Thursday, January 30, 2020

நோய்கள்_வராது !

🙏🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🙏
🍄தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.
🍄#சர்க்கரை_நோய் எப்படி வருகிறது ?
🍄இன்று குக்கரில் வேகவைத்த சாதத்தை பலரும் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.
🍄சாதம் வடித்த கஞ்சி சு+டாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை சரியாகும்.
🍄ஆனால் கஞ்சியை ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.
🍄சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.
🍄சாதத்தை எப்பொழுது சாப்பிட வேண்டும்?
🍄கொதிக்கக் கொதிக்க சாதத்தை சாப்பிடக்கூடாது.
🍄சாதத்தை மிதமான சு+ட்டிலேயே சாப்பிட வேண்டும்.
🍄ஆனால் சாதத்தை சில்லென்று, ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.
பழையச் சோறு சாப்பிட்டுத்தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள்.
🍄சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகியவை பாதிக்காமல் பாதுகாக்கிறது.
🍄பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக் கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.
🍄சாதம் வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும், பித்தம் உண்டாவதும் நீங்கும்.
🍄பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.
🍄மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.
🍄சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.
🍄வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது.
🍄ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை :
🍄காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிட்டால் தொப்பையைக் கரைக்கும்.
🍄உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ணுங்கள்.
🍄ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயில் மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. இதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்.
🍄மைதாவினால் செய்யப்படும் பரோட்டா போன்ற பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள. இது வாழ்நாளைக் குறைக்கும்.
🍄பிராய்லர் கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். இதற்கு பதில் மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக்கோழி சாப்பிடுங்கள்.
🍄மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.
🍄உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு திட உணவு சாப்பிடக் கூடாது.
🍄பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம் ஆகியவற்றை நாள்தோறும் சாப்பிடுவது நல்லது.🙏🙏

இதை விடப் பற்பல மடங்கு கோவில் நிலங்களையும் திருடியிருக்கிறார்கள்.

முரசொலி மூலப்பத்திரம் விசயத்தை நம்மில் பலர் திமுகவை எதிர்ப்பதற்காகவும், நக்கல் பண்ணுவதற்காகவும், எழுதி வருகிறார்கள்.
இதன் சீரியஸ்நெஸ் நிறைய பேருக்குப் புரியவில்லை. இந்த ஒரு விசயத்தில் சரியான, நேர்மையான தீர்ப்பு வந்து விட்டால் போதும், நம் மாநிலத்திற்கு மிகப் பெரிய விடிவுகாலம் காத்திருக்கிறது.
திமுகவிடம் இருந்து, முறைப்படி அதை மீட்டு, மீண்டும் அரசு தன்னகப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த்து விட்டால், மொத்த திராவிடத் திருட்டுத் தனமும் வெளியே வந்துவிடும். எப்படி?
தடா. பெரியசாமி ஜி கூறும் ஆவனப்படி, இப்பொழுதைய பஞ்சமர் நிலம் 1.16 லட்சம் ஏக்கர் தான் இருப்பதாக அரசு தரப்பில் கணக்கு காட்டுகிறார்கள். ஆனால், பழைய ஆவனப்படி, 12 லட்சம் ஏக்கர்கள் பஞ்சமி நிலமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அப்ப மீதி எங்கே?
திமுக 40% அதிமுக 40% குரங்கு பிய்த்துக் கொடுத்த அப்பமாக அரசு உயர் அதிகாரிகள் 20% ஆக்கிரமித்திருப்பார்கள் என்பது கணிப்பு. அதாவது, 10.8 லட்சம் ஏக்கர் நிலம் திருடப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு, மிகக் குறைந்த சராசரியாக ஒரு ஏக்கரை 5 லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களைத் திருடியிருக்கிறார்கள். (ரூபாய் 5,40,00,00,00,000)
இவ்வளவு திருடியிருக்கிறார்களா என்று வாயைப் பிளக்காதீர்கள். இதை விடப் பற்பல மடங்கு கோவில் நிலங்களையும் திருடியிருக்கிறார்கள். ஆகையால், இந்த ஒற்றை பஞ்சமி நிலத்தை சட்டத்தின் மூலமாக முறைப்படி நீதிமன்றம் மீட்டுக் கொடுக்குமானால், மொத்த பீடையும் தமிழகத்தை விட்டு விலகி விடும்.
அடியிலிருக்கும் ஒற்றைக் கல்லை உறுவி விட்டால் மொத்தக் கட்டடத்தையும் சரிச்சுடலாம். அதை இப்ப ஒற்றை ஆளாகச் செய்ய முனைந்திருக்கிறார் த.பெ ஜி.
ஆனால், இது அத்தனை சாதாரண விசயமல்ல. எந்த நேரமும், எந்த நிமிடமும் தடா பெரியசாமி ஜி அவர்கள் உயிருக்கு ஆபத்து வரலாம். பொன். மாணிக்கவேல் சார் மாதிரியான கிரிமினல்களின் சூட்சுமம் தெரிந்தவர் அல்ல தடா பெரியசாமி ஜி. இறைவனின் பூரண அருள் ஒன்றே அவரைக் காக்க முடியும். நாம் எல்லோரும் அவர் ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் மனமுவந்து பிரார்த்தனை செய்வோம்.

தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, புழுக்களும் வெளியேறிவிடும்.
இதய பிரச்சனைகளான ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க மற்றும் உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற மிக சிறந்தது.
பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது. சமைத்தால் அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும். இயற்கையாகவே, சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே, பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்.
பத்து முழு பூண்டை உரித்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, சுத்தமான பருத்தி துணியில் 8-லிருந்து 12 மணி நேரம் நிழலில் காய வைத்த பின், அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு, மூழ்கும் வரை தேன் ஊற்றி, குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின், காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட, ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்.
பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

*தலைமுறை_இடைவெளி:*

*நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன்; இப்ப இருக்கிற புள்ளைங்க சாப்படுறதுக்கு கஷ்டப்படுதுங்க!!*
*அன்று பரிட்சை எழுத காலண்டர்அட்டையை கொடுத்த என் தந்தையிடம் சரி மேல மாட்டுற கிளிப்பாவது(வெறும் 3 ரூபாய்)வாங்கி தாங்க என்று அழுதபோது , டேய் உனக்காவது இது கிடைத்தது நான் படிக்கும்போது இதுக்குகூட எனக்கு வசதியில்லை என்று சொன்ன என் தந்தையை பார்த்து நம்பாமல் நக்கலாக சிரித்தேன்!!!*
*இன்று மூன்றாவது வகுப்பு படிக்கும் என் மகளுக்கு exam board வாங்க போனபோது
150ரூபாய் மதிப்புள்ள examboardஐ பார்த்து உதட்டைபிதிக்கி இதவிட betterஆ வேறஇல்லையா என்று கடைகாரரை பார்த்து கேட்டபோது எனக்கு தூக்கிவாரிபோட்டது
என் மகளிடம் பொருமையாக பாரும்மா அப்பா படிக்கும்போது பரிட்சைஎழுத காலண்டர்அட்டையை தான் கொண்டு போவேன்
ink பாட்டில் வாங்கவசதி இல்லாமல்(10ருபாய்) 10 பைசாவிற்கு கடையில் மை வாங்கியிருக்கிறேன்,
, சில சமயம் பக்கத்தில்இருப்பவர்களிடம் ஒரு சொட்டு மை கடன் கேட்பேன்,,,*
,புதிய புத்தகங்கள்வாங்க காசில்லாமல் போனவருடம் பாசான அண்ணன்மார்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி பள்ளிக்கு போனேன்;
bookஐ மறந்தாலும் மதிய சத்துணவுக்காக தட்டை கொண்டுபோக மறந்ததில்லை;;;;
என்று என் மகளிடம் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னபோது
நம்பாமல் நக்கலாக சிரிக்கிறாள் நான் அன்று என் தந்தையை பார்த்து சிரித்ததுபோலவே!!!!
நாசமா போறவ குடிக்கிறதண்ணீய குடம் நாலானா(25பைசா) சொல்லுறா என்று புலம்பிக்கொண்டே பக்கத்து தெரிவிலிருந்து தண்ணீர் பிடித்த என் தாயாரை பார்த்த அதே கண்களால்
இன்று அப்பா filter water கேன்(2குடம் இருக்குமா?) வெறும் 35 ரூபாய்தானாம் என்று ஆச்சரியப்படும் என் மகளையும் (3 std படிக்கிறாள்) பார்க்கிறேன்
, *இதுதான் தலைமுறை இடைவேளியா?*
நாய் கூட நடக்காத நண்பகல் வேளையில் நண்பர்களோடு கண்மாய்கரையை ஒட்டிய groundல் கிரிக்கெட் விளையாண்டுவிட்டு
தாகம் எடுத்தால் ஏதாவது ஒரு வீட்டின் கதவை தட்டி
( அவங்க என்ன ஆளுங்க என்றுகூட எங்களுக்கு தெரியாது, நாங்க என்ன ஆளுங்க என்றுகூட அவங்களுக்கும் தெரியாது! !)
அக்கா குடிக்க கொஞ்சம்தண்ணீ தாங்க என்று கேட்டால் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தருவார்கள்
நாங்கள் எல்லாரும் போட்டிபோட்டு கொண்டு மூச்சிரைக்க சட்டை நனைய தண்ணீர் குடிக்கும்அழகை ரசித்துகொண்டே தம்பி போதுமா இன்னும் வேணுமா என்று கேட்பார்கள்
( ஆளுக்கு ஒரு சொம்பு என்றால் குறைந்தது 10 சொம்பு கிட்டத்தட்ட 4 லிட்டிர்) ;
இன்று என் வீட்டின் கதவை 10 பசங்க தட்டி தண்ணீர் கேட்டால் என் மனைவி தருவாளா? சந்தேகம்தான்?
என்மனைவியிடம் கேட்டேன் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் " நான் கதவையே திறக்க மாட்டேன்"!!!!!!!
இன்று jio SIM ல் இலவசமாக பேசிக்கொண்டு 10 ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு இருக்கும் நான் ,
ஒரு காலத்தில் 1ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு 6ரூபாய்க்கு போன் பேசி இருக்கிறேன்( ஞாயிற்குகிழமை ஆப் charage என்று வரிசையில் நின்று இருக்கிறேன்)!!!!
இன்று 64gb memory card ல்10 படங்களை வைத்து இருக்கும் நான் ஒரு காலத்தில் யாருடைய வீட்டில்லாவது டெக்கில் புது படம் போடுகிறார்கள் என்றால் பிச்சைக்காரனை போல வாசலில் தவம் கிடந்து இருக்கிறேன்; "!!!
இன்று
ஒரு லிட்டர் gold winner oil வாங்க ஓடும் நான் ஒரு காலத்தில் 100 milli எண்ணெய் வாங்க டானிக் பாட்டிலில் சரடை கட்டி கொண்டு ஓடி இருக்கிறேன்
(கடகார அண்ணாச்சி திரும்பி எண்ணை ஊத்துற கேப்புல முன்னாடி இருக்கும் கடலபுண்ணாக்க எடுத்து லபக்குன்னு வாயில் போடுவது தனி சுகம்)
boost is secert of my energy என்று விளம்பரத்தில் சொன்ன கபில்தேவை பார்த்து வாழ்க்கையில் ஒரு முறையாவது boostஐ வாங்கி குடித்து விடவேண்டும் என்று நினைத்தேன்;
இன்று பூஸ்ட் ,ஹார்லிக்ஸ், காம்பிளான் , பீடியா சுயர் ,என்று எதை வாங்கி குடுத்தாலும் taste சரியில்லை என்று பிள்ளைகள் சாப்பிடாமல் குப்பைக்கு போகிறது;
*நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன்;* *இப்ப இருக்கிற புள்ளைங்க சாப்படுறதுக்கு கஷ்டப்படுதுங்க!!*

முருங்கை கஞ்சி.

இரண்டு மூன்று கட்டு முருங்கை கீரை இலை களை கழுவி எடுத்து மிக்ஸியில் அரைத்து சாறாக்கி, அந்த சாறு இரண்டு லிட்டர் சாறு இருக்கிறது என்றால்,
அதில் ஒரு கிலோ பச்சரிசியை அதில் சேர்த்து,
ஐம்பது கிராம் மிளகையும் சேர்த்து கூடவே இருநூறு கிராம் பாசிபருப்பு சேர்த்து, சிறிதுசுக்கு மற்றும்
ஏலக்காய் சேர்த்து வெயிலில்காயவைக்க
வேண்டும்.
அரிசியில் முருங்கை சாறு நன்றாக ஊறிவிடும்.
அதனை மறுபடியும் நன்றாக ஈரப்பதம் போகும் வரை காயவைத்து, சிறு குருணையாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனை ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி, தினந் தோறும் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முருங்கை அரிசி குருணையை கஞ்சியாக செய்து சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கவும்.
இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம்.
அல்லது காலையில் மட்டும் குடிக்கலாம்.
இந்த கஞ்சிமுதுகெலும்பை வலுப்படுத்துகிறது.L4, L5 இன்று நிறைய நபர் களுக்குத் தேய்ந்து போய் மிகவும்கஷ்டப்படுகிறார்கள்பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது.
இருசக்கர வாகனங்கள் அதிகம்பயன்படுத்து
வோர்க்கு L4, L5 தேய்ந்து போகிறது. அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால் உட்கார முடியாத நிலை , முதுகு வலி, இடுப்புவலி உண்டாகும்.
அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது, L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில்இருக்கக் கூடிய disc prolapse ஆவது
இவை அனைத்துக்குமே ஒரு முழுமையான மருந்து
முருங்கைக்கீரைகஞ்சி
அதிக இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து கொண்டுள்ள இந்த
முருங்கைக்கீரை
இவ்வாறு சாப்பிட்டு வந்தால்,உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும் இடுப்பு வலி, முதுகு வலி குணமாகிவிடும்.

பணம் சேர, கடன் தீர, பரிகாரங்கள்.



ஒவ்வொரு வெள்ளியும் காலை குளித்து பூஜைகள் செய்து மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு கல் உப்பு ஒவ்வொரு வாரமும் வாங்கி வர வீட்டில் மஹாலக்ஷ்மி வரவிற்கு குறைவே இருக்காது.
வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை (திரிதியை – மகாலட்சுமி) அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்னை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம்.
நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.
காலை வேளையில் சிறிது சர்க்கரை எடுத்து வீட்டு வாசல் வெளியே தூவி வரவும். இது சிறு பூச்சிகள் மற்றும் எறும்புகள் உன்ன உணவாகும். இவைகள் உண்ண உண்ண உங்கள் கஷ்டங்கள் சிறிது சிறிதாக விலகுவது உங்கள் கண் கூடாக தெரியும். இது எளிய மிக மிக மிக சக்தி வாய்ந்த பரிகாரம்.
எவ்வளவு பெரிய கடன் சுமையால் பாதிக்க பட்டிருந்தாலும் காஞ்சிபுரத்தில் அமர்ந்து அருள் பாலித்துவரும் காமாட்ஷி அம்மனை, ஒரு வளர்பிறை சித்திரை நட்சத்திரத்தில் பட்டு புடவை சாற்றி வழிபடுவோர்க்கு, நிச்சயம் கடன் சுமையில் இருந்து மீட்டு சகல கமுடன் மன நிறைவான வாழ்வினை தருவாள் என்பது கண்கூடாக கண்ட உண்மை.
தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால் வாங்கி கொடுக்கவும்.
தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவும்.

ஆரோக்கியம் நிறைந்த பூண்டு சீரகக் குழம்பு.


தேவையான பொருட்கள் :

சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்
புளித்தண்ணீர்- ஒரு எலுமிச்சை அளவு
பெரிய வெங்காயம் - 1
பூண்டு -  15 பல்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
வெல்லம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

பூண்டு சீரகக் குழம்பு

செய்முறை:

வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் விடாமல் சீரகத்தை வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.

புளியை ஒரு கப் நீரில் 10 நிமிடம் ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து வதக்குங்கள்.

அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டுப்பல்லைச் சேர்த்து 3 நிமிடம் வதக்குங்கள்.

வெங்காயம் சற்று வதங்கியதும் சாம்பார் பொடி மற்றும் மஞ்சள்தூளைச் சேர்த்து மீண்டும் வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடுங்கள்.

பச்சை வாசனை போனதும் பொடித்த சீரகப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.

நன்கு கொதித்ததும் அடுப்பை மிதமாக்கி வெல்லத்தைச் சேர்த்து 5 முதல் 8 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கிப் பரிமாறுங்கள்.

ஒவ்வொரு முறையும் சீரகத்தை வறுத்து அரைத்து உபயோகப்படுத்தி, இந்தக் குழம்பை வைத்தால் 2 முதல் 3 நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.
சூப்பரான பூண்டு சீரகக் குழம்பு ரெடி.

வருகிற 5-ந்தேதி கும்பாபிஷேகம்: வெண்ணாற்றில் இருந்து நாளை புனிதநீர் எடுத்து வரப்படுகிறது

வருகிற 5-ந்தேதி கும்பாபிஷேகம்: வெண்ணாற்றில் இருந்து நாளை புனிதநீர் எடுத்து வரப்படுகிறது
பெத்தண்ணன் கலையரங்கில் சாமிசிலைகள் அமைக்கப்பட்டு யாகசாலை தயார் நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.



















தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதற்காக முதல்கால யாகபூஜை வருகிற 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து 2-ந் தேதி காலை 8 மணிக்கு 2-ம் கால யாகபூஜையும், மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகபூஜையும், 3-ந் தேதி காலை 9 மணிக்கு 4-ம் கால யாகபூஜையும், மாலை 5 மணிக்கு 5-ம் கால யாகபூஜையும், 4-ந் தேதி காலை 8 மணிக்கு 6-ம் கால யாகபூஜையும், மாலை 5 மணிக்கு 7-ம் கால யாகபூஜையும் நடக்கிறது.

5-ந் தேதி காலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகபூஜை நடக்கிறது. தொடர்ந்து காலை 7 மணிக்கு மகா பூர்ணாஹுதீயும், யாத்ரா தானமும் நடக்கிறது. காலை 7.25 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம்புறப்பாடு நடக்கிறது. காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

யாகபூஜைக்காக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தஞ்சை பள்ளியக்கிரகாரம் வெண்ணாற்றில் இருந்து கலசத்தில் புனிதநீர் எடுக்கப்பட்டு தஞ்சபுரீஸ்வரர் கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து யானை மீது புனிதநீர் அடங்கிய கலசம் வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. இந்த ஊர்வலம் கரந்தை, கொடிமரத்துமூலை, கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, சோழன்சிலை வழியாக பெரியகோவிலை வந்தடைகிறது. ஊர்வலத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம் போன்றவை நடக்கிறது. ஓதுவார்களால் திருமுறை பாடப்படுகிறது.

பாகிஸ்தான் உடைகிறதா?

இந்தியா 🇮🇳 சுதந்திரம் அடைய ஒரு நாள் முன்பே பாகிஸ்தானின் சுதந்திரம் பெற்றது. ஆனால் பாகிஸ்தான் என்ற நாடே இந்தியா அல்லது இந்துக்களின் எதிர்ப்பை மையமாக வைத்து ஏற்படுத்தப்பட்ட ஒரு நாடு. தனக்கு என்ற ஒரு கொள்கையோ அல்லது முன்னெடுப்போ இல்லமல், அது இந்தியாவை எதிரியாக நினைத்து இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிராகவே அதன் vision, mission எல்லாம் இருந்தது. அதற்கு காரணம் காஷ்மீர் என்று சொல்லப்பட்டாலும், அதன் உருவாக்கமே இந்தியாவிற்கு எதிரானது.
இன்னும் எளிதாக சொல்லப்போனால் திமுக என்ற கட்சியை எதிர்க்க ஒரு கட்சியாக அதிமுக உருவாகியதுபோல. பாகிஸ்தான் நாடு முஸ்லிம்களுக்கு என பிரிக்கப்பட்டபோது அந்த நாட்டில் கிட்டத்தட்ட 36% இந்துக்கள் குடியிருந்தார்கள். (இங்கு இந்துக்கள் என்பது இந்தியாவில் தோன்றிய மதங்கள், அதன் வாழ்க்கைமுறை எல்லாமே இந்துக்கள் என்பர். அது ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்கா வரை உலகம் முழுவதும் இருந்தது. அந்த வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களை பின்னாளில் தோன்றிய மதங்களில் இருந்து வேறுபடுத்தவே அதற்கு இந்து என்று மேற்கத்தியர்கள் பெயரிட்டனர். மற்ற மதங்கள் மனிதரால் தோற்றுவிக்கப்பட்டது, இந்து என்பது தெய்வங்களால் தோன்றியது என்றும், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வாழ்க்கை உருமாறியது என்றும் சொல்வர்)
அப்படி பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு என்று தோற்றுபிக்கப்பட்டபோது அங்கிருந்து 13% இந்துக்கள் விரடப்பட்டு இந்தியாவில் குடியேறினர் அல்லது கொல்லப்பட்டனர். மீதி 23% இந்துக்கள் அங்கேயே தங்கிவிட்டனர். 23% ஆக இருந்த இந்துக்கள் பல கொடுமைகளால் மதம் மாற்றப்பட்டு, அல்லது கொல்லப்பட்டு இன்று வெறும் 1% மட்டுமே மீதி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு என்ற பாகிஸ்தான் சட்டத்தில் எந்த அடிப்படை உரிமையும் இல்லை. உதாரணமாக ஒரு ஒருவன் இந்து முறைப்படி கல்யாணம் செய்தால் அது செல்லாது. கல்யாணம் செல்லவேண்டும் எனில் முஸ்லிம் முறைப்படி அங்கு கல்யாணம் செய்தால் மட்டுமே அது சாத்தியப்படும்.
இப்படி பாகிஸ்தான் தனக்கு என ஒரு முஸ்லிம் விதிமுறையை உண்டுபண்ணி அருகில் இருந்த சிறு ராஜ்யங்களை தன்னோடு சேர்த்தது. இதில் மேற்கு பஞ்சாப் என்ற பகுதி சிந்து நதிகளால் வளம்பெற்ற பகுதி முக்கியமானது. அதை அடுத்து சிந்துநதியின் அரபிக்ககடல் முகப்பில் உள்ள கராச்சியை சுற்றிய பகுதி. இதில் பஞ்சாபியர்கள் தன்னிச்சையாக அரசிலும், அதன் ராணுவத்திலும் என்றும் கோலோச்சுகிறார்கள். அவர்கள் தனக்கென சட்டங்களை இயற்றியபோது மற்ற பகுதிகளுக்கு அடிப்படை உரிமையை கூட கொடுக்கவில்லை.
அதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதில் மேற்கில் ஈரானை ஒட்டியுள்ள பகுதிகள் பலுசிஸ்தான் என்ற ஒரு பெரிய பகுதி. அவர்களுக்கு எந்த நதியும் இல்லாததால் வறுமை என்பது அவர்களுக்கு என்றும் இருக்கும் வியாதி. ஆனால் கடுமையான உழைப்பாளிகள், அவர்கள் ஆளும் பஞ்சாபி பாகிஸ்தானியர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளனர். இந்த பலுசிஸ்தானின் ஒரு பகுதியை ஈரான் தன்னுடையது என்று இன்றும் சொந்தம் கொண்டாடுவதால், பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் பெரும் பகை. அது இல்லாமல் ஷியா முஸ்லிம்களுக்கும், பாகிஸ்தானின் சன்னி முஸ்லிம்களுக்கும் ஏழாம் பொருத்தம். இதனால் பலுசிஸ்தான் தனக்கு சுதந்திரம் கேட்டு போராடி வருகிறது. இது இந்தியாவின் ஆதரவையும் கோரிவருகிறது. இந்தியாவின் RAW, ஈரான் இவர்களுக்கு உதவுவதாக பாக் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டுகிறது.
அடுத்து பெஷாவர் எனும் ஆப்கனியர்கள் பகுதி என்று சொல்லப்படும் பகுதி. இதில் ஆஃப்கன், பாக் இருவரும் அதற்கு சொந்தம் கொண்டாட, பெஷாவர் மக்கள் தனி நாடு கோரி போராடுகிறார்கள். இவர்களுக்கும் இந்தியா உதவுகிறது.
அடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் கில்கித், ஸ்கர்ட் என்ற இரு பகுதிகள் இன்னும் தனி நாடாகவே உள்ளது. இதற்கு என தனியாக பிரதமரே உள்ளார். இந்த பகுதியை இந்தியா விரைவில் தன்னுடன் சேர்த்துவிடும், எனவே தற்போதைய பிரதமர், நான்தான் PoK கின் கடைசி பிரதமர் என வெளிப்படையாகவே பேசி வருகிறார். ஏனெனில் இந்திய படைகள் ஊடுறுவல் அதிகமாக உள்ளது, ஆனால் பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறது. இந்திய விமானப்படைகள் பாகிஸ்தானின் பகுதியிலேயே புகுந்து தாக்கியபோதும், அதனால் எதுவும் செய்ய முடியவில்லை.
அதுமட்டுமல்ல அதன் ரேடார்கள் மற்றும் பாதுகாப்பு அறன்களாக சொல்லப்படும் கருவிகள் பல வேலை செய்வதில்லை அல்லாது அது மிக பழைய டெக்னாலஜி. அதனால் அது பயணிகள் விமானத்தையும், போர் விமானத்தையும் பிரித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அதன் தரம் உள்ளது. இதே தரத்தில், அளவில் ஈரான் நாடும் இருந்ததால் அது பயணியர் விமானத்தை தெரியாமல் சுட்டு வீழ்த்தியது. அது நடக்காமல் இருக்கவே பாகிஸ்தான் தன் வான் எல்லையை மூடியது.
பாகிஸ்தானில் பஞ்சாபியரின் அடக்குமுறை என்பது அவர்கள் செல்வந்தர்கள், மற்றும் அதிக மக்கள் என்பதால் அந்த டாமினேசன் தொடர்கிறது. ஆனால் பாகிஸ்தான் தனக்கென ஸ்திரமான கொள்கையோ, அரசோ இல்லாமல், ராணுவத்தின் மூலமே கட்டுப்படுத்தப்பட்டது. அது தவறான வழிகளான இந்திய ரூபாய் நோட்டுக்களை கள்ளத்தனமாக அடித்தல், போதை மருந்து, ஆயுதம் கடத்தல், தீவிரவாதிகளை வளர்க்க முஸ்லீம் நாடுகள் கொடுத்த பணம், ஆஃப்கன் போருக்காக அமெரிக்கா கொடுத்த பணம் எல்லாமே நேரடியாக இராணுவம் பெற்றதால் அது தன்னிச்சையாக பாகிஸ்தானை ஆண்டது. அதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் எந்த பெரிய கட்டுப்பாடோ, சுதந்திரமோ இல்லை.
அப்படி தவறான வழிகளில் சம்பாதித்த பாகிஸ்தான், இந்தியாவின் Demonetization க்கு பின் இந்திய ரூபாய்களை அச்சடிக்கும் வாய்ப்பு பரிபோனதிலும் அதற்கு மிகப்பெரிய இழப்பு.
அதன் பொருளாதாரம் கடனுக்கு மேல் கடன் வாங்கியதால், அதன் செலவுகளில் பெரும்பகுதி வட்டி கட்டுவதிலேயே போய்விடுகிறது.
2008 ல் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 1.7% ஆகவும், அதன் பணவீக்கம் 16% ஆகவும் இருந்தது. இது கடந்த 12 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி 3% ஒட்டியும், பணவீக்கம் 12% மேலேயும் உள்ளது. அப்படி இருந்தும் அந்த அரசு தப்பி பிழைத்ததற்கு காரணம் தவறான வழிகளில illegal ஆக சம்பாதித்தால் மட்டுமே தப்பியது. அது இன்று இந்தியாவின் demonitization போன்ற காய் நகர்த்தலால் தனிமை படுத்தப்பட்டு இன்று தன் அரசு ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்கவே இன்று பணம் இல்லாமல் தவிக்கிறது.
அது இதற்கு முன்பு அமெரிக்காவின் ஆஃப்கன் தீவிர வாத எதிர்ப்பு போருக்கு என்று அமெரிக்காவிடம் இருந்து பெற்றுவந்த உதவியும் கடனும், கிட்டத்தட்ட நின்றே விட்டது. சவூதி அரேபியா போன்ற நாடுகள் முஸ்லிம் மதத்தை பரப்பவும், காஷ்மீரை காக்கவும் தீவிரவாதத்திற்கு என்று கொடுத்த பணம் என்பது பெரியதாக இருந்தது, அதுவும் இந்தியாவின் தலையிட்டாலும், இந்தியா இப்போது காஷ்மீரை தன்னோடு இணைத்து கொண்டதால அதுவும் குறைந்துவிட்டது.
இவற்றை தவிர அதன் முக்கிய வருமானம் என்பது விவசாயத்தில் இருந்தே 26% வருமானம் வருகிறது. அதற்கு இந்தியாவின் இமயமலையில் தோன்றும் 5 நதிகளில் இருந்து வரும் நீரே அதற்கு அடிப்படை ஆதாரன். அதில் பாகிஸ்தானுக்கு 60% என்பதும் இந்தியாவிற்கு 40% என்பதும் ஒத்துக்கொண்ட தண்ணீர் பாகப்பிரிவினை. இந்தியா அதில் தன் பகுதியை இதுவரை அந்த 40% த்தை பயன்படுத்தாததால் முழு நீரையும் பாகிஸ்தானே பயன்படுத்தியது. தற்போதைய பயன்பாட்டிலேயே அதற்கு சிந்து என்று சொல்லும் கராச்சிக்கு நீர் கிடைப்பதில்லை. இப்போது இந்திய அரசு தனது 40% சிந்து நீரை பயன்படுத்த போகிறோம் என்று அணைகளை கட்டிவருகிறது. அப்போது பாகிஸ்தானின் விவசாயமும் பெருத்த நஷ்டத்தில் முடிவடையும்.
அதற்கு மேல் இந்திய ராணுவத்துடன் போட்டிபோட்டு அதன் ஆர்மிக்காக செய்துவந்த செல்வுகள் அதற்கு தீராத தலைவலி. தான் வாங்கிய அந்த போர் தளவாடங்களை பராமரிக்கவும், அதற்கு தளவாடங்கள் உபரி பொருள் வாங்கவும் கூட நிதி இல்லை. அப்படி இருக்க அதன் நலிவுற்ற பொருளாதாரத்தை நம்பி உதவிய நாடுகள் Bankrupt ஆகப்போகும் நிலையில் உதவிகளை குறைத்துவிட்டது, அல்லது நிறுத்திவிட்டது. அதற்கு மேல் உதபவுபவர்களிடம், நிறுத்தசொல்லி இந்தியாவும் வற்புறுத்துகிறது. ஆதரிப்பதை நிறுத்தாவிட்டால் இந்தியா அந்த நாடுகளிடன் தன் வர்த்தகத்தை குறைத்துவிட்டது. உதாரணம் மலேசிய பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவு கொடுத்ததால் பாமாயில் இருக்குமதியை குறைத்ததால் அதன் பொருளாதாரத்தில் பெரும் அடி.
அதை தவிர்த்து இந்தியாவின் பலமான வெளியுறவு கொள்கை உலக நாடுகள் அதன் பின்னே நிற்பதால், அடிப்படை வசதி, உணவு இல்லாத பாகிஸ்தான் இன்னும் சில மாதங்களுக்குள் பெரும் உள்நாட்டு கலகங்கள் தோன்றினால், இதுவரை காத்துக்கொண்டு இருக்கின்ற பலுசிஸ்தான், பெஷாவர் தன போராட்டத்தை மேலும் அதிகரிக்கும். அதற்கு இந்தியா, ஈரான், ஆஃப்கன் எல்லாம் உதவுகிறது. அப்போது பாகிஸ்தான் இந்திய எல்லை ஓரம் நிறுத்தி இருக்கும் அதன் படைகளை வடமேக்கில் நகர்த்தியாக வேண்டும். அப்போது இந்தியா PoK என்றபகுதியை தன்னுடன் எளிதில் சேர்த்துவிட காத்திருக்கிறது. இப்படி பாகிஸ்தான் இதன் மூலம் சிறு நாடுகளாக உடையும்.
இதற்கு மூலகாரணம் அதன் இந்தியாவிற்கு எதிரான தீய எண்ணங்கள் மட்டுமல்ல, இன்று உலகில் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு எதிராக அணி திரளும் நாடுகளும் அதன் எதிரியாக மாறியதும் முக்கியமான காரணம். அதன் விளைவுதான் காஷ்மீரை இந்தியா 370 விலக்கி சேர்த்துக்கொண்டபோது ஒவ்வொரு நாடுகளிடமும் கெஞ்சிய போது யாருமே செவிகொடுத்துக்கூட கேட்கவில்லை.
மேலும் அதன் மோசமான பொருளாதார சிதைவுகளை ஊக்குவிக்க இந்தியா சிறு சிறு போர் உரசல்களை எல்லையில் அடிக்கடி செய்யும்போது அது தன் ராணுவத்தை இங்கும் அங்கும் நகர்ததும்போது அது மேலும் பெரும் செலவினங்களை கொடுத்து அதன் ராணுவத்தின் பொருளாதாரத்தை சீரழிக்கும். இதுவே இந்தியாவின் வெற்றிக்கும், பாகிஸ்தான் பலுசிஸ்தான், பெஷாவர், சிந்து என்று சிறு சிறு நாடுகளாக உடைவதற்கும் காரணமாகும்.
சீனா, அரேபிய நாடுகள் இதை அனுமதிக்குமா?
சீனா, PoK Billions of Dollars முதலீடு செய்துள்ளது, இந்தியா அதனை தன்னுடன் சேர்த்தபின்னும் அதன் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க ஒத்துக்கொண்டால் சீனா எதற்காக Bankrupt ஆகப்போகும் பாகிஸ்தானின் பக்கம் சாயமுடியாமல் இந்தியா பக்கமே சாயவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் 5G முதலீடுகள் முதல் பெருமளவில் முதலீடுகளை செய்தபின், அது தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது.
அதை தவிர QUAD என்ற நான்கு நாடுகள் (அமெரிக்கா, ஆஸ்திரேலிய, ஜப்பான், இந்தியா) கூட்டு நாடுகளும், தென் சீன கடலில் இந்தியாவின் ஆளுமையும் சீனாவை அதன் குரல்வலையில் கைவத்த நிலையில் அது இன்று தடுமாறுகிறது. அதன் முக்கிய சமீப கால மாற்றமான அருணாசல பிரதேசதின் உரிமைமீது கொண்ட மாற்றம்.
அனுமானமும் யூகங்களும் சரியானால், இந்தியாவில் அடுத்த தேர்தலுக்கு (2024) முன்பு PoK இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்கும். பாகிஸ்தானும் சிறு நாடுகளாக துண்டாடப்பட்டுவிடும்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்! பாகிஸ்தான் தான் 70 ஆண்டுகளாக விதைத்த வினையினை அறுவடை செய்யும் நேரமிது!
31-01-2020
🙏🙏🐶 🙏🙏

No photo description available.

தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ் சோதனை.

தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ் சோதனை
செந்தில் பாலாஜி


















முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக டிடிவி தினகரன் அணிக்கு தாவி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அக்கட்சியின் மாநில, மாவட்ட பொறுப்புகளில் இருந்த அவர், டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் இல்லத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று சோதனை நடத்தினர். 

கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது வீட்டில் செந்தில் பாலாஜி இல்லை. அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் பலர் அங்கு திரண்டனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டிலும் சோதனை நடந்தது. 

மு.க.ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராகபோது, வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் உள்ளது. இது தொடர்பாக, இப்போது போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

செந்தில் பாலாஜி அ.தி.மு.க.வில் இருந்தபோது 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. 

அதிசய நட்சத்திரம் ஸ்வாதி!

27 நட்சத்திரங்களுல் 15வதாக இடம் பெறும் ஸ்வாதி நட்சத்திரம் ஒரு அதிசய நட்சத்திரம். இது துலா ராசியில் உள்ளது. பெரிய பெரிய மகான்களுடனும் ஆசார்யர்களுடனும் தொடர்புடைய இந்த நட்சத்திரம் வால்மீகி முனிவரால் அதிசயமான விதத்தில் குறிப்பிடப்படுகிறது.
சப்த ரிஷி மண்டலத்தின் தென் கிழக்கில் ஒரு அபூர்வ நட்சத்திரத் தொகுதி உள்ளது.இதை பூடஸ் என்று மேலை நாட்டு வானியல் குறிப்பிடுகிறது. இந்த ஆல்பா பூடஸ் செக்கச் சிவந்து ஜொலிக்கும் ஒரு நட்சத்திரம். இதையே மேலை நாட்டின்ர் ஆர்க்ட்ரஸ் எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். இதையே நாம் ஸ்வாதி என அழைக்கிறோம்! குரங்கு போன்ற வடிவமுள்ளதாக இதை நம் முன்னோர் கண்டுள்ளனர்!
வானில் ஸ்வாதி நட்சத்திரம் முன்னேறுவதைப் போல நான் செல்வேன் என்று ஹனுமான் வால்மீகி ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் 67ம் ஸர்க்கம் 20ம் சுலோகத்தில் சொல்வது (பவிஷ்யதி ஹிமே: யதா ஸ்வாதே: பந்தா இவாம்பரே) பொருள் பொதிந்த வார்த்தை. வாயு புத்திரனான ஹனுமான் குரங்காக அவதரித்ததை அனைத்து தேச மக்களும் அறிந்திருக்கின்றனரோ என்று எண்ண வைக்கும் விதத்தில் ஆர்க்ட்ரஸ் நட்சத்திரத் தொகுதியை பண்டைய எகிப்து நாட்டினர் குரங்கு போன்றது என்றும் சீனர்கள் கன்னியா ராசி அருகில் உள்ள குரங்கு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்வாதிக்கும் வாயுவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது! ஸ்வாதியின் அதி தேவதை வாயு! வேதம் ஸ்வாதி நட்சத்ரம் வாயு தேவதா எனக் குறிப்பிடுகிறது. புராண இதிஹாஸங்களில் மருத் தேவதைகளே ஸ்வாதியாகக் குறிப்பிடப்படுகிறது. சாந்தி கல்பம் என்னும் நூல் ஸ்வாதியை எப்பொழுதும் வடக்கு முகமாகவே நகர்வது என விவரிக்கிறது.
அற்புதமாக வானில் பிரகாசிக்கும் ஸ்வாதி வான அதிசயம் தான்! கோரல் சிவப்பு, குங்குமச் சிவப்பு ஸ்கார்லெட் சிவப்பு என்றெல்லாம் வர்ணிக்கப்படும் மாணிக்கமே சுவாதி. ஆகவே தான் இது வான மாணிக்கம் என்று போற்றப்படுகிறது. அராபியர்கள் இதை ‘சுவர்க்கத்தின் காவலன்’ என வர்ணிக்கின்றனர்.ஸ்வாதி என்றால் வாள் என்று பொருள். வாயு தேவன் கையில் வாள் சித்தரிக்கப்படுகிறது. ‘நிஷ்டா’ அல்லது ‘நிஷ்த்யம்’ என்னும் இருளை சுவாதியின் ஒளிக் கிரணங்கள் அகற்றி விடுமாம்! அதாவது தமஸ் என்னும் இருளை ஜோதி என்னும் ஒளி நீக்கி விடும்.
(தமஸோ மா ஜ்யோதிர் கமய – இருளிலிருந்து ஒளிக்கு எங்களை இட்டுச் செல் என்பது வேத பிரார்த்தனை)

வாஸ்துப்படி பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கவேண்டும்....?


பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் தேக்கு மரம் என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தனமை நம்மிடம் பனத்தைத் தங்கிடச் செய்யும்
வாஸ்துபடி பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குச் சுவர் ஜன்னலுடன் சேர்ந்து இருக்க வேண்டும். கதவு சிறிது மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும். காற்றோட்டமும் சூரியவெளிச்சமும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், ஜன்னல்கள் திறந்திருப்பது நல்லது.
பூச்சித்தொல்லை கொசுக்கள் உள்ளே வருமென்றால், நைலான் வலை போட்டுக்கொள்ளலாம். வீட்டில் பணம் சேருவதற்கு வடக்கு திசையும் ஜன்னலும் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தென் மேற்கு திசை முக்கியம். இங்குதான் நாம் பணத்தை வைக்க வேண்டும். வடமேற்கு மூலையில் பணத்தை வைக்கக் கூடாது.
பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும். பீரோவைத் திறக்கும்போது நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும். பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும்.
பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள். உங்களுக்கு வருகிற பணத்தை சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பணம் பல மடங்காகப் பெருகும்
பணத்தை வைக்கும்போது சில்லறையாக வைக்காதீர்கள். நிறை நிறையோடு சேரும் குறை குறையோடு சேரும் என்பதால், 2000 ரூபாய் நோட்டாக வையுங்கள்.
பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது பணத்தை மடித்துக் கொடுக்க வேண்டும். மடிப்பு அவர்களின் பக்கமும் திறப்பு நம்முடைய பக்கமும் இருக்கும்படி கொடுங்கள். பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.(பீரோவில் பச்சை கற்பூரம் போட்டு வைக்கலாம்

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...