Sunday, February 28, 2021

எங்கே பிராமணன்?

 இன்றைய பிராமணர்களின்

பிரம்மிப்பூட்டும் பிராமண வாழ்க்கை!
பெரும்பலான பிராமணர்களின் இன்றைய வாழ்க்கைமுறை கவலையளிக்கிறது.
1) குடுமி கிடையாது.
2) வேஷ்டி கிடையாது - பஞ்ச கச்சம் கட்டுவதில்லை. மாமிக்கும் மடிசாரு கிடையாது (கட்டத் தெரியாது?)
3) நெற்றியில் வீபூதி கிடையாது.
4) சந்தியாவந்தனம் விட்டுவிட்டோம்.
5) கணவனை இழந்த பாட்டிகள் மொட்டை அடித்துக் கொள்வது போயே போயிற்று.
6) உபநயனம் சரியான வயதில் கிடையாது.
7) பூணூல் போட்டுக் கொள்வதில்லை.
8) காலையில் நீராடியபின், சந்தியாவந்தனம் ஆனபின் சாப்பிட வேண்டும்.?
9) பூண்டு, மசாலாக்கள் சேர்கிறோம்.
10) நிலத்தில் உட்காரந்து சாப்பிடுவில்லை.
11) சோபாவில் உட்காரந்து கையில் தட்டு வைத்துக் கொண்டு சாப்படுகிறோம்.
12) பரிசேஷணம் கிடையாது.
13) தூங்குவதும் லேட். எழுந்திருப்பதும் லேட்.
14) பெரியோர்களைப் பார்த்தால் நமஸ்கரிப்பதில்லை.
15) அப்படியே நமஸ்கரித்மாலும்
அபிவாதையே...சொல்வதில்லை.
15a) வெளியில் சென்று திரும்பியதும் கால்கள் அலம்புவதில்லை.
16) Toilet use பண்ணியபின் கால் அலம்பாமல் வருகிறோம்.
17) கோயிலுக்கு காலையில் செல்லும் போது நன்றாக வயிறு முக்க சாப்பிட்டே செல்கிறோம்.
18) தாத்தா, பாட்டி பெயர் சம்பிரதாயமே! அவர்களாக கூகுள் மூலம தேர்ந்தெடுத்து வைக்கின்ற சமஸ்கிருத பெயரையும் முழுவதுமாக அழைப்பதில்லை. சுருக்கி அழைக்கும போது அதன் அர்த்தமே மாறுகிறது.
19) திவசம் செய்வதில்லை.
20) ஒளபாசனம் மறந்தாயிற்று.
21) காசிக்கு போய் திவசம் செஞ்சாச்சு. ஆத்தில் திவசம் தேவையில்லை என நமக்கு நாமே சாதகமாக நாமே தீர்ப்பு சொல்கிறோம்.
22) வேற்று ஜாதி பெண்ணை மணக்கும்போது திவசம் செய்யும் உரிமை கிடையாது. இதை நாம் பிள்ளைகளுக்கு உணர்த்துவதில்லை. அவர்களும் அதை மதிப்பதில்லை.
23) நாம் எந்த வேதத்தை சேர்ந்தவர்கள்,
கோத்திரம், நட்சத்திரம் தெரியாது.
24) தீபாவளியன்று சீக்கிரம் எழுந்திருப்பில்லை. எண்ணை தேய்த்து குளிப்பதில்லை. சாஸ்திரத்திற்கு ஒன்றிரண்டு பட்சணம் - ஆத்திற்கு மட்டும் போதும் என்று கடையிலிருந்து பட்சணங்கள்.
25) கோலம் போடுவது குறைவு. அந்த வேலை வேலைக்காரிக்குரியது.
26)பிறந்த நாள் ஆங்கில முறைப்படி கொண்டாடுகிறோம். கோவிலுக்கு செல்வதில்லை.
27) குழந்தைகள் பிறந்த நாளை தடபுடலாக கேக் வெட்டி ஓட்டலில் கொண்டாடுகிறோம். ஆத்தில் பாயாசம் கூட வைப்பதில்லை.
28) மசாலா பூரி, சமோசா வாங்கி வருகிறோம். அதனை வயதான, பழங்கால முறைகளை கடைப் பிடிக்கும் பெற்றோர்களையும் சாப்பிடும்படி வற்பறுத்துகிறோம்.
29) எச்சல், தீட்டு, மடி பார்ப்பதில்லை.
30) அந்த 3 நாட்கள் என்பது கிடையாது.
31) மாதாந்திர தர்பணம் / மஹாளய தர்பணம் கிடையாது.
32) இறந்து போனவர்களுக்கு 13 நாட்கள் காரியம் தொடர்ந்து செய்வதில்லை. முதல்நாள், 3ம் நாள், பின் 9திலிருந்து ஆரம்பம்.
33) மாலை விளக்கேற்றிய பின், கண்ணாடி முன் தலை வாருகிறோம்.
34) ஷவரம், முடிவெட்டுதல், நாள், கிழமை பார்ப்பதில்லை.
35) ஏன்னா என கூப்பிடுவது இல்லை. பெயர் சொல்லி கூப்பிடுகிறோம்.
36) பஞ்சாங்கம் பார்க்க தெரியாது.
37) நம்முடைய பழக்க வழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள இக்காலத்து இளுசுகளுக்கு (ஏன் பெரிசுகளுக்கே) தெரிவதில்லை.
38) காபி குடிக்கக் கூடாது, பட்டு வஸ்திரம் கூடாது என்றார் மஹா பெரியவா. கேட்டோமா?
மிக முக்கியமானது!
A) பொய் சொல்லக் கூடாது,
B) அடாவடித்தனம் கூடாது. பிறரை ஏமாற்றி மோசம் செய்யக் கூடாது.
(C) புகைப் பிடித்தல், மது அருந்ததுதல் கூடவே கூடாது. பெற்றோரை மதித்தல், உடன் பிறந்தோரை அன்புடன் மதிப்புடன் நடத்தல். உயிர்கள் அனைத்திலும் அன்புடன் இருத்தல்.
☝A, B, C இவைகள் இருந்தாலே போதும. இவைகளுடன் மேற்கூறிய வாழ்கைமுறையும் இணைந்தால் இன்னும் மட்டற்ற மகிழ்ச்சியான, ஆனந்த வாழ்க்கையே!.
பெரும்பாலான பிராமணர்கள் எவ்வாறுள்ளனர் என எழுதியுள்ளேன். நிறைய, நிறைய பிராணர்கள் செல்வந்தர்களாக மட்டுமில்லை, ஒழுக்க சீலர்களாக மட்டுமில்லை, மிக உயர்ந்த பதவியில் இருந்தும், நம் சம்பிரதயங்ளை விட்டுக் கொடுக்காமல், இனிய பிராமண வாழ்கை வாழ்கிறார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த, சிறம் தாழ்த்திய நன்றிகள்.
இவ்வளவு எழுதியுள்ளானே இவன் நிறைய விஷயங்களை சிரத்தையுடன் கடைபிடுப்பவனோ என (என்னைப் பற்றி தெரியாதவர்கள்) நினைக்கலாம். தாழ்மையுடன் கூறுகிறேன் இல்லையென. சில ஏற்கனவே கடைபிடித்து வந்துள்ளவைதான். இன்னும் சில, நான் உத்யோகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின் கூடியவரை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளேன். சிராத்த காரியங்கள் எனதருமை மனைவியின் சிரத்தையுடன் கூடிய உழைப்பால் திவசங்கள் செய்ய முடிகிறது.
மதிற்பிற்குரிய என் அக்கா, அத்திம்பேர் (பெற்றோரை சிறு வயதிலேயே இழந்த) என்னை ஒரு நல்லவனாக வளர்ந்ததாலும், எனதருமை மனைவியின் துணையுடனும், நல்ல மனதுடன், நல் வழியில் வாழ்க்கை நகர்கிறது. நல்லவராக இருந்து,கூடிய வரை நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கைமுறையை பின்பற்றினால் குடும்பத்தில் மகிழ்ச்சி பன்மடங்காக உயரும் என்பதில் எனக்கு சந்தேகம் துளியும் கிடையாது.

வாழ்க வளமுடன்!

Saturday, February 27, 2021

💠💠மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!💠💠

 புளி இரத்தத்தைச் சுண்ட வைக்கும் என்பது ஒரு மூட நம்பிக்கை. இரத்தத்தை முறிக்கக் கூடிய சத்து ஏதும் புளியில் இல்லை. புளியில் கால்சியம், வைட்டமின் ‘பி’, பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது.

1⃣ குமட்டல், வாந்தி ஏற்பட்டால் சிறிதளவு புளியை வாயில் போட்டு நீரை விழுங்கினால் வாந்தி நிற்கும்.
2⃣ அடிபட்டு இரத்தக்கட்டு ஏற்பட்டால் புளியும், உப்பும் கலந்து அரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து தாங்கக்கூடிய சூட்டுடன் பற்றுப் போட்டால் இரத்தக்கட்டு கரைந்துவிடும்.
3⃣ புளியுடன் சுண்ணாம்பு கலந்து குழப்பி சூட்டோடு தேள் கொட்டிய இடத்தில் போட, தேள் விஷம் இறங்கும்.
4⃣ புளியங்கொட்டை பருப்பை இடித்து பொடியாக்கி, பசும்பாலில் அரைக்கரண்டி தூளைபோட்டு கற்கண்டு கலந்து குடித்து வர தாதுவிருத்தி உண்டாகும்.
5⃣ பல் ஈறு வீக்கம், பல் வலி இவற்றிற்கு சிறிதளவு புளியும் அதே அளவு உப்பும் கலந்து வலியுள்ள இடத்தில் வைத்திருந்து 10 நிமிடம் கழித்து வாயில் வைத்திருந்த புளியை துப்பி வெந்நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி மூன்று வேளையும் செய்தால் பல் வலி குறையும். அந்த உமிழ் நீரை விழுங்கக்கூடாது.
6⃣ புளியம் பூக்களை துவையலாக அரைத்து உண்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும்.
7⃣ புளியை நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும்.
8⃣ புளியமர இலைகளை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் மறையும்.
9⃣ புளியம்பூவை நசுக்கி நீர்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, கண்களை சுற்றி பூசிவர கண் சிகப்பு, கண் வலி ஆகியவை நீங்கும்.
🔟 புளியங்கொட்டையின் தோல் ஒரு பங்கு, சீரகம் 3 பங்கு, பனங்கற்கண்டு 4 பங்கு ஆகியவற்றை எடுத்து பொடி செய்து, தினமும் 3 வேளை 2 கிராம் அளவு உட்கொண்டு வர நாட்பட்ட கழிச்சல் குணமாகும்.
1⃣1⃣ புளியையும், சுண்ணாம்பையும் சேர்த்து அரைத்து தேள் கடி விஷத்திற்கு கடி வாயில் வைத்து கட்ட அது குணமாகும்.
1⃣2⃣ புளியம் பட்டையின் சாம்பலை நீரில் கலக்கி, அது தெளிந்தவுடன், அந்த நீரைக்கொண்டு வாய் கொப்பளித்துவர தொண்டைப்புண் குணமாகும்.
1⃣3⃣ புளியிலையை அவித்து, அதே சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு, வைத்து கட்டிவர சுளுக்கு குணமாகும்.
1⃣4⃣ கல்லீரல் நோய்தொற்றுக்களை காக்கும் அரணாக புளி இருக்கின்றது...
May be an image of food

தி.மு.க.,வுக்கு எதிராக ஐ.ஜே.கே., தூண்டி விடப்பட்டதா?

 புதிய கூட்டணி அமைத்தது பற்றி ரவி பச்சமுத்து பேட்டி

 ''நாங்கள் எப்போதும், தி.மு.க.,வுடன் நிரந்தரமாக இருப்போம் என்று கூறியதில்லை. தற்போது, மக்களுக்கான கூட்டணியை அமைத்துள்ளோம்; எங்கள் கட்சியை சுய பரிசோதனை செய்யவும், உயிரூட்டம் தரவும், புதிய சிந்தனையுடன், புதிய பாதையை தேர்ந்தெடுத்துள்ளோம். அ.ம.மு.க.,வுடன் பேசி வருகிறோம். எந்த கட்சியும் எங்களை துாண்டிவிடவில்லை,'' என,இந்திய ஜனநாயக கட்சி தலைவர், ரவி பச்சமுத்து தெரிவித்தார்.



latest tamil news



தி.மு.க., - எம்.பி.,யாக பாரிவேந்தர் செயல்பட்டு வரும் நிலையில், அவர் நிறுவனராக உள்ள, இந்திய ஜனநாயக கட்சி, தி.மு.க., கூட்டணியில் இருந்து, திடீரென விலகியுள்ளது. சமத்துவமக்கள் கட்சி தலைவர் சரத்குமாருடன் கைகோர்த்து, மூன்றாவது அணிக்கு அச்சாரமிட்டுள்ளது. இது தொடர்பாக, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து,  சிறப்பு பேட்டி:
2019 லோக்சபா தேர்தலில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், தி.மு.க., கூட்டணி சார்பில், பெரம்பலுார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திடீரென, அந்த கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?
தி.மு.க., கூட்டணியில் நிரந்தரமாக இருப்போம் என, அன்று நாங்கள் கூறவில்லை. இன்றும், தி.மு.க., மீது எங்களுக்கு நல்ல மரியாதை உண்டு. 'தி.மு.க.,வின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது' என, அவர்கள் சொல்லும் போது, கூட்டணியில் இருந்து, நாங்கள் வெளியே வந்திருக்கிறோம் என்றால், எங்களுக்கு, நிச்சயம் பதவி ஆசை இல்லை. தி.மு.க., மீது எங்களுக்கு எந்த ஒரு வருத்தமும் கிடையாது. புதிய சிந்தனையுடன், புதிய பாதையை தேர்ந்தெடுத்து, புதிய வழியில் செல்கிறோம்.

தி.மு.க., கூட்டணியில், உங்கள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கேட்டீர்கள்?
நாங்கள், 10 தொகுதிகள் கேட்டோம்; அவர்கள் மூன்று முதல் ஐந்து தொகுதிகள் தரலாம். அந்த தொகுதிகளை பெற்று, எங்கள் கட்சியை வளர்ப்பது சிரமம். இளைஞர் அணியினர், 50 தொகுதிகள் கேளுங்கள் என, வலியுறுத்தினர். அவர்கள் அனைவருக்கும், தி.மு.க.,வில் பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்பில்லை. அதேசமயம், அரசியலில் ஆர்வமாக வருகிற இளைஞர்களுக்கும், வாய்ப்பு தர வேண்டும். எங்கள் கட்சிக்கு சுய பரிசோதனையும் செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட, உங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா?
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொன்ன போது, எங்களுக்கு விருப்பம் இல்லைஎன்றோம். தற்போது நாங்கள், தனிச்சின்னத்தில் போட்டியிட, தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்துள்ளோம். விரைவில், என்ன சின்னம் என்பதை தெரியப்படுத்துவோம்.
பாரிவேந்தரின் நிலைப்பாடு என்ன?
என் தந்தை, தி.மு.க., - எம்.பி.,யாகவே இருப்பார். பெரம்பலுார் தொகுதிக்கு, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செம்மையாக செயல்படுத்தி வருகிறார். தொகுதி மக்கள் குறைகளை தீர்க்கும் பணிகளையும், அவர் சிறப்பாக செய்து வருகிறார். இதனால், எங்களுக்குள் எந்த முரண்பாடும் கிடையாது. நாங்களும், மக்களுக்கு சேவை செய்து தான் வருகிறோம்; புதிய அரசியலை நோக்கி பயணிக்கிறோம்.


latest tamil news



நடிகர் சரத்குமாருடன் கூட்டணி எப்படி உருவானது?
நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல, எங்கள் இருவருக்கும் ஒருமித்த கருத்து இருந்ததால், கூட்டணி அமைத்தோம்.

நடிகர் கமல் தலைமையில், நீங்களும், சரத்குமாரும் இணைந்து, மூன்றாவது அணி உருவாக்கும் திட்டம் உள்ளதா?
கமலுடன் பேசியிருக்கிறோம். அவரது கட்சியில் பழ.கருப்பையா, பொன்ராஜ் போன்றவர்கள் இணைந்துள்ளனர். ஐந்து கட்சிகளின் தலைவர்களுடன் நாங்கள் பேசி வருகிறோம். இன்னும் ஓரிரு நாட்களில், நாங்கள் ஒருங்கிணைந்து, குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி,எங்கள் அணிக்கு பெயர் சூட்டி, முறையாக அறிவிப்போம். நாங்கள் மூன்றாவது அணி அல்ல; முதல் அணியாக மாறுவோம்.

அப்படியானால், உங்கள் அணிக்கு தலைவர் யார்?
ஐந்து பேரும் ஒருங்கிணைப்பாளர்களாக இருப்போம்.
ரஜினி மக்கள் மன்றத்தின் ஆதரவை கேட்பீர்களா?
கண்டிப்பாக கேட்போம். ரஜினியின் நண்பர் அர்ஜுனமூர்த்தியும், எங்களுடன் இணைந்துசெயல்படுவார்.

அ.ம.மு.க.,வும், உங்கள் அணியில் இணையுமா; உங்கள் அணிக்கு ஆதரவாக சசிகலாபிரசாரம் செய்வாரா?

தினகரனிடம் பேசியிருக்கிறோம். சசிகலா எங்களுக்காக, பிரசாரம் செய்வாரா என, எனக்கு தெரியாது.

உங்கள் அணியின் கொள்கை, செயல் திட்டங்கள் பற்றி?
அது குறித்து கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம்; விரைவில் அறிவிப்போம்.

முதல்வர் வேட்பாளராக, யாரை முன்னிலைப்படுத்துவீர்கள்?
தேர்தல் முடிவுக்கு பின், முதல்வரை தேர்வு செய்வோம்.

எத்தனை சதவீத ஓட்டுக்கள், உங்கள் அணிக்கு கிடைக்கும்?

நாங்கள், 30 சதவீத ஓட்டுக்களை எதிர்பார்க்கிேறாம். தேர்வு எழுதும் மாணவர், 50 மார்க்கை எதிர்பார்த்து எழுதுவார்; 30 மார்க் கிடைத்தாலும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

ஆளுங்கட்சியின் எதிர்ப்பு ஓட்டுக்கள், தி.மு.க.,விற்கு செல்லாமல் தடுக்கத்தான், உங்கள் அணி போட்டியிடுகிறதா?
அப்படியெல்லாம் இல்லை. நாங்கள் எந்த கட்சியையும், தவறாக விமர்சிக்க மாட்டோம்.திராவிட கட்சிகள், மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. ஒரு நிறுவனத்தில், புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள், உயர் பதவியை பெற, ஆர்வமாகவும், கடினமாகவும்உழைப்பர். அதேபோல, மக்களுக்கு தொண்டாற்ற வரும் புதியவர்கள், மக்களிடம் நல்ல பெயர் எடுக்க, நேர்மையானவர்களாக இருக்க விரும்புவர். அந்த அடிப்படையில் போட்டியிடுகிறோம்.

2016 சட்டசபை தேர்தலில், மக்கள் நல கூட்டணியால், தி.மு.க., ஆட்சிக்கு வராமல் தடுக்கப்பட்டது போல, இந்த தேர்தலிலும் மூன்றாவது அணி என்பது, தி.மு.க.,வின் வெற்றியைதடுக்கும் முயற்சியா?
யாருடைய வெற்றியும், தோல்வியும், மக்கள் கையில் தான் உள்ளது.
உங்கள் அணி யாருக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கு துாண்டுகோலாக, தேசிய கட்சி உள்ளதா?
மக்களுக்கு சாதகமாக இருக்கும்; எந்த கட்சியும் எங்களை துாண்டிவிடவில்லை.

கடைசி நேரத்தில் நீங்கள் அமைத்த கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணியா?
மக்களுக்கான கூட்டணி அமைத்துள்ளோம். கட்டடம் கட்டுவதற்கு மேஸ்திரி, கொத்தனார்,சித்தாள், எலக்ட்ரீஷிசன், பிளம்பர் போன்றவர்கள் தேவை. அதைப்போல, அனைத்து ஜாதிமக்களையும் சமமாக பாவித்து, அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க, புதிய சமுதாயம் படைக்க, நாங்கள், 'ஈகோ' பார்க்காமல் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

புது 'வார் ரூம்' அமைத்து, சமூக வலைதளங்கள் வாயிலாக எங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வோம். நாங்கள் தனித்தனியாக அல்ல; கூட்டாக பிரசாரம் செய்வோம்.தேர்தல் தேதி, திடீரென அறிவிக்கப்பட்டது. குறுகிய அவகாசமே உள்ளது. அதனால் தான்,நாங்கள் அவசரமாக இணைந்துள்ளோம். கொரோனா கால கட்டத்தில், தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிப்பது சிறிய கட்சிகளுக்கு சிரமம். நாங்கள் ஒன்றிைணந்தால் தான், எங்கள் கட்சிகள் உயிரோட்டமாக இருக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

Thursday, February 25, 2021

மங்கல வாழ்வு தரும் மாசி மக விரதம்.

 பல்வேறு விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

மங்கல வாழ்வு தரும் மாசி மக விரதம்
மாசி மகம் வழிபாடு

















மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்’ என்பது நம் முன்னோர் வாக்கு. ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தை ‘மாசி மகம்’ என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கம்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த விழா கொண்டாடப்படுகின்றது. மற்ற ஆண்டுகளில் வரும் மாசி மாதங்களில் மகம் நட்சத்திரம் வரும்பொழுது நாம் வழிபாடுகளை மேற்கொண்டால் தித்திப்பான வாழ்க்கை அமையும். இது சிவனின் மைந்தனான முருகப்பெருமானுக்கு உகந்த விரதமாகும். அன்றைய தினம், குழந்தையில்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்தால் தக்க விதத்தில் வாரிசுகள் உருவாகும்.

அந்த அற்புதமான திருநாள் 27.2.2021 அன்று (சனிக்கிழமை) வருகின்றது.

26.2.2021 (வெள்ளிக்கிழமை) மதியம் 11.58 மணிக்கு மேல் மகம் நட்சத்திரம் வருகிறது.

மறுநாள் (27.2.2021) மதியம் 11.33 மணி வரை உள்ளது. மலை வலம் வருவதன் மூலம் மகத்தான பலன்களைப் பெற இயலும்.

மனிதர்கள் இறைவனை வேண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டவையே விரதங்கள். பல்வேறு விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே பெருமை பெற்றதாக திகழ்கிறது.

ஏனெனில் அந்த நாளில்தான் பார்வதிதேவி, தக்கனின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆம்! அந்த நாள் அன்னையின் பிறந்த நாள். சக்தியாகிய உமாதேவியே தன்னுடைய மகளாக பிறக்க வேண்டும் என்று தக்கன் நினைத்தான். இதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். அந்த தவத்தின் பயனாக உமாதேவி, தக்கனின் மகளாக அவதரித்தாள்.

அந்த தெய்வக் குழந்தைக்கு ‘தாட்சாயிணி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தான் தக்கன். இறுதியில் தன் மகளை, சிவபெருமானுக்கே திருமணமும் செய்து வைத்தான். அன்னை உமாதேவி அவதரித்த நாள் மாசி மகம் என்பதால் அந்த நாள் புனிதமான நாளாக கொண்டாடப்படுகிறது.

மக நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் கேது பகவான். இவர் ஞானத்தையும், முக்தியையும் அருள்பவர். செல்வ வளம் சேரும் யோகத்தை வழங்கக் கூடியவர். மாசி மக நாளை, ‘கடலாடும் நாள்’ என்றும், ‘தீர்த்தமாடும் நாள்’ என்றும் அழைப்பார்கள். இந்நாளில் விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது சிறப்பான பலனைத் தரும்.

இவ்வாறு செய்வதால் சகல தோஷங்களும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். மாசி மகத்தில் விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். பின்னர் உலர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு சிவ சிந்தனையுடன், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். மதியம் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு விட்டு, இரவு பால், பழம் சாப்பிடலாம். அன்றைய தினம் முழுவதும் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாமல், இறைவனை நினைக்கும் ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும். தேவார, திருவாசக பாடல்களை பாராயணம் செய்யலாம்.

இந்த விரதத்தை கடைப்பிடித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

தீர்த்தமாடும் நிகழ்வின் சிறப்பினை எடுத்துரைக்க, ஒரு புராண வரலாற்றுக் கதையும் கூறப்படுகிறது.

ஒரு முறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதில் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். அதில் இருந்து விடுபட வருணன், சிவபெருமானை நினைத்து பிரார்த்தித்தான். இந்த நிலையில் வருணன் கட்டுண்டு கிடந்ததால், உலகில் மழையில்லாமல் வறட்சியும், பஞ்சமும் நிலவியது.

அனைத்து உயிர்களும் துன்பம் அடைந்தன. இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சந்தித்து முறையிட்டனர். வருண பகவானை விடுவிக்கும்படி ஈசனிடம் வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசி மக திருநாளாகும்.

விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானை வணங்கினார். பின்னர் ஈசனிடம், ‘இறைவா! நான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடலில் கிடந்தபோது, நீருக்குள் இருந்தபடியே உங்களை வணங்கினேன். அதன் பயனாக எனக்கு விடுதலைக் கிடைத்தது. அதே போல் மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி, இறைவனை வழிபடும் அனைவருக்கும் அவர்களின் பாவங்களையும், பிறவி துன்பங்களையும் நீக்கி அரு செய்ய வேண்டும்’ என்று கேட்டார்.

சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். அன்று முதல் தீர்த்த மாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. மாசிமகத்தன்று பிரசித்திப் பெற்ற புண்ணிய தலங் களில் ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேசுவரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வது நலன் தரும்.

Wednesday, February 24, 2021

*ஆயிரத்து 550 ரூபாயில் திருப்பதி தரிசனம் !

 IRCTC வழங்கும் சூப்பர் சேவை !!!*

உங்கள் குடும்பத்தினர் 12 பேர் அல்லது நண்பர்கள், உறவினர்கள் 12 பேர் சென்னையில் இருந்து திருப்பதி திருமலைக்குச் சென்றுவிட்டு வரவேண்டும் என்று எண்ணுகிறீர்களா ? !
ரயில் பயணம் அல்லது பேருந்துப் பயணம் ஆகியவற்றுக்கு புக் செய்யவேண்டும்...
அதற்கு முன்னர் தரிசனத்துக்கு புக் செய்ய வேண்டும்...
ரயிலில் போனால் அங்கிருந்து திருமலைக்குப் பஸ் பிடித்துப் போகவேண்டும்...
என மலைக்க வைக்கும் பலவற்றை மனதில் போட்டு குழப்பிக்கொண்டிருக்க சரி அடுத்த முறை போய்க்கொள்ளலாம் என தள்ளிப்போடும் சம்பவமும் நடக்கும்.
இதற்கெல்லாம் சிம்பிளாக ஒரு தீர்வைத் தருகிறது இந்திய ரயில்வேயின் சுற்றுலாக் கழகம். (Indian Railway Catering and Tourism Corporation) 12 பேர் சேர்ந்தாகிவிட்டது...
அடுத்து என்ன செய்யலாம் ?!
சிம்பிள்... IRCTC சுற்றுலாக்கழகத்தின் சென்னை எண் 90031 40681 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு,
“12 பேர் இந்த தேதியில் சென்று வர விரும்புகிறோம்” என்று சொன்னவுடன் அடுத்தது புக்கிங் ஃபார்மாலிட்டிஸ் இருக்கும்.
ஒருவருக்கு 1550 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும்...
குளிர்சாதன வசதி கொண்ட
ஒரு டெம்போ டிராவலர் AC
உங்கள் 12 பேரையும் ஏற்றிக்கொண்டு,
உதாரணத்திற்கு சென்னையில்
காலை 5 மணிக்கு புறப்படுகிறது என்றால், ஆந்திர எல்லையில்
சுமார் 7 மணிக்கு ஒரு சின்ன பிரேக். அதில் டீயோ, காஃபியோ குடித்துவிட்டு வேனில் ஏறி உட்கார்ந்தால் போதும் சரியாக 8.30 மணிக்கு கீழ் திருப்பதியில் 3 Star
ஓட்டலில் காலை தரமான tiffin
ஸ்வீட்
1 இட்லி
2 பூரி
பொங்கல்
வடை
1 மினி ஊத்தப்பம்
1 மினி மசால் ரோஸ்ட்
1 மினி ஊத்தப்பம்
1 மினி ரவா ரோஸ்ட்
காபி/டீ
அதையடுத்து மலைக்கு அழைத்துச்செல்லும் IRCTC சுமார் 11 மணிக்கு எல்லாம் 300 ரூபாய் கட்டண வழியில் உங்களை தரிசனம் செய்ய அனுப்பும். அளவான கூட்டமாக இருந்தால் 1 மணிக்கெல்லாம் தரிசனத்தை முடித்துக்கொண்டு உடனடியாக கீழ்த் திருப்பதி வந்தபின் அதே ஓட்டலில் மதிய உணவு...
Unlimited Meals
ஸ்வீட்
வடை
நேந்திரன் சிப்ஸ்
வெஜ் பிரியாணி
பருப்பு---நெய்
சாம்பார்
வத்தக் குழம்பு
மோர் குழம்பு
கார குழம்பு
கூட்டு பொறியல்
அப்பளம்
பிட்லை
பருப்பு உசிலி
கட்டி தயிர்
பழம்
பாயாசம்
Fresh Juice
Ice cream
பீடா
முடி காணிக்கை செலுத்தவும்
IRCTC பணியாளர்களே நேரடியாக அழைத்துச்சென்று காணிக்கை செலுத்த விரைந்து ஏற்பாடுகள் செய்கின்றனர்.
முடித்தவுடன் அடுத்ததாக அலர்மேலு மங்காபுரம். அங்கு தரிசனம் முடித்தவுடன் புறப்பட்டால் வழியில் snacks Cofee / Tea.
7.30 மணிக்கு Hotel Saravana Bhavan Night Dinner
அவரவர் விருப்பம் போல் order செய்யலாம்.
உங்களை சென்னையில் இறக்கி விட்டுவிடுவார்கள்.
காலை tiffin, மதிய உணவு, Evening snacks, Night Dinner
300 ரூபாய் தரிசன கட்டணம் ஆகியவையும் 1550க்குள் அடங்கும்.மேலும், தரிசன கட்டணத்துக்கு உண்டான லட்டுக்களுக்காக நீங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை IRCTC பணியாளர்கள் அதை வாங்கி வைத்திருந்து தரிசனம் முடித்துவிட்டு நீங்கள் வெளியே வரும்போது உங்கள் கைகளில் கொடுத்துவிடுகின்றனர். . சரி தரிசனம் முடிய நேரம் ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமே தேவையில்லை. தரிசனம் முடியும்வரை அந்த வேன் காத்திருந்து சென்னையில் இறக்கிவிடும்வரை IRCTC உங்களுடனே பயணிக்கிறது.
பாதுகாப்பான பயணம், சிக்கனம், டென்சன் இல்லாத ஒரு திருப்(ப)தி டிரிப் என அசத்துகிறது IRCTC.
இதுபற்றிய விவரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட ஐஆர்டிசியின் ரவீந்திரன் திருப்பதி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் எந்த சுற்றுலாத்தலத்திற்கும் இதே போல சிறப்பு ஏற்பாடுகளை செய்து தர IRCTC காத்திருப்பதாகக் கூறினார்...!!

ஞானத்தை யாரிடம் கற்பது ?

 ”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்

முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.
காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை.
ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.
அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.
அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.
இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.
ஆனால்,
மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?
மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?
மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல…
என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.
இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.
தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.
தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.
'எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.
இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.
அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,
“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,
“தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு
ஆகியவையும்,
“நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,
சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...“ என்றார் தத்தாத்ரேயர்.
மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...
"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;
“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.
“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.
“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது.
“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.
"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.
இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.
"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.
“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.
“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.
“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.
“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.
"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... "
என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.
இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.
தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..
தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” பகவான் ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.
நல்ல சீடனுக்கு எல்லாமே குருதான்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...