Tuesday, January 31, 2023

தீய சக்திகளின் வழியில் சாராயம், ஊழல், பதவி, நாட்டின் சீர்கேடு வழியில் சென்று கொண்டிருக்கிறான். 🔥🔥🔥

 இருபது வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..1955-1975.

போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்...
இது எப்படி சாத்தியம்..???
ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???
அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்..
ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்..வெற்றி கிடைத்தது என்றார்...
யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ...
வேறு யாருமில்லை..
கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்...
வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார்.
சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்...
அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்...
""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்...""
இப்பொழுதும் அங்கே சென்றால் அதை நீங்கள் காணலாம்...
சில வருடங்கள் கழித்து வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வர நேரிட்டது..
நம்மாட்களும் வழக்கம் போல இந்த காந்தி சமாதி..சக்தி ஸ்தல்..செங்கோட்டை... அது இதுனு சுத்தி காட்ட....
அலுத்து போன அமைச்சர்..ராஜராஜன் பிறந்த ஊர், அரண்மனை,சிலை எங்கே உள்ளது என அதிகாரிகளை கேட்க
அவர்கள் ஆச்சரியத்துடன் அது தமிழ் நாடு தஞ்சாவூர்ல இருக்கு என்றனர்...
உடனே தஞ்சாவூர் போக வேண்டும் என வியட்நாம் அமைச்சர் கூற ...படைதஞ்சாவூருக்கு பறந்தது..
அங்கு சென்று தஞ்சை பெரிய கோவிலில் அவர்கள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு...கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும்...வாஞ்சையுடனும்...தன் பையில் சேமித்து கொண்டார்...
இதைக்கண்ட பத்திரிகைகள் வழக்கம் போல வினா எழுப்பின...
இந்த மண்..வீரமும்.. வெற்றியும்..நிறைந்த ராஜராஜன் பிறந்து வளர்ந்த மண்..
வியட்நாம் சென்றடைந்ததும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன்...
இனி வியட்நாம் மண்ணில் பல்லாயிரம் ராஜராஜ சோழன் பிறக்கட்டும் என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக..
இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் எங்கும் படிக்க நேர்ந்திருக்காது .
ஆனாலும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்..
நம் சந்ததிக்கு.....
May be an image of 1 person and outdoors
All react

உங்களை பிடித்த பீடையும் கெட்ட எண்ணங்களும் விலக....

  நம்முடைய மூளை  அல்லது அறிவானது சரியான திசையில் நம்மை இயக்க நினைத்தாலும், திசை திருப்பி விட்டாலும் நம் மனமானது அதை ஏற்காமல் தட்டிக் கழித்து விடும்.


உங்கள் மனம் உங்கள் சொல்லை கேட்காத எல்லா சமயங்களும் உங்களுக்கு பீடை பிடித்துள்ளது என்பது தான் அர்த்தம். நம்மிடம் பீடை, தரித்திரம் ஆகியவை இருந்தால் தவறு என்பது தெரிந்தும் அதை நாம் செய்ய துணிவோம். ஒரு சிலருக்கு கொஞ்சம் முயற்சி செய்தால், கட்டுப்பாட்டோடு இருந்தால் அந்தத் தரித்திலிருந்து, அந்த விஷயத்தில் இருந்து மீண்டு வந்து விட முடியும். ஆனால் பலரால் அதிலிருந்து என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் மீண்டு வர முடியாமல், அதை ஏற்கவும் முடியாமல் மனம் அங்கலாய்க்கும்.


நாட்டு மருந்து கடைகளில் பெயர் சொல்லாத மருந்து என்று கேட்டால் கொடுப்பது வசம்பை தான். வசம்பு என்கிற பெயரை சொல்லி கேட்டால் அந்த பொருளுக்கு சக்தி குறைந்து விடும் என்பது நம்பிக்கை. வசம்பு வேலை செய்வதற்கு அதை பெயர் சொல்லாத மருந்து, பெயர் சொல்லாத மூலிகை என்று தான் குறிப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


குழந்தைகளுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும் அல்லது எதை கண்டோ பயந்து போய் இருந்தாலும், தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாலும் இது போல வசம்பை நெருப்பில் காட்டி எரித்து அதன் மையை எடுத்து உள்ளங்கை, உள்ளங்கால், தொப்புள், உச்சந்தலை ஆகிய இடங்களில் எல்லாம் பூசி விடுவார்கள். குழந்தையின் நாவிலும் சிறிது தடவி விடுவார்கள். இது குழந்தைக்கு இருக்கும் தோஷத்தை அகற்றும், மேலும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.


இத்தகைய அதிசக்தி வாய்ந்த இந்த வசம்பை நீங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். கடைகளில் நீங்கள் கேட்டு வாங்கும் பொழுது இதன் பெயரை உச்சரிக்காமல் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் அப்போது தான் நீங்கள் செய்யும் இந்த பரிகாரத்திற்க்கு பலனும் உண்டு. பின்னர் அதன் மீது கொஞ்சம் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். மனதார உங்கள் பிரச்சனை நிறைவேற வேண்டும் என்றும், நீங்கள் நினைக்கும் காரியம் கைகூட வேண்டும் என்றும், நீங்கள் எந்த விஷயத்தில் இருந்து விலக நினைக்கிறீர்களோ அந்த விஷயம் உடனே நடக்க வேண்டும் என்றும், உங்கள் மனதை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் இறைவனிடம் மனமார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.


அதன் பின்பு அந்த வசம்பை எடுத்து உங்கள் ஆடையில் ஏதாவது ஒரு பகுதியில் முடிந்து கொள்ளுங்கள். பெண்களாக இருந்தால் புடவை முந்தானை அல்லது துப்பட்டாவில் முடிந்து கொள்ளலாம். ஆண்களாக இருந்தால் உங்களுடன் இருக்குமாறு கைகுட்டையில் முடிந்து உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். இது உங்களுடன் இருக்கும் வரை உங்களுக்கு கெட்ட எண்ணங்கள் வராமல் தடுக்கப்படும். எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்தால் தான் பலன் அளிக்கும். அதே போல இதையும் நம்பிக்கையுடன் செய்து பயன் பெறலாமே!

மானம் ரோசம் இதெல்லாம் போதையில இருக்கும்போது புரியாது!

 உன் நாட்டை அசிங்கப்படுத்தினான் ஓட்டு போட்டாய்

உன் மொழியை அசிங்கப்படுத்தினான் ஓட்டு போட்டாய்
உன் மதத்தை அசிங்கப்படுத்தினான் ஓட்டு போட்டாய்
உன் கடவுளை அசிங்கப்படுத்தினான் ஓட்டு போட்டாய்
உன் கலாச்சாரத்தை அசிங்கப்படுத்தினான் ஓட்டு போட்டாய்
உன் கோவிலை இடித்தான் ஓட்டுபோட்டாய்
உன் பிள்ளைகளை குடிகாரர்களாக்கினான் ஓட்டு போட்டாய்
கடைசியில் உன் தாயைகூட வேசி என்றான் ஓட்டு போட்டாய்
அடேய் சுயமரியாதை பேசும் திராவிட இந்துக்களே
இன்னும் உன்னிடம் என்னதான்டா இருக்கு அசிங்கப்படுத்த
இனியாவது திருந்துங்கடா என் தமிழ்நாடு தலைநிமிரட்டும்
வாழ்க தமிழ்
வளர்க பாரதம்
ஜெய்ஹிந்த் 🇮🇳 :

தேளை இடுப்பில் கட்டிக்கொண்டு பின் கொட்டுகிறது என்று சொல்வதில் என்ன பயன்.

 'கடும் பொருளாதாரச் சீர்கேட்டிலும், அரசியல் நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கின்ற பாகிஸ்தான் நாட்டை,​ பாரதத்துடன் இணைக்க வேண்டும்' என ஒரு சாரார் வேண்டுகோள் வைக்கின்றனர்.

இது, வீண் வம்பை விலை கொடுத்து வாங்குவது போலாகும். ஏற்கனவே இந்தியாவில் 18 கோடி முஸ்லிம்கள் இருக்கும் போது, கூடுதலாக பாகிஸ்தானில் இருக்கும் 22 கோடி முஸ்லிம்களையும் பாரதம் தன் வசம் எடுத்துக் கொள்வது, தற்கொலைக்கு ஒப்பான செயலாகும்.

மொத்தம் 40 கோடி முஸ்லிம்களை பாரதம் தாங்குமா?

ஆகவே, 'அகண்ட பாரதம்' என்னும் கனவை இத்தோடு விட்டு விடுங்கள். இப்போது இருக்கிற பாரதம் நன்றாக இருந்தாலே போதுமானது.

மணி பர்ஸில் தப்பி தவறி கூட இந்த 1 பொருளை வைக்காதீங்க. குறிப்பா ஆண்கள் இந்த தவறை செய்வீங்க பணம் சேருவதற்கு சூட்சமமான ஒரு ரகசிய குறிப்பும் இதோ உங்களுக்காக.

நாம் பணம் வைக்கும் இடத்திலோ, பணம் வைக்கும் மணி பர்ஸிலோ, பணம் வைக்கும் டப்பாவிலோ, கட்டாயமாக இந்த ஒரு பொருளை வைக்கவே கூடாது. அது எந்த பொருள், அதிலும் ஆண்கள் அதை அதிகமாக பயன்படுத்துவார்களா? அப்படி என்ன அந்த பொருளாக இருக்கும், என்று நிச்சயமாக உங்கள் மனதிற்குள் ஒரு கேள்வி எழும். அதற்கு உண்டான பதிலையும், இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இதோடு சேர்த்து பணம் சேருவதற்கு ஒரு சூட்சமமான முறை உள்ளது. இதை செய்தால் நிச்சயம் உங்களுடைய கையில் வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரம். அது என்ன சூட்சம முறை. இந்த இரண்டு கேள்விகளுக்கும் சேர்த்து பதிலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா. வெட்டக்கூடிய எந்த ஒரு பொருளையும் பணம் வைக்கும் இடத்தில் வைக்க கூடாது. குறிப்பாக ஆண்கள் சின்ன கத்தரிக்கோல், மடக்கி வைத்திருப்பார்கள் அல்லவா. அதை விரித்தால் கத்திரிக்கோல் போல மாறும். அந்த மாதிரி ஒரு கத்திரிக்கோலை வைத்திருப்பார்கள். சில பேர் சின்ன பாக்கெட் கத்தி என்று சொல்லுவார்கள் அல்லவா. அதை பரிசில் வைத்திருப்பார்கள். சில பேர் பிளேடு வைத்திருப்பார்கள். அவசரத்திற்கு உதவும் என்பதற்காக, இப்படி கூர்மையான அருக்கக் கூடிய, வெட்டக்கூடிய பொருட்களை பணம் வைக்கும் பஸர்ஸில் வைக்கவே கூடாது. -வீட்டில் பணம் வைக்கும் பீரோவில், பெண்கள் காசு சேர்த்து வைத்து இருக்கும் டப்பாவில், பர்ஸில் கூட இந்த மாதிரி ஷார்ப்பான பொருளை வைக்கவே கூடாது என்று ஒரு கருத்து உண்டு. ஆகவே இனிமே இப்படிப்பட்ட தவறை நீங்கள் செய்யாதீங்க. ஏற்கனவே இந்த பொருளை பணம் வைக்கும் இடத்தில் வைத்திருந்தாலும் பர்ஸில் வைத்திருந்தாலும் இனி அதை எடுத்து வேறு ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சரி, இப்படி வைத்தால் அந்த எதிர்மறை வைப்ரேஷன் அந்த இடத்தில் இருக்க தானே செய்யும். அதை நீக்குவதற்கு என்ன செய்வது. அந்த இடத்தில் பச்சை கற்பூரத்தை வைக்கலாம். பெருமாள் கோவிலில் இருந்து வாங்கி வந்த துளசியை வைக்கலாம். பணம் சேருவதற்கு உண்டான வாசனை நிறைந்த மல்லிகைப்பூ, கிராம்பு, பட்டை இப்படிப்பட்ட பொருட்களை அந்த இடத்தில் நீங்கள் வைக்கும் போது அந்த பேட் வைப்ரேஷன் நீங்கிவிடும். கவலைப்படாதீங்க.  அடுத்து நீங்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, உங்களுடைய பர்ஸில் கிரெடிட் கார்டு டெபிட் கார்ட் என்னென்ன கார்டு இருந்தாலும் சரி, கட்டாயமாக ரூபாய் நோட்டு சில்லறை காசு என்று சிறிதளவு இருக்க வேண்டும். ஒரு நாள் முடியும்போது இரவு தூங்க செல்வதற்கு முன்பு என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். அன்றைய தினம் நீங்கள் என்ன செலவு செய்தீர்கள் என்பதை ஒரு டைரியில் தினமும் குறித்து வரவேண்டும். கார்ட், கேஷ் எதில் செலவு செய்து இருந்தாலும் சரி அல்லது பணமாக செலவு செய்திருந்தாலும் சரி, நீங்கள் செலவு செய்யக்கூடிய கணக்கை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வர வேண்டும். இப்படி செய்தால் உங்களுடைய செலவு பல மடங்கு குறைந்து, வரவு பல மடங்கு அதிகரித்து, சேமிப்பு பல மடங்காக உயரும். இதையும் படிக்கலாமே: வீட்டில் நீங்கள் செய்யும் இந்த ஒரு தவறு மன்னிக்க முடியாத தவறாக சாஸ்திரம் கூறுகிறது! இந்த தவறை செஞ்சா தரித்திரம் தாண்டவம் ஆடுமாம் தெரியுமா? கணக்கு எழுதுனா கணக்கு இல்லாம பணம் சேருமா என்ன. என்ற சந்தேகம் உங்களுக்குள் வர வேண்டாம். இதை மட்டும் நீங்கள் பின்பற்றிப் பாருங்கள் நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத நல்லதொரு மாற்றம் நடக்கும். மேல் சொன்ன குறிப்புகளில் நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள் நல்லது நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் குறிப்பை பின்பற்றி பலன் ஸபெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

ஆடியில் பிரிப்பது ஏன்?

 சித்திரையில் ஆண் பிள்ளைகள் பிறந்தால் தகப்பனுக்கு ஆகாது. அந்த பிள்ளை தலை எடுக்கும் போது தகப்பனின் தலை சாயகூடும். ஆகையால் தான் ஆடியில் திருமணமும் செய்வதில்லை, தம்பதிகளையும் பிரித்து விடுகின்றனர் என்று கூறுகின்றனர். இந்த கூற்றுக்கு ஏற்றார் போல "சித்திரை அப்பன்தெருவிலே" என்று ஒரு பழமொழியே உள்ளது. வான்மண்டலத்தில் சூரியன் தனது முழு சக்தியை வெளிப்படுத்தும் மாதம்(உச்சம்) சித்திரை. அந்த மாதத்தில் பிறக்கும் அனைத்தும் ஆளுமை செலுத்தும் என்பதே மறுக்க முடியாத உண்மை. காரணம் ஆளுமை திறன் என்பது சூரியனின் குணம். அதாவது சித்திரையில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் இயற்கையாகவே ஆளுமை திறனோடு தான் பிறக்கும். ஆகையால் தான் அது அவனின் தந்தைக்கு ஆபத்தாகிவிடுகிறது. மகன் ஆளுமை செலுத்துவது எப்படி தந்தைக்கு ஆபத்தாகும் என்றால், ஒருவன் நாட்டிற்கு இராஜா ஆக வேண்டும் என்றால் முதலில் அவன் தந்தைக்கு ஓய்வு தர வேண்டும். ஒரு உரையில் இரண்டு கத்திகள் இருக்கக்கூடாது என்பதே விதி. ஆகையால் தான் சித்திரையில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் எந்த அளவிற்கு வளர்ச்சியின் உச்சிக்கு செல்கிறதோ அந்த அளவிற்கு அவனின் தந்தை வீழ்ச்சியின் உச்சிக்கே சென்று விடுவார். ஆனால் அவர்கள் சொல்வது போல உயிர் பலி கேட்பதற்கு எல்லாம் வாய்ப்பு மிக மிக குறைவு. ஒருவேளை அக்குழந்தை ஆயிரத்தில் ஒருவன், லட்சத்தில் ஒருவன், கோடியில் ஒருவன் போன்ற நிலைக்கு உயருமேனில் அப்படி நடக்க வாய்ப்புள்ளது. அதுவும் 100% கிடையாது. இன்னும் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் உங்கள் பலம் கூட கூட உங்கள் தந்தையின் பலம் குறைந்துவிடும். நீங்கள் ஒரு தலைவனை போல உங்கள் குடும்பத்தை வழிநடத்துவீர்கள். உங்கள் தந்தை ஒரு பிள்ளையை போல உங்கள் நிழலில் வாழ தொடங்கிவிடுவார், அவ்வளவுதான். ஆனால் இவ்விதி பெண்பிள்ளைகள் பிறந்தால் பொருந்தாது. காரணம் சூரியன் என்ற கிரகத்தை குறிக்கும் உறவு காரகத்துவங்கள் யாதெனில் தந்தை மற்றும் மூத்த மகனே. ஆகையால் சித்திரையில் பெண்பிள்ளைகள் பிறந்தால் தகப்பனுக்கு நன்மையே அன்றி தீமை கிடையாது. ஆடியில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்வதும் சித்திரையில் ஆண்குழந்தை பிறப்பதும் ஒரு தந்தைக்கு வேண்டுமானால் பெரிதளவு நன்மையில்லாமல் இருக்கலாம். ஆனால் பிறக்கும் அக்குழந்தைக்கு அது நன்மையே. என்னதான் நாம் தவிர்த்தும் பிரித்தும் வந்தாலும் இதை எல்லாம் மீறி சிலர் ஆடியில் சேர தான் போகிறார்கள், சித்திரையிலும் குழந்தை பிறக்க தான் போகிறது. காரணம் இயற்கையின் கட்டமைப்பு அப்படி. அதை மீற இங்கு யாரால் முடியும்?

ஏங்கித் தவிக்கிறோம்.

 #குட்டிகதை

ஒரு அரசன்
தனது மந்திரியை அழைத்து:...
"இதோ பார் மந்திரியாரே, நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக இருக்கிறேன்.
எனக்கு இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை.
இருந்தும், நான் மன நிம்மதியாக இல்லை. மனக்குழப்பம் என்னை வாட்டி வதைக்கிறது.சலிப்பும், வெறுப்பும் என்னை பின்தொடர்கிறது.
ஆனால், எதுவும் இல்லாத என் சேவகன் இருக்கிறானே,
அவன் என்னை விட
வாழ்வில் மனமகிழ்ச்சியுடன் இருக்கக் காணுகிறேன்.
ஆனந்தத்தில் அவன்
மிதக்கிறான். பார்க்க பொறாமையாக
இருக்கிறது' என்று ஆதங்கப்பட்டான்.உடனே அந்த மந்திரி, அரசே! அந்த சேவகனிடம் 99 ஆட்டத்தை பரீட்சித்துப்
பாருங்கள்' என்றான்.
அதற்கு அரசன்: அது என்ன 99 ஆட்டம்?
புதுமையாக இருக்கிறதே!" என்றான்.அதற்கு மந்திரி சொன்னான், 99 ஆட்டம் என்பது 99
பொற்காசுகளை எடுத்து
ஒரு பையில் போட்டு சேவகனின் வீட்டு வாசலில்
வைத்துவிடுங்கள்."100 பொற்காசுள் உங்களுக்கான
அன்புப் பரிசு " என்று அதிலே எழுதி வைத்துவிட்டு
வந்துவிடுங்கள்.
பின்பு என்ன நடக்கிறது என்று
பொறுத்திருந்து பாருங்கள்!" என்றான்.அப்படியே அரசனும் செய்துவிட்டு
வந்தான்.
பொற்காசுள் நிறைந்த
பையைக்கண்ட சேவகன் ஆனந்தத்தில்
மிதந்தான்.
பணப்பையை எடுத்து எண்ணிப்பார்த்தான். ஒரு காசு குறைவாக இருந்தது.
கட்டாயம் ஒரு பொற்காசு வெளியில் எங்காவது விழுந்திருக்க வேண்டும்' என மனதில் நினைத்துக்கொண்டான்.அதன்படி அவனும், அவனது மனைவி, பிள்ளைகுட்டிகள் என அனைவரும் தவறிய அந்த ஒரு பொன்நாணயத்தை தேட ஆரம்பித்தனர்.
தேடித்தேடி இரவும் முடிந்து பொழுதும் விடிந்தது,
தேடல் மாத்திரம் முடிந்தபாடில்லை.கோபமடைந்த சேவகன் அவர்கள் மீது எரிந்துவிழத்
தொடங்கினான். அவன்
மனமகிழ்ச்சி மனவருத்தமாக மாறியது.
மறுநாள் சேவகன் விரக்தியடைந்தவனாக காணப்பட்டான்.
புன்முறுவல் பூத்திருந்த அவனது முகம் சிடுமூஞ்சாக மாறியிருந்தது. தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தான்.இதையெல்லாம் ஓரமாக நின்று
பார்த்துக்கொண்டிருந்த அரசனுக்கு
99 ஆட்டம் என்றால் என்னவென்று புரிந்து போய்விட்டது.
இறைவன் நமக்கு
வழங்கிய 99 வகையான
செளபாக்கியங்களோடு இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம்.வாழ்வில் நமக்கு கிடைக்காத
அந்த ஏதோ ஒரே ஒரு பாக்கியத்திற்காக நிம்மதியை இழந்து மனவருத்தத்தோடு
வாழ்ந்து வருகிறோம். ஏங்கித் தவிக்கிறோம்.
கைவசம் இருக்கும் பல சுகங்களை மறந்து இல்லாத ஒன்றுக்காக மனக்கவலையோடு வாழ்துவருகிறோம்.
May be an image of 2 people and text
All react

மனைவியின் காதல்....!

 மனைவியின் காதலை புரியாமல் வாழும் ஆண்களே உங்கள் கண்களை ஈரமாக்கும் ஓர் கதை இது.... உங்களை சிந்திக்கவும் வைக்கும் என நம்புகிறேன்......

மனைவியின் காதல்....!
வேலை முடிந்து வீட்டிற்கு போன போது சாரா சமையலறையில் இருந்தாள்.அவசர அவசரமாக குளித்து உடைமாற்றி சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்த போது சாப்பாடு பரிமாறத் தொடங்கினாள்.
கைகளை பற்றியவாறு,"எனக்கு விவாகரத்து வேண்டும் "என்றேன்.
"ஏன்?" என்றாள் ஒற்றை வரியில்.
நிச்சயமாய் அவள் அதை சீரியஸாய் எடுத்துக் கொள்ளவில்லை என்பது அவளது நடத்தையில் புரிந்தது.
அதை ரசிக்கும் மன நிலையில் நான் இருக்கவில்லை.எப்படியாவது எனது நிலைப்பாட்டை சொல்லியே ஆக வேண்டுமென நினைத்தேன்.
"அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் ஜேனை இரண்டு வருடமாக காதலிக்கிறேன்.விவாகரத்து வேண்டும் என்றேன்"தீர்க்கமாய்.
எதுவும் பேசவில்லை அவள்.
திடீரென நட்டாற்றில் அவளோடு என் மகனையும் விடுவதாய் மனம் குத்திக் காட்டியது.குடியிருக்கும் வீடு,கார்,மற்றும் சொத்தின் 30% அவளுக்குரியது என எழுதப்பட்ட பத்திரத்தை அடுத்த நாளே அவளிடம் நீட்டினேன்.
எரிமலையாய் சிதறினாள்.பத்திரத்தை வெறி கொண்ட மட்டும் கிழித்தாள்.
பத்து வருடமாய் தன் வாழ்வை பகிர்ந்தவள் அந்நியமாய் தெரிந்தாள்.
சத்தமாய் அழுதாள்.ஆர்ப்பாட்டம் பண்ணினாள்.பலம் கொண்ட மட்டும் என் சட்டையைப் பற்றி உலுக்கினாள்.சலனமின்றி மீண்டும் சொன்னேன்,"விவாகரத்து வேண்டும்".
முழுவதுமாய் நொறுங்கிப் போயிருந்தாள்.விவாகரத்து எனும் வார்தையால் எதை எதிர்ப்பார்த்தேனோ அது நடந்தது.
அடுத்த நாளை ஜேனுடன் கழித்து விட்டு நள்ளிரவில் வீடு சென்ற போது மேசையிலிருந்து சாரா எதையோ எழுதிக் கொண்டிருந்தாள்.
விவாகரத்து ஒப்பந்தம் என்பது புரிந்தது.
என்னிடமிருந்து எதுவும் வேண்டாமென்று கூறியிருந்தாள்.
ஒரு மாதத்தில் மகனுக்கு பரீட்சை இருப்பதாகவும்,இது பற்றி எதுவும் அவனுக்கு புரியாதவாறு வீடு சுமூகமாக இருக்கட்டும் என்று கூறியிருந்தாள்.
முறிந்து போன ஒரு திருமணம் மகனை பாதிக்கக் கூடாதென எண்ணியிருக்கலாம்.
எப்படி திருமண இரவன்று வாசற் கதவிலிருந்து படுக்கையறை வரை அவளை தூக்கி வந்தேனோ அதே போல ஒவ்வொரு நாளும் தூக்கி வர வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தாள்.
வினோதமாய் இருந்தது.என்னுடனான கடைசி நாட்களை இன்பமாக கழிக்க நினைக்கிறாள் என ஏளனமாய் எண்ணிக் கொண்டேன்.
முதல் நாள் அவளை ஏந்திச் சென்ற போது இருவருமே சங்கடமாகவே உணர்ந்தோம்.மகன் விசித்திரமாய் பார்த்தான்.கடந்த ஒன்பது வருடமாக அவன் தன் தாய்,தந்தையை இப்படி அன்னியோன்யமாய் பார்த்திருக்கவில்லை என்பது உறுத்தலாய் இருந்தது.
"அப்பா அம்மாவை தூக்கிச் செல்கிறார்" என குதூகலித்தான்.
நமது விவாகரத்து பற்றி அவனுக்கு தெரிய வேண்டாம் என்றாள் படுக்கையில் இறக்கிவிட்ட போது எங்கோ பார்த்தபடி.
திருமணத்தன்றிருந்த உணர்வுகள் மங்கிப் போயிருப்பது தெரிந்தது.
அடுத்த நாள் அவளை தூக்கும் போது இன்னும் இலகுவாக இருந்தது.உரிமையுடன் மார்பில் துவண்டிருந்தாள்.
அவளது கூந்தலின் மணம் ஏதேதோ செய்தது.
நீண்ட நாட்களாக அவளை நான் ரசிக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.
முகத்தில் சில சுருக்கங்கள் இருந்தது.
ஆங்காங்கே சில நரைமுடிகள் எட்டிப் பார்த்தன.
கூந்தலின் அடர்த்தி வெகுவாக குறைந்திருந்தது.
அன்று கொடியிடையாளாய் இருந்தவள் சற்று பருத்திருந்தாள்.
திருமண வாழ்வு அவள் அழகை,கவர்ச்சியை கொள்ளையிட்டிருந்தது.
என்னுடன் வாழ்ந்ததில் எனக்காக தன் இளமையை தொலைத்து விட்டிருந்தது அப்பட்டமாய் தெரிந்தது.
நான்காம்,ஐந்தாம் நாட்களில் எனக்காய் தன் வாழ்வை அர்ப்பணித்தவள் மீண்டும் அன்னியோன்யமானதாய் தோன்றியது.
நாட்கள் செல்லச் செல்ல விரிசல்கள் காணாமல் போயிருந்தன.அவள் சுமையாய் தெரியவில்லை.எமது செயல் மகனுக்கும் பழகிவிட்டிருந்தது.
ஒரு நாள் காலையில் திருமணமான புதிதில் பரிசளித்த ஒரு ஆடையை அணிந்தபடி கண்ணாடி முன் நின்ற படி தலை வாரிக் கொண்டிருந்தாள்.நன்றாக மெலிந்து போயிருப்பது தெரிந்தது.
இந்த பெண் எத்தனை வடுக்களை மௌனமாய் ஏற்றுக் கொள்கிறாள் என தோன்றியது.
மெதுவாக அவளது தோள்களை பற்றினேன்.திரும்பி என் கண்களை ஊடுறுவினாள்.என் மனம் மாறிவிடுமோ என்றஞ்சி பார்வையை தவிர்த்தேன்.
"இன்று அம்மாவை தூக்கவில்லையா?"என்றான் மகன்.அவனைப் பொருத்தவரை அது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டிருந்தது.
தூக்கிய போது கைகளை கழுத்துகளை வளைத்து கோர்த்துக் கொண்டாள்.பிடிமானத்தை நான் இறுக்கிய போது சொகுசாக நெஞ்சோடு அணைந்தாள்.
கல்யாண நாளன்று காதல் ததும்ப நடந்தது போலவே ஒவ்வொரு நடையாக எடுத்து வைத்தேன்.
நாட்கள் வேகமாக உருண்டோடியது.
கடைசி நாளில் சாரா என்ற பெண் மீதினில் என் காதல் என்னை ஒரு அடி கூட நகர்த்த விடவில்லை.அவசரமாய் அவளை கையிலிருந்து இறக்கிவிடக் கூடாதென நினைத்தேன்.
திருமண இரவில் அவளை ஏந்தியபடி"மரணம் வரை உன்னை பிரிய மாட்டேன்" என்ற என் வாக்குறுதி இனிமையாய் நிழலாடியது.
மென்மை மாறாமல் சாராவை படுக்கையில் இறக்கிவிட்டேன்.ஜேனிடம் விரைந்து சென்று,"சாராவை கைவிடும் எண்ணம் எனக்கில்லை.என் வாழ்வும் என் மரணமும் அவளுடன் தான்" என்று முடிவாய் சொன்னேன்.ஜேனுடைய பதிலிற்காய் காத்திருக்க தோன்றவில்லை.
பூக்கடையில் சாரா மிகவும் விரும்பும் வெள்ளை ரோஜாக்கள் நிரம்பிய ஒரு பொக்கேயை வாங்கி."You are my life "என்று ஒரு அட்டையில் எழுதிக் கொண்டு சாராவை நோக்கி விரைந்தேன்.
அங்கே...
அதே கட்டிலில்,
என் சாரா பிணமாக,சடலமாக,உயிரற்றிருந்தாள்..
கடந்த சில மாதங்களாக அவள் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்ததை அவளது நண்பி அப்போதுதான் சொன்னாள்.
அதை கூட அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு நான் அந்நியனாக வெட்கித்து நின்றேன்.
அத்தனை போராட்டத்திலும் என்னை ஒரு நல்ல கணவனாக,அன்பான தந்தையாக என் மகனிடம் நிரூபிக்க ஆசைப்பட்டிருக்கிறாள்.
மரணத்தை தவிற வேறெதுவும் நம்மை பிரிக்காது என்பதை உணர்த்த முயற்சித்திருக்கிறாள்.
மகன் என் கால்களை கட்டிக் கொண்டு அழுதான்.
"சாரா ,இனி என் வாழ்வு நம் பிள்ளைக்கானது" என மௌனமாய் அவள் மனதிடம் சொல்லிக்கொண்டேன் ..!
May be an image of 1 person and standing
All 

கடன் தீர்ந்து பணம் சேர பூஜை அறையில் கல் உப்பிற்குள் இதை புதைத்து வைத்தால் போதும்!

 பண பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.**


ஏழைகளாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி அவர் அவர்களுக்கு வரக்கூடிய வருமானத்திற்கு ஏற்ப கடன்களும் அமையப் பெறுகிறது. கடன் இல்லாத மனிதனே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு கடன் பிரச்சனையானது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சனையை உண்டு பண்ணி கொண்டே இருக்கும். இப்படி தொடர்ந்து கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கு இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம். கடன் தீர்வதற்கான பரிகாரம் என்னவென்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


கடன் பிரச்சனை சில சமயங்களில் கட்டுக்கு அடங்காமல் போய்க் கொண்டே இருக்கும். சரி, இனிமேல் கடன் வாங்காமல் இருந்து காட்டுவோம் என்று வைராக்கியமாக இருந்தாலும், ஏதாவது ஒரு சூழ்நிலை நம்மை கடன் வாங்க வைத்து விடும். இப்படி தொடர்ந்து கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டு தவிப்பவர்கள், இந்த பரிகாரத்தை செய்து வருவதன் மூலம் இதிலிருந்து எளிதாக மீண்டு விடலாம் என்கிறது சாஸ்திரங்கள்.


கடன் தொகையை கொடுக்கும் பொழுது எப்பொழுதும் வெள்ளிக்கிழமையில் கொடுக்க வேண்டாம். என்ன பிரச்சினையாக இருந்தாலும், வெள்ளிக்கிழமையில் கடனை திரும்ப கொடுத்தால் திரும்பத் திரும்ப கடன் வாங்க வேண்டி இருக்கும். அது போல நீங்கள் கடன் வாங்கும் பொழுது குளிகை நேரம் கவனித்து வாங்குவது நல்லது. குளிகை நேரத்தில் கடன் வாங்கினால் மீண்டும் மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று ஜோதிடங்கள் குறிப்பிடுகிறது.


குளிகை என்பது மீண்டும் மீண்டும் ஒரு காரியத்தை செய்ய தூண்டும் நேரம் ஆகும். இந்நாளில் நகை வாங்கினால் மீண்டும் மீண்டும் நாம் நகை வாங்குவோம். அதுபோல கடன் வாங்கினாலும் அப்படித்தான். எனவே இந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டாம். வெள்ளிக்கிழமை தோறும் பூஜை அறையில் ஒரு சிறிய பித்தளை அல்லது கண்ணாடி பவுலில் கல் உப்பை நிரம்ப போட்டுக் கொள்ளுங்கள். அதன் உள்ளே விரலி மஞ்சள் ஒன்றை புதைத்து வைக்க வேண்டும்.


விரலி மஞ்சளுடன் உப்பு சேரும் பொழுது அங்கு மகாலட்சுமியின் அருள் கிடைப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதே போல வசம்பு ஒன்றையும் இதே போல புதைத்து வைக்க வேண்டும். இந்த உப்பு நாள் முழுவதும் பூஜை அறையில் இருக்க வேண்டும். மறுநாள் இந்த உப்பில் இருக்கும் மஞ்சள் மற்றும் வசம்பை எடுத்துவிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம். அதை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ரெண்டு பொருட்களை மட்டும் ஒரு சிறிய மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.


இதுபோல ஒவ்வொரு வாரமும் நீங்கள் சேகரித்து வரும் மூட்டைகள் அதிகம் சேர்ந்ததும், நீர் நிலைகளில் கொண்டு போய் விட்டு விட வேண்டும். இதை நீங்கள் பயன்படுத்தக் கூடாது. இப்படி தொடர்ந்து வெள்ளிக் கிழமைகளில் மட்டும் செய்து வாருங்கள், உங்களுக்கு இருந்து வந்த அத்தனை கடன் ரீதியான பிரச்சனைகளும் மெல்ல மெல்ல மறைய ஆரம்பிக்கும். மீண்டும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது இப்பரிகாரம். இந்த எளிய பரிகாரத்தை செய்து சொர்ண ஆகர்ஷண பைரவர் அருளால் உங்கள் கடன் தொல்லையிலிருந்து எளிதாக மீண்டு விடலாமே.

கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டத்தில் காரசார மோதல்-கைகலப்பு .

 சென்னை மெரினா கடலில் கருணாநிதி நினைவாக ரூ.81 கோடி செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 42 மீட்டர் உயரத்தில் இந்த நினைவு சின்னம் அமைகிறது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து பாலம் வரை 6 மீட்டர் உயரத்தில் நடைபாதை அமைக்கப்படுகிறது. நிலப்பரப்புக்கு மேல் 290 மீட்டரும், கடல் பரப்புக்கு மேல் 360 மீட்டர் நீளமும் கொண்டதாக இந்த பாலம் அமைகிறது. இந்த பாலத்தின் அகலம் 9 மீட்டர் ஆகும். இதில் 2 மீட்டர் அகலத்தில் கண்ணாடி பாலமும் உள்ளது. மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடந்தது. இதில் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் முதலாவதாக திருவல்லிக்கேணியை சேர்ந்த கல்யாணராமன் பேசினார். அவர் பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைப்பது எதிர்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக அமையும். கருணாநிதி சமூக மாற்றங்களை கொண்டு வந்தார். கார்கில் நினைவு சின்னம், போர் நினைவு சின்னம் போல வருங்கால தலைமுறையினர் கருணாநிதி பற்றி அறிந்து கொள்ளும் வகையில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுகிறது. இதை வரவேற்கிறேன்" என்றார். சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த அருள் முருகன் பேசுகையில், "கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும். எனவே இதை வேறு இடத்தில் அமைக்க ஆய்வு செய்ய வேண்டும்" என்றார். இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். கலெக்டரும், போலீசாரும் அவர்களை சமாதானம் செய்தனர். அப்போது முன் இருக்கையில் இருந்த சிலர் கருத்து தெரிவிப்பது அவரவர் உரிமை என்று வாக்குவாதம் செய்தனர். வாக்கு வாதம் காரணமாக கூட்டம் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் அனைவரையும் போலீசார் சமாதானப்படுத்திய பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்தது. அப்போது கலெக்டர் அமிர்தஜோதி, "சுற்றுச் சூழல் தொடர்பாக மட்டுமே கருத்து தெரிவிக்க வேண்டும். அரசியல் பேசகூடாது. கூட்டத்துக்கு ஒத்துழைப்பு தாருங்கள்" என்றார். பின்னர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சங்கர் பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி விதிமுறைகளை பின்பற்றி நடக்கவில்லை" என்றார். இதற்கும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் வணிகர் சங்கத்தைச் சேர்ந்த வி.பி.மணி பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைப்பதை நான் வரவேற்கிறேன். இதை கண்டிப்பாக அமைக்க வேண்டும். மெரினா கடற்கரைக்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும்" என்றார். அதற்கு கூட்டத்தில் இருந்த ஒரு தரப்பினர், "இங்கு அரசியல் பேசக்கூடாது. சுற்றுச்சூழல் பற்றி மட்டும்தான் பேச வேண்டும்" என்றனர். நொச்சிக்குப்பத்தை சேர்ந்த பெருமாள் பேசுகையில், "பேனா நினைவு சின்னம் அமைக்க கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார். நீலாங்கரையை சேர்ந்த பா.ஜனதா மீனவர் அணி தலைவர் முனுசாமி கூறுகையில், "மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்" என்று கூறி சில வார்த்தைகளை தெரிவித்தார். இதனால் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சிலர் குரல் கொடுத்தனர். இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை விலக்கிவிட்டனர். அப்போது கலெக்டர் அமிர்தஜோதி அவரிடம், "உங்களின் கோரிக்கைகளை எழுதி கொடுங்கள்" என்று கூறினார். பின்னர் போலீசார் பாதுகாப்புடன், முனுசாமியை கூட்டத்துக்கு வெளியே கொண்டு வந்துவிட்டனர். அதன் பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்தது. பொதுமக்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அவர் பேசுகையில், மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் வைக்ககூடாது. பேனா நினைவு சின்னம் வைக்க நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வேண்டுமானால் அண்ணா அறிவாலயத்தில் பேனா நினைவு சின்னம் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். இதற்கும் கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து கூட்டம் நடை பெற்றது.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...