Tuesday, October 31, 2023

நடிகர் திலகத்துடன் ஒரு சுவாரஸ்யம் : ஒரு நிருபரின் டைரி.

 ஒரு செய்தி நிறுவன குழுமத்திற்காக டில்லியில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம்.தேசிய விருது வாங்க வரும் தமிழ் திரைப்பட வி.ஐ.பி.,க்களை பேட்டி எடுப்பது வழக்கம். பல திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குனர்கள் என பேட்டி எடுத்தவர்களின் பட்டியல் நீளம்.நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, 'தாதா சாகிப் பால்கே விருது' அறிவிக்கப்பட்டது.

திரைத் துறையின் மிகப் பெரிய விருது இது. நடிகர் திலகம் என போற்றப்பட்ட இவருக்கு சிறந்த நடிகர் விருதை வழங்கி பெருமைப்பட்டுக் கொள்ளாத அரசு, கடைசியாக தாதா சாகிப் பால்கே விருதிற்கு சிவாஜி கணேசனைத் தேர்ந்தெடுத்தது.ஜனாதிபதி கையால் விருது பெறுவதற்காக டில்லி வந்திருந்தார் நடிகர் திலகம். அரசு தரப்பில் விருது வாங்குபவர்கள் அனைவரும் நட்சத்திர ஹோட்டலான 'அசோக்'கில்தான் தங்குவார்கள். சிவாஜியும் அங்கு தான் தங்கியிருந்தார்.
நான் பணியாற்றிய செய்தி நிறுவனத்துக்காக சிவாஜியை பேட்டி எடுக்க தீர்மானித்தேன்.பேட்டி வேண்டாம்அசோக் ஹோட்டலுக்கு போன் செய்து சிவாஜியின் அறைக்கு கனெக்ட் செய்ய சொன்னேன்.ரிங் போய்க்கொண்டிருந்தது. யாரும் அறையில் இல்லையா? இவ்வளவு நேரம் யாரும் போனை எடுக்கவேயில்லையே?ஒரு வழியாக ரீசிவர் எடுக்கப்பட்டது. சிவாஜியின் சிம்மக் குரல் கேட்கும் என நினைத்த எனக்கு ஏமாற்றம்
.'யெஸ்''வணக்கம். சிவாஜி சாரோட பேச முடியுமா''நான் பிரபு. அவரோட சன் பேசறேன். நீங்க யாரு?'என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.“பேட்டி எடுக்கனும்”'அப்பா இப்ப ரெஸ்ட்ல இருக்காங்க. சமீபத்திலதான் அவர் உடம்பு சரியில்லாம இருந்தார். இப்போ கொஞ்சம் பரவாயில்லை'பிரபுவின் குரலில் தயக்கம் தெரிந்தது.'ஓ. அப்படியா?... சாரோட பேட்டி எங்க இதழ்ல வரனும்னு எடிட்டர் விரும்புகிறார்.
அத்தோட இந்த பேட்டி பப்ளிஷ் ஆனா எங்களுக்கு பெருமை''அப்பா அடிக்கடி எமோஷனல் ஆகி விடுகிறார். நீங்க ஏதாவது கேள்வி கேப்பீங்க. உடனே, அப்பா எமோஷனல் ஆனா பிரச்னை. பேட்டி வேண்டாமே'பிரபுவிடம் தாஜாநடிகர் திலகத்திடம் எப்படியாவது பேட்டி எடுத்துவிட வேண்டும் என மனதிற்குள் ஒரு ஆர்வம்.முதன் முதலாக நடிகர் திலகத்தை நான் திரையில் பார்த்தது தங்கமலை ரகசியம் படத்தில். அப்போது நான் மூன்றாவது நான்காவது அல்லது ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்ததாக நினைவு.என் பாட்டி, அம்மாவின் அம்மா- நடிகர் திலகத்தின் படம் ஒன்றைக் கூட விடமாட்டார். என்னையும் சில சமயம் படம் பார்க்க அழைத்துப் போவார்.
அப்படி பார்த்தது தான் சிவாஜியின் தங்கமலை ரகசியம்.வேலுாரில் கிருஷ்ணசாமி ஸ்கூலைத் தாண்டினால் மணி தியேட்டர் வரும். அது பெரிய தியேட்டர் கிடையாது. ஒரு டூரிங் டாக்கீஸ்... அதாவது டென்ட் கொட்டாய். இப்போது அதெல்லாம் போய்விட்டது.
மணலில் பாட்டி பக்கத்தில் உட்கார்ந்து நடிகர் திலகத்தை முதன் முதலாக திரையில் பார்த்தேன். இந்த நினைவெல்லாம் மன திரையில் ஓடியது.'நான் நிச்சயம் அப்படி கேள்வி கேட்க மாட்டேன். தயவு செய்து சாரிடம் கேளுங்கள்' என பிரபுவிடம் கெஞ்சினேன்.'ஒரு வேளை அப்படி அவர் எமோஷனல் ஆனால் பேட்டியை நிறுத்திக் கொள்கிறேன்' என உறுதி மொழியும் அளித்தேன்.'சரி பார்க்கலாம். ஒரு மணி நேரம் கழித்து போன் பண்ணுங்க' என்றார் பிரபு.
பிரபுவின் வார்த்தைகள் நம்பிக்கை கொடுத்தாலும் பேட்டி கிடைக்குமா கிடைக்காதா என ஒரே டென்ஷன்.எப்போது ஒரு மணி நேரம் ஆகும் என அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.ஒரு வழியாக பிரபுவுக்கு போன் செய்தேன். பிரபு ரிசீவரை எடுத்தார். பேட்டி கிடைக்குமா? எனக்குள் ஒரு பரபரப்பு.'சார், உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன்''சரி, வாங்க... ஆனால் 20 நிமிடம்தான் உங்களுக்கு. நீங்க கேள்வி கேட்டு அப்பா எமோஷனல் ஆயிட்டாருன்னா…நீங்க பேட்டியை நிறுத்திக்க வேண்டியது தான்' என்றார் பிரபு.
அப்பாடா ஒரு வழியாக அனுமதி கிடைத்துவிட்டது…இது போதும்.'ரொம்ப தேங்கஸ் சார். எந்த பிரச்னையும் வராம பார்துக்கொள்கிறேன்' உறுதி மொழி அளித்தேன்.எமோஷனல் ஆன நடிகர் திலகம்ஒரு பொக்கேயுடன் உடனே அசோக் ஹோட்டலுக்கு போட்டோகிராபருடன் கிளம்பிச் சென்றேன். சிவாஜியின் அறைக்கு சென்றதும் பிரபு வரவேற்றார். சிறிது நேரம் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.இன்னொரு அறையைக் காட்டி, ' உள்ளே போங்க. அப்பா உங்களுக்காக காத்திகிட்டிருக்காரு' என்று சொன்ன பிரபு இன்னொரு விஷயத்தையும் சொன்னார்..'நான் சொன்னதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்… அப்பா எமோஷனல் ஆகக் கூடாது'பிரபுவும் உள்ளே வந்து ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டார்.
தலையாட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தேன். முதன் முறையாக நடிகர் திலகத்தை நேரடியாக பார்க்கப் போகிறேன்...வெள்ளை ஜிப்பா, வெள்ளை வேஷ்டி, நெற்றி யில் விபூதி பட்டை…வெண்மையான தாடிக்கு இடையே கறுப்பு மீசை.வணக்கம் சொன்னேன்.'வாங்க தம்பி' சிம்மக்குரலோன் வரவேற்றார். 'தம்பி எந்த ஊர்?' விசாரித்தார். விபரங்களைச் சொன்னேன்.'முதல்ல இந்த காபியை எடுத்துங்க' மேசையைக் கை காட்டினார். காபி சாப்பிட்ட பின் பேட்டி ஆரம்பித்தது.அவருடைய நாடக வாழ்க்கை, சினிமாவிற்கு வந்தது…வாய்ப்பு அளித்த பெருமாள் முதலியார் என பல விஷயங்களைப் பேசினார்.
'உங்களுக்கு இந்த விருது கிடைத்திருப்பது குறித்து சவுகார் ஜானகி ஒரு பேட்டில உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்காங்க' என்றேன்.'யாரு ஜானகியா?' ஒரு கணம் என்னைப் பார்த்தார். கண்களில் ஒளி தெரிந்தது. திடீரென எழுந்து நின்றார்.என்னாச்சு இவருக்கு? இந்த விஷயத்தை சொல்லி மாட்டிக் கொண்டுவிட்டோமா..'ஜானகியா சொல்லிச்சு' கேட்ட படியே ஜன்னல் ஓரம் சென்று நின்றார். ஜன்னல் கம்பிகளைப் பிடித்தவாறு வெளியே வெறித்துப் பார்த்தார். இதுதான் சமயம் என போட்டோகிராபர் க்ளிக் செய்து தள்ளினார். (சிவாஜி இப்படி நிற்பது எங்கள் இதழில் அட்டைப் படமாக வந்தது)பிரபு என்னை கேள்விக்குறியோடு நோக்கினார்.அவ்வளவு தான் பேட்டி போலிருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.
'அப்பா என்னாச்சு' என பிரபு, நடிகர்திலகத்தை கேட்டார்.'ஒண்ணுமில்லே… ஜானகி நினைப்பு வந்தது. மனசு அப்படியே அந்த காலத்துக்கு போயிடுச்சி' சிவாஜியின் கண்கள் கலங்கியிருந்தன.நானும் எழுந்து கொண்டேன். பின் ஜன்னலை விட்டு மறுபடியும் சோபாவில் அமர்ந்து கொண்டார். பேட்டி தொடர்ந்தது.எல்லாம் முடிந்து கிளம்பும் போது …'தம்பி சென்னைக்கு வந்தா அவசியம் வீட்டுக்கு வாங்க. தஞ்சாவூர் காபி குடிக்கலாம்' என அன்போடு சொன்னார்.ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
May be an image of 1 person and text
All reactions

நல்ல பெயர் வாங்கினாள்...

 மிகுந்த எதிர்ப்புடன் பல போராட்டங்களுக்கு இடையே தான் அருண் அவன் அழகு மனைவி சத்யாவை திருமணம் செய்து கொண்டான்...

அருணுக்கு காதலித்து ரொம்ப நாள் கழித்து தான் தெரியும் சத்யா சைவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று...
"உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேங்க "என்று எப்போதும் உருகினாள் சத்யா.. இப்படிப் பட்ட மனைவி வாய்த்ததை நினைத்து அருணுக்கு ஒரே பெருமை...
சத்யா மணமுடித்து வந்ததும் மாமியாரிடம் "அத்தை இனிமேல் சமையலை நான் பார்த்துக் கொள்கிறேன்.. இனிமேல் நீங்க டிவி பார்த்துக்கிட்டு ரெஸ்ட் எடுங்க" என்று மாமியார் மோகனத்திடமும் நல்ல பெயர் வாங்கினாள்...
அருணும் அவனது அம்மாவும் "இதுவரை இந்த மாதிரி எல்லாம் சாப்பிட்டதே இல்லைமா" என்று சத்யா சமைத்த கிழங்குகள் வறுவல் பருப்பு உசிலி வத்தக்குழம்பு பாயச வகைகள் என்று அசத்தலாக இருந்தன...
ஞாயிற்றுக்கிழமைகளில் அடுத்த தெருவில் வசிக்கும் அருணின் அக்கா வீட்டிற்கு புது மணமக்கள் விருந்திற்கு போனார்கள்.
சத்யா போன இடத்திலும் "எனக்கு ரசம் தயிர் ஊறுகாய் போதும் க்கா.. எனக்காக தனியாக சைவம் சமைக்க வேண்டாம். நீங்க எல்லாரும் நான்வெஜ் சாப்பிடுங்க"என்று நாத்தனாரிடமும் நல்ல பெயர் வாங்கினாள்...
அருணுக்கு ஒரே பெருமை..." என் காதல் மனைவி எப்படி அட்ஜஸ்ட் பண்ணி போகிறாள்.. பார்த்தியா"என்று அக்காவைப் பார்த்து கேட்டே விட்டான்.."ஆமாடா சத்யா ரொம்ப நல்ல பெண் தான்... எல்லாருக்கும் பிடித்த மாதிரி நடந்து கொள்கிறாள்"என்று அவன் அக்காவும் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை வந்தது... "வாரம் பூராவும் தான் சைவம் சாப்பிட்டியே.. இன்னிக்கு என்ன டா வாங்கி வரப் போற "என்று மகன் அருணைப் பார்த்து கேட்டாள் சத்யாவின் மாமியார்..
அப்போது "மீன்..ஏறா..மீன்"என்று வழக்கமாக மீன் கொண்டு வருபவர் அவர்கள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினார்..
"சங்கரா மீன் வாங்கி குழம்பு வைத்து விட்டு கொஞ்சம் வறுவலும் எறா வாங்கி தொக்கும் செய்து விட்டால்... அப்படியே அக்காவிடம் ஒரு எட்டு கொஞ்சம் போய் குடுத்து விட்டு வந்து விடு "என்று சத்யா மாமியார் அருணிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்...
அருண் அம்மாவின் குரலைக் கேட்டு வாசலுக்கு வந்தவன் அதே வேகத்தில் உள்ளே போய் "சத்யா அம்மா மீனும் ஏறாவும் வாங்க சொன்னாங்க..வச்சிடுவேல்ல" என்று எதுவுமே யோசிக்காமல் கேட்டான்...
சத்யா தன் அன்புக்கணவன் ஆசை ஆசையாக கேட்கிறான்... என்று உடனே "மீன் குழம்பு தானே செய்து விடுறேன் ங்க"என்று ஒப்புக் கொண்டாள்...
அருணும் மீன் விற்பவரிடம்"என் மனைவி சுத்த சைவம்.. மீன் ஆயத் தெரியாது.. நீங்க தான் ஆய்ந்து தரணும் "என்று கேட்க அவரோ"மற்ற நாள் னா பரவாயில்லை தம்பி... நான் இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை..நாலு தெரு போகணும் நிறைய மீன் இருக்குப்பா "என்று மீனுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு அடுத்த தெருவிற்குப் பறந்து விட்டார்...
அருண் வேறு வழி இல்லாமல் "அம்மா சத்யாவுக்கு.."என்று ஆரம்பிக்கும் போதே " என்ன அவ சுத்த சைவம்... அதானே சொல்லப் போற...குடு குடு மீனையும் எறாவையும்...நானே ஆய்ஞ்சு தரேன்" என்று சத்யா மாமியார் மோகனம் சலிப்புடன் வாங்கி கொண்டு போனார்...
மீனையும் எறாவையும் மாமியார் சுத்தம் செய்யும் போதே சத்யாவுக்கு அந்த வாசம் வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது...
அவள் கணவன் அருண் கேட்டதும் என்ன வத்தக்குழம்பு மாதிரி வைத்து அதில் வத்தலுக்குப் பதிலாக மீன் துண்டங்களைத் தூக்கிப் போட வேண்டியது தானே மீன் குழம்பு வைப்பது உருளைக்கிழங்கு காரக்கறி மசாலாவில் கிழங்குக்குப் பதிலாக எறாவைத் தூக்கிப் போட்டு விடலாம் அவ்வளவு தான் எறாத் தொக்கு என்று சர்வ சாதாரணமாக நினைத்து விட்டாள் சத்யா..
இப்போது மாமியாரும் முகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து ஆய்ந்து முடித்த மீன் பாத்திரங்களை சமையல் மேடையில் நங்கென்று வைத்து விட்டு போனதைப் பார்த்து சத்யாவுக்கு ஒரு மாதிரி இருந்தது...
இப்போது சமையலைப் பார்ப்போம் அப்புறமாக அத்தையை சமாதானப் படுத்தலாம் என்று குழம்புக்கு சின்ன வெங்காயத்தை நறுக்கி வாணலியை அடுப்பில் வைத்தாள்...
மீன் ஆய்ந்ததைப் பார்த்தால் சத்யாவுக்கு திரும்பவும் நன்றாக கழுவ வேண்டும் என்று தோணியது... கணவன் ரசித்து சாப்பிட போவதை கற்பனை செய்து கொண்டே மீனையும் எறாவையும் குழாயில் இன்னும் நன்றாக திருப்தியாகும் வரை அலசி ஒரு வழியாக மீன் குழம்பும் எறாத் தொக்கும் சமைத்து விட்டு ஒரு ரசம் தனக்காக உருளை ஃபிரை மட்டும் வைத்து கணவனைக் கூப்பிட்டு "ஏங்க.. எல்லாமே செய்து முடித்து விட்டேன்.. நீங்க உப்பு மட்டும் சரியாக இருக்கா என்று டேஸ்ட் பண்ணி சொல்லுங்க..பத்தலன்னா போடுறேன்"என்று கொஞ்சலாக சொன்னாள்..
அருணும் மீன் குழம்பைக் கரண்டியில் எடுத்துக் கையில் ஊற்றி ருசி பார்த்து "அய்யோ.. எங்க அம்மா அக்கா கூட இப்படி ஒரு மீன் குழம்பும் எறாத் தொக்கும் செய்தது இல்லை "என்று புது மனைவியைப் பாராட்டி சத்யாவை ஐஸ் மழையில் நனைய வைத்துக் கொண்டு இருந்தான்..
"ஏங்க.. சத்தமா புகழாதீங்க... அத்தை காதில் விழுந்தால் கோவித்துக் கொள்ளப் போறாங்க "என்று சத்யா அருணை ஆசையாகப் பார்த்துக் கொண்டே டேபிளில் சமைத்ததை எடுத்து வைத்து விட்டு டிவி பார்த்துக் கொண்டு இருந்த அவள் மாமியாரை "அத்தை பசியா இருப்பீங்க சாப்பிட வாங்க " என்று கூப்பிட்டாள்..
காலையில் மீன் ஆய்ந்த கடுப்பில் பேசாமல் இருந்த மோகனம் களைப்புடன் வந்த மருமகளைப் பார்த்ததும் பாவமாக தோண "இதோ வரேம்மா சத்யா"என்று அவள் தோளைப் பிடித்துக் கொண்டு சாப்பிட வந்து உட்கார்ந்தார்...
அருண் தட்டில் சுட சுட சாதத்தை வைத்து மீன் துண்டங்களைப் போட்டு மீன் குழம்பையும் ஊற்றி எறாத் தொக்கையும் சத்யா ஆசையாக சைட் பிளேட்டில் எடுத்து வைத்தாள் ...
ஒரு வாய் சாப்பாட்டை அள்ளி அருண் சாப்பிட்டதும் அவன் முகத்தையே சத்யா பார்த்துக் கொண்டு இருந்தாள்.. மீன் குழம்பு எப்படி இருக்கிறது என்று ஏதாவது சொல்வானா என்று... அருண் எதுவும் சொல்லாமல் சாப்பாட்டை மிகவும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்
சத்யாவின் மாமியார் மோகனம் "டேய் அருண் நீ சாப்பிட்டு விட்டு அக்காவுக்கு மீன் குழம்பு ஃபிரை எறாத் தொக்கு எல்லாம் கொண்டு போய் குடுத்து விட்டு வந்து விடு டா"என்று சொல்லி விட்டு சாப்பிட உட்கார்ந்தார்
சத்யா"நான் சமைத்த உடனே எல்லாமே டப்பாவில் போட்டு அக்காவுக்கு பேக் பண்ணி வைத்து விட்டேன் அத்தை"என்று மோகனத்திற்கு பரிமாற வந்தாள்...
"நானே போட்டுக்கறேன் மா..நீ அருணைக் கவனி"என்று சொல்லி விட்டு வெறும் குழம்பு மட்டும் ஊற்றி உருளைக்கிழங்கு ஃபிரை வைத்து சாப்பிட ஆரம்பித்தார்...
"என்ன அத்தை ஏன் எதுவுமே எடுத்து வைத்துக் கொள்ளவில்லை"என்று சத்யா பதறிப் போய்க் கேட்டாள்..."இல்லமா நீ பதறாத...வயசு ஆயிடுச்சு எண்ணெயில் பொரித்த பண்டங்கள் ஜீரணம் ஆகுவது இல்லை.. வீட்டில் நான்வெஜ் அருணுக்காகவும் அவன் அக்காவுக்கு குடுத்து விடுவதற்காக மட்டுமே செய்வது தான் மா "என்று மென்மையாக சத்யாவிடம் மோகனம் சொன்னார்...
அருண் சாப்பிட்டு முடித்ததும் அவன் அக்கா வீட்டுக்கு சத்யா பேக் பண்ணி வைத்த கூடையை எடுத்துக் கொண்டு பைக்கில் கிளம்பி விட்டான்..
சத்யாவின் மாமியாரும் "ரொம்ப நல்லா இருந்தது மா குழம்பு.. நாங்க கூட இவ்வளவு ருசியாக மீன் குழம்பு வைக்க மாட்டோம்... சரி நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு... நானும் கொஞ்ச நேரம் படுத்துக் கொள்கிறேன்"என்று தன் அறைக்குள் போய் விட்டார்...
மாமியார் சமையலைப் பாராட்டியதில் மனம் நிறைந்து சத்யா ஒரு தட்டில் சாதத்தைப் போட்டு ரசத்தை ஊற்றி உருளைக்கிழங்கு ஃபிரை எடுத்துப் போட்டுக் கொண்டு வாய் அருகே சாப்பாட்டை கொண்டு போனதும் உமட்டிக் கொண்டு வந்தது ...
சத்யாவால் ஒரு வாய் சாப்பாடு கூட சாப்பிடவே முடியவில்லை... தண்ணீர் கூட குடிக்க முடியாமல் கையை மூக்கருகே கொண்டு போகவே முடியவில்லை... அக்கா வீட்டுக்குப் போன கணவனும் அரட்டை அடித்து விட்டு வர நேரம் ஆகும் என்று தெரிந்ததால் சத்யா அவர்கள் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்து வேலை செய்த அசதியிலும் பசிக் களைப்பிலும் தூங்கி விட்டாள்...
அக்கா குழந்தைகளுடன் வாரத்திற்கு ஒரு நாள் தானே விளையாட முடிகிறது என்று அருணும் அவனது அக்கா வீட்டில் இருந்து சாயங்காலம் தான் வீட்டுக்கே வந்தான்... அருணின் அக்காவும் "சமையல் எல்லாமே அட்டகாசமா இருக்குடா தம்பி " என்று பாராட்டியதும் "எனக்காக அவ முதல் முறையாக சமைச்சாக்கா " என்று காலரைத் தூக்கி விடாத குறையாக அவனது மச்சான் முன் அருண் பெருமைப் பட்டுக் கொண்டான்...
சாயங்காலம் அருண் வீட்டிற்குள் நுழைந்த போது மோகனமும் அப்போது தான் தூங்கி எழுந்து அறையை விட்டு வெளியே வந்து காஃபி குடிக்க மருமகளைத் தேடினாள்...
"என்னடா அருண் இன்னமுமா உன் மனைவி தூங்குறா" என்று கேட்டுக் கொண்டே சமையலறைக்குள் சென்று சாதம் வைத்த பாத்திரத்தை திறந்து பார்த்தார்.. அவர்கள் இருவரும் சாப்பிட்டது போக மீத சாதம் அப்படியே இருந்தது...
"அருண், சத்யா மதியம் சாப்பிடலயாப்பா "என்று மோகனம் கேட்டதும் தான் "தெரியலம்மா .. நானும் இப்ப தான் வந்தேன் "என்ற அருணுக்கு சத்யா மதியம் சாப்பிடாததே தெரிந்தது...
கணவனின் குரல் கேட்டதும் தூக்கத்தில் இருந்து எழுந்து கொண்ட சத்யா "அச்சோ அசதியில் இவ்வளவு நேரம் தூங்கி விட்டேன் போல...இதோ காஃபி போட்டுத் தர்றேன் அத்தை"என்று சத்யா வேகமாக சமையலறைக்குள் நுழையப் போனாள்...
"இரு சத்யா நீ காலையில இருந்து எதுவும் சாப்பிடவே இல்லையே ..நீ சாப்பிட்டுவிட்டு பிறகு காஃபி போடும்மா " என்று சொல்லி விட்டு மோகனம் உள்ளே சென்று விட்டார்..
"ஏன் சத்யா சாப்பிடல.. எனக்காக நீ காத்திருக்க வேண்டாம் என்று எத்தனை முறை சொல்வது" என்று அருண் கேட்டான்...
"இல்லைங்க... நான் அப்பறமா சாப்பிட்டுக்கிறேன்"என்ற சத்யாவை "இல்லை அம்மா சொன்னாங்கல்ல...நீ சாப்பிட்டு காஃபி போடு" என்று சத்யாவை சாப்பிட சொல்லி வற்புறுத்தவே வேறு வழி தெரியாமல் "இல்லங்க... என்னால் சாப்பிட முடியவில்லை" என்று சத்யா தயங்கி தயங்கி சொல்லி முடித்தாள்.
அசைவம் சமைக்க ஒத்துக் கொண்டாலும் சத்யவால் அசைவ சாப்பாட்டை சாப்பிடுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று நன்கு அறிந்தே இருந்தான் அருண்...
"ஏன் உனக்கு காய்கறிகள் எதுவும் செய்யவில்லையா"என்று அருண் கேட்டான்...
"அதில்லைங்க... எனக்கு ரசம் ஊறுகாய் கூட போதும்... ஆனாலும் அந்த... மீன் வாசம் கையை விட்டுப் போகவில்லை... என்னால் சாப்பிட முடியல... " என்று சத்யா மென்று முழுங்கிக் காரணத்தை சொன்னாள்... கணவன் முகம் வாடிப் போனதைக் கண்டதும் "அதனால் என்னங்க... அசைவம் சமைக்கும் அன்று மட்டும் ஒரு நாள் விரதம் என்று நினைத்துக் கொள்கிறேன்... எங்க வீட்டில் அம்மா பாட்டி கூட சேர்ந்து நானும் விரதம் இருந்து பழக்கம் தான் " என்று சத்யா அருணை சமாதானப் படுத்த முயன்றாள்...
இதைக் கேட்டதும் அருண் இன்னமும் நொறுங்கிப் போனான்.. இவ்வளவு நாளும் தன் மனைவி தனக்காக எது வேண்டுமானாலும் செய்வாள் என்று எல்லாரிடமும் பெருமையாக சொல்லி கொண்டு திரிந்தோமே... தான் தன் காதல் மனைவிக்கு என இதுவரை எதுவுமே செய்யவே இல்லையே என்று முதல் முறையாக உணர்ந்து மனதார வருந்தினான்...
உடனே பைக் எடுத்துக் கொண்டு கடைத்தெருவுக்குப் போய் சிப்ஸ் பாக்கெட்டுகள் வீட்டில் பூண்டு ஊறுகாய் தான் இருக்கும்...மனைவிக்குப் பிடித்த ஆவக்காய் ஊறுகாய் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து ஃபிரிட்ஜில் இருந்த தயிரை எடுத்து சாதத்தில் போட்டு கரண்டியால் மசித்து தட்டில் எடுத்து வைத்து ஒரு ஸ்பூன் போட்டு அருணே சத்யாவுக்கு அருகில் அமர்ந்து ஊட்டி விட்டுக் கொண்டே சொன்னான்...
"சத்யா நான் இத்தனை நாட்களும் நீ எனக்கு செய்வதையே பெருமையாக நினைத்துக் கொண்டு இருந்து விட்டேன்... உன்னைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க தோணவில்லை... என்னை மன்னித்து விடு..."என்று சொன்ன அருணின் வாயைப் பொத்தின சத்யாவின் கைவிரல்களை முத்தமிட்டுக்கொண்டே
"என்னால் உடனே வெஜிடேரியனாக மாற முடியாது.. மாற முடியாமல் கூட போகலாம்..நான் வளர்ந்த விதம் அப்படி...ஆனால் உன்னை இனிமேல் வீட்டில் நான்வெஜ் சமைக்கச் சொல்ல மாட்டேன்...இது உறுதி.."என்று கண்ணீருடன் தன் தோளில் சாய்ந்த மனைவியின் தலையை வருடிக் கொடுத்தான்...
மருமகள் சாப்பிட்டாளா என்று பார்க்க அறையை விட்டு வெளியே வந்த மோகனம் தன் மகன் சத்யாவுக்கு ஊட்டி விட்டுக் கொண்டு இருப்பதைப் பார்த்து விட்டு திருப்தியாக தலையை ஆட்டிக் கொண்டே தன் அறைக்குள் நுழையப் போனார்...
அருண்"அம்மா..நில்லுமா... உங்களுக்கு வேண்டும் என்றால் அக்கா வீட்டுக்குப் போய் நான்வெஜ் சாப்பிட்டுக் கொள்ள முடியுமா... இனிமேல் சத்யா நம் வீட்டில் நான்வெஜ் சமைக்க மாட்டா ம்மா"என்று சொன்னான்...
"ஏன்டா நான் என்ன நான்வெஜ் சமைத்தாலும் குழம்பு மட்டுமே ஊற்றி சாப்புடுறேன்... என் மருமகள் சத்யா வைக்கும் காய்கறிக் குருமா குழம்பே கறிக் குழம்பு மாதிரி தானே இருக்கிறது "என்று மோகனம் சிரித்ததும் அருணும் சத்யாவும் கூட சேர்ந்தே சிரித்தனர்...

செந்தில் பாலாஜி யின் நிலை?

 இன்று உச்சநீதிமன்றம் ஆம் ஆத்மி என்கிறகட்சி டில்லியில் நடத்தும் நாசகார ஆட்சியினர் மிகவும் எதிர்பார்த்த மணிஷ்சிசோதியாவின் பெயில் மனுவை நிராகரித்தது. காரணம் ₹380கோடிக்கு சாராய கொள்கை மாற்றத்தால் கிடைத்த லஞ்சப் பணத்தை அமலாக்கத்துறை அது எவ்வாறு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்பதை நிரூபித்துள்ளது.

அப்போது செந்தில் பாலாஜி யின் நிலை?
சுடலை யின் நிலை?
அதற்கும் மேல் திமுகவின் டுபாக்கூர் வக்கீல்கள் மற்றும் ₹200உபிசுங்களை நினைத்தால் பரிதாபம்.
வக்கீல் வண்டு முருகனுக்கு ஜாமின் கிடைத்த நிலைதான் செந்தில் பாலாஜி யின் நிலை.
All reacti

எதுக்கு செய்யனும்.

 இந்தப் பெண்கள் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள், ஆண்கள் பெண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்னு பொத்தாம் பொதுவா பேசுறதெல்லாம் வேஸ்ட். வேலைக்கே ஆகாது. அதான் ஏற்கனவே ஆண்மைனா இது தான் பெண்மைனா இதுதான்னு சொல்லி சொல்லி மூளச்சலவ பண்ணி வச்சிருக்காங்களே...நாமும் அதையே வேறமாதிரி எதுக்கு செய்யனும்.

அவங்வங்கள கேட்டு அவங்க என்ன எதிர்பாக்குறாங்கனு தெரிஞ்சு அத நம்மால கொடுக்க முடியுமானு சிந்திச்சு, நமக்கு அவங்ககிட்ட என்ன வேணும்னு தெளிவா சொல்லி அவங்களால அத கொடுக்க முடியுமானு தெரிஞ்சுக்கோங்க தனித்தனியா. அது மட்டும் தான் வேலைக்காகும்!
All reactions

மறுக்க முடியாத உண்மை. 🙏🙏🙏

 இப்போதெல்லாம், நாம் கேட்கும் ‘இசை’க்கும்கூட ‘ஒழுக்கம்’ என்று ஒன்று இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆம்,
1). பலமுறை கேட்ட பின்னும், காதுகளை மட்டும் தொட்டுவிட்டு இதயத்தை உதாசீனப் படுத்திவிட்டுச் செல்லும் இசை ‘ஒழுங்கற்றது’ என்றும்.
2). ஒருமுறை கேட்கும்போதே அது காதுகளைத் தொடுவதோடு இதயத்தையும் வருடிச் செல்லும் ஆற்றல் கொண்டதாய் இருந்துவிட்டால் அதை ‘ஒழுக்கம் நிறைந்த நல்ல இசை’ என்றும்.
- நாம் ஏற்றுக் கொள்ளலாம்தானே.
இதன் அடிப்படையில்,
‘இளையராஜா இசை’ என்பது எந்தவகையைச் சேர்ந்தது என்று நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன.
இப்படிக்கு,
இளையராஜா இசைப்பிரியன்.
May be an image of 1 person and text that says 'V.Sivanandan ஒழுக்கம் (discipline) என்பது இவரது இசையிலும் இருக்கக் காணலாம். இளையராஜா இசைப்பிரியன்'
All reactions

"தபு"

 இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் பிறந்து, தந்தை மூன்று வயதில் விலகிப் போய் விட, மெத்தப் படித்திருந்த தாய், தாத்தா மற்றும் பாட்டியிடமிருந்து, தன் வாழ்வை நிர்ணயித்துக் கொள்வதற்கான பூரண சுதந்திரம் அவருக்கு கிடைத்திருக்கிறது.11 வயதாகும் போது திரையில் ஏதோ ஓரிடத்தில் பதிவாக, 14 வயதில் இந்தியில் தேவ் ஆனந்திற்கு மகளாக நடிக்கிறார்.அதன் பின்னர் சரியாக ஆறாண்டுகள் கழித்து, தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ்க்கு ஜோடியாக "கூலி நம்பர் 1" படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பமைய, அங்கு தொடங்கியது அவரின் கேரியர். இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் என நடிக்காத மொழிகளில்லை. தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது என அங்கீகாரங்களுக்கும் பஞ்சமில்லை.மனுஷிக்கு 51 வயதாகிறது.பல்வேறு சர்ச்சைகள், விவாதங்களைத் தாண்டியும் சினிமா இண்டஸ்ட்ரியில் தொடர்ந்து பயணிக்கிறார்.ஒருபுறம் அல்லு அர்ஜூனுக்கு அம்மாவாக நடிக்கும் அதே வேளையில், இன்னொருபுறம் கதை நாயகியாக இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

"Khufiya"
பாலிவுட்டில் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகங்கள் கொண்ட விஷால் பரத்வாஜ்ஜின் இயக்கத்தில் "Escape to Nowhere" என்கிற நாவலைத் தழுவி ஸ்பை - த்ரில்லராக உருவாகி வெளியாகியிருக்கிறது. இந்திய உளவுத்துறையான "RAW"வில் ரிசர்ச் & அனைலைஸ் குழுவில் பணிபுரியும் மெஹ்ரா கிருஷ்ணா என்கிற தபுவின் கீழ், ஹீனா என்கிற வங்கதேசப்பெண், அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் மிஸ்ரா பற்றிய தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் பணியிலிருக்கிறாள். பணிச்சுமை காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து வாழும் மீனாட்சிக்கு, ஒரு கட்டத்தில் ஹீனாவோடு உடல்ரீதியான உறவும் ஏற்படுகிறது.ஹீனா ISIக்கும் உளவாளியாக வேலை செய்து கொண்டிருப்பது பின்னர் தெரிய வர, மீனாட்சி அவளை விட்டு விலக முற்படுகிறாள். ஆனால் மீனாட்சியின் மீதான தன் அன்பை நிரூபிக்க, வங்கதேச பாதுகாப்புத்துறை அமைச்சரை கொலை செய்ய முற்படும் "Octopus" என்கிற ஆப்ரேஷனில், ஹீனாவே சிக்கி கொண்டு உயிரிழக்க நேர்கிறது.கடைசி நிமிடத்தில் தோல்வியுற்ற இந்த ஆப்ரேஷன் குறித்து அமைச்சருக்கு தகவல் சொன்னது யாரென்று விசாரித்தால் அதே "RAW" பிரிவில் பணியாற்றும் ரவியிடம் வந்து முடிய, அவனை பின்தொடர்ந்து உளவு பார்க்கிற போது, அதன் முடிச்சுகள் ஆப்கானிஸ்தான், அமெரிக்க CIA வரை நீள்வது தெரிய வருகிறது.இப்போது "Octopus" ஆப்ரேஷன் "Brutus" என்கிற வேறு பெயரில் தொடர்கிறது. இன்னொருபுறம் ரவியின் மனைவி சாரு (வாமிகா) இதைப்பற்றி எதுவும் அறியாமல் மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஒரு கட்டத்தில் தன்னை RAW அதிகாரிகள் உளவு பார்ப்பது ரவிக்கு தெரிய வர, அங்கிருந்து தாயார், மனைவி, மகனோடு தப்பிக்க நினைக்கும் கணத்தில் எதிர்பாராத விதமாக மனைவிக்கு அசம்பாவிதம் நிகழ்ந்து விடுகிறது.மீத மூன்று பேரும் அமெரிக்காவுக்கு தப்பி போக, தபுவின் வழிகாட்டுதலில் மகனைத் தேடி அங்கும் போகிற சாரு மகனை மீட்டாளா..? "Brutus" ஆப்ரேஷன் வெற்றியடைந்ததா..? அமைச்சர் மிர்சா என்னவானார் என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்பை த்ரில்லர் என்ற உடனே ஜேம்ஸ்பாண்ட் மற்றும் நம்மூர் விஸ்வரூபம் 1 பாணியில் இருக்குமென நம்பி அமர வேண்டாம்.அதிரடி ஆக்சன் காட்சிகள் பெரிதாக எதுவுமின்றி அன்றாட வேலைகளை செய்யும் சராசரி பணியாளரைப் போல, இங்கும் அத்தனை யதார்த்தமாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்கிறார்கள் அதிகாரிகள்.எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி தெளிவாக, அதே நேரத்தில் அடுத்தென்ன நடக்கப் போகிறதோ என நாம் ரசிக்கிற அளவுக்கு பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
படத்தை தபுவும், வாமிகாவும் (மாலை நேரத்து மயக்கம்) தோள்களில் சுமந்திருக்கிறார்கள்.தபுவின் நடிப்பைத் திரையில் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல.பணிச் சூழலால் மகனின் சிறிய விருப்பங்களைக் கூட நிறைவேற்ற முடியாத தாய், விவாகரத்து ஆனாலும் மதிப்போடு நடத்தும் கணவனின் பரிவை புரிந்து கொள்ளும் மனைவி, உளவுத்துறையில் அதிகாரி, லெஸ்பியன் பார்ட்னர் என பல்வேறு பரிமாணங்களில் மிளிர்கிறார்.ஆஷிஷ் வித்யார்த்தி, அதுல் குல்கர்னி மாதிரியான பரிட்சயப்பட்ட முகங்கள் நம்மை ஈர்ப்பாக பார்க்க வைக்கிறது.படத்தின் பல்வேறிடங்களில் வருகிற உரையாடல்கள் வாழ்வின் யதார்த்தத்தை மிக அப்பட்டமாக உணர்த்துகிறது.நன்மை, தீமை என்கிற குணங்கள் எல்லோருக்குள்ளும் பொதுவாகவே இருக்கையில், பல சூழல்களில் பிறரை எடை போடுவதன் வாயிலாக நாம் தான் வாழ்வை மிகச் சிக்கலாக்கி கொள்கிறோமோ என படம் பார்த்த பின்னர் தோன்றியது. நெட்ஃப்ளிக்சில் தமிழிலும் கிடைக்கும் இப்படத்தை உரையாடலை அதிகம் நேசிக்கும் பார்வையாளர்கள் தவறாது பாருங்கள்..!
May be an image of 3 people and text
All reactions:

என்னத்த சொல்ல..

 கணவன் மனைவி இருவரும் ...

ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள்.
என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும் போல இருக்கு கேட்கவா....
இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான்
இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க...
அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க..
பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க.....
திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க....
அதான்...
என்று இழுத்தாள்...
ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்.
மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க
என்னத்த சொல்ல..
ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா ..
அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட?
போடி லூசு.. அவன் சிரித்தான்.
ஆனால் அதில் உயிரில்லை.
மெதுவாய் சொன்னான்..
நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.
என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்....
அவன் இல்லையென தலையாட்டியபடியே
அவனது அலுவலக பையை திறந்தான்.
ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.
என்னங்க இது ..
படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.
அவள் படிக்க தொடங்கினாள் ...
அவன் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது...
அன்புள்ள மகனுக்கு,
கண்டிப்பா என்றைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன்.
உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன்.
ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி.
அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காத.
உங்கப்பாவ நான் கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர்.
அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது.
இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரு.
அப்புறம் உன் தங்கச்சி பிறந்தா ...
நான் வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன்.
உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசின்னு...
கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை.
அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான்.
உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன்.
அவர், அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார்.
நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை.
நாம தான் விளையாடுவோம்.
அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்ட்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருப்பேன்.
ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க..
அதுல பாதி பொய் இருக்கும்..
அதெல்லாம் உங்க கற்பனைன்னு நினைச்சு ரசிச்சேன்.
அப்புறம் நீங்க வளர்ந்தீங்க..
அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு.
ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு.
இப்ப வெளியே போகனும்...
இப்படி வெளியே போகணும்னு..
ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......
காத்திட்டு இருப்பேன்.
நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....
நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி
இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு.
அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுக்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன்.
காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?
அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்...
இப்ப அவ எப்படி இருக்கானு கூட
அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்....
ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...
உனக்கு சொல்லவே வேண்டாம்...
அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே
நீ ரொம்ப பிசியாகிட்ட..
நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்...
சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.
உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு..
நான் காத்திட்டு இருந்தேன்.
கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு..
ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு...
என்கிட்ட பேச அவருக்கு விசயமே இல்லை...
பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு.
ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல...
பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை
இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது.
நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது
அங்க நிறைய அம்மாக்கள பார்ப்பேன்..
அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் மட்டும் தான்.
உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்...
அதுல இன்னைகே வாழ்ந்துடனும்...
அடுத்த ஆறநாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன்.
இன்னைக்கு ஒரு நாள் தானேன்னு புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள பார்த்தேன்.
இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...
உங்களுக்கு ஒரு நாள் தானேன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சு.
இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்றியா...
என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல..
ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல
அதான் உன்கிட்ட சொல்றேன்.
நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல...
சொன்னாலும் உன்னால கேட்க முடியாது..
அதனால தான் இப்ப சொல்றேன்.
உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...
காத்திட்டு இருக்காங்க...
உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது..
ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு.
அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்கூலுக்கு தெரியாத அளவுக்கு அவர் பிசி....
அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல..
அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல
ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..
பாத்தியா வாழ்க்கைய ?
நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்துடாத
உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடாத...
இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட.
நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை.
இன்னும் சொல்லபோனா
நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்..
அத கொஞ்சம் குறைச்சிக்கோ..
சீக்கிரம் வீட்டுக்கு வா.
பொண்டாட்டிகிட்ட புள்ளைககிட்ட பேசு...
அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு....
ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்...
ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா?
செய்வேனு நம்புறேன்.
ஏன்னா என்கிட்ட நல்லா பேசின பையன் தானே நீ...
உன் மனைவி மகள விட்டுடவா போற...
கடிதத்தை படித்து முடிந்தாள்.
அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது.
நிமிர்ந்து அவனை பார்த்தாள்....
இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது.
அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....
.நான் தான்மா
.....
ஏன் சும்மா பேசக்கூடாதா?
...
என்ன செய்ற...
....
அப்பா என்ன செய்றாரு... என பேசத்தொடங்கினாள்.
ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகத் தொடங்கியது.... .
அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான்.
இனிமே அப்படித்தான்..
இனி அங்கே அன்புக்காக காத்திருக்க அவசியமில்லை.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...