கு அதிக கிருமிகள் இருக்கலாம்!
* மனிதனின் DNA வாழைப்பழத்தின் DNAவுடன் 50% ஒத்துப்போகிறதாம்!
* 70% பெண்கள் தங்களுக்கு தெரிந்த விஷயத்தை பற்றியே கேள்வி கேட்கிறார்களாம்! (தெரியாதுன்னு நினைச்சி பொய் சொல்லி மாட்டிக்காதிங்க)
* ஒரு அன்னாசிப்பழ செடி ஒரு வருஷத்துக்கு ஒரே ஒரு அன்னாசிப் பழத்தைத் தான் காய்க்குமாம்!
* பெங்குவின் பறவைகள் ஒரே இடத்தில் 7 லட்சம் வரை எண்ணிக்கையில் கூடும்.
* கடலில் 30,000 மீன் வகைகள் உள்ளதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். உலகில் பூச்சி இனத்திற்கு அடுத்து மீன் இனங்களே அதிகம் என்று ஆராய்ச்சி வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
* விமானத்தில் பறந்தவாறே பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்சன்.
* நைலான் துணியால் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் நாடு ஜெர்மனி.
* முதல் உலகப்போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 லட்சம். இரண்டாவது உலகப் போரில் மாண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடி!
* பிளாஸ்டிக்கில் கரன்சி நோட்டுகளை முதலில் வெளியிட்ட நாடு ஆஸ்திரேலியா.
* சூரியகாந்தி வகையைச் சேர்ந்த காசினி என்ற செடியின் வேரைக் காயவைத்து வறுத்துப் பொடி செய்வதுதான் சிக்கரி பவுடர். காப்பிப் பொடியுடன் மணத்துக்காகச் சேர்க்கிறார்கள்.
* உலகிலேயே அதிக இலைகள் கொண்டது சைப்ரஸ் மரம். இதில் 4 முதல் 5 கோடி இலைகள் இருக்குமாம்.

இது தான் கலையின் சிறப்பு. .

ஒரு வயலின் வித்வான் இருந்தார். அவர் குடும்பத்தின் அன்றைய சூழலில் `கலையாவது கத்தரிக்காயாவது’ என்ற சொல்லக்கூடிய அளவுக்கு குடும்பத்தில் வறுமை ஆட்டிப் படைத்தது. அதனால் வயலினை பரணில் தூக்கிப் போட்டவர், குடும்பத்துடன் கூலி வேலைக்குப் போய்விட்டார்.
.
அந்தக் கூலி வேலை முதலில் பெற்றோர் சார்ந்த குடும்பத்தையும், பிறகு மனைவி, பிள்ளைகள் கொண்ட குடும்பத்தையும் பொருளாதாரத்தில் சற்றே தாங்கிப் பிடிக்க உதவிற்று. அவ்வளவு தான்.
ஆனாலும் அவருக்குள் ஓரு ஏக்கம். நமக்குள் இருந்த வயலின் கலைஞனை தொலைத்து விட்டோமே என்று உள்ளுர மறுகிக் கொண்டிருந்தார்.
.
அன்று மாலையில் கிடைத்த நேரத்தில் பக்கத்து ஊரில் நடக்கும் வாரச்சந்தைக்கு போனார். அங்கே ஒரு இளைஞன் பழைய வயலின் ஒன்றை ஏலத்தில் விட இருந்தான். அந்த வயலினை வாசித்தே பல நாட்களாகி இருக்கலாம். விற்க வேண்டிய அவசியம் வந்தபோது சந்தைக்கு வந்து விட்டான். அவன் முதலில் பத்து ரூபாயில் இருந்து ஏலத்தை ஆரம்பித்தான். `பழமை மாறாத வயலின்’ என்று சொல்லி அவன் ஏலம் விட்டதில் அடுத்தவர் 20 ரூபாய்க்குக் கேட்டார். இன்னொருவர் ஏலத்தை 30 ரூபாயாக உயர்த்தினார்.
.
மேற்கொண்டு கேட்க ஆளில்லை. இளைஞனும் கிடைத்தவரை லாபம் என்ற எண்ணத்தில் ஏலத்தை முடித்துக் கொள்ளும் மனநிலைக்கு வந்தான்.
.
அப்போது தான் நமது வயலின் வித்வான் அந்தக் கூட்டத்திற்குள் நுழைகிறார். இளைஞனை நெருங்கியவர், `வயலின் ஏலம் விடும்போது அதை வாசித்துக் காட்டுவது தானே சரியாக இருக்கும்’ என்றபடி, தன் நெஞ்சோடு வயலினை அணைத்தபடி இசை மீட்டத் தொடங்கினார்.
.
அடுத்த சில நிமிடங்களில் அந்த இசை சந்தைக்கு வந்த மொத்தக் கூட்டத்தையும் அங்கே வரவழைத்து விட்டது. கேட்டவர்கள் மெய்யுருகினார்கள். அடுத்த பாட்டு, அடுத்த பாட்டு என்று தொடர்ந்து மூன்று பாட்டுக்கு வாசித்து முடித்தவர், ஜனங்களை நோக்கி, `இப்போது ஏலம்கேட்கிறவர்கள் கேட்கலாம். ஏலத்தை முதலில் இருந்து ஆரம்பிப்போம்’ என்றார். அவரே வயலின் ஏலம் நூறு ரூபாய் என்று ஆரம்பித்தார்.
.
வயலின் இசை கேட்டு ஏற்கனவே உருகிப் போயிருந்தவர்கள் பலரும் ஏலத் தொகையை கூட்டிக் கொண்டே போனார்கள். கடைசியில் எண்ணூறு ரூபாய்க்கு கேட்டவருக்கு வயலின் கிடைத்தது. இளைஞன் இப்போது அந்த பெரியவரை தன் வயலினை விற்றுத்தர வந்த தெய்வமாகவே கருதினான். ஏலப்பணத்தில் 300 ரூபாயை அவருக்கு கொடுக்க முன் வந்தான். அவரோ `என்ஆத்ம திருப்திக்கு இசைத்தேன். அதற்கு விலை வைக்காதே’ என்று பணத்தை வாங்க மறுத்து விட்டார்.
.
அது மன்னர் ஆட்சிக்காலம். அந்த பெரியவர் அங்கிருந்து நாலடி நடந்திருக்க மாட்டார்.அதற்குள் அரண்மனை வீரர்கள் அவரை சுற்றி வளைத்தார்கள். “எங்கள் மன்னரின் அரசவைக்கு தேர்ந்த இசைக்கலைஞர்கள் தேவை. அப்படி ஒருவருக்காக நாங்கள் நகரை வலம் வந்தபோது தான் உமது இசையை கேட்டோம். இப்போதே அரண்மனைக்கு எங்களுடன் வந்து எம் மன்னரை பார்க்கிறீர்” என்று அழைத்து சென்றார்கள்.
.
அவருக்குள் புகுந்து கொண்டிருந்த அந்தக் கலை கடைசியில் அவரை அரண்மனை இசைக்கலைஞராக்கி அழகு பார்த்தது. இது தான் கலையின் சிறப்பு.
.
கருத்து :
கற்ற கலைக்கு காலம் கடந்தாலும் மரியாதை நிச்சயம். அ தனால் கலை தெரிந்தவர்கள் அதை மறைபொருள் போல் மூடி வைக்காமல் வெளிப்படுத்துங்கள், வெளிப்படுங்கள். உலகை வெல்லுங்கள்.

தைரியம் இருக்கிறதா தினகரனுக்கு...

கட்சிக்கு விரோதமாக செயல்பட்டார்களெனில் பதவியை மட்டும் ஏன் பறிக்கிறார்...
எடப்பாடி பழனிச்சாமியை மட்டுமல்ல எவரையுமே கட்சி யை விட்டு நீக்க துணிவில்லை.
தினகரனுக்கு அரசியல் தெளிவில்லை என்பது இதிலிருந்தும் தெரிகிறது.
ஆளுநரிடம் போய் ஆட்சியை கலைக்க சொல்லி நாங்கள் கேட்கவில்லை.ஆட்சி மீது நம்பிக்கை இருக்கிறது. முதல்வர் மீது மட்டுமே நம்பிக்கை இல்லை. வேறு முதல்வரை மாற்றுங்கள் என்று கடிதம் கொடுப்பது எவ்வளவு பெரிய அரசியல் அறியாமை...???
ஒரு முதல்வரை மாற்றி வேறு முதல்வரை நியமிக்க ஆளுநர் என்ன அநிமுக கட்சி தலைவரா???.
தினகரனுக்கு ஆற்றல் இருந்தால் எடப்பாடி பழனிச்சாமியை நான் நீக்குகிறேன். அவருக்கு பதிலாக தனபாலை முதல்வராக நியமிக்கிறேன் என தினகரன் கையொப்பம் இட்டு ஆளுநரிடம் கடிதம் கொடுக்க வேண்டியதுதானே? அல்லது அமெரிக்க ஜனாதிபதி, ஐ.நா.பொதுச்செயலாளர் ஆகியோரை சின்னம்மா வின் அனுமதியோடு நீக்குவதாக அறிவித்தது போல தமிழக அமைச்சர்கள் அனைவரையும் கட்சியைவிட்டு நீக்க வேண்டியதுதானே...
இதற்கு தைரியம் இருக்கிறதா தினகரனுக்கு...
இல்லை அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்கு அதோ வரூகிறேன் இதோ வருகிறேன்... 5ஆம் தேதி வருகிறேன்... 10 ஆம் தேதி வருகிறேன் என கதை யளந்து பயந்து காலம் கடத்தியது போல் இருக்க போகிறாரா..???
அது தினகரனுக்கே தெரியாது...
காலம் விரைவில் பதில் சொல்லும்...!!!

தில்லு_முல்லு_தினகரன்_ஆதரவு_MLAக்களின்_கடிதம்_கூறுவது_என்ன???

ஆட்சி கவிழ்ப்பை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் விரும்பவில்லை..என்பதையே இந்த கடிதம் அம்பலப்படுத்துகிறது...
ஆட்சி மீதான நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறி கலைக்க வலியுறுத்தாத டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும், வெறுமனே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதுதான் தங்களுக்கு நம்பிக்கையில்லை என கூறியிருப்பதில் உள்ளது சூட்சுமம்.
ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றும், அவர் சசிகலா தினகரன் விரும்பியபடி நடக்கவில்லை என்பதால் தாங்கள் அவர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் தெரிவித்தார்கள்
இந்த கடிதத்தின் மூலம் அவர்கள் ஆளுநரிடம் என்னதான் கேட்க வருகிறார்கள் என்பது யாருக்குமே புரியாத புதிராகும். ஏனெனில் ஆட்சியை கலைக்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம் நம்பிக்கை வாக்கெடுப்பாவது நடத்த வேண்டும் என்பதெல்லாம் அந்த கடிதத்தில் இல்லை.
அரசு மீது நம்பிக்கையில்லை என்று குறிப்பிட்டால் அப்போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட முடியும். ஆனால், எம்எல்ஏக்கள் தங்கள் கடிதத்தில் தனிப்பட்ட ஒருவரை குறிப்பிட்டு, அதாவது முதல்வர் பதவியில் உள்ளவரை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். முதல்வரை குறிப்பிட்டால் அது மொத்த அமைச்சரவையை குறிப்பிடுவதை போன்றதாகும் என்று எம்எல்ஏக்கள் தரப்பு விளக்கம் அளிக்க கூடும். அப்படிப்பார்த்தால், மொத்தமாக அரசை கலைத்துவிடுங்கள் என்று ஈஸியாக அவர்கள் ஏன் கோரிக்கை விடுக்கவில்லை என்பதில்தான் உள்ளது சூட்சுமம்.
டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏக்களுக்கும் ஆட்சி கலைவதில் விருப்பம் இல்லை என்பதையே இந்த கடிதம் சுட்டுகிறது. தேர்தலுக்கு தண்ணியாக பணத்தை செலவிட்டு வெற்றி பெற்ற எந்த ஒரு உறுப்பினருமே மீண்டும் முன்கூட்டியே தேர்தலை சந்திக்கவிரும்புவதில்லை. அதிலும் ஆளும் கட்சியினர் என்றால் சொல்லி தெரியவேண்டியதில்லை. எனவேதான் கூழுக்கும் ஆசை, மீசையிலும் ஒட்டக்கூடாது என்பது போன்ற சங்கடத்தில் சிக்கியுள்ளனர் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள்.
ஆளுநரிடம் அவர்கள் வழங்கிய கடிதம் தங்கள் ஒற்றுமையை காட்டிக்கொள்ளத்தான் பயன்படுமே தவிர அதற்கு பெரிய அளவில் வலு இல்லை. எடப்பாடி குழுவை தங்கள் சொற்படி ஆட வைக்க வேண்டும் என்பது மட்டுமே தினகரன் குழுவின் தற்போதைய எண்ணம். அதைவிடுத்து ஆட்சியை கலைப்பதால் எந்த பலனும் கிடைக்காது. நஷ்டமே ஏற்படும் என்று தினகரன் தரப்பு நினைப்பதன் வெளிப்பாடே இந்த கடிதம்.
இந்த கடிதத்தை நம்பி எதிக்கட்சிகள் இலவுகாத்த கிளியாக காத்து கிடக்கின்றன
ஆட்சி யைக்கலைக்க தினகரன் தரப்பு விரும்பாத போது ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் ஆளுநரிடம் கோரிக்கை வைப்பது கேலிக்குறியதாக இருக்கிறது.

டிஜிலாக்கர் (DigiLocker)...

ஓட்டுநர் உரிமம் ஒரிஜினல் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் மத்திய அரசின் டிஜிலாக்கர் (DigiLocker) செயலியில் தங்களின் ஓட்டுநர் உரிமத்தை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டாலே போதும் ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்திற்கு இணையாக இது கருதப்படுகிறது...... தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும் பகிருங்கள்......

அற்புதமான ஒரு அனுபவ வைத்தியம்...

அந்த காலத்தில் ஒரு கல்யாண த்துக்கு போனால் ஜனங்கள் என்னப்பா எப்படி இருக்க.. உங்ங ஊர்ல மழை எப்படி... என்று விசாரிப்பார்கள்..
இப்போது கவனித்து பாருங்கள்..
எனக்கு சுகர் பிபி இவ்வளவு..உனக்கு எப்படி..
சம்சாரத்துக்கு எப்படி..
எந்த டாக்டர் என்ன மாத்திரை...
என்று சுவாரசியமாக ஏதோ டீவி
சீரியல் மாதிரி பேச ஆரம்பித்து விடுகிறார்கள்..
அந்த நாளில் பணக்காரர் களுக்கு தான் சுகர் பி பி.
காரணம்...எல்லா நாளும் விருந்து மாதிரி டிபன் லன்ச் அசைவம்..நாலுவகை பதார்த்தம் நிறைய எண்ணெய் பலகாரம் என ஐமாய்ப்பார்கள்.
இப்போது
ஏதோ விருந்தாளி வந்தால் பண்டிகை யாக இருந்தால் எண்ணெய் பலகாரம்.அசைவம் என அரிதாக சாப்பிட்டது போய் எல்லா வூடுகளிலும் தினம் போண்டா பஜ்ஜி..கடையில் வாங்கி யாவது...அடிக்கடி அசைவம்...என பணக்காரர் சாப்பாடு ருசிக்காக சாப்பிடப்போய்...எல்லாம் சுகர் பி பி..
சரி சரி..
அற்புதமான ஒரு அனுபவ வைத்தியம்:
சில சமயம் அடிக்கடி தும்மல் வந்து கோல்டு அட்டாக் ஆகி பத்து நாள் அவதி.
இதற்கு அற்புத டிரீட்மெண்ட்..
தொடர்ந்து தும்மல் வரும் போது கொஞ்சம் சமையல் அறை மஞ்சள்தூள் சிட்டிகை எடுத்து நன்கு முகர்ந்து பாருங்கள்.
தும்மல்..கோல்டு..
போயே போச்...
சோதித்து பாருங்களேன்..
பைசா செலவில்லை.

மனித உடலோடு தொடர்பு கொண்டுள்ள சப்த கன்னிமார்களும், அவர்களை வழிபடுவதால் கிடைக்கும் அற்புத பலன்களும்



சப்த கன்னியர்கள்:
சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது. கி.பி 510 ஆம் ஆண்டில் சப்தகன்னியர்கள் வழிபாடு சிறப்புற்று இருந்ததாக கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சப்தகன்னியர்கள் எழு தாய்மார்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
சப்தகன்னியர்கள் பிறந்த கதை: 
அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
நம் உடலோடு தொடர்பு கொண்டுள்ளவர்கள்: 
சப்தமாதர்களுக்கும் நம் உடலுக்கும் தொடர்பு உள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவை : பிராம்மி தோலுக்கு தலைவி. மகேஸ்வரி நிணத்திற்கு தலைவி. கவுமாரி ரத்தத்திற்கு தலைவி. நாராயணி சீழிற்குத் தேவதை. வாராஹி எலும்பின் தெய்வம். இந்திராணி சதையின் தேவதை. சாமுண்டி நரம்பின் தலைவி.
ப்ராம்மி: 
அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.
மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.
வாராஹி: 
அம்பிகையின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. நமது பிருஷ்டம் பகுதி கழிவுகளை வெளியேற்றுவதும்,உடம்பைத் தாங்குவதும்,ஓய்வு தருவதும் ஆகும். இதன் சக்தியாக பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும். அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.
கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.
மகேஸ்வரி: 
அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.
இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.
இந்திராணி: 
அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி. இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். உலகத்தின் சகல உயிர்களும் தோன்ற பெண் பிறப்புறுப்புதான் காரணமாக இருக்கிறது. தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.
இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.
கௌமாரி: 
கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.
இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்
வைஷ்ணவி: 
அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.
Image may contain: one or more people and people standing
சாமுண்டி: 
ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள். பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!
இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.

நடுநிலை நக்கிகளாவது எப்படி?



 நண்பர்களே..,
உங்களில் யார் வீட்டிலாவது, உறவினர்களிடையாவது, தெருவில் வெட்டி முண்டங்கள் உள்ளதா...?
தயவு செய்து அவர்களை திட்டவோ வெறுக்கவோ வேண்டாம். அவர்கள் தான் நமது எதிர் கால நடு நிலை நக்கிகள், அறிவு ஜீவிகள், சமூக ஆர்வலர்கள்....
யாரும் திகைக்க வேண்டாம். எதார்த்தம் இது தான். வெட்டி முண்டங்களை சிறிது ஆல்டரேசன் செய்து, சமூகத்தில் உலாவ விட்டால் அவர்கள் நடுநிலை நக்கிகளாக மாறி பிரபலம் அடைந்து விடுவார்கள். 
சமூகத்தின் தண்ட சோறுகளை எப்படி நடுநிலை நக்கிகளாக மாற்றுவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.
முதலில் அவர்கள் டை அடிக்க வேண்டும். முகத்தில் கிழடு தட்டியிருக்க வேண்டும் ஆனால் தலை முடி கருப்பாக இருக்க வேண்டும்.
இரண்டாவது அவ்வப்போது பத்திரிக்கைகளில் ஏதாவது பிரச்சினை என்றால் சம்பந்தம் இல்லாத ஏதாவது ஒன்றை இணைத்து யாரையும் குற்றம் சொல்லாமல் ஒரு அறிக்கை விட வேண்டும்.
உதாரணம் : காவேரி பிரச்சினை எஎன்றால் யார் பக்கம் நியாயம் என்று சொல்லவே கூடாது. நைல் நதி யை பற்றியும், அதனை எத்தனை நாடுகள் ஒற்றுமையாக பிரித்துக்கொள்கிறது என்று மட்டுமே பேசவேண்டும்.
அதில் கடைசியாக ஒரு பஞ்ச் வைக்க வேண்டும். இத்தனைக்கும் காரணம் கண்டு கொள்ளாத மத்திய அரசு என்று முடிக்க வேண்டும். எச்சரிக்கை : மத்திய அரசு என்று இப்போதைய பிரதமர் மோடியைத்தான் மறை முகமாக தாக்க வேண்டும். அறுபது வருடமாக கவனிக்கவில்லை என காங்கிரஸ் கட்சியை தாக்க கூடாது.
இதை போல ஒரு நான்கு அறிக்கைகள், கருத்துக்கள் வெளியிட்டால் போதுமானது, வெட்டி முண்டங்களுக்கு தொலைகாட்சி விவாதங்களில் பங்கு பெறும் தகுதி வந்து விடும். தொலைக்காட்சி ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு அழைக்கும்.
இது வரை முதல் படி..., இனி இரண்டாவது படியை பார்ப்போம்.
விவாதத்தில் அமர்ந்தவுடன் முதலில் தாக்க வேண்டியது காங்கிரஸ் கட்சியை தான். அந்த கட்சியை 2G, நிலக்கரி போன்ற சோனியா காலத்து ஊழலை பேசக்கூடாது.
போபர்ஸ் போன்ற காலாவதியான ஊழலை பேச வேண்டும். தற்போதைய ஊழலை பேசுவதானால் சோனியாவை தாக்காமல் ஷீலா தீட்ஷித், சுரேஷ் கல்மாடி போன்றோரை மட்டுமே காட்டி காமன் வெல்த் ஊழலை பேசலாம். சோனியா என்ற பெயரை தப்பி தவறி கூட ஊழல் பற்றிய பேச்சில் எடுத்து விடக்கூடாது.
கருனாநிதியை தாக்கி பேசுவதாக இருந்தால் சர்க்காரியா கமிஷன், விஞ்சான பூர்வமான ஊழல் இந்த வார்த்தைகளை மட்டுமே பேசி ஆரம்பிக்க வேண்டும். 2G பற்றி வாய் திறக்கவே கூடாது. கருனாநிதிஎன்று குறிப்பிடுவது தவறு. ஐ.நா சபையில் சூட்டப்பட்ட கலைஞர் என்கிற என்கிற பெயரையே குறிப்பிட வேண்டும்..
அ.தி.மு.க வை விமர்சிக்கவே கூடாது. வேறு வழி இல்லை என்றால் மன்னார்குடி, மாபியா இந்த இரண்டு வார்த்தைகளை மட்டும் உச்சரிக்கலாம். ஜெயலலிதா என்ற பெயர் நடுநிலை நக்கிகள் உச்சரிக்க கூடாது. அமெரிக்க செனட் சபையில் சூட்டப்பட்ட அம்மா என்ற பெயரை மட்டுமே சொல்ல வேண்டும்.
இது எல்லாம் தொலைக்கட்சிகளில் ஆரம்பத்தில் பேச வேண்டியதற்கான அடிப்படை ஆரம்ப பாடங்கள். 
இந்த அதிரடி ஆரம்பத்திலேயே உங்கள் மதிப்பு உயர்ந்து விடும்.
அடுத்தது தான் மிக முக்கியம். விவாததம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில் அப்படியே ஒரு டைவ் அடிக்க வேண்டும்.
அப்படியே நேரடியாக பிரச்சினைக்கு மைய காரனமே மத்திய அரசு என்று ரூட்டை பிடித்து இந்திய பிரதமர் மோடிக்கு வந்து விட வேண்டும். பிறகு ஜெட் வேகத்தில் வாய்க்கு வந்த படி கடைசி வரை மோடி, பி.ஜே.பி, RSS ஐ திட்டி பேச வேண்டும்.
மோடிக்கு வந்தாகி விட்டதா ....? மதச்சார்பின்மை, சகிப்பு தன்மை, கோத்ரா ரயில. எரிப்பு , குஜராத் கலவரம், என்று குத்து மதிப்பாக கலந்து கட்டி போட்டு தாக்க வேண்டும்.
பாயாசத்தில் முந்திரி பருப்பு கொஞ்சம் சேர்ப்பது போல RSS, கோட்சே, காந்தி கொலை, இஸ்மாயில் பச்சை இதெல்லாம் கொஞ்சம் கலந்து பேச வேண்டியது அவசியம். அப்படி பேசினால் மட்டுமே இந்திய வரலாற்றையே கரைத்து குடித்ததாக நம்புவார்கள்.
பேசும்போது கொலைகார கோவிந்தன் அறிக்கை, பிளேடு பக்கிரி அறிக்கை என்று ஏதாவது இரண்டு காகிதங்களை வைத்துக்கொண்டு மேற்கோள் காட்டி பேச வேண்டும். அந்த அறிக்கையின் வாசகங்களை ஆங்கிலத்தில் படித்து காட்ட வேண்டியது அவசியம்.
இந்து மக்களுக்கு எதிராக பேசுவது துனிச்சலான நடுநிலை நக்கியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்துக்களின் நம்பிக்கை, கலாச்சாரம், கடவுள்களை கண்டபடி விமர்சித்து கேவலமாக பேச வேண்டும். இந்து கடவுள்களை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னால் அவன் தான் நடு நிலை நக்கிகளின் சாம்பியனாக பட்டம் சூட்ட தகுதியானவர்.
Image may contain: 2 people
இதற்கு நடு நிலை நக்கிகள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. சொறியாரிஸ்டுகள் பாராட்டுவார்கள். திராவிட திருடர்களின் அரசு பாதுகாப்பு கொடுக்கும். உண்டியல் குலுக்கிகள், எழுத்தாளர்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தானாக வந்து வக்காளத்து வாங்குவார்கள். மேற்படி நடுநிலை நக்கிகள் வேற்று மதமாக இருந்தாலும் இந்து பெயர்களை தாங்கி வந்தால் அரேபிய அடிமைகள், வாடிகன் வந்தேறிகளிடமிருந்து கூடுதலாக ஆதரவு தூள் பறக்கும்.
இவ்வளவு தான் நடுநிலை நக்கிகளாக மாறி புகழ் பெறுவதற்கான வழிமுறைகள். ஊரில் உள்ள வெட்டி முண்டங்கள் அனைவரும் ஒரு நல்ல நடு நிலை நக்கிளாக மாறி சாம்பியன் ஆப் நடுநிலை நக்கி பட்டம் பெற வாழ்த்துக்கள்.
ஒரு கூடுதல் தகவல். சிறந்த நடு நிலை நக்கிகளுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக வீடு, வீட்டு மனைகள் இலவசமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

பாதி ஓட்டுனர் உரிமம் காலி..........

சிறுநீர் பாதையில் நோய் தொற்றை தவிர்ப்பது எப்படி?

சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்று குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியதாவது, சிறுநீரகம், யூரேட்டர், சிறுநீர்பை, சிறுநீர்குழாய் போன்றவற்றில் ஏற்படும் கிருமி தொற்றுகளையே சிறுநீர்ப்பாதை நோய் என்கிறோம். இதனை 2 ஆக பிரிக்கலாம். மேல் பாகம் சிறுநீரகம் மற்றும் யூரேடர். கீழ்ப்பாகம் சிறுநீர்பை மற்றும் யூரித்திரா. பெரும்பாலும் நோய் தொற்று கீழ்பாகத்தில் தான் ஏற்படும். நாளடைவில் மேல் நோக்கி நோய் தொற்று தொடருவதால் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.

50 சதவீத பெண்கள் இந்நோயினால் பாதிப்பு அடைகின்றனர். குறிப்பாக 20 முதல் 30 சதவீத பெண்களுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்படுகிறது. ஆண்களுக்கு மிக அரிதாக காணப்படுகிறது. காரணம் ஆண்கள் மற்றும் பெண் உறுப்புகளின் மாற்றமே. பெண்களுக்கு ஆசன வாய்க்கும், யூரித்திராவிற்கும் இடைவெளி குறைவு. எனவே பெண்களை நோய் பலவிதத்தில் பாதிக்கிறது.
கர்ப்பகாலத்தில் இந்நோய் பாதிப்பு தொற்றினால் சிறுநீரக பாதிப்பு கூட ஏற்படும். கருவில் உள்ள குழந்தைக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படும். இந்நோய் சிறுநீர் பையை தாக்கினால் இதனை சிஸ்டைட்டிஸ் என்றும், யூரித்திராவை பாதிப்படைய செய்தால் சிறுநீரகத்தை பாதித்தால் பைலோபநெப்ரைட்டிஸ் எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் 3 முதல் 6 மாதத்தில் சிறுபாதிப்புகளை சந்திக்கிறார்கள்.
கண்டறியும் முறை:
ஆய்வகத்தில் சிறுநீரில் உள்ள நுண்ணுயிரை வளரச் செய்து அதன் தன்மைக்கு ஏற்ப கண்டறியலாம். பெரும்பாலும் ரத்த பரிசோதனை தேவை இல்லை என்றாலும் சிறுநீரகத்தின் நிலை அறிய ரத்த பரிசோதனை உதவுகிறது. கிரியாற்றினின் பரிசோதனை மூலம் இதன் செயல் திறனை அறியலாம்.
வகைகள்
கீழ்மார்க்க பாதிப்பு:
யூரித்திரா, சிறுநீர்பையில் நோய் தொற்று ஏற்பட்டால் இப்பாகத்தில் உள்ள தசைகளில் வீக்கமும் தொடர்ந்து எரிச்சலும் வரும்.
அறிகுறிகள்:
வலி மற்றும் எரிச்சல் சிறுநீர் கழிக்கும் போது இருக்கும். மேகம் போன்றோ, வாடையுடனோ, ரத்தம் கலந்து காய்ச்சலுடன் அடி வயிறு காணப்படும்.
மேல் மார்க்கநோய்:
சிறுநீரகம் மற்றும் யூரேட்டர்களில் பாதிப்பு ஏற்படும். யூரேட்டர் அரிதாக பாதிக்கப்படும். பாதிப்பு ஏற்பட்டு விட்டால் விரைவில் சிறுநீரகத்தை பாதிக்கச்செய்துவிடும்.
அறிகுறி:
அதிக காய்ச்சல், உடல் நடுக்கம், ஜூரம், வாந்தி போன்ற எண்ணம். விலாவிலும் இடுப்பிலும் வலி இருக்கும்.
சிகிச்சை :
இதன் வகைகளை பொறுத்து ஆன்டிபயாடிக் சிகிச்சை அளிக்கலாம். ஆன்டிபயாடிக்களை தகுந்தகால இடைவெளியில் தொடர்ந்து உபயோகிக்க விரைவில் குணமாகும்.
ஆயுர்வேத சிகிச்சை:
நெல்லிக்காய், பேய்புடலை, சீந்தில், வசம்பு, கோரை, நிலவேம்பு, திப்பிலி, கொடுவேலி, கொத்தமல்லி, நெருஞ்சில், வாய் விடங்கம், சுக்கு, மிளகு., பட்டை, ஏலம், குகுலு, தசமூலம், கண்டன் கத்திரி, பூளம்பு, சந்தனம், மாவிலங்கு, குமிழ், பற்படகபுல், திராட்சை, இந்துப்பு, மூங்கில் உப்பு போன்றவற்றால் செய்த மருந்துகள் சிறந்த பலன்தரும்.
தவிர்க்கும் முறை:
குளம் குட்டை, ஆறுகளில் குளிப்பதோ அந்த தண்ணீரை உடல் பட உபயோகிப்பதோ கூடாது. காரணம் பொதுவாக ஆறுகள் தாழ்வாக செல்வதாலும், அந்த வடிகால்களில் மனித கழிவுகள் ஊர் கழிவுநீருடன் ஆறுகளில் கலக்கின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவேண்டும்.
வீட்டு சிகிச்சை:
போதுமானஅளவு நீர் அருந்தவேண்டும். நெல்லிபொடி, மஞ்சள் கலந்த தண்ணீர் சாப்பிட்டு எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா, வாழை, தர்பூசணி, பப்பாளிபழச்சாறு அதிகம் பருகலாம். நாவல்பழம், அன்னா்சிபழம், சாறை அதிகம் பருகுவதுடன், கலாக்காய் இதற்கு சிறந்த மருந்தாகும். கொத்தமல்லி தண்ணீர், கடுகு எண்ணை ஒரு கரண்டி பருகலாம். தினமும் 2 கரண்டி 2 வேளை ஆப்பிள் சீடர் தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். சூடான நீரில் துணியை நனைத்து அடிவயிற்றில் சூடு கொடுத்தால் கிருமிகளை கொன்று வலியையும் குறைக்கலாம்.

பிறந்தவீடு_புகுந்தவீடு...!

1. அலாரம் இல்லாமலேயே எந்திரிச்சிடுவோம் மாமியார் வீட்ல,
அடிக்கிற அலாரத்தை அடிச்சு நிப்பாட்டிட்டு அடிச்சு போட்ட மாதிரி தூங்குவோம் அம்மா வீட்ல. .
2. சாப்பிடுறோமோ இல்லையோ கரெக்ட் டயத்துக்கு சமைச்சிடுவோம் மாமியார் வீட்ல,
சமைச்ச சாப்பாடு காத்துக்கிட்டு௫க்கும் நமக்காக அம்மா வீட்ல. .
3. மொபைல் வச்ச இடமே மறந்து போகும் மாமியார் வீட்ல,
கையை விட்டு மொபைல் கீழே இறங்காது அம்மா வீட்ல. .
4. ஓடிக்கிட்டி௫க்கிற டிவி யை வெறுமனே பார்ப்போம் மாமியார் வீட்ல,
ரிமோட் நம்ம கையில் பாடாய்படும் அம்மா வீட்ல. .
5. சுடிதார் துப்பட்டா ரெண்டு தோளை விட்டு நகராது மாமியார் வீட்ல,
துப்பட்டா சர்ட் ஹேங்கர்ல தொங்கிட்டு இ௫க்கும் அம்மா வீட்ல. .
இதெல்லாம் சரிதானே,
ஆனாலும் #புகுந்தவீட்டில் கிடைக்கும்
நற்பெயர்தான்

கனவில் தோன்றிய மகாலட்சுமி....

🙏கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி :🙏🙏🙏
சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.
*‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.*

Wednesday, August 30, 2017

இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது.



முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் ஆட்சியை கலைக்க வேண்டும் என சசிகலா விரும்புவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அதிமுகவிலிருந்து தினகரன் ஒதுக்கிவைக்கும் முயற்சி மட்டுமே இதுவரை நடந்துவந்தது.
தற்போது ஒ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஆகிய இருவதும் சேர்ந்து இரு அணியும் ஓரணியான பின், சசிகலாவையும் கட்சியிலிருந்து வெளியே அனுப்பும் வேலையில் அவர்கள் இறங்கிவிட்டனர்.
இது தொடர்பாக நேற்றைய தீர்மானத்தில் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக நியமித்த போது, தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்த பிரமாணப் பாத்திரத்தை வாபஸ் பெறுவதற்காக ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி இருவரும் இன்று டெல்லி செல்கின்றனர். இது சசிகலாவிற்கு கடும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதற்கு முன் எடப்பாடி தரப்பு தினகரனிடம் மோதல் போக்கை கடைபிடித்து வந்த போது, இந்த ஆட்சி கலையக்கூடாது.
இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சி முழுமையாக இருக்க வேண்டும். எனவே, பொறுமையாக இருங்கள், ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசாதீர்கள் என தினகரன் மற்றும் அவரின் ஆதரவாளர்களை அமைதிப்படுத்தி வந்தார் சசிகலா.
ஆனால், தன்னையே நீக்கும் முடிவிற்கு எடப்பாடி பழனிச்சாமி வந்துவிட்டதால் கடுமையான கோபத்தில் இருக்கிறாராம் நேற்று சசிலாவிற்கு உணவு கொண்டு சென்ற இளவரசியின் மகன் விவேக்கிடம் “என்னை கட்சியிலிருந்து அனுப்புவதற்காகத்தான் எடப்பாடியும், ஓ.பி.எஸ்-ஸும் ஒன்று சேர்ந்தார்களா?. இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது.
இன்னும் 5 நாட்களுக்குள் ஆட்சி கலைய வேண்டும்.
புதிய முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். அதற்கான காரியங்களை தினகரனையும், திவாகரனையும் செய்ய சொல்” என காட்டமாகவே கூறினாராம்.
இது உடனடியாக தினகரன் மற்றும் திவாகரன் தரப்பிற்கும் தெரிவிக்கப்பட்டது. சசிலாவிடமிருந்தே சிக்னல் கிடைத்த விட்டதில் உற்சாகம் அடைந்த தினகரன் அதற்கான காரியங்களில் இறங்கிவிட்டதாக தெரிகிறது....
Image may contain: 1 person, camera, phone and closeup

கையிலே வெச்சிருக்கிற லைசன்ஸ் ஒரிஜினல் தானான்னு டேட்டா பேஸில் ஸ்பாட் செக் செய்யும் ஆப்ஷன் இல்லாத வரையில் இதெல்லாம் வேஸ்ட் தான்.

”ஒரிஜினல் லைசன்ஸைக் கையில் கொண்டு செல்வதில் என்ன பிரச்னை?” என்று வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு சிலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். “எல்லா நாட்டுலேயும் இதான் ரூல்” என்றும் சப்பைக்கட்டு.
எல்லா நாட்டிலேயும் ஒரு ரூல் இருக்கிறது என்பதற்காக அது இங்கேயும் இருக்க வேண்டும் என்பதில்லை. அப்படி எல்லா நாட்டிலேயும் அப்படித்தான் என்பதும் உண்மையில்லை என்பது வேறு விஷயம்.
இங்கே லைசன்ஸ் எடுப்பது சாதாரண விஷயமில்லை. அதை விட லைசன்ஸ் தொலைந்து போனால் திரும்பவும் duplicate லைசன்ஸ் எடுப்பது அதை விட மிகக் கடினமான விஷயம் வேறொன்றுமில்லை.
நானும் பல வெளிநாடுகளுக்குப் போய் வந்தவன் தான். எனவே ‘அங்கெல்லாம் இருக்குதே’ன்னு டகால்டியெல்லாம் இங்கே வந்து விட வேண்டாம்.
நான் தாய்லாந்திற்குச் சென்ற புதிதில் என்னிடம் இந்திய ட்ரைவிங் லைசன்ஸ் இல்லை. ஏனென்றால் நான் கல்லூரிக் காலத்தில் சைக்கிள் தான் ஓட்டிச் சென்றிருக்கிறேன். சைக்கிளுக்கு லைசன்ஸ் தேவை இல்லாததால் அதை இங்கே எடுக்கவில்லை. கல்லூரிப் படிப்பு முடித்து சென்னையில் சில மாதங்கள் இருந்த போதும் பேருந்துப் போக்குவரத்து தான். எனவே இங்கே லைசன்ஸ் என்ற வஸ்துவே எனக்குத் தேவைப்படவில்லை. அதை எடுப்பதற்கான அவசியமே எனக்கு ஏற்படவில்லை.அது இருந்திருந்தால் அதை வைத்து தாய்லாந்தில் லைசன்ஸ் எடுப்பது எளிது. அதே போல அமெரிக்காவிற்கு பணி நிமித்தம் செல்லும் போதெல்லாம் அங்கே நம் இந்திய அல்லது தாய்லாந்து நாட்டின் லைசன்ஸைக் காட்டியே ஏர்போர்ட்டில் வாடகைக் கார் எடுப்பதும், காவலர்களிடம் தேவைப்பட்டால் காட்டவும் செய்திருக்கிறோம். பிரச்னை எழுந்ததில்லை. இண்டர்நேஷனல் ட்ரைவிங் லைசன்ஸ் கட்டாயத் தேவையாக இருந்ததில்லை.
இந்திய லைசன்ஸ் இல்லாவிட்டால் இந்திய தூதரகத்தில் நாம இந்தியர் தான், தாய்லாந்தில் பணி நிமித்தமோ அல்லது டூரிஸ்டாகவோ வந்திருக்கிறோம் என்ற சான்று ஒன்றைப் பெற வேண்டும். அதை எடுத்துச் சென்று அங்குள்ள லைசன்ஸ் வழங்கும் அதாரிடியிடம் சென்றால் ஒரு புத்தகத்தைக் கொடுத்து போக்குவரத்து விதிமுறைகளைப் படிக்கச் சொல்வார்கள். படித்து முடித்து சென்று கம்ப்யூட்டர் தொடு திறையில் தேர்வினை முடிக்க வேண்டும். ஆம் / இல்லை பாணி கேள்விகள் தான். ஆனால் 20-க்கு குறைந்தபட்சம் 16 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
என்னை அந்தத் தேர்வுக்கு என்னுடைய குருவான நண்பர் Sathik Hanifa தான் அழைத்துச் சென்றார்.
இதில் தோல்வியடைந்து விட்டால் பிறகு மறுநாள் தான் மீண்டும் தேர்வு அனுமதி கொடுப்பார்கள்.
முதல் தடவை 15 மார்க்.. இரண்டாவது தடவை 14 மார்க்.. மூன்றாவது தடவை 19 மார்க். மூன்றாவது நாள் தான் தேர்வானேன். வெயிட்டீஸ்.. உடனே லைசன்ஸ் கிடைத்து விடவில்லை.
இது முடிந்த பிறகு வண்டி ஓட்டிக் காட்டச் சொல்வார்கள். நம்மூர் மாதிரி 8 போட்டுக் காட்ட வேண்டாம். ஆனால் ஒரு குட்டி மைதானத்தில் மேடு, பள்ளமெல்லாம் இருக்கும். பத்து, பதினைந்து பைக், நான்கைந்து கார் என்று ஒரே சமயத்தில் ஆட்களை ஓட்டச் சொல்வார்கள். கார் என்றால் சரியான வேகத்தில் இண்டிகேட்டர் எல்லாம் போட்டு, சீட் பெல்ட் எல்லாம் போட்டு ஓட்ட வேண்டும். பைக் என்றால் காருக்குப் பின்னாலிருந்து ஓவர் டேக் செய்யும் போது ஹார்ன் அடித்து, திருப்பங்களில் கை காட்டி, காலைக் கீழே ஊன்றாமல் ஓட்ட வேண்டும்.
முதல் தடவை எனக்கு முன்னால் போன பிரகஸ்பதி காரினை நட்ட நடுவில் நிறுத்தி விட்டு திரும்ப எடுக்கத் தெரியாமல் தடவிக் கொண்டிருந்ததால் நான் பின்னால் நிற்க வேண்டியதாகிப் போய் விட்டது.
போச்சா? என்னையும் சேர்த்து ஃபெயிலாக்கி விட்டார்கள். பிறகு மறுநாள் சென்று சரியாக ஓட்டிக் காட்டி லைசன்ஸ் பெற்று வந்தேன்.
பிறகொரு சமயம் இந்தியாவிற்கு வந்த போது ஊரிலேயே அந்த லைசன்ஸை வைத்து விட்டுச் சென்று விட்டேன். நேரே சென்று லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் எழுதிக் கொடுத்தேன். அதற்கு 20 தாய் பாட் (நம்மூர் கணக்குக்கு 40 ரூபாய்) கட்டணம். அதற்கு ரசீது உண்டு. என்னிடம் அன்று 500 பாட் நோட்டாகத் தான் கையில் இருந்தது. “சரி சரி.. அடுத்த தடவை லைசன்ஸ் தொலைஞ்சிச்சுன்னு புகார் கொடுக்க வரும் போது சேர்த்து தரவும்” அப்படின்னு போலீஸ் ஸ்டேஷனில் காசே வாங்காமல் வழி அனுப்பினார்கள்.
தாய்லாந்து நாட்டில் போலீஸ் ஸ்டேஷனில் சென்றால் ஏதோ சமூக விரோதியைப் பார்ப்பது போலெல்லாம் லுக் விட மாட்டார்கள். கனிவான வரவேற்பு இருக்கும். அங்கேயும் லைசன்ஸ் இல்லாமலோ அல்லது வேறு தவறாகவோ வண்டி ஓட்டி மாட்டினால் லஞ்சம் கொடுத்து தப்பிக்கலாம் தான். ஆனால் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும் என்று கட்டாயமில்லை.
அவர்கள் எழுதிக் கொடுத்ததை எடுத்துக் கொண்டு
லைசன்ஸ் அலுவலகத்தில் கொடுத்தால் 50 பாட் கட்டணம் செலுத்தினால் போதும். அடுத்த சில நிமிடங்களில் டூப்ளிகேட் லைசன்ஸ் கையில் கிடைத்து விடும். 10 வருடங்களுக்கு முன்பு எடுத்த தாய்லாந்து லைசன்ஸ் இன்னமும் புத்தம் புதிது போலவே என்னிடம் இருக்கிறது. ப்ளாஸ்டிக் தான். ஆனால் கனமான ப்ளாஸ்டிக் கார்டு. மடங்காது. உடையாது.
லைசன்ஸ் வழங்கும் அலுவலகத்திலும் கூட கும்பலாக ட்ரைவிங் செண்டர் ஆட்கள் கூடி நின்று கும்மியடிக்கும் வேலையெல்லாம் இருக்காது. உள்ளே நுழையும் போதே டோக்கன் நம்பர் கொடுத்து உட்கார வைத்து விடுவார்கள். லைசன்ஸ் வழங்கும் அலுவலகம் நான்கைந்து மாடிகள் கொண்ட விசாலமான கட்டடம். ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு பகுதி. லைசன்ஸ் வழங்குவதற்கு மட்டும் சுமார் 30 பேர் இருப்பார்கள். டோக்கன் நம்பர் படி தான் அழைக்கப்படுவோம். உள்ளே ஃபேன், நாற்காலி, படிக்க பேப்பர், பார்க்க டிவி, சுத்தமான குடிநீர் என்று சகல வசதிகளும் வருகையாளர்களுக்கு இருக்கும். கேண்டீன் கூட உண்டு. என்ன தான் கூட்டம் என்றாலும் நீண்ட நேரமெல்லாம் காத்திருக்க நேராது.
”இப்போ அப்ளை பண்ணிட்டு ஈவினிங் வா” கதையெல்லாம் கிடையாது.
“காலையிலே 9.30யிலேருந்து 11 மணி வரைக்கும் தான் அப்ளை செய்ய முடியும்” என்றெல்லாம் கதை கிடையாது. வேலை நாட்களில் நாள் முழுவதும் எப்போதும் உண்டு.
“குறிப்பிட்ட நாளன்று லைசன்ஸ் அலுவலகத்திலிருந்து 2 கிலோ மீட்டர் ஒதுக்குப் புறத்தில் வந்து 8 போட்டுக் காட்டு” என்ற சங்கதி கிடையாது.
“நீ நேரடியா வந்தியா, ட்ரைவிங் ஸ்கூல் வழியா வந்தியா?” என்ற கேள்வியெல்லாம் கிடையாது.
பாக்கெட்டில் வைத்தாலே வளைந்து, நெளிந்து, உடைந்து போகுமளவிற்கு கேவலமான ப்ளாஸ்டிக்கில் அச்சடித்துத் தரப்படுவது கிடையாது.
இதையெல்லாம் விட... லைசன்ஸை மறந்து வீட்டில் வைத்துச் சென்று விட்டால் கையில் இருக்கும் வேறு அடையாள அட்டை எதையும் காட்டி எழுதி வாங்கி வந்து பிறகு சென்று அதனைக் காவல் நிலையத்தில் காட்டலாம். பாஸ்போர்ட், வொர்க் பர்மிட் எல்லாம் வீட்டை விட்டு வெளியில் வந்தாலே கையில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் தான். வைத்திருக்கத் தான் செய்தேன். இப்போது இங்கேயும் என் காரில் ஒரிஜினல் லைசன்ஸ் எப்போதும் இருக்கும் தான். ஆனால் நான் கையில் ஒரிஜினல் தான் வைத்திருக்கிறேன். எல்லோரும் கையில் ஏன் வைத்துக் கொள்ளவில்லை என்று அடிப்படை பிரச்னைகளைப் புரிந்து கொள்ளாமல் அசட்டுத் தனமாக நான் கேள்வி எழுப்ப மாட்டேன்.
எனக்கு லைசன்ஸ் காணாமல் போனால் மீண்டும் நயா பைசா லஞ்சம் கொடுக்காமல் லைசன்ஸ் எடுக்கத் தெரியும். ஏனென்றால் முதல் தடவை லைசன்ஸ் எடுத்த போதே அப்படிச் செய்தவன் தான் நான். முதல் தடவை அலைக்கழிக்கப்பட்டு தான் லைசன்ஸ் வாங்கினேன். அந்தக் கதையை அப்போதே எழுதியிருக்கிறேன்.
லைசன்ஸ் எடுப்பதையும், அதன் நகல் எடுப்பதிலேயும் நடைமுறைச் சிக்கல்களையெல்லாம் நீக்கப்பட வேண்டும். எளிமையாக்கப்பட வேண்டும்.
லைசன்ஸையும் ஸ்மார்ட் கார்டாக மாற்ற வேண்டும்.
அதையெல்லாம் விட டிஜிலாக் என்ற மொபைல் செயலியில் நமது லைசன்ஸை நம் ஸ்மார்ட் ஃபோனில் தரவிறக்கிக் கொள்ளும் வசதில் இருக்கிறதே. ஆனால் அப்படி தரவிறக்கம் செய்யும் ஈ-லைசன்ஸை ஏன் ஒரிஜினல் என்று ஏற்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் இருக்கிறதா?
ஆதார் அட்டையையே ஈ-ஆதார் என்று ஏற்றுக் கொள்ளும் போது இதனை ஏன் ஏற்கக் கூடாது?
லைசன்ஸ் செக் செய்யும் காவல் அதிகாரிகள் கையில் ஒரு ஸ்மார்ட் ஃபோனைக் கொடுத்து நாம் ஈ-லைசன்ஸ் காட்டினால் அது உண்மையா,நம் புகைப்படம் தான் இருக்கிறதா என்று அவர்கள் சரி பார்க்க வசதி செய்து கொடுக்கலாமே?
அப்படி முடியாதென்றால் என்ன கூந்தலுக்கு ஈ-லைசன்ஸ், எறும்பு லைசன்ஸ் என்றெல்லாம் மக்கள் வரிப்பணத்தில் வடிவமைத்து வைத்திருக்கிறார்கள்?
இதெல்லாம் தான் கேள்விகள். இதை எல்லாம் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சரிடமும் கேட்டேன். (அவருடைய பதில் நாளை செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகும் புதிய தலைமுறை வார இதழில் வெளியாகும்). வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சிலரிடம் நேரில் சென்றும் கேட்டேன். அதையே தான் இங்கேயும் கேட்கிறேன்.
எனவே அடிப்படை விபரம் புரியாமல், “ஒரிஜினல் லைசன்ஸ் கையில் வைத்திருந்தால் என்ன பிரச்னை?” என்றெல்லாம் கமெண்ட்ட வேண்டாம்.
நான் நம்மூரில் லைசன்ஸ் எடுத்த காதை :
இதன் ஃபாலோ-அப்பாக நான் கோவை வந்து முகவரி மாற்றத்திற்குக் கொடுத்த போது அதற்கு ஒரு தனி பஞ்சாயத்து நடந்தது. ”சென்னையிலே NOC வாங்கணும். அங்கே போய் வாங்க முடியலைன்னா இங்கே 600 ரூபாய் தாங்க. நாங்க முடிச்சுத் தரோம்” அப்படின்னு வெளியில் இடைத்தரகர்கள் சொன்னார்கள். ‘போங்கடாங்...’ அப்படின்னுட்டு இதற்காகவே சென்னைக்குச் சென்று அங்கே NOC வாங்கி வந்து இங்கே முகவரி மாற்றம் செய்தேன். போக்குவரத்து, தங்குமிடச் செலவு ரூ. 2,000. அதுவும் நான் 9 மணிக்கே சென்று போராடி நின்றும் 2 மணி நேரம் காக்க வைக்கப்பட்டு, “நாளைக்கு வாங்க” என்று பதில் வந்து மேலே உள்ள எனது ஃப்ளாஷ் பேக் இணைய இணைப்பை மொபைல் ஃபோனில் எடுத்துக் காட்டியவுடன் 5 நிமிடங்களில் NOC கொடுக்கப்பட்டது தனிக்கதை.
அவனவன் பாஸ்போர்ட்டையே அச்சு அசல் மாதிரி டூப்ளிகேட் அடிக்கிறான். லைசன்ஸ் ஹாலோகிராமெல்லாம் போட்டு டுபாகூர் அடிக்கிறது செய்ய மாட்டானுங்களா என்ன?
கையிலே வெச்சிருக்கிற லைசன்ஸ் ஒரிஜினல் தானான்னு டேட்டா பேஸில் ஸ்பாட் செக் செய்யும் ஆப்ஷன் இல்லாத வரையில் இதெல்லாம் வேஸ்ட் தான்.
ஆகவே.. மீண்டும் சொல்கிறேன்..
எனக்கு லைசன்ஸ் காணாமல் போனால் மீண்டும் நயா பைசா லஞ்சம் கொடுக்காமல் லைசன்ஸ் எடுக்கத் தெரியும். சட்டப்பூர்வமாகச் சென்று தான் வாங்குவேன். எதிர்க்குரல் எழுப்புவேன். ஆனால் எத்தனை பேரால் இது முடியும் என்பது தான் கேள்வி. அப்படி முடியாதபட்சத்தில் மக்களை இன்னலுக்குள்ளாகும் இந்த அவசரச் சட்டம் தேவையா என்பதே கேள்வி.

பிற மொழிகளை கற்றால் நமது அறிவுத்திறன் மேலும் அதிகரிக்கும் .

70% மலையாளிக்கும்,
40% கன்னடர்களுக்கும்,
35% தெலுங்கர்களுக்கும்
#தமிழ் பேச, எழுத தெரியும்..அது மட்டுமல்லாது ஹிந்தியும் தெரியும்
ஆனால் எத்தனை தமிழர்களுக்கு பிறமொழி தெரியும்?
பிறமொழி கற்காத காரணத்தால் பலவித வாய்ப்புகளை இழந்துக் கொண்டிருக்கிறோம்..
மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கேரளாவிற்கு அதிகமாக திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது இதற்கு, மத்திய அரசு அதிகாரிகளாய் பெருமளவு மலையாளிகள் இருப்பதே காரணம்.. அவர்கள் இந்தி சரளமாக பேசுவார்கள்.. கலை, அறிவியல், விளையாட்டு துறைகளிலும் மலையாளிகளின் ஆதிக்கமே..
இந்தி கத்துக்கோங்கனு சொன்னால், இந்திக்காரன் இங்கே பானிபூரி விற்குறானு சொல்றாங்க.. சரி ஏத்துக்கிறேன்.. ஆனால் இந்தி தெரியாம வடநாட்டுல போயி டீ கூட விற்க முடியாது. அவங்க இங்க வந்து பெரிய ஹோட்டலை கட்டிருவாங்க.
தமிழ் மட்டுமே படிக்க வேண்டும் என திராவிடர்கள் கூற காரணம், பிற மொழிகளை கற்றால் நமது அறிவுத்திறன் மேலும் அதிகரிக்கும் அதனால் தான் அதை தடுக்கிறார்கள்...

பாப்கார்னை டைம் பாஸ்க்காக சாப்பிட்டாலும் அதிலிருக்கும் நன்மைகள் தெரியுமா?


உலகம் எங்கிலும் மக்கள் பாப்கார்னை விரும்பி சுவைக்கின்றனர்.தியேட்டர்களில் படம் பார்ப்பதற்காக வரும் கூட்டத்தில் முக்கால்வாசி பேர் பாப்கார்னை சுவைப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். பாபிகார்னை பொரித்து அப்படியே உண்ணும் வரையில் இது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாகும்.
இதில் சீஸ்,வெண்ணை, உப்பு, மற்றும் வேறு பல சுவையூட்டிகள் சேர்க்கும்போது இவை ஒரு ஆரோக்கியமற்ற ஜங்க் உணவு ஆகிறது. பாப்கார்னை வெறும் சூட்டில் பொறிப்பது மட்டுமே போதுமானது. இதுவே ஆரோக்கியமானதும். ஆகையால் இதனை ஆலிவ் ஆயில் மற்றும் வேறு எண்ணெய் மூலம் பொரிப்பதை தவிர்த்திடுங்கள்.
பாப்கார்னில் நார்ச்சத்து,பாலிபீனாலிக் கூறுகள் வைட்டமின் பி காம்ப்லெஸ் , மாங்கனீசு , மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது ஒரு சிறந்த ஆக்ஸிஜென்னேற்றி .
பாப்கார்ன் என்பது ஒரு முழு தானியம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். மற்ற தானியங்களான அரிசி, கோதுமை போன்றவற்றின் குணநலன்களை பெற்றிருக்கும். பாப்கார்னின் தவிட்டில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும்.
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குடலில் இயக்கங்கள் சீராக இருக்கும். மென்மையான குடல் திசுக்கள் மற்றும் செரிமான புலன்களால் செரிமான மண்டலம் சிறப்பாக இயங்கும். இதனால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது.
தானியங்களின் மூலம் கிடைக்கப்படும் நார்ச்சத்துகள் இரத்த குழாய்களிலும் தமனியிலலும் படிந்திருக்கும் அதிக அளவு கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது. அதனால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இதன்மூலம், இதய நோய், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் வராமல் தடுக்கப்படுகிறது. இரத்த குழாய்களிலும் தமனிகளில் இரத்தம் சீராக பாய்வதால், இதயத்திற்கு எந்த வொரு அழுத்தமும் ஏற்படுவதில்லை.
நார்ச்சத்து மிகுந்த உணவின் மற்றொரு பயன்பாடு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது. அதிக அளவில் நார்ச்சத்து உடலில் இருக்கும்போது, இது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவின் வெளியீடு மற்றும் நிர்வாகத்தை சிறப்பாக இயக்குகிறது. இத்தகைய சிறப்பான நிர்வாகம், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் தேவைப்படும். ஆகையால் இந்த நார்ச்சத்து மிகுந்த உணவு நம் அனைவருக்கும் அவசியம் தேவையான ஒன்று.
பாப்கார்னில் உள்ள அதிக ஆக்சிஜெனேற்றம் தன்மை ஆராய்ச்சியாளர்களுக்கே வியப்பை உண்டாக்கியது. பொதுவாக ஒரு ஜங்க் உணவாக கருதப்படும் இந்த பாப்கார்னின் ஓட்டில், அதிக அளவிலான போலிபீனாலிக் கூறுகள் காணப்படுகிறது. இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.
இது நாம் தினசரி பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிக அளவு ஆக்ஸிஜனேற்றியாகும். புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களை உண்டாக்கும் அடிப்படைக்கூறுகளை எதிர்த்து போராடுவதே இந்த ஆன்டி ஒக்சிடண்ட்டின் பணியாகும். பாப்கார்ன் இந்த அபாயத்தை நிச்சயம் குறைக்கிறது.
பிரீ ரடிகல்ஸ் என்னும் அடிப்படை கூறுகள் புற்று நோய் போன்ற வேறு உபாதைகளையும் உடலுக்கு செய்கின்றன. தோல் சுருக்கங்கள்,தசைகள் வலிமையிழத்தல், குடல் பிரச்னை, கீல்வாதம், அல்சைமர், டிமென்ஷியா , முடி கொட்டுதல் போன்றவை இந்த அடிப்படைக்கூறுகளால் ஏற்படும் உபாதைகளாகும். பாப்கார்னில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இந்த கூறுகளை எதிர்த்து போராடுவதால் இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடிகிறது.
ஒரு சராசரி அளவு கிண்ணம் பாப்கார்ன் 30 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. இது ஒரு சிறிய பாக்கெட் உருளை கிழங்கு சிப்ஸை காட்டிலும் 5 மடங்கு குறைவு. இதில் உள்ள நார்ச்சத்து நமது வயிற்றை எளிதில் நிரப்பக்கூடும்.
பசியை தூண்டும் ஹார்மோன் சுரக்காமல் தடுக்கிறது.இதனால் உடல் எடையை குறைக்க விரும்புவோர் கூட இதனை உட்கொள்ளலாம். இது ஒரு குறைந்த கொழுப்பு உணவாகவே கருதப்படுகிறது, மற்றும் இதில் இருக்கும் இயற்கையான எண்ணெய் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான எண்ணெய்தான் .
பாப்கார்ன் என்பது நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி தான்.ஆனால் அதில் உப்பு, வெண்ணை , சீஸ் போன்றவற்றை சேர்க்காமல் சுவைப்பது சிறந்தது.பதப்படுத்தப்பட்ட பாப்கார்னை உண்பது நல்ல விளைவுகளை கொடுக்காது. பாப்கார்னுடன் மற்ற பொருட்களை சேர்த்து பொரிந்தவுடன் அதில் நிறைந்துள்ள போலிபீனாலிக் கூறுகள் வலுவிழந்து விடுகின்றன. அதன் பிறகு இதுவும் மற்ற ஜங்க் உணவுகள் போல் தோற்றமளிக்கின்றன.

இன்னும் ஒரு சில நாட்களில் பல அதிரடிகள் காத்து இருக்கின்றது!



"இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரே கொள்கையோடு" நம் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சரவை, முதல்வர், கவர்னர், மத்திய அமைச்சர்கள், பிரதமர், துணை ஜனாதிபதி, ஜனாதிபதி & குமரி முதல் இமயம் வரை இந்தியர்கள், ஏழரை கோடி தமிழக தமிழர்கள் மற்றும் பத்தரை கோடி உலக தமிழர்கள் - "தி மு க அழித்துஒழிக்கப்படவேண்டும்! சசிகலா மாபியா குடும்ப கும்பல் அழித்துஒழிக்கப்படவேண்டும்!" என்ற ஒரே நிலையில் - ஜெயலலிதா இன்னும் மறையவில்லை! அவரின் ஆன்ம ஆசி பரிபூரணமாக தமிழர்களுக்கு இருக்கிறது! இன்னும் ஒரு சில நாட்களில் பல அதிரடிகள் காத்து இருக்கின்றது! வெகு ஜன மக்களை எதிர்த்து யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதை சிலர் மிக பெரிய விலை கொடுத்து புரிந்து கொள்ள போகிறார்கள்!
Image may contain: 1 person

*பன்றிக் கொழுப்புக் கலவை கட்டாயம் பார்க்கவும்*

NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.
FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
______________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _____________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்பிள்ளைக்கு கூட ஆசையாக கொடுக்கிறோம்?
_______________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
__________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
ஹிந்தி ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
__________________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.
● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)
● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!
● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.
● கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.
தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!
*இதனைமற்ற குழுமங்களிலும் பகிறவும் உங்களால் ஒருவரேனும் பயன்பெறட்டும்*.

திருவாலங்காடு வடஆரண்யேஸ்வரர் கோவில் ரகசியம் மற்றும் சிறப்புகள்:

நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, “சிதம்பர ரகசியம்’ என்பது போல, ஆலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது.
சிவனைத் தரிசிக்க, கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்றார் காரைக்கால் அம்மையார்.
சிவன் அவரை, “அம்மா!’ என்றழைத்து, “என்ன வரம் வேண்டும்?’ எனக் கேட்க, அவர், “எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்…’ என்றார்;
கேட்ட வரத்தை அருளினார் சிவன்.
அத்துடன், அவ்வூர் மன்னன் கனவில் தோன்றி, காரைக்கால் அம்மையார், தன் கோவிலில் தங்கப் போவதாகவும், தனக்கு பின்புறம் அவருக்காக ஒரு சன்னிதி எழுப்பும்படியும் கூறினார்.
அதன்படி மன்னன், நடராஜருக்கு பின்புறம் சன்னிதியில் பாதியை மறைத்து, சுவர் எழுப்பினான். அதனுள், ஐக்கியமானார் காரைக்கால் அம்மையார். தற்போதும், இவர் சிவனின் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதையே, “ஆலங்காட்டு ரகசியம்’ என்கின்றனர்.
இங்குள்ள அம்பாளை, “சமிசீனாம்பிகை’ என்பர்.
“சமிசீனம்’ என்றால், “ஆச்சரிய பாவனை!’
இவளது விக்ரகம், நடராஜரின் நடனத்தைப் பார்த்து ஆச்சரியத்துடன் நிற்பது போல செதுக்கப்பட்டுள்ளதால், இப்படி ஒரு பெயரை சூட்டினர்.
காளியுடன் சிவன் போட்டி நடனம் ஆடியபோது, அதன் உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்க நிலைக்குச் சென்றனர்.
தன் தலையிலிருந்த கங்கையைத் தெளித்து, அவர்களை எழுப்பினார் சிவன்.
இதனடிப்படையில் இன்றும் இங்கு தீர்த்தம் தரப்படுகிறது.
குமாந்தீஸ்வரர் என்ற சிறப்பு வாய்ந்த சிவலிங்கம் இந்த கோயிலில் அமைந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இத்திருக்கோவில் மாந்தி தோசத்திற்கு
உரிய பரிகார ஸ்தலம் ஆகும்
இத்திருக்கோயிலில் மாந்தீஸ்வரரை சனிக்கிழமையில் தரிசித்து பரிகாரம் செய்ய மாந்திதோசம் விலகி சுபிட்ஷம் உண்டாகும்.
பிரகாரத்தில் சனீஸ்வரரின் மகனான மாந்தி வழிபட்ட மாந்தீஸ்வரர் இங்கு அருள் புரிகிறார். இவரை வணங்கினால் தீர்க்காயுள் கிடைக்கும்.
ஜென்ம ஜாதகத்தில்11ம் இடத்தைத்தவிர மாந்தி வேறு எந்த கட்டத்தில் இருந்தாலும் இங்கு வந்து பரிகாரம் செய்ய மாந்திதோசம் விலகும்.
அதோடு மட்டுமல்லாமல் ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டமத்து சனி, போன்ற கிரகநிலை இருப்போர், மாந்தீஸ்வரரை வணங்கினால் நலம் பெறலாம் என்று கோயிலில் உள்ள குறிப்பு சொல்கிறது.
மாந்தி தோஷ பரிகாரம்:
மாந்தி கிரக தோஷத்தை விலக்கும் சக்திபடைத்தவர் சிவபெருமான் ஒருவரே அதேபோல மாந்தி கிரகத்தால் வரும் யோகப் பலனையும் இரட்டிப்பாகத் தருபவரும் சிவபெருமான்தான். சிவபெருமானின் நட்சத்திரம் உத்திரம். உத்திர நட்சத்திரம் வரும் நாளன்று அதிகாலையில் இக் கோவிலுக்கு சென்று சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும் .
இதேபோல் ஒன்பது மாதங்களில் வரும் உத்திர நட்சத்திரத்தன்றும் சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும் .
இவ்வாறு தொடர்ந்து ஒன்பது உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு பாலாபிஷேகம் செய்பவர்களுக்கு மாந்தியால் வரும்தோஷம் விலகும்.
யோகப் பலனும் இரட்டிப்பாக்க் கிடைக்கும்.
இப்பரிகாரம் செய்வதற்குமுன் இங்குள்ள பத்ரகாளியம்மனை தரிசிக்கவேண்டும்.
தேவர்களை, அசுரர்கள் கொடுமை செய்த போது, தவத்தில் இருந்த சிவனை எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மன்மதனை, அவர் மீது மலர் அம்பு வீசச் செய்தனர்.
கோபத்துடன் அவர் நெற்றிக் கண்ணைத் திறக்க, மன்மதன் பஸ்பமானான்.
சிவனின் உக்கிரம் தாங்காத தேவர்களும், மகரிஷிகளும் கோபம் தணியும்படி வேண்டினர்.
அவர்களுக்கு காட்சி தந்த சிவன், ஒரு ஆலமரத்தடியில் லிங்க வடிவில் எழுந்தருளினார்.
இதனால், இந்த ஊருக்கு, “திருவாலங்காடு’ என்றும், சுவாமிக்கு, “வடாரண்யேஸ்வரர்’ (ஆலங்காட்டு அப்பர்) என்றும் பெயர் ஏற்பட்டது.
பிரகாரத்தில் எட்டு கணபதிகளை தரிசிக்கலாம்.
அஷ்ட கணபதி எனப்படும் இவர்கள், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தருபவர்களாக உள்ளனர்.
நாய் வாகனம் இல்லாத பீஷண பைரவர், உபதேச தட்சிணாமூர்த்தி ஆகியோரும் இங்குள்ளனர்.
சிவன் நடனமாடியபோது, அவரது அணிகலன்கள் பூமியின் 5 இடங்களில் விழுந்தன. அவற்றை 1. ரத்ன சபை, 2. கனக சபை, 3. ராஜாத சபை, 4. சித்ர சபை, 5. தாமிர சபைகள் என்று அழைப்பர். அதில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் தலம் முதலாவது ரத்ன சபையாக திகழ்கிறது.
ஒருமுறை காளிக்கும், சிவனுக்கும் நடனப் போட்டி நடந்தது.
சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள்.
நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி இருக்கிறது.
வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்ல வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.
இந்த தலத்தின் பின்பக்கம் வலது மூலையில் கோயிலின் தல விருட்சமான மிகப்பெரிய ஆலமரம் வீற்றிருக்கிறது.
சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் கோவில் உள்ளது. இது தவிர, சொந்த வாகனத்தில் செல்வோர் தேசிய நெடுஞ்சாலை 205 ல் (சென்னை – ஆவடி – திருவள்ளூர் – ரேணிகுண்டா வழி) சென்றால் இக்கோயிலை அடையலாம்.
பேருந்து மார்கமாக செல்ல வேண்டும் என்றால், தாம்பரம் அல்லது ஆவடியில் இருந்து திருவள்ளூர் சென்று அங்கிருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் செல்லலாம். அதே போல அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் சில பேருந்துகள் திருவாலங்காடு வழியாகவும் இயக்கப்படுகின்றன.
இந்த திருத்தலம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தலமாகவும் உள்ளது தனி சிறப்பு ஆகும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...