Thursday, January 31, 2019

ஆசிரியர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த எரிச்சல் அடைந்துள்ளனர் .

Image may contain: 4 people, people smiling, text

திமுகவை ஆதரிப்பவர்கள் ஊழலை ஆதரிப்பவர்கள் !

Image may contain: 2 people, text

எம்.ஆர்.ஐ ஸ்கேன் ...

எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் எப்படி உயிர்பலி வாங்குகிறது? -
உடலில் என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடிக்கும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அவ்வளவு ஆபத்தானதா?
மருத்துவமனை லேப்களில் பயன்படுத்தப்படும் பல வகை ஸ்கேன் மெஷின்களில் முக்கியமானது எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின். இதன் மூலம் உடலின் எந்த பாகத்தையும் நுணுக்கமாக ஆராயலாம். ஆனால், கொஞ்சம் ஆபத்தானதும்கூட. கவனக்குறைவாக இருந்தால் நம்மை உள்ளிழுத்து, உயிரையே எடுத்துவிடும். பொதுவாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் இருக்கும் அறைக்குள் உலோகப் பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது. இதிலுள்ள மிக அதிகமான காந்தப்புலம், உலோகங்களை ஈர்த்துக்கொள்ளும். இதனால் பல விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு, 6 வயதுச் சிறுவனை ஸ்கேன் செய்வதற்காக அழைத்துச் சென்றபோது, மெஷினின் காந்தப்புலத்தால் ஆக்சிஜன் சிலிண்டர் அதிவேகமாக ஈர்க்கப்பட்டது. சிலிண்டர் சிறுவனின் தலையில் மோதியதால், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதேபோல இன்னொரு சம்பவம்... டெல்லியிலிருக்கும் மருத்துவமனையில் வேலை செய்பவர் ஆக்சிஜ ன் சிலிண்டருக்கும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷினுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டதில், அவரின் உள்ளுறுப்புகள் செயலிழந்தன. இதுபோன்ற விபத்துகள் பெரும்பாலும் ஆக்சிஜன் சிலிண்டரை ஸ்கேன் அறைக்கு எடுத்துச் சென்றதாலேயே நிகழ்ந்திருக்கின்றன.
``எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷினில், அதன் திறன், விலைக்கு ஏற்ப பல வகைகள் உள்ளன. `டெஸ்லா’ (Tesla) என்பது ஸ்கேன் மெஷினின் திறனைக் குறிக்கும் அறிவியல் சொல். 0.5 டெஸ்லா முதல் 3 டெஸ்லா திறனுடைய ஸ்கேன் மெஷின்கள் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. பூமியின் காந்தப்புலம் 0.5 காஸ் (gauss). ஒரு டெஸ்லா என்பது 10,000 காஸ். அப்படியானால், 0.5 டெஸ்லா என்பது 5,000 காஸ். 3 டெஸ்லா என்றால் 30,000 காஸ். இதிலிருந்து அதன் ஈர்ப்பு சக்தியை நாம் புரிந்துகொள்ளலாம்.
எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின்கள் டைட்டானியம், பிரத்யேக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்களைத் தவிர மற்ற அனைத்து உலோகங்களையும் ஈர்க்கக்கூடியவை. ஸ்கேன் அறைக்குள் பிரத்யேக ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் தயாரிக்கப்பட்ட படுக்கை (MRI compatible Strecher) மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களையே பயன்படுத்த வேண்டும். நோயாளிகளையும், உடன் வருபவர்களையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதித்த பின்னரே, ஸ்கேன் அறைக்குள் அனுமதிக்கின்றனர். ஸ்கேன் மெஷின் இருக்கும் அறையின் சுவர்கள், காந்தப்புலம் வெளியே செல்ல அனுமதிக்காத பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது.
ஸ்கேன் அறைக்குள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது. கைக்கடிகாரம், மோதிரம், சாவிக் கொத்துகள், ஹெட்போன்கள், சில்லறைக் காசுகள், மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட எந்த உலோகப் பொருள்களையும் எடுத்துச் செல்லக் கூடாது. குறிப்பாக வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகளை எடுத்துச் சென்றால், அவை செயலிழந்துவிடும்.
இனி எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறைக்குள் செல்லும்போது மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் சொல்லும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுவோம்... விபத்துகளைத் தவிர்ப்போம்.

இது உண்மையா. ஜாக்டோ ஜியோ...

01.04.2003 க்கு பிறகு அரசு வேலையில் சேர்ந்த யாருக்கும் பென்ஷன் கிடையாது என்ற விதிப்படிதான் அரசு ஊழியர்கள் வேலையில் சேர்ந்தனர்.
ஆனால் அவர்களது சம்பளத்தில் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு அந்த பணத்தை பிராவிடண்ட் பண்டு என்று டெபாசிட் செய்யும். அந்த மொத்த தொகையை வட்டி,போனஸ் போன்றவைகளை இணைத்து ரிட்டயர் ஆகும் போது மொத்தமாக ஒரே தவணையில் பெரிய தொகையாக வழங்கப்படும்.
இப்போது பிரச்சனை என்ன?:
இப்படி பிடித்தம் செய்யப்பட்ட பணத்தில் கடன் விண்ணப்பித்து பெறலாம். ஆனால் இந்த பணம் சர்க்காரால் எங்கு சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது என்கிற தகவல் இல்லாததால் அரசு ஊழியர்கள் திணறி வந்தனர்.
அதாவது 2003 ஆண்டு முதல் பிடித்தம் செய்து வைக்கப்பட்ட தொகை மட்டுமே ரூபாய் 25 ஆயிரம் கோடி. இதைப் பற்றிய தகவல்கள் எதையுமே தமிழக சர்க்கார் இது கொடுக்கவில்லை.
https://www.google.com/url…
இன்றுதான் இந்த பணம் எங்கு உள்ளது என்று தமிழக சர்க்கார் மக்களுக்குத் தெரிவித்து உள்ளனர். ரிசர்வ் வங்கியில் பாண்டுகளாக இத்தொகை சேமிக்கப்பட்டு உள்ளது.
அப்படியானால் ஏன் இத்தனை காலமாக இதை வெளி இடாமல் மறைத்தனர்??!.
ஏனெனில் இந்த PF பணத்தில் ஒரு பகுதியைதான் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்நாள் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, இவர்களின் இலுமானாட்டி ஆர்எஸ்எஸ் ஏஜென்ட் குருமூர்த்தி சிண்டிகேட்கள் நஷ்டத்தில் இயங்கும் தங்கள் பினாமிகளான சீன சர்க்கரை ஆலைகளுக்கு குறைந்த வட்டியில் உதவித் தொகையாக ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட அரசு ஊழியர்களின் பணத்தை தாரை வார்த்து கொடுத்து விட்டனர்.

Image may contain: 4 people, people standing and beard
ஆனால் நஷ்டம் நஷ்டம் என்று எப்போதும் பாட்டுப் பாடி ஒப்பாரி வைக்கும் இந்த சீன சர்க்கரை ஆலைகள் இந்த பணத்தை வாங்கி தாங்கள் கொடுக்க வேண்டிய கரும்பு விவசாயிகளுக்கு நிலைவைத் தொகையாக இதை வழங்கி விடுகின்றன.
அதாவது கரும்பு வாங்கி கொள்முதல் செய்யப் படுவதே இந்த அரசு ஊழியர்களின் உழைப்பான சேமிப்பு பணத்தில்தான்.
பூனைக்குட்டி வாங்கினால் கப்பல் இலவசம் என்ற கதை தெரியுமா!!.
ஒரு கப்பல் உரிமையாளர் தனது கப்பலையும்,பூனைக்குட்டியையும் விற்று விட வேண்டும் என்று முடிவு செய்தார்.ஆனால் அவருக்கு ஒரு கண்டிஷன் விதித்தனர்.அதாவது கப்பல்களை பணத்திற்கு விற்க கூடாது என்பதே அன்றைய அந்த அரசாணை. யோசித்த உரிமையாளர் பூனைக்குட்டியின் விலை 1 கோடி எனவும்,பூனைக்குட்டி குடி இருக்கும் கப்பலை இலவசமாகவும் அறிவித்தார்.
அதாவது பூனைக்குட்டி வாங்கினால் அது வாழும் கப்பல் இலவசம்.
இது போலதான் சர்க்கரையின் பயன் படாத கழிவு என்று சொல்லி மொலாசஸ் என்று சொல்கின்றனர். இந்த மொலாஸ்ஸில் இருந்து இந்த எரி சாராயமே காய்ச்சப்படுகிறது.
அதுதான் பல கோடிகள் புரளும் IMFL கெடுதல் சாராயத்தின் மூலப்பொருள்.
பூனைக்குட்டியான சாராயத்தை விட கப்பலான சர்க்கரையின் விலை பதினைந்தில் ஒரு பங்குதான்.
சர்க்கரை உற்பத்தி செலவும் கூட அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரிசர்வ் வங்கியுல் உள்ள பி.எப் பணம்தான்.
சர்க்கரை சாராய சாம்ராஜ்ய இந்த எத்துவாளி முதலாளிகள் ஒரு போதும் அரசிடம் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தியதே இல்லை. அரசு ஊழியர்களின் இந்த வேதனைப் பணத்தை செலுத்தப் போவதும் இல்லை.
இந்த சாராய பணத்தின் மீது போடப்படும் வரிதான் அரசு ஊழியர்களுக்கு சம்பளமாகவே வழங்கப்படுகிறது.
அந்த சம்பளத்தில் பி.எப் புடித்தம். இதுவே அரசு ஊழியர்களை கை ஆட்களாகவே வைத்துக் கொண்டு இலுமினாட்டி அடிக்கும் கொள்ளை சாம்ராஜ்ஜியம் இது.
இதனால் நாசம் ஆவது, கடைசியில் காலி ஆவது சீன கரும்பினால் அழியும் நம் நீர் வளமும், நம் மண் வளமும்,நம் நாட்டுப் பயிர்களும்,நம் நாட்டு விலங்குகளும் மட்டும் அல்ல...
சாராயம்,சர்க்கரையால் அடியோடு அழியும் நமது மக்களின் நிலையான வாழ்வும், கிராமிய பொருளாதாரமும்தான்.
இந்த சீன சர்க்கரை,சாராய ஆலைகளுக்கு வெள்ளைக் கரும்பு பயிரிடுவதில் உண்டாகும் வியாபார போட்டிதான் காவிரி உள்ளிட்ட அனைத்து நதி நீர் பங்கீடு பிரச்சனைகளின் மூல காரணம் ஆகும்.
கர்நாடகா மாண்டியாவில் உள்ள சாராய கரும்பு ஆலைக்கு பயன் படுத்த தண்ணீர் விடுவதா?
தஞ்சாவூரில்,ஈரோடில் உள்ள சாராய கரும்பு ஆலைகளுக்கு பயன் படுத்த தண்ணீர் விடுவதா?
இதுதான் நமது காவிரி பிரச்சனை.
நெல்லையோ,கொள்ளையோ பயிர் செய்தால் நமக்கு காவிரி பிரச்சனையே முற்றிலும் தீர்ந்தது.
சபரி மலைக்கு வயது பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று ஜாக்டோ ஜியோவால் தீர்மானம் போடப்பட்டது. இது எல்லா அரசு அதிகாரிகளின் உணர்வு அல்ல. இதன் பின்னால் இருப்பவன் பெயர் களவாணிப்பயலான மீனாட்சி சுந்தரம்.
இவனை தலைவன் ஆக்கவே ஒட்டு மொத்த அரசு ஊழிய யூனியன்களை ஜாக்டோ ஜியோ என்ற "ஜாயின்ட் ஆக்‌ஷன் கமிட்டி" ஆக்கியதே இலுமினாட்டி ஃபோர்டு பவுண்டேஷனின் எடுபிடி கருணாநிதிதான்.
அதன் தொடக்கமே இப்பிரச்சனை.
அரசு ஊழியர்களை பயன் படுத்தி எதிர் கட்சி சர்க்கார்களை பணிய வைக்க இலுமினாட்டி சாராய வியாபாரிகளின் தந்திரமே கருணாநிதி ரூபத்தில் சோவின் சிந்தனையில் உருவான இந்த ஜாக்டோ ஜியோ.
தனியாக யூனியன் எனபது தவறே அல்ல.
ஆனால் சத்துணவு ஆயா யூனியன் பிரச்சனைக்கு தலைமைச் செயலக யூனியன் ஆதரவு கொடுப்பதே இதன் முக்கிய தலையாய பிரச்சனை.
சாராய திமுக,சாராய ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி சிண்டிகேட்டுகள் உள்ள வரை ஜாக்டோ ஜியோ போன்ற பிரச்சனை நம் நாட்டில் தீரவும் வாய்ப்பு இல்லை.
அரசு ஊழியர்களுக்கு நிம்மதி பிறக்கப் போவதும் இல்லை.
விவசாயிகளின் வாழ்வு மலரப் போவதும் இல்லை.
ரிசர்வ் வங்கி கவர்னராக ஏன் குருமூர்த்தி போனார்?.
மோடியால் விரட்டப்பட்ட சக்தி காந்த தாஸ் ஏன் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆக்கப்பட்டார் என்பது புரிகிறதா?.
இது போல நாட்டில் அழிவுத்திட்டம் இப்படி பல...பல.

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!


அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?
ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?
அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! மேலும் படியுங்கள்.
அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.
18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.
மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர்.
வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல்
கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .
நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!
நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை...
அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

காஞ்சிமஹா பெரியவா⚘ சொன்ன, வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்..

🙏🙏
(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ
பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம்
செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை
மூன்றே நாட்களில் உணரலாம்.

(2) நல்ல சம்பாத்தியம் இருந்தும்
பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை
வேளையில் பறவைகளுக்கு
இனிப்பு பிஸ்கட்கள் வழங்க
வீண் விரயம் கட்டுப்படும்.
(3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம்,
சோர்வு போன்றவை
நாள் முழுதும் இருப்பின்
இரவு படுக்கும் பொழுது
தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து
கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.
அதை குடிக்க கூடாது.
(4) காரணமில்லாத பய உணர்வு
இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ்
ஸ்டீல் வளையம் ஒன்று
மாட்டி வர பய உணர்ச்சிகள்
குறையும்.
(5) தற்கொலை எண்ணங்கள்
மேலும் வாழ பிடிக்காதது
போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி
கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற
ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி
அணிய வேண்டியதில்லை.
(6) வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது
கூடவே சிறிது காகித பூ
எடுத்து செல்ல விபத்துக்கள்
ஏற்படாது.
(7) காலை எழுந்ததும் தங்க
நாணயம் அல்லது
தங்கங்கள் நிறைந்த
படம், ரூபாய் நோட்டுகள்
நிறைந்த படம் ஒன்று
பார்த்து வர செல்வ வளம்
பெருகும்.
(8) இடது கை கீழே
இருக்கும் படி படுத்துறங்க
ஆயுள் விருத்தியாகும்.
(9)வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.
(10) காரணமில்லாமல் இரவில்
குழந்தைகள் தூங்காமல்
அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை
வைக்க, குழந்தை நன்றாக
தூங்கும்.
(11)சமையலறையும், படுக்கையரையும் அருகருகே
இருக்கும் படி அமைத்து
கொண்டால் தம்பதியர்
ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.
(12) துர் சக்திகள் நம்மை
அண்டாதிருக்க வீட்டு
வாசலில் மருதாணி
கொத்தை தொங்க விட
வேண்டும்.
வாழ்வோம் வளமுடன் நலமுடன்..

இறைவழிப்பாட்டில் மிக முக்கியமானது.

Image may contain: text

மனிதனின்_வெற்றிகள் . .

👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦💗👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦
1 − வயதில் வெற்றி என்பது பிறர் துணையில்லாமல் நிற்பது . . .
4 − வயதில் வெற்றி என்பது ஜட்டியில் சிறுநீர் போகாமல் இருப்பது . . .
8 − வயதில் வெற்றி என்பது வீட்டிற்கு வழி தெரிவது . . . .
12 − வயதில் வெற்றி என்பது நல்ல நண்பர்கள் இருப்பது . . .
18− வயதில் வெற்றி என்பது ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது . . .
23 − வயதில் வெற்றி என்பது பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருப்பது . . .
25 − வயதில் வெற்றி என்பது பணம் சம்பாதிப்பது . . .
30 − வயதில் வெற்றி என்பது குடும்பத் தலைவனாய் இருப்பது . . .
35 − வயதில் வெற்றி என்பது பணத்தை உருவாக்குவது . . .
45 − வயதில் வெற்றி என்பது இளமையாய் தோன்றுவது . . .
50 − வயதில் வெற்றி என்பது பெற்ற பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை தருவது . . .
55 − வயதில் வெற்றி என்பது இன்னும் உன் செயல்கள் திறமையாக இருப்பது . . .
60 − வயதில் வெற்றி என்பது இன்னும் ஓட்டுநர உரிமம் வைத்திருப்பது . . .
65 − வயதில் வெற்றி என்பது நோயில்லாமல் இருப்பது . . .
70 − வயதில் வெற்றி என்பது யாருக்கும் பாரமில்லாமல் இருப்பது . . .
75− வயதில் வெற்றி என்பது பழைய நட்பு தொடர்ந்திருப்பது . . .
81 − வயதில் வெற்றி என்பது வீட்டிற்கு வழி தெரிவது . ..
86 − வயதில் வெற்றி என்பது மறுபடியும் படுக்கையில் சிறுநீர் போகாமல் இருப்பது . . .
90 − வயதில் வெற்றி என்பது யார் துணையும் இல்லாமல் நடப்பது . . . .
வாழ்க்கை என்பது ஒரு வட்டம்.
வாழ்க வளமுடன்,
🌹🍎

" குப்பை மேனி "

பெண்களுக்கு அரும்பு மீசை வருகிறதா? இதோ மறையச் செய்யும் அருமையான வைத்திய குறிப்புகள்!!
உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து உங்களின் அழகையே கெடுக்கிறதா?
வீட்டிலேயே இந்த முயற்சிகளை செய்து பாருங்கள். ஆம், எப்போதும் அழகு நிலையங்களுக்கு சென்று தற்காலிக தீர்வு காண்பதை விட, இயற்கை பொருட்களைக் கொண்டு எப்படி நிரந்தரமாக போக்குவது என்று காண வேண்டும்.
சிலருக்கு ஹார்மோன் காரணத்தினால், அதிகமாக முடி வளரும். அதனால் முகத்தில் எல்லாம் முடியானது வளர்ச்சி அடையும். சிலருக்கு மீசை இருப்பது போல கூட இருக்கும்.
ஆகவே உதட்டிற்கு மேல் உள்ள பகுதி கருமையான நிறத்தில் காயப்படும். ஈஸியாக அந்த பிரச்சனையை சரிசெய்ய வீட்டிலேயே மருந்துகள் இருக்கின்றன

குப்பை மேனி :
குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும்.* இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.* தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

கடலை மாவு மற்றும் தயிர் :
கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்.

உருளைக் கிழங்கு :
உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கு ஒரு சிறப்பான ப்ளீச்சிங் ஏஜெண்ட். இதனை துவரம் பருப்பு பொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், நாளடைவில் முகத்தில் உள்ள முடியின் நிறமானது மங்க ஆரம்பிக்கும்.

வாழைப்பழம் :
வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் வாழைப்பழத்தை மசித்து சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.

எலுமிச்சை :
எலுமிச்சை மற்றும் சர்க்கரை 30 கிராம் சர்க்கரையை எலுமிச்சை சாறு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வளர்ச்சியானது தடைபடும்.

இளையராஜா 75 நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு.

இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ் திரைப் பட தயாரிப்பாளர் சங்கம் அவருக்காக பிரம்மாண்ட மான இசை நிகழ்ச்சி வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் நடத்த இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.



2-ந் தேதி நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் மஞ்சிமா மோகன், நிக்கி கல்ராணி, சாயிஷா, யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ், கோவை சரளா, ராதா, கார்த்திகா, ஆண்ட்ரியா, தமன், விஜய் யேசுதாஸ் ஆகியோரும் பங்கேற்று நடனமாடி, பாடல்கள் பாடி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளனர்.

கல்வி துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளியின், வீடு,அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று சோதனை நடத்தினர்.
கல்வி துறை,அதிகாரி,வீட்டில்,லஞ்சஒழிப்பு,போலீசார்,சோதனை

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளி கல்வித் துறையின் கீழ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் இயக்குனராக, அறிவொளி, 55, பணியாற்றி வருகிறார். இதற்கு முன், அவர், பொது நுாலக துறை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், புதிய பாடத்திட்டங்களை உருவாக்குதல், எளிய முறையில், மாணவர் களுக்கு பாடம் கற்பிப்பது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அதற்காக, பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப் பட்டு, அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடும் செய்யப் படுகிறது.
அந்த நிதியில், அறிவொளி உள்ளிட்ட சில அதிகாரிகள், முறைகேடு செய்து இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சென்னை, கோபாலபுரத்தில் உள்ள, அறிவொளியின் வீட்டில்,எட்டு மணி நேரம், லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடி சோதனை நடத்தினர். 

அதேபோல, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், பல மணி நேரம் சோதனை நடந்தது. அறிவொளி மற்றும் அவரது அலுவலக ஊழியர்களிடமும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து, பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.

அதேபோல, அறிவொளி வீட்டிலும், சொத்து ஆவணங்களும் சிக்கி உள்ளன. 'கம்ப்யூட்டர், பென் டிரைவ்' உள்ளிட்ட பொருட்களையும், கைப்பற்றி உள்ளனர்.

இது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ள தமிழர்களின் வாரிசுகள், தமிழ் மொழியை எளிதாக கற்றுக்கொள்ள, மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 'உலக மெல்லாம் தமிழ்' என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது.
இந்த திட்டத்தில், 'ஆடியோ, வீடியோ' தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதில், முறை கேடு நடந்து இருப்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.ரூ.பல கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதற்கு முகாந்திரம் இருப்பதால், அறிவொளி மற்றும் அவருடன் பணியாற்றி வந்த சிலரிடம், தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஐந்து பேர் மீது வழக்கு

அறிவொளி மட்டுமின்றி, முறைசாரா கல்வி நிறுவனத்தின் இயக்குனர், லதா, உதவி பேராசிரியை, சங்கீதா, பட்டதாரி ஆசிரியை, சித்ரா, இடைநிலை ஆசிரியர், அமலன் ஜெரோம் ஆகியோரும், லஞ்ச புகாரில் சிக்கி உள்ளனர். இவர்களின் வீடுகளிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். ஐந்து பேர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Wednesday, January 30, 2019

கேப்பையில் நெய் வடியும் போலிருக்கே.

Image may contain: 1 person, text

கிறிஸ்துவ மத மற்றம் இந்தியாவில் எப்புடி போய்கிட்டு இருக்கு?

🕉வாகனம் நுழைவு கட்டணம்
🕉வாகன பார்க்கிங் கட்டணம்
🕉மொட்டை அடிக்க கட்டணம்
🕉குளிக்க தனி கட்டணம்
🕉செருப்பு விட கட்டணம்
🕉தேங்காய் உடைக்க கட்டணம்
🕉காது குத்த கட்டணம்
🕉நெய் தீபம் ஏற்ற கட்டணம்
🕉அர்ச்சனை செய்ய கட்டணம்
🕉அபிஷேகம் செய்ய கட்டணம்
🕉காவடி எடுக்க கட்டணம்
🕉தங்க தேர் இழுக்க கட்டணம்
🕉இது போக
🕉கடை வாடகை
🕉நில வாடகை,
🕉குத்தகை வருமானம்
🕉பிரசாத விற்பனை
🕉பஞ்சாமிர்தம் விற்பனை
🕉அன்னதான நன்கொடை
🕉அபிஷேக நன்கொடை
🕉கும்பாபிஷேகம் நன்கொடை
🕉கட்டளை பூஜை நன்கொடை
🕉உண்டியல் வருமானம்
🕉இவ்வளவு வருவாய் இருந்தும்....
🕉சாமி கும்பிட 10. 20. 50.100. 250. 500. ருபாய் சிறப்பு கட்டணம்.
🕉கடவுளை கும்பிட காசு கேட்பது நியாயமா?
🕉கடவுள் முன்பு அனைவரும் சமம்.
கிறிஸ்தவ சர்ச் வருமானம் கிறிஸ்தவனுக்கு
மசூதி வருமானம் அனைத்தும் முஸ்லீம்களுக்கு
🕉🚩இந்து கோயில் வருமானம் மட்டும் அரசுக்கு ???
இந்துக்களே சிந்திப்பீர்.....

நம்பிக்கை_இழக்காதே_எல்லாம்_நல்லதாய்_அமையும்.

உனக்கு நான் அடிக்கடி கூறுகிறேன் நம்பிக்கையோடு இரு.
தூக்கம் இல்லை, எதையும் சிந்திக்க முடியவில்லை, ஏன் ஏதற்காக,வாழ வேண்டும், என்று உன் மனதில் தோன்றும் எண்ணங்களில் இருந்து முதலில் வெளியே வா.
நான் சொல்ல வருவதை கொஞ்சம் காது கொடுத்துக் கேள்.
வாழ்க்கை என்றாலே ஏற்றம் இறக்கம் கலந்த ஒன்று அதை லாவகமாக நகர்த்தி செல்வதில் தான் சிறப்பு.
இவ்வுலகில் வாழும் எல்லோர் வாழ்க்கையிலும் எல்லா சூழலும் ஒன்று போல அமையாது.
அன்பு, காதல்,தேடல், வளர்ச்சி, ஆசை ஆகிய எதுவும் அளவுக்கு மீறி போகும் போது சிக்கல் தான்.
அடுத்தவர்களின் துயரங்களை கேட்கும் போது அதை ஆழ்மனதிற்கு கொண்டு சென்று நம் வாழ்க்கையிலும் இப்படி நடக்குமோ என்று நீயே கற்பனையாக யோசிக்காதே...
அந்த சந்தேகமே உண்மையாக உன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து உன்னை பிரித்து விடும்.
ஐயோ இதை எப்படி சொல்வது என்ற எண்ணம் எல்லாம் வேண்டாம். மனதில் உள்ள குப்பைகளை உனக்கு நம்பிக்கை குரியவர்களிடம் கொட்டி விடு, அல்லது ஒரு காகிதத்தில் எழுதி பிறகு அதை அக்கினிக்கு இறையாக்கி விடு.
மனதை ஒருநிலைப் படுத்தி தியானம் செய். தியானத்தின் போது எல்லா எதிர்மறை சக்தி என்னை விட்டு விலகிவிடும் என்ற எண்ணத்தோடு தியானம் செய்.
தோல்விகள் நிரந்திரமல்ல என்று எதையும் புரிந்து ஏற்று கொண்டால் அழுத்தம் வராது மாறாக நேர்மறை எண்ணங்கள் உன்னை சூழ்ந்து பாதுகாக்கும்..
உனக்கு எல்லா சூழ்நிலைகளிலும் நான் துணை நிற்பேன்.
என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து செயல்படு...மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்...
நல்லதே நடக்கும்..!
என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ !

ஒரு தோல்விகரமான தோல்வி!

ஜாக்டோ ஜியோ ஆசிரியர் கூட்டமைப்புகள் இறுதியாக ஜெயித்தது என்ன? ஆயிரத்து சொச்சம்பேர் பணியிடைநீக்கம், நூற்றுச் சொச்சம்பேர் சிறைக்கு சென்றதே மிச்சம். பொதுமக்களின் ஆதரவு இல்லாத போராட்டங்கள் இப்படிதான் நீர்த்துபோகும். மன்னிப்புக்கடிதம் கொடுத்து சம்பளப்பிடித்தத்திற்கு ஒத்துகொண்டு கடைசியில் மண்டியிட வைக்கும். போதாத குறைக்கு நீதிமன்றத்திலும் சாட்டையடி வாங்கிய அவமானமும் மிஞ்சியது.
உங்கள் பிள்ளைகள் பயிலும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்ததை நீங்கள் ஆதரிப்பீர்களா? சேவை மனப்பான்மையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டு தொழிலாளர்களைப் போல் சாலை மறியல் செய்கிறீர்களே! அசிங்கமாக இல்லையா? என்று ரொம்ப அசிங்கமான கேள்வியும் நீதிபதியிடம் வாங்கியாயிற்று.
போராட்டத்தில் கைதாகி கல்யாண மண்டபத்தில் இருந்து செல்ஃபி போடும் அப்பாவி டீச்சர்களுக்கு இந்த போராட்டத்தை தூண்டி விடுவது யாரென்று தெரியாது. ரெண்டு நாள் போராட்டத்தில் உட்கார்ந்தால் பழைய பென்ஷன் கிடைச்சுடும் என்று சங்க நிர்வாகிகள் சொன்னதற்காக ஓடிவந்த கூட்டமிது. காட்டில் ராஜ்யம் செய்வதும் நாட்டில் வேட்டையாடுவதும் மூடர்களின் செயல். அததுக்கு இடமிருக்கு. நேரமிருக்கு.நியாயமான கோரிக்கைகளாக இருந்தாலும் போராட்ட களத்திற்கான சூழல் சரியா? என்று எந்த ஒரு வாத்தியார் மூளையும் யோசிக்கவில்லை. தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் போராட்டத்திற்கு நாள் குறிச்சவன் எவன்டா? என்று எதுவும் யோசித்து இருக்காது. சலுகை வாங்கித் தரேன் என்று சொன்னதும் ஸ்கூலை இழுத்து மூடிவிட்டு சர்க்கரைப் பொங்கலுக்கு அலையும் கோயில் யானை போல் வரிசையில் நின்றது பேராசை. அதான் பெருநஷ்டம்!
ஆசிரியர் வேலைக்கு தேர்வுசெய்துவிட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க சொல்றாங்க. எவன் எவ்ளோ பெத்து வைச்சிருக்கான் என்று கணக்கெடுக்கறதா எங்க வேலை? சொட்டு மருந்து ஊத்தறதா எங்க வேலை? எலெக்ஷன் டியூட்டி பார்த்து ஓட்டு மிஷினுக்கு அரக்கு வைக்கறதா எங்க வேலை? இப்படி நியாயமாக கோவப்பட்டு அதெல்லாம் பண்ண மாட்டோம் என்று சங்கம் மூலம் அழகாக அடம் பிடித்து இருக்கலாம். அதை விட்டுட்டு பென்ஷன் ஸ்கீம்க்கு மாற்றம் வரும் வரை ஸ்கூல் போக மாட்டோம் என ஸ்கூல் பசங்க மாதிரி அடம்பிடிச்சது அழகா ஆசியர்களுக்கு?
நாட்டில் இரண்டு வேலையில் இருப்பவர்களை பார்த்துதான் மக்கள் கையெடுத்து கும்பிடுவார்கள். ஒண்ணு உயிரை காப்பாற்றும் மருத்துவர்கள். இன்னொன்று அறிவுக்கண்ணை திறந்துவிடும் ஆசிரியர்கள். யாருக்கும் கிடைக்காத ராஜமரியாதையை தெருவில் தவறவிட்டது யார் குற்றம்? நிதானமாக யோசித்தால் உண்மையும், தவறும் புரியும். அன்றைய ஆசிரியர்களிடம் நிறைவான , ஒழுக்கமான.மாணவர்களை நேசித்து, மாணவர்களும், ஆசிரியர்களை நேசித்து " கல்வி இருந்தது. இந்த ஆசிரியர்கள் ஸ்டிரைக்கை ....90% சதவீத மக்கள், அரசு ஊழியர்கள. மீதான அலட்சியப் போக்கை, நினைத்து : ஸ்டிரைக் பண்ணியவர்கள் மீது வெறுப்பாக தான் இருந்தார்கள்
இதிலேயே தோற்றுவிட்டது இந்த போராட்டம் ° அன்று எம்.ஜி.ஆர் ஆட்சியில் 60 நாட்கள் நடந்த போராட்டம் இன்று எடப்பாடி ஆட்சியில் 6 நாட்களில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
பொதுவாக எந்தக்கட்சி எதிர்கட்சியாக இருந்தாலும் இந்த போராட்டத்தை ஆதரிப்பார்கள்: இது வழக்கமான ஒன்று தான் :
நான்கு நாட்களுக்கு முன்பு எனக்கு வந்த அலைபேசியில் எனது நெருங்கிய முகநூல் நண்பர்கள் அவர்கள்.
நீங்கள் இந்த போராட்டத்தை ஆதரித்து ஒரு பதிவு போட்டால் என்ன? என்றார்கள். அவர்களிடம் தொலைபேசியில் பேசியும் ஃ அவர்கள் மனநிலை மாற்றம் இல்லை:
விமர்சனம் வேறு
புரிதல் வேறு.
மக்கள் மனநிலை வேறு ...
இரண்டு நாட்களுக்கு முன் ஒரு ஆசிரியர் எனது முகநூல் பக்கத்தில் இருந்து என்னிடம் பேசிய செய்திகள்:
நான் மூணாம் வகுப்பு Teacher. எனது சம்பளம் 50000 க்கும் மேல்.லைப்ல
வசதியா செட்டில் ஆகியாச்சு" போராட்டத்துல Interest இல்லனாலும், ச்சும்மா பட்டும் படாம போவேன் : எனக் கு என்ன குறை? நான் நல்லாதான் இருக்கேன் ஃ என்று அவரது பேச்க இந்த பதிவுக்கு கண்டிப்பாகத் தேவை.
அரசு ஊழியர்களே
சற்று சிந்தியுங்கள்
உங்களிடம் பணியில் உதவி கேட்டு வரும் எங்களையும் மதித்து குறை கூறாதீர்கள். அலட்சியப்படுத்தாதீர்கள்"
இன்றும் எங்களுக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களை மதிக்கிறோம். இன்னும் தொடர்பில் இருக்கிறோம்
மாதா - பிதா .. குரு ஃதெய்வம் தான் எங்களுக்கு?
சற்று சிந்தியுங்கள் உங்களில் ஒருவன் னாக ° எனது பதிவு: கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

💐ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - 💐

குரு என்றால் யார்? ஒருவருக்கு எத்தனை குருக்கள் இருக்க வேண்டும்? ஒரே ஒரு குரு போதுமா? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதே இந்தப் பதிவின் நோக்கம்.
குரு என்ற சொல்லில் கு என்ற எழுத்து அறியாமையையும், ரு என்பது அழித்தலையும் குறிக்கும். ஆக குரு என்பவர் அறியாமையை அழித்து மெய்யுணர்வு புகட்டுபவர் ஆவார். மேலும் கு என்பது சத்துவ, ராஜச, தாமச குணங்களை கடந்தவர் என்று, குணாதீத நிலைமையையும், ரு என்பது ரூபாதீதம் எனும் உருவைக் கடந்த நிலையினைக் குறிக்கும். ஆக, குரு என்பவர் குணங்களையும், ரூபத்தையும் கடந்த பரப்பிரமமே ஆவார். இதனைத் தான் குருவே சிவம் என்பர்.
"குருவே சிவம் எனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்து ஓரார்
குருவே சிவனும் ஆய்க் கோனும் ஆய் நிற்கும்
குருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே."
நடைமுறையில், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஆசிரியர் யார், குரு யார் என்பதைத் தீர்மானிப்பதில் தடுமாற்றம் காணப்படுகின்றது. ஆசிரியரைக் குரு என்பதும் குருவை ஆசிரியர் என்பதுமாக நாம் குழப்பமடைந்துள்ளோம். பல சந்தர்ப்பங்களில் ஆசிரியர் ஒருவரை அவருக்கு விசேஷ மதிப்பைக் கொடுப்பதற்காக குரு என்றும் குறிப்பிடுகின்றோம். கலை உலகில் இந்தப் பிரயோகத்தை நாம் காணலாம். உதாரணமாக, நடனக் கலையைக் கற்பிக்கும் நடன ஆசிரியரை நடன அரங்கேற்ற மேடைகளில் குரு எனக் கௌரவிக்கப்படுவதைக் காணலாம்.
ஒருவர் ஆசிரியரா அல்லது குருவா எனத் தீர்மானிப்பதில் அடிப்படையாகக் கொள்ளப்படும் உண்மை எது? என்பது தான் ஆசிரியருக்கும் குருவுக்குமான வேறுபாட்டைக் கொடுக்கின்றது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் குறிப்பிடப்படும் குரு என்பவர் ஆசிரியராக இருப்பின் ஒருவருக்கு எத்தனை குருக்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். அதேபோன்று 'தாரமும் குருவும் தலைவிதிப்படி' என்பதில் தாரம் ஒன்று, குரு ஒன்று என்பது வெளிப்படையானதே.
இதிலிருந்து ஒரு விஷயத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அதாவது, நாம் பல ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்கிறோம் ஆனால் குரு, தாரத்தைப் போல் அமைய வேண்டியதாகின்றது என்பதே. இங்கு அமையவேண்டியது என்பது எமது தேடலின் அடிப்படையில் இடம்பெறுகின்றது என்பதாகும். இப்போது ஒரு ஆசிரியரின் செயற்பாடு என்ன என்பதைப் பார்ப்போம். ஒரு ஆசிரியர் தான் கற்றுக்கொண்ட அறிவை மாணவர்களுக்கு மாற்றம் செய்பவராவார். அதாவது, ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு அறிவை (Knowledge) மாற்றம் செய்பவர் ஆசிரியராவார்.
இவ்வாறு அறிவை மாற்றம் செய்யும் ஆசிரியர்கள் தமது அறிவைப் பாடசாலை மாணவர்களுக்கு மாற்றம் செய்பவர்கள் மட்டுமல்ல, கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள் என முன்னோர்கள் கூறியவற்றைக் கற்றுப் பெற்ற அறிவைப் பிறருக்கு மாற்றம் செய்பவர்களும் ஆசிரியர்களே. இதே போன்றே கலைகளிலும் தாம் கற்றுக் கொண்ட அறிவை இன்னொருவருக்கு மாற்றும் போது அவரும் ஆசிரியராகின்றார். அப்படியாயின் குரு என்பவர் யார்?
குரு என்பவர் ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு புரிந்துகொள்ளுதலைக் (understanding) கொடுப்பவராவார். இங்கே அறிவுப்பரிமாற்றம் இடம் பெறுவதில்லை. அறிவுப்பரிமாற்றமானது மனம் சார்ந்தது. ஆனால் குருவால் கொடுக்கப்படும் புரிந்துகொள்ளல் என்பது உள்ளுணர்வு சார்ந்ததோடு ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமானதாயும், தனித்துவமானதாயும், வார்த்தைகளின் விளக்கங்களுக்கு அப்பாற்பட்டதாயும் அமையும்.
எனவே ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு அறிவை மாற்றம் செய்பவர் ஆசிரியர், ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு புரிந்து கொள்ளலைக் கொடுப்பவர் குரு.
எமக்குக் கிடைப்பது அறிவு சார்ந்ததா அல்லது உள்ளுணர்வு சார்ந்ததா என்பதன் மூலம் கொடுப்பவர் ஆசிரியரா அல்லது குருவா என்பதைத் தீர்மானிக்கலாம். சரி, இனி அடுத்த கேள்விக்கு செல்வோம்.
தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.
"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.
இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட நாட்டின் அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான். அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர்.
மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...
"மன்னா! பொறுமையைப் பூமியிடம் கற்றேன்;
தூய்மையைத் தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.
பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.
எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது;
பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.
"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்குக் காரணம் என்பதை உணர்ந்தேன்.
"எங்கும் அலையாமல் தன்னைத்தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.
பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.
பார்வையைச் சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதைச் செலுத்துவதை விட்டில்பூச்சி கற்றுத் தந்தது.
"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதைத் தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.
பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.
"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதைப் புரிந்து கொண்டேன்.
"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...' என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.
இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.. தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லோருக்குமே பொருந்தும் தானே..
தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” ரமணர், ராமகிருஸ்னபரமஹம்சர் போன்ற பல மகான்களால் சீடர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும். நல்ல சீடனுக்கு எல்லாமே குரு தான்... உத்தவ கீதையிலிருந்து ஒரு குரு சமர்ப்பணம்
ஸ்ரீ தத்தாத்ரேயர் அருளிய இயற்கை தந்த 24 குருமார்கள்
கிருஷ்ணாவதாரம் முடியும்தருவாயில் உத்தவரும், கிருஷ்ணரும் உரையாடியது உத்தவகீதை ஆகிறது. இதில் கிருஷ்ணர் தனது அவதாரம் முடியும் காலம் வந்ததை உதவருக்குச் சொன்னபோது, கிருஷ்ணர் இல்லாத உலகில் தான் மட்டும் இருந்து "நான்", "என்னுடைய" என்ற சபல புத்தியை எப்படி வெல்வது என்று உத்தவர் தேம்புகிறார். அதற்கு கிருஷ்ணர் ஒரு அவதூதர் (தத்தாத்ரேயர்) இயற்கையே தனது குரு என்று 24 குருமார்களைக் காட்டியதை இங்கு விளக்குகிறார்.

ஏகாதசி வழிபாடு..!

🙏 தை மாத தேய்பிறை ஏகாதசி ச‌பலா ஏகாதசி எனப்படும். இது பாவநிவர்த்தி கொடுக்கும். இன்றைய தினத்தில் பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கும். இல்லறம் இனிக்கும். தை மாத ஏகாதசியில் பெருமாளை விரதமிருந்து வணங்குவதால் சகல சம்பத்துகளுடன் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பது ஐதீகம்.
🙏 மனிதர்களாக பிறந்த நாம் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும். அந்த முக்தி நிலையை அடைவது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல. கங்கையில் குளித்தல், பகவத் கீதையை படித்தல், காயத்ரி மந்திரத்தை உச்சரித்தல், துளசியை கொண்டு வீட்டில் பு+ஜை செய்தல், சாளக்கிராம பு+ஜை செய்தல், ஏகாதசி விரதமிருத்தல், பகவான் நாமத்தை உச்சரித்தல் இவைகளை கடைபிடித்தால் நிச்சயம் முக்தி என்கிறது நாரயணீயம்.
புராணத்தில் ஏகாதசி :
🙏 விஷ்ணு பகவான் மனிதர்கள் வாழும் காலத்தில் அறிந்தும் அறியாமலும் செய்யக்கூடிய பாவங்களுக்கு தண்டனைகளை ஏற்படுத்தி, அதற்காக எமலோகத்தை சிருஷ்டித்து எமராஜனையும் அந்த லோகத்திற்கு நியமித்தார்.
🙏 எமலோகத்திற்கு ஒருநாள் விஷ்ணு விஜயம் செய்தபோது, அங்கு மனிதர்கள் படும் அவஸ்தையை கண்டு மனமிறங்கி ஏகாதசி விரதம் பற்றி அவர்களுக்கு கருணையுடன் எடுத்துரைத்தார். யார் இந்த விரதம் இருக்கிறார்களோ அவர்கள் பிறவிப்பயன் நீங்கி வைகுண்டம் சேர்வார்கள் என உறுதியளித்தார்.
ஏகாதசி விரத முறை :
🙏 ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு, விரதத்தை தொடங்க வேண்டும்.
🙏 ஏகாதசி விரதத்தை மூன்று நாட்கள் என்னும் முறையில் அனுசரித்தால் பலன் நிச்சயம். தசமி அன்று ஒரு வேளை உணவு உண்டு மறுநாள் ஏகாதசி அன்று முழு பட்டினி இருந்து, அதற்கு மறுநாள் துவாதசி அன்று காலையிலேயே உணவு உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
🙏 ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவர்கள் பு+ரண உபவாசம் இருத்தல் பலன் தரும். ஏழு முறை துளசி இலையை பகவான் நாமம் சொல்லி சாப்பிடலாம். உடல்நிலை மற்றும் வயோதிகம் காரணமாக பு+ரண உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள், பால், தயிர் போன்றவற்றை பு+ஜையில் வைத்து இறைவனுக்கு படைத்து பின் பிரசாதமாக உண்ணலாம். ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை தான் நாம் பாரணை என அழைக்கிறோம்.
🙏 தை மாத ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாளைய தினம், 31.01.2019 வியாழக்கிழமை சர்வ ஏகாதசி. இந்த நாளில், பெருமாளை ஆராதனை செய்யலாம். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யலாம். முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடலாம். துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள்.
ஏகாதசி விரத மகிமை :
🙏 சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று விளக்கினார்.
🙏 உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத்தூய்மை, உடலின் தூய்மை முதலான பலன்கள் கிடைக்கின்றன. எனவே, ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சௌபாக்கியங்களையும் பெறுவார்கள்.

தத்துவ அடைமழை!

* மூக்கும் முழியுமா இருக்கிற பெண்ணை விட, நாக்குக்கு நயமா சமைக்கிற பொண்ணு தான் ஆண்களுக்கு தேவை!.
* சுடுகாடு சுடுகாடுனு கேவலமா பேசதீங்க அங்க போறதுக்கு அவனவன் செத்துட்டு இருக்கான்.
* வீட்டுக்குள்ளே புருசனை வெளு வெளுன்னு வெளுத்தாலும், வெளியில் புருசனுக்கு பயப்படுற மாதிரி நடிக்குறதுல, தமிழச்சி எங்களை அடிச்சிக்க முடியாது
* உப்பு திண்ணா தண்ணி குடிச்சுதான் ஆகனும் -பழமொழி
கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகனும்-பது மொழி.
* பட்டுச்சேலை கட்டினால் எல்லா பொண்ணுக்கும் எடுப்பா தான் இருக்கும்!
ஆனா அதை வாங்கித்தர புருசனுக்கு தான் கடுப்பா இருக்கும்.
* நாம் அழுதால் நமக்கே பிடிக்காது.
நாம் கொஞ்சம் சிரித்தால் அந்த ஆண்டவனுக்கே பொருக்காது.
* கவனிக்கப்படாமல் இறந்தவர்களுக்கு செய்யும் "திதியும்"
இறந்த பின் அரசாங்கம் தரும் "நிதியும்" பயனற்றது.
* வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்!
வசதி இருக்கிறவன் நாய் மேய்க்கிறான்!!
* என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும், நமக்கு நாமே போன் பண்ணும்போது பிஸியாதான் இருப்போம்
* அதிர்ஷ்டம் அம்பாஸிடரில் ஏறி வந்தா, பிரச்சனை பிளைட் ஏறி வருது.
* கல்யாணம் ஆன பின் ஒன்னு அடி விழும்.
இல்ல, முடி விழும். அவ்ளோதாங்க வாழ்க்கை.
* காந்தி நாட்டுக்காக பாடு பட்டார்!
நாம காந்தி நோட்டுக்காக பாடுபடுறோம்
* கவர்மெண்ட் எக்ஸாம் லட்சம் பேர் எழுதுறாங்க. ஆனால் லட்சம் கொடுக்குறவங்க தான் செலக்ட் ஆகிறாங்க.
* இந்த உலகத்துல நல்லவங்க கெட்டவங்கனு யாரும் இல்ல. நமக்கு புடிச்சா நல்லவங்க!! புடிக்கலனா கெட்டவங்க.
* முட்டி மோதி வாழ்க்கையில முன்னேறலாம் என்று பார்த்தால் ஒரே முட்டுல கீழே தள்ளிவிட்டுறாங்க.
* வாழ்க்கை சிக்கல் வந்தா நக்கலா பாத்து சிரிக்கணும். புரியுதா?
* எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருந்தா பிரஷர் வரும்னு சொல்றாங்க எதையும் சாப்பிடலைன்னா அல்சர் வரும்னு சொல்றாங்க.

முதல் இரண்டு வரிகளை தவிர மற்றவை உண்மையாக இருக்கும்.

சூனா சானா மீது எனக்கு எப்போதும் மரியாதை இருந்ததில்லை என்றாலும் அவர் ஒரு நாரதர் என்கிறவகையில் அவரை எனக்குப் பிடிக்கும்.
இப்போது காங்கிரஸின் புதிய ‘அன்னை’ பிரியங்கா வதேரா மீது நான்கு குண்டுகளை வீசியிருக்கிறார்.
ஒன்று, பிரியங்கா வதேரா என்கிற பிரியங்கா “காந்தி”க்கு Bipoloar disorder நோய் இருப்பதாகச் சொல்கிறார். இது சாதாரண நோயில்லை. இது இருப்பவர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு எந்த நேரமும் உட்பட்டு இருப்பார்கள். திடீர் திடீரென அடுத்தவர்களை வெறிகொண்டு தாக்குவார்கள். காரணமே இல்லாமல் அடிப்பார்கள். பிரியங்கா வீட்டில் வேலை செய்கிற எஸ்.பி.ஜி. ஜவான்களையும் பிரியங்கா சாத்தியிருப்பதாகத் தெரிகிறது. அந்த ஜவான்கள் தன்னிடம் வந்து வேலைமாற்றல் வாங்கிக் கொடுக்கும்படி கேட்டதாகச் சொல்கிறார் சு. ஸ்வாமி.
இரண்டாவது, பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ ஏஜெண்ட்டுகளுடன் உள்ள தொடர்பு. பிரியங்காவின் கல்யாணம் யாரும் அறியாத ஓரிடத்தில் பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ. ஏஜெண்ட்டான ஃபரிதா அத்தவுலா என்கிற பெண்மணியால் நடத்தி வைக்கப்பட்டதாகச் சொல்கிறார் சுப்ரமண்யம் ஸ்வாமி. அந்தக் கல்யாயணத்திற்கு வர விரும்பிய ப. சிதம்பரத்தையும் வரவேண்டாம் என மேற்கண்ட காரணத்தைச் சொல்லி “அன்னை” சோனியா தடுத்துவிட்டதாகத் தெரிகிறது. அந்த ஃபரிதா மூலமாகத்தான் பெருமளவு பணம் ஹவாலா மூலமாக வெளிநாடு சென்றதாகத் தகவல். திருடர்கள் திருடர்களுடன்தான் கூட்டணி வைப்பார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
மூன்றாவது, பிரியங்காவுடைய மதம் எதுவென்று இன்றுவரை தெரியவில்லை. அவர் பிறந்தபோது பர்த் சர்ட்டிபிகேட்டில் கத்தோலிக்க கிறிஸ்தவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனை அவர் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்கிறார் ஸ்வாமி.
நான்காவது, பிரியங்காவுக்கு சீனாவில் பிஸினஸ் இருக்கிறது. அது என்னவென்று தெளிவுபடுத்த வேண்டியதும் அவசியம் என்கிறார்.
பிரியங்கா இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். அனேகமாக ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகள் ப்ரியங்காவுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருப்பார்கள் என நம்ப இடமிருக்கிறது. வந்தவுடன் வாண வேடிக்கைகள் இருக்கலாம். அல்லது புஸ்வாணமாகலாம். எப்படியிருந்தாலும் சுப்பிரமணிய சுவாமியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இன்றைக்கு உருவாகியிருக்கிறது..!

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...