Friday, October 31, 2014

ராஜீவ் குடும்பத்தின் பத்தாயிரம் கோடி சொத்து இன்று யாரிடம் இருக்கிறது ? கேட்பது சு.சுவாமி….!!

திருவாளர் சுப்ரமணியன் சுவாமி எத்தகைய நம்பகத்தன்மை உடையவர் என்பதை புரிந்துகொள்ள உதவும் பேட்டி ஒன்று  இங்கே …..
19/03/2008 அன்று ராஜீவ்-சோனியா தம்பதியின் மகள்
திருமதி பிரியங்கா வாத்ரா வெளியுலகம் அறியாமல்,
ரகசியமாக வேலூர் வந்து அங்கே சிறைப்பட்டிருந்த
திருமதி நளினியை சந்தித்திருக்கிறார்.
சந்திப்பு ரகசியமாக நிகழ்ந்தாலும், பிற்பாடு எப்படியோ
(நளினியின் வழக்குரைஞர் மூலமாக ….? ) விஷயம்
வெளிவந்து விடுகிறது.
இந்த சந்திப்பைப் பற்றி கேள்விப்பட்டு கொதிக்கிறார் சு.சுவாமி. சு.சுவாமி ஏன் கொதிக்க வேண்டும்…..?
அவர் செய்தியாளருக்கு கொடுத்த பேட்டியைப் பார்த்தால்
ஓரளவு புரியலாம்.
திருவாளர் சுப்ரமணியன் சுவாமி சொல்வதிலிருந்து -
‘ரீல்’ எது – ‘ரியல்’ எது என்று பிரித்தறிவதற்கு 
தனி சாமர்த்தியம் வேண்டும்…. பேட்டியைப் படிக்கும்போது, உங்கள் திறமையை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள் ..!
பேட்டிக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் -
( இந்த பேட்டி வெளியானது – ஏப்ரல் 2008 -ல் )
————————
Dr.swamy and  mrs.gandhi
-( நண்பரா ..? பகைவரா….? )-
பிரியங்கா-நளினி சந்திப்பு விவகாரத்தை அரசியல் புயல்
கிளப்பும் ஆயுதமாகக் கையில் எடுத்திருக்கிறார், ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி.
‘ ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை 
விதிக்கப்பட்டிருக்கும் கைதி நளினியை, சிறை ஆவணங்களில் கூட தன்னுடைய பெயரைப் பதிவு செய்யாமல், பிரியங்கா ஏன் வேறொருவர் பெயரில் சந்திக்க வேண்டும்?
சட்டவிரோதமான இந்தக் காரியத்தை சிறைத்துறை எப்படி அனுமதித்தது? ‘ -
என்றெல்லாம் கேள்விகளை அடுக்கி, தமிழகத் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பி இருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி. (அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது -திமுக.
கலைஞர் கருணாநிதி தான் முதலமைச்சர் ….)
மேலும், ‘தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம்
அதிகமாகி விட்டது. அவர்களோடு தொடர்புடையவர்களுடன் சோனியா காந்தி குடும்பம் நெருக்கமாக இருக்கிறது.  இங்கே ஆளும் தி.மு.க. அரசும் அதற்கு துணை போகிறது.
எனவே, தமிழக அரசை உடனடியாகக் கலைக்க வேண்டும்………..!!!
நளினி-பிரியங்கா சிறை சந்திப்புத் தொடர்பாக நான் கேட்டிருக்கும்  விவரங்களை தலைமைச் செயலாளர் திரிபாதி தரவில்லை யென்றால், நிச்சயம் நான் தமிழக அரசு மீது வழக்குப்  போடுவேன்…’ என்கிறார் சுப்ரமணியன் சுவாமி.
‘தன் அப்பாவைக் கொன்றது ஏன்?’ என்ற தகவலைக் கேட்டு அறிவதற்காக மட்டும் பிரியங்கா நளினியைப் பார்க்கவில்லை!  ராஜீவ் இறந்து பதினேழு வருடங்களுக்குப் பிறகு இது என்ன திடீர் அக்கறை?
நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிவரும் விஷயம், 
‘ராஜீவ் கொலை பற்றிய நிஜமான மர்மங்கள் சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியும்’ என்பதுதான்.
எனக்குக் கிடைத்திருக்கும் உறுதியான தகவல்களைச்
சொல்கிறேன் -
தன் சிறை அனுபவங்கள் குறித்து நளினியின் கணவர் முருகன் ஒரு புத்தகம் எழுதி வருகிறாராம். அதில், ராஜீவ் காந்தி கொலையில் சோனியா காந்தியின் அம்மாவான பவுலா மெய்னோவுக்கு ஏதோ தொடர்பு இருப்பதாக தெளிவாக எழுதி இருக்கிறாராம். இதெல்லாம் சோனியாவுக்குத் தெரியவர…  பதறிப்போய் தன்னுடைய மகளை சமாதானத் தூதுவராக வேலூர் அனுப்பி இருக்கிறார். இதுதான் உறுதியான உண்மை!”
”ரொம்ப அதிரடியாகச் சொல்கிறீர்களே… இதற்கெல்லாம் என்ன ஆதாரம்?”
”நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவரும் இந்தக் 
குற்றச்சாட்டுக்களை இதுநாள் வரையில் சோனியா 
குடும்பத்தினர் மறுக்கவில்லையே? அவருடைய அம்மா  பவுலா மெய்னோ, பாரீஸில் இருக்கும் ஒரு ஹோட்டலில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த மறைந்த ஆன்டன் பாலசிங்கத்தை சந்தித்துப் பேசியதுண்டு.
சோனியா குடும்பத்துக்கு நெருக்கமான குவாத்ரோச்சி,
விடுதலைப் புலிகளுக்கும் ஆயுத சப்ளை செய்து
கொண்டிருந்தவர்தான். சோனியா காந்தியின் அப்பா
ஸ்டெஃபினோ மெய்னோ, ஹிட்லரின் படையில் சிப்பாயாக இருந்தவர். பிற்பாடு ரஷ்ய உளவுப்படைக்கு ஏஜென்டாக இருந்தவர். இந்தக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நான்கு ஆண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டவர்.
இப்படியெல்லாம் குடும்ப வரலாற்றுப் பின்னணி சோனியா காந்திக்கு உள்ளது. ஆரம்பத்தில் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்கும் இவர்களுக்கும் ஏற்பட்ட புரிந்துகொள்ளலின்படி இப்போது இவர்களால் நடந்துகொள்ள முடியவில்லை. அதை மீறி விட்டார்கள்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிடும் இலங்கை
அரசாங்கத்துக்கு இந்தியா எல்லா உதவிகளும் செய்கிறது.
இதனால், புலிகள் நசுக்கப்படுகிறார்கள்.
‘வாக்குறுதிகள் மீறப்படுகின்றன’ என்பதை சோனியா தரப்புக்கு உணர்த்துவதற்காகத்தான், நளினி மூலமாக சில காய்களை புலிகள் நகர்த்தியிருக்கிறார்கள். அதன் விளைவுதான் புலிகளோடு சமாதானம் பேசுவதற்காக நளினியை சந்திக்கப் பிரியங்காவை அனுப்பி இருக்கிறார் என்கிறேன் நான்!”
”நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்?”
”இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை?! ராஜீவ் உயிரோடு இருந்தால், சோனியா அரசியலுக்கு வந்திருக்க முடியுமா?
ராஜீவ் குடும்பத்தின் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இன்றைக்கு யாரிடம் இருக்கிறது? 
கூட்டிக் கழித்துப் பாருங்கள், புரியும்.
அதுமட்டுமல்ல, ‘ராஜீவ் காந்தி ஃபவுன்டேஷன்’ என்ற பெயரில் நூற்றுக்கணக்கான கோடிகளை வசூலித்து டிரஸ்ட் போன்று  அமைத்திருக்கிறார் சோனியா. ராஜீவ் கொலையானபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உயிரைவிட்ட போலீஸ்காரர்கள், காங்கிரஸ்காரர்கள், பொதுமக்கள் ஆகியோரின் குடும்பத்துக்குத்தானே இந்த ஃபவுன்டேஷன் உதவ வேண்டும்?
ஆனால், ராஜீவைக் கொன்ற கொலையாளிகளான நளினியும் முருகனும் படிப்பதற்கல்லவா இந்த ஃபவுன்டேஷன் ஸ்காலர்ஷிப் கொடுக்கிறது!
”நளியின் வழக்கறிஞருக்கு இந்த சந்திப்பு எப்போது தெரிந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?”
”துரைசாமி, நளினியின் வழக்கறிஞர் மட்டுமல்ல.
விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் திராவிடர் கழகப் பிரமுகர்.  அவர், எதுவுமே தெரியாதது போல தனது தரப்பு ஆட்களை விட்டுத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்  பிரியங்கா-நளினியை சந்தித்து விட்டுச் சென்ற விவகாரத்தை சிறைத்துறை அதிகாரிகளிடமிருந்து புதுசாகக் கேட்பதுபோல் கேட்கிறார். ரகசியமாக நடந்த சந்திப்பை இதன் மூலம் உலகறிய வெளிப்படுத்துகிறார். அப்படியென்றால், பின்னணியில் மிகப் பெரிய நாடகம் நடந்து கொண்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்?
அவரைவிடுங்கள்… தமிழ்நாடு காங்கிரஸார் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்? ராஜீவ் கொலை பற்றி விசாரணை நடத்திய வர்மா கமிஷன், ‘ராஜீவ் இறப்பதற்கு முன்னால் காங்கிரஸ்காரர்கள் அவருடைய பாதுகாப்பைக் குலைப்பதில் நடந்த விவகாரங்களைக் குறித்து நிறைய விசாரிக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறது. அதுபற்றி என்றைக்காவது சோனியா யோசித்தாரா?
ஆனால், வர்மா கமிஷன் ஃபைல்களைத் தொலைத்ததில் பொறுப்பு உள்ள ப.சிதம்பரத்துக்கு நிதியமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறார். புலிகளுக்கு இரங்கற்பா பாடும் தி.மு.க-வோடு கூட்டணி ஏற்படுத்திக்கொள்கிறார்.”

உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்…

உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்…

1)உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும்

2)அதை இரண்டால் பெருக்கவும்..

3)அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்

4)கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்

5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்

6)அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc)

இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்…அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்… மற்ற (2 digit) எண் உங்களின் வயது…

நரசிம்மராவ் காலத்தில் அழிக்கப்பட்ட தகவல்கள்…. (சாமிகளின் சாகசங்கள்

நரசிம்மராவ் பிரதம மந்திரியாக இருந்தபோது 
ராஜீவ் கொலை விசாரணை
சம்பந்தப்பட்ட மிக முக்கியமான சில கோப்புகள் காணாமல் போயின.
அதெப்படி எப்படி பிரதமரின் அலுவலகத்தில் இருந்த கோப்புகள்,
அதுவும், நாட்டையே உலுக்கிய ராஜீவ் கொலை வழக்கு சம்பந்தமான
பைல்கள் காணாமல் போகும்..?
அவை அழிக்கப்பட்டன அல்லது வேண்டுமென்றே
ஒழி(ளி…? )க்கப்பட்டன என்பது தானே உண்மையாக இருக்க முடியும் …?
யார் கொடுத்த செய்தி இது …?
எப்படி இதை நம்புவது …?
அப்படிக் காணாமல் போன கோப்புகளின் பட்டியலை ஆதாரங்களுடன்
அப்போதைய ‘அவுட் லுக்’ ஆங்கில ஏடு (24.11.1999 இதழ்) பட்டியலிட்டுக்
காட்டி இருக்கிறது. 

‘அவுட் லுக்’ தந்த விவரங்கள் கீழே -
———————–
outlook logo
File containing intercepted messages from foreign intelligence agencies, said to be
addressed to Chandraswami and Janata Party president Subramanian Swamy,
destroyed by senior officials in the PMO.
File on IB’s assessment of the role played by Zail Singh and Chandraswami in 1987
to topple Rajiv Gandhi missing.
File with records of official briefings by intelligence agencies on the assassination to
Rao’s home minister S.B. Chavan missing. The former minister confirms he was
briefed orally.
File No. 8-1-WR/JSS/90/Vol.III—containing notings of bureaucrats regarding security
arrangements for Rajiv Gandhi from November ’89—was lost from the PMO in ’91.
Later, it was doctored and reconstructed by the Narasimha Rao government before
it was submitted to the Jain Commission.
File No. 1/12014/5/91-IAS/DIII reported missing since 1995. It pertained to the
terms of reference of the Verma and Jain commissions of inquiry.
The April 20, 1991, wireless intercept with the leading question—should Rajiv be
killed in Delhi or Madras?—missing.
———————-
1989 நவம்பரிலிருந்து ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி
அதிகாரிகள் எழுதிய குறிப்புகளைக் கொண்ட கோப்பு (8-1-WR/JSS/90/volIII)
பிரதமர் அலுவலகத்திலிருந்து 1991 ஆம் ஆண்டே காணாமல் போய் விட்டது.
ஜெயின் ஆணையம் இந்தக் கோப்பை கேட்டபோது இந்த கோப்பு
கிடைக்கவில்லை…… பிறகு, இருக்கும் தகவல்களை வைத்து,
ஒட்டு வேலைகள் செய்து புதிதாக ஒரு கோப்பை தயாரித்து, ஆணையத்தின் முன் சமர்ப்பித்தார்கள்.
இந்தக் கோப்புகளை எழுதிய அதிகாரிகளில் ஒருவர் வினோத் பாண்டே.
இவர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அமைச்சரவை செயலாளராக
இருந்தவர். ஜெயின் ஆணையத்தின் முன் சாட்சியமளித்த அந்த அதிகாரி,
கோப்புகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, இந்தக் கோப்புகளில் தான் எழுதிய
குறிப்புகள் இடம் பெறவில்லை; இவை திருத்தப் பட்டவை என்றார்.
அப்போது உள்துறையில் துணை அமைச்சராக இருந்தவர்,
திரு. ப. சிதம்பரம் அவர்கள்…. !!
கோப்புகள் திருத்தி, ஒட்டி, போலியாக தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து ஜெயின் ஆணையம் உள்துறை அமைச்சகத்தை அழைத்துக் கேட்டது. திரு.ப.சிதம்பரம் கூண்டில் ஏறி, ‘ஆம், ஒரிஜினல் கோப்புகளை எவ்வளவு தேடியும் கிடைக்காததால், இருக்கின்ற தகவல்களை
வைத்துக்கொண்டு கோப்புகளை புதிதாக தயாரித்தது உண்மைதான்’ என்று ஒப்புக் கொண்டார்.

அதே போல், சந்திரசாமி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி
ஆகியோருடன் வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தொடர்பு கொண்டு
பேசியபோது, உளவுத்துறையால் இடைமறித்துக் கேட்கப்பட்ட
உரையாடல்களைப் பதிவு செய்த கோப்பை பிரதமர் அலுவலகத்தைச்
சேர்ந்த மூத்த அதிகாரிகளே அழித்து விட்டனர்.
இந்த தகவல், ஆதார அழிப்புகளுக்கு – என்ன காரணம் …..?
சந்திராசாமி வெறும் ஜோசியம் கூறும் சாமியார் மட்டுமல்ல…
தாந்த்ரீக வேலைகளுடன் அவர் நின்று விடவில்லை….
அவருடைய தொடர்புகள் வெறும் அரசியல்வாதிகளோடும்
நின்று விடவில்லை.
அகில உலக அளவில், நேரிடையாகவும், கள்ளத்தனமாகவும் கூட
ஆயுத பேர, வியாபாரங்களில் ஈடுபட்ட மிகப்பெரிய புள்ளிகளான
அட்னன் கஷொகி (Adnan Khashoggi) மற்றும் என்ரி மில்லர் (Ernie Miller)
ஆகியோருடன் வியாபாரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு -
கள்ள ஆயுத பேரங்களில் ஈடுபட்டிருந்தார். ( இந்த விஷயம்
பிற்பாடு நிரூபிக்கப்பட்டு, அவருக்கு எட்டு கோடி ரூபாய் அபராதம்
விதிக்கப்பட ஒரு காரணமாகவும் இருந்தது. )
அப்போதைய பிரதமரான நரசிம்ம ராவுக்கு இவர் குரு.
பல முக்கியமான விஷயங்களில் நம்பிக்கையான ஆலோசகர்…!
இருவருக்கும் 25 ஆண்டுக்கால நெருங்கிய பழக்கம்.

சந்திராசாமியின் வியாபாரங்களில் சுப்ரமணியன் சுவாமிக்கு
என்ன பங்கு, எந்த அளவிற்கு தொடர்பு – என்பது நமக்குத் தெரியாது.
ஆனால் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது
அனைவருக்கும் தெரிந்த உண்மை.
1998 ஆம் ஆண்டு ராஜிவ் சர்மா என்பவர் ராஜீவ் காந்தி கொலையைப்
பற்றி ‘Beyond the Tigers’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்திற்கு ராஜீவ் கொலை நடந்தபோது மத்திய புலனாய்வுத்
துறையின் இயக்குனராக இருந்த விஜய்கரன் என்ற அதிகாரியே முன்னுரை எழுதியிருப்பதைப் பார்க்கும்போது, இதில் கூறப்படும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது..

அவர் தனது முன்னுரையில், இந்த புத்தகம் ஒரு போலீஸ் டைரியைப் போல்
இருப்பதாக குறிப்பிடுகிறார்.
போலீஸ் டைரியைப்போல் என்பதைவிட, போலீஸ் டைரியிலிருந்தே
பல செய்திகள் அப்படியே பிரதி எடுக்கப்பட்டுள்ளது போல் இருக்கிறது
என்று இந்த புத்தகத்தைப் பற்றிய விமரிசனங்கள் கூறுகின்றன.
எனவே, புலனாய்வுத் துறையில் ஈடுபட்டிருந்த ஒரு அதிகாரியே
இந்த புத்தகத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு கொண்டிருப்பார் என்றும் தோன்றுகிறது. இந்த புத்தகத்திற்கு பின் இணைப்புகளாக தரப்பட்டுள்ள ஆவணங்கள் புலனாய்வுத் துறை தொடர்புள்ளவையாகவே இருக்கின்றன….
இந்தப் புத்தகத்தின் முக்கிய கருத்து எப்படிப் போகிறது ……?
ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலைப் புலிகள்தான் என்று
இந்த புத்தகம் கூறுகிறது. ஆனால், அந்தக் கொலைக்குப் பின்னால்,
சில சர்வதேச சக்திகள் இருந்தன. அந்த சர்வதேச சக்திகளுக்காக
விடுதலைப் புலிகள் இந்தக் கொலையை செய்து முடித்துவிட்டு,
அதற்கு பிரதிபலன்களாக சக்தி வாய்ந்த கப்பல்களையும் ஆயுதங்களையும்
பெற்றுக் கொண்டார்கள். ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகுதான் புலிகளுக்கு
கப்பல்களில் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வரத் தொடங்கின.
எனவே, இதனைச் செய்து முடித்தால், பெரிய அளவிலான ஆயுத சப்ளைகள் செய்வதாகக்கூறி சில வெளிசக்திகள் விடுதலைப் புலிகளை இதில் செயல்பட வைத்திருக்கின்றன என்பதே இந்த புத்தகத்தின் மையக்கருத்து…!!
அந்த சர்வதேச சக்திகள் எவை …..?
சந்திராசாமிக்கு அதில் என்ன பங்கு ….?
ராஜீவ் காந்தி கொலை நிகழ்ந்த சமயத்தில், மத்தியில் பிரதமராக
ஆட்சி புரிந்தவர் சந்திரசேகர். அவரது அரசில், சட்ட அமைச்சராக
இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர் திரு.சுப்ரமணியன்சுவாமி.
கொலை நிகழ்ந்த நாளில், திருவாளர்கள் சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி
இருவரும் சென்னையில் தான் இருந்தார்கள் என்று ஜெயின் கமிஷன்
முன்பாக சாட்சியம் கூறப்படுகிறது…
ஆனால், இந்த விஷயங்களை மறைக்க முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
(இந்த விவரங்கள் பின்னால் வருகின்றன…)

” File containing intercepted messages from foreign intelligence agencies,
said to be addressed to Chandraswami and Janata Party president Subramanian
Swamy, destroyed by senior officials in the PMO. “
எனவே, நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, ராஜீவ் காந்தி
கொலை வழக்கில் சந்திராசாமி மற்றும் சுப்ரமணியன் சுவாமி
சம்பந்தப்பட்ட தகவல்கள் அழிக்கப்பட்டன என்று ‘அவுட் லுக்’
இதழ் ஆதாரங்களுடன் கூறுவது எங்கே கொண்டு போய் விடுகிறது …..?

இது விஷயத்தில் தீவிரமாகத் தோண்ட ஆரம்பித்த ஜெயின் கமிஷனை
முடக்குவதற்கான அனைத்து வேலைகளிலும் ராவ் அரசு இறங்கியது….
முதலில், நரசிம்ம ராவ் ஆசியுடன் முஷ்டாக் அஹ்மத் என்கிற
அட்ரஸ் இல்லாத வக்கீல் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில்,
ஜெயின் கமிஷனைக் கலைக்க வேண்டும் என்று ஒரு பெட்டிஷன்
போட்டார். இது கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டவுடன் -
மத்திய அரசு வெளிப்படையாக சுப்ரீம் கோர்ட்டில் இதே விஷயத்திற்காக,
ஒரு special leave petition (SLP) தாக்கல் செய்தது…..

விலகல் ஏன் என ஞானதேசிகன் விளக்கம்

 காங்கிரஸ் கட்சியில் மாநில தலைமைக்கு அதிகாரம் இல்லை என்றும், எந்தவொரு விஷயத்தையும் மாநில தலைமையிடம் கட்சி மேலிடம் ஆலோசிப்பதில்லை என்றும் தமிழக காங்., தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்துள்ள ஞானதேசிகன் இன்று சென்னையில் நிருபர்களிடம் பேட்டியின் போது தெரிவித்தார். அகில இந்திய தலைமை மீது தமிழக வரலாற்றில் குற்றச்சாட்டை சுமத்தி வெளியேறும் முதல் தலைவர் என்ற பெருமையை கட்சிக்கும் அவருக்கும் அவர் ஏற்படுத்தியுள்ளார். 

மூப்பனார், காமராஜர் : நேற்று டில்லியில் காங்., நிர்வாகிகளிடம் ராஜினாா கடிதம் கொடுத்து விட்டு இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன் நிருபர்களை சந்தித்தார். அவர் தனது பேட்டியில் கூறியதாவது: மாநிலத்தில் கட்சியில் ஒற்றுமை ஏற்படுத்த முயற்சித்தேன். நான் பல முறை டில்லி சென்று வந்தேன். உறுப்பினர்கள் கார்டுகளை யாரிடமும் கொடுக்க கூடாது என்று சொன்னார்கள். மூப்பனார், காமராஜர் ஆகியோரை ஒதுக்கி வைத்து கட்சி நடத்த முடியாது. உறுப்பினர் அட்டையில் காமராஜர், மூப்பனார் படங்களை அகற்ற கூடாது என எதிர்ப்பு தெரிவித்தேன். இதனை காங் ., தலைமை கேட்கவில்லை. 

மாநில அளவில் கட்சியை வளர்க்க மாநில தலைவர்களுக்கு அதிகாரம் வேண்டும். மாநில அளவில் கட்சி பலமாக இருந்தால்தான் அகில இந்திய அளவில் கட்சி வளரமுடியும். கட்சியின் நலனுக்காக நான் பல சங்கடங்களை சந்தித்துள்ளேன். தலைவர் இருக்கும் போது அடுத்த தலைவர் குறித்து பேசுவது நாகரிகம் அல்ல. சமீபத்திய பார்லி., தேர்தல் குறித்து மாநில தலைமையிடம் அகில இந்திய தலைமை எவ்வித கருத்தும் கேட்கவில்லை. 

கட்சியில் உள்ள நிர்வாகிகள் அழைப்பு விடுத்தும் கூட்டத்திற்கு வரவில்லை. இங்கு வேலை செய்பவர்களுக்கு, பதவி இல்லை. பதவி இல்லாமல் வேலை செய்பவர்களுக்கு பதவி என்னால் கொடுக்க முடியவில்லை. ஏற்கனவே பதவியில் இருப்பவர்களை என்னால் வேலை வாங்க முடியவில்லை. கட்சியை மறு சீரமைக்க வேண்டும் என நினைத்தால் நான் தடையாக இருக்க மாட்டேன் என டில்லியில் தலைவர்களிடம் சொல்லியிருக்கின்றேன். 

தலைவர் இருக்கும்போதே அடுத்த தலைவர் குறித்து பேசுவதா ? பல நிர்வாகிகள் கட்சி அலு<வலகத்திற்கே வருவதில்லை. செயலாளர்களை நியமிக்குமாறு பல முறை கட்சி தலைமைக்கு எடுத்து வைத்தும் கட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு தெரியாமல் ஒரு பொதுச்செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் ஆதரவாளர்கள் கட்சியில் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். சிதம்பரம் தனி ஆவர்த்தனம் நடத்துகிறார். 

அவரது ஆதரவாளர்கள் யாரும் மாநில கூட்டத்திற்கு வருவதில்லை. எனக்கு தெரியாமல் கூட்டம் நடத்துகின்றனர். இது மாநில தலைவருக்கு அவமானம் இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார். புதிய தலைவரை போட வேண்டுமென்றால் போடுங்கள் என்று சொன்னேன். மேற்கூறியா காரணங்களே எனது ராஜினாமாவுக்கு காரணம் என்று தெரிவித்தார். 

இவரது ராஜினாமாவை அடுத்து ஜி.கே.வாசன் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். தமிழக காங்கிரஸ் மத்தியில் பெரும் பரபரப்பும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. 

முதல்வர் அவர்களே – டாக்டர் சு.சு.வுக்கு எழுதுங்கள் ….. மோடிஜிக்கு எழுதிப் பயனில்லை….

கருணையின் மொத்த உருவம் – பகவான் புத்தரின் வழிவந்த, ராஜபக்சே அவர்களின் நல்லாட்சி நடைபெறும் இலங்கையில் -
நேற்று தூக்குதண்டனை விதிக்கப்பட்ட தமிழகத்தைச்
சேர்ந்த 5 மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற, மாண்புமிகு
தமிழக முதல்வர் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி
அவர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாக செய்திகள்
வெளியாகி இருக்கின்றன….
மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது
தமிழக அரசுக்கு இருக்கும் அக்கறையும், அனுதாபமும்
தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.
இருந்தாலும், அரசியல் சட்டப்படி,
தமிழகத்திற்கு இலங்கையை நேரடியாக
கையாளக்கூடிய அதிகாரம் இல்லையே.
தமிழகத்திற்கு இது விஷயத்தில், செயல்பட
அதிகாரம் இல்லை என்பதால்,
தமிழக முதல்வரிடமிருந்து பிரதமர் அவர்களுக்கு,
உதவி கோரி இதுவரை எத்தனையோ கடிதங்கள்
போயிருக்கின்றன. ஆனால் பதில் என்று எதாவது
இதுவரை வந்திருக்கிறதா …?
பாவம் பிரதமர் – அவர் எதையென்று கவனிப்பார் …?
மாறி மாறி வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் -
மாநிலங்களில் தேர்தல்கள் -
ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர்,
ஜார்கண்ட் என்று ….
ஒரு நாளைக்கு ஐந்து முறை உடை வேறு மாற்ற வேண்டும்….
இடையிடையே, துடைப்ப ஷோக்கள், ‘ஒற்றுமை ரன்’கள் வேறு.
அடுத்து ஆஸ்திரேலியா வேறு போய் அவர்கள்
பாராளுமன்றத்தில் இந்தியில் உரையாற்றியாக வேண்டும்.
எனவே பிரதமர் மோடிஜி அவர்களுக்கு இது குறித்து கவனிக்க நேரமில்லையோ என்னவோ…. இருந்தால் செய்திருக்க மாட்டாரா என்ன …? ஏற்கெனவே 200 மஹாராஷ்டிரா மீனவர்களையும், 60 படகுகளையும் பாகிஸ்தானிடமிருந்து மீட்டுத் தந்தவருக்கு இது ஒரு பெரிய காரியமா என்ன ….?
பிரதமரால், எல்லாவற்றையும் கவனிக்க இயலாது என்பதால் தான் தமிழ் நாட்டுக்கு என்றே, தமிழர் நலனில் மிகுந்த அக்கறை காட்டும் பாஜக மூத்த தலைவரான டாக்டர் சு.சு. அவர்களை நேர்ந்து விட்டிருக்கிறார்….
எனவே, தமிழகத்திற்கு, குறிப்பாக இலங்கையிலிருந்து
உடனடியாக எதாவது நடக்க வேண்டுமென்றால் -
திருவாளர் டாக்டர் சு.சு. அவர்களுக்கு கடிதம் எழுதும்படி
கேட்டுக் கொள்கிறேன். அவர் ராஜபக்சே அவர்களுக்கு
ஒரு ‘போன்’ போட்டாலே போதும். அடுத்த கணம் மீனவர்கள் விடுதலைபெற்று விடுவார்கள்.
இவருக்குப் போய் கடிதமா … என்றெல்லாம்
தயவுசெய்து யோசிக்க வேண்டாம் ..
வேறு வழி இல்லை ….
என்ன செய்வது… பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்,
புளிய மரத்தில் தானே குடித்தனம் செய்ய வேண்டும்….?

கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட பத்து பேர் மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!

2ஜி அலைக்கற்றை ஏல ஒதுக்கீட்டு முறையில் 800 கோடி ரூபாய் கைமாறிய விவகாரத்தில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மீது  வழக்குப் பதிவு செய்ய டெல்லி சிற்பி சிபிஐ நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
2ஜி அலைக்கற்றை ஊழல் முறைகேடுத் தொடர்பாக டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இன்று ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், அமிர்தம் உள்ளிட்ட 10 பேர் மற்றும் தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் உட்பட 9 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்படும் என்று எதிர்ப்பார்ப்பு நிலவியது. அதன் படி நீதிபதி ஷைனி மேற்கண்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளார். வழக்குப்
பதிவு செய்து வருகிற நவம்பர் 11ம் திகதிக்கும் விசாரணையைத் துவக்கிவிட வேண்டும் என்றும், நீதிபதி ஷைனி உத்தரவுப் பிறப்பித்துள்ளதுக் குறிப்பிடத் தக்கது.
இதற்கிடையில் வயது மூப்புக் காரணமாக தம்மை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சமர்ப்பித்திருந்த மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

Wednesday, October 29, 2014

பரஸ்பரம் மரியாதை

“நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது? – தன்னிக ரற்ற வரிகள் இவை
இறைச்சி பதப்படுத்தும் தொழிற் சாலையில் வேலைசெய்யும் ஒருவர் ,ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் Freezer அறைக்குள் எதோ வேலை யாக இருந்தபோது
திர்பாராத விதமாய் அதன் தானி யங்கி கதவு பூட்டிக் கொண்டு விட் டது.
உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழு ப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவி ல்லை மேலும் பெரும் பாலானோர் வேலை மு டிந்து கிளம்பிவிட்டனர்…இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப் போகி றோம் என்று எண்ணி கவலைஅடைந்தார் அவர்.

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்ட து. உயிர் வந்தவனாய் வெளியே ஓடி வந் தார். தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான். சந்தோஷத்தில் அவ னை கட்டி தழுவிக்கொண்டார். அவனிட ம் ” நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?” என்று கேட் டார்.
“சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்…நீங்க ஒருத்தர்மட்டும்தான் என்னையும் ஒரு மனுசனா மதி ச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர். இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதி ல் விழவில்லை.உடனே சந்தேகம் வந்து ள் ள வந்து ஒவ்வொரு இட மா தேடினேன்… அப்போ தான் உங்கள் கண்டு பிடிச்சேன் …” என்றான்
ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறை வாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை செலு த்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும் ஒரு விஷயம் தானே நண்பர்களே.

சு.சுவாமியையும், ச.சாமியையும் பாதுகாத்தது யார்….? நரசிம்மராவா… அல்லது ….. ?

( ரங்கனாத் வாக்குமூலம் தொடர்ச்சி ) -
கேள்வி – சிவராசன் பத்திரமாகத் தப்பித்துச் செல்வது
குறித்து அவனுக்கு எத்தகைய வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது ?
பதில் – சிவராசன், தான் ஜாப்னா திரும்பச் சென்றால்,
கொல்லப்படுவோம் என்று நினைத்தான். எனவே,
பங்களூரிலிருந்து நேரடியாக வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விடவே பங்களூர் வந்தான். ‘ஜெயின் முனி’ ( சந்திரா சாமியின் நிஜப்பெயர் “நேமி சந்த் “ஜெயின்” ) வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல தனக்கு உதவி செய்வார் என்று கூறினான். (டெல்லியிலிருந்து எந்தவித பயண ஆவணங்களும் இல்லாமலேயே வெகு சுலபமாக நேபாளம் சென்று விடலாம்…)
முதலில், சந்திராசாமி, சிவராசனை டெல்லி வரச்செய்து, அங்கிருந்து வெளிநாட்டுக்கு அனுப்புவதாகச் சொல்லி இருந்தார்.
கேள்வி – முழு உண்மையையும் சொல்லக் கூடாது என்று
சிபிஐ உங்களைத் தடுத்ததா …?
பதில் – ஆமாம். சிபிஐ என்னை முழு உண்மைகளையும்
சொல்ல விடாமல் தடுத்தது – பயமுறுத்தியது.
விடுதலைப் புலிகளைத் தவிர மற்றவர்கள் யாரும் இதில்சம்பந்தப்பட்டிருந்ததைப் பற்றி நான் எதுவுமே சொல்லக்கூடாது என்று என்னைத் தடுத்தது. கொலைக்கு காரணமானவர்கள் விடுதலைப்புலிகள் தான் என்று கூறக்கூடிய சாட்சியங்களை மட்டுமே சிபிஐ அனுமதித்தது. சதியின் பின்னணியில் இருந்தவர்களைப் பற்றி எல்லாம் பேசுவதை  அது விரும்பவில்லை.
கேள்வி – எத்தகைய உண்மைகளை சிபிஐ – பதிவு பண்ணவோ, ஏற்றுக் கொண்டு செயல்படவோ மறுத்தது ….?
பதில் – சிபிஐ-யின் தலைவர், ராஜீவ் கொலையில்,
காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சந்திராசாமி ஆகியோரின் தொடர்பு பற்றிய எதையும் நான் பேசக்கூடாது என்று என்னை எச்சரித்தார். ராஜீவ் காந்தி கொலைப் பின்னணி பற்றிய முழு உண்மைகளையும், அதில் சம்பந்தப்பட்டிருந்த ‘சக்தி’களைப் பற்றியும் அவர் முழுமையாக அறிந்திருந்தார் என்றே எனக்குத் தோன்றியது.
மாஜிஸ்டிரேட்டிடமோ, வேறு யாரிடமாவதோ -
இது குறித்த விவரங்களைக் கூறினால், நான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் என்னை கடுமையாக எச்சரித்தார். அவர் என்னிடம் சொல்லிய விதத்திலிருந்து, அவர் சந்திராசாமியையும் இன்னும் சில காங்கிரஸ் தலைவர்களையும் பாதுகாக்க விரும்புகிறார்
என்றே தோன்றியது. நான் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் – சிபிஐ – சிறப்பு புலனாய்வுக் குழு என்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுத்து விட்டது.
நான் கர்னாடகா போலீசைச் சேர்ந்த DCP கெம்பையா
அவர்களை பங்களூரில் சிவராசனும், சுபாவும் மறைவாக
தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றேன். ஆனால், அவரது வாக்குமூலம், கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை…
( ரங்கனாத் வாக்குமூலம் இங்கு முடிவடைகிறது )
———————————
இந்த இடத்தில் முக்கியமான கேள்வி ஒன்று எழுகிறது …
1990-ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபா மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் கொல்லப்பட்டார்கள். இந்தக் குழுவில் சிவராசனும் ஈடுபட்டிருந்தது பற்றி சொல்லப்பட்டது.
அந்த சமயத்தில் இவர்கள் எல்லோரும்
கொலைச்சம்பவத்திற்குப் பிறகு, உடனடியாக சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தப்பிச் சென்றனர். அதே போல், ராஜீவ் கொலை நிகழ்வு முடிந்தவுடன் சிவராசன் குழுவினர்
உடனடியாக இலங்கைக்கு தப்பிச் செல்லாதது ஏன்
என்பது தான் அந்த கேள்வி…!!!
1991 மே 21-ம் தேதி மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் கொலை நடந்தது.கிட்டத்தட்ட ஜூன் 23-ம் தேதி வரை -
ஒரு மாதத்திற்கும் மேலாக – சிவராசன் சென்னையில்தான் இருந்திருக்கிறான். சம்பவம் நடந்த ஸ்ரீபெரும்புதூருக்கும் கடற்கரைக்கும் அதிக தூரம் கிடையாது.
புலிகள் படகில் பறப்பதில் மிகவும் கெட்டிக்காரர்கள். இருந்தும் கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, சிவராசன் சாலை மார்க்கமாக டெல்லி செல்லவே திட்டமிட்டிருந்ததாக தெரிய வருகிறது….. அது ஏன்….?
இதில் எழும் இன்னுமொரு முக்கியமான சந்தேகம், சிவராசன் இரட்டை வேடம் போட்டானோ என்பது. சிவராசன் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு 1991 மார்ச் மாதம் சிங்கப்பூர், சவூதி அரேபியா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று வந்தது தெரிய வந்திருக்கிறது… இது விசாரணையின் ஒரு முக்கிய பகுதி. ஆனால், இதற்கான விளக்கங்கள் எதுவும் கூறப்படவில்லை.
சிவராசன் எல்.டி.டி.இ. இயக்கத்தில் சேரும் முன்னர்
‘டெலோ’ வில் இருந்திருக்கிறார். டெலோ இயக்கத்தை
சேர்ந்தவர்கள் பணம் பெற்றுக்கொண்டு, அந்நிய சக்திகளுக்காக சில செயல்களில் ஈடுபட்ட விவரங்களும் வெளியாகி இருக்கின்றன.சிவராசன் -எல்.டி.டி.இ-யிலும் இருந்து ண்டு மற்றவர்களுக்காகவும் செயல்பட்டு இருக்கலாம் என்கிற கோணமும் இங்கு தெரிகிறது.
ஜெயின் கமிஷன் ரிப்போர்ட்டின்படி பிரபல
ஆயுத வியாபாரிகளான அட்னன் கஷொகி (Adnan Khashoggi) மற்றும் எர்னி மில்லர் (Ernie Miller)
மற்றும் சாமியார் சந்திராசாமி போன்றவர்களுக்கிடையே
மில்லியன் கணக்கில் டாலர் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.
(சில வருடங்களுக்குப் பின் ஆட்சி மாறிய பிறகு,
சந்திராசாமி ஆசிரமத்தில் ரெய்டு நடந்தபோது,
இது பற்றிய ஆவணங்கள் ( Adnan Khashoggi பெயரில்
ச.சாமி வைத்திருந்த ட்ராப்டு உட்பட ) கைப்பற்றப்பட்டன…
நீண்ட கால விசாரணைகளுக்குப் பிறகு அந்நியச் செலாவணி மோசடி குற்றங்களுக்காக – மொத்தம் 13 வழக்குகள் – சந்திராசாமிக்கு டெல்லி கோர்ட் ஒன்று ஜூலை 2011-ல் ஒன்பது கோடி ரூபாய் அபராதம் விதித்தது )
அவுட்லுக் ஆங்கில இதழ் கூறியதன்படி சில ஆவணங்கள், கோப்புகள் அழிக்கப்பட்டன அல்லது காணாமல் போயின. அவற்றில் இருந்த தகவல்களுள் -
sswamy and rajiv
                            -( நண்பரா – பகைவரா….? )-

ச.சாமி மற்றும் சு.சாமிக்கும் வெளிநாட்டு சக்திகள்
சிலவற்றிற்கும் இடையே நிகழ்ந்த ரகசிய உரையாடல்களை இந்திய உளவு அமைப்பான ‘ரா’ இடைமறித்துக் கேட்ட தகவல்களும், கொலை நிகழ்ந்த நாளில் இரண்டு சாமிகளும் போய் வந்த இடங்கள், பயணங்கள் குறித்த  தகவல்களும் அடங்கும்.
இந்த ஆவணங்கள் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில்
அழிக்கப்பட்டன அல்லது காணாமல் போயின என்றால் -
யாரைக் காப்பாற்றுவதற்காக, பாதுகாப்பதற்காக
அது நடந்திருக்கும் …?
ச.சாமியையா, சு.சாமியையா அல்லது
காங்கிரஸ் தலைவர்கள் வேறு யாரையேனுமா ……. ?
ஜெயின் கமிஷன் ச.சாமிக்கும் – சு.சாமிக்கும் இடையே
நிலவிய உறவைப்பற்றி பல துண்டு துண்டான
தகவல்களைச் சேகரித்திருக்கிறது. அதில் ஒன்று -
கொலை நிகழ்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு
-1995-ல் ச.சாமியும், சு.சாமியும் ஒன்றாகச் சேர்ந்து
லண்டனுக்குச் சென்றிருக்கிறார்கள்.
இருவரும் Halkin Hotel என்கிற ஒரே ஹோட்டலில்
தங்கி இருந்திருக்கிறார்கள். இருவருக்குமான
ஹோட்டல் பில்’லை சந்திராசாமியே கொடுத்திருக்கிறார்.
இது குறித்து ஜெயின் கமிஷன் அறிக்கையில்
ஒரு பகுதி கூறுகிறது -
“Dr Swamy cannot be believed when he changes
his versions and when he is indefinite and
when he does not support his version by
any corroboratory evidence.
The divergence in the statements of Chandraswami
and Dr Swamy on the purpose of their joint visit to
London in 1995 does raise suspicions.”
……..
On the explanation of D.R. Karthikeyan, special director, CBI,
regarding the international ramifications, Jain writes that -
” it does not completely rule out the possibility of involvement beyond the LTTE.
If the SIT had investigated Chandraswami, Mahant Sewa Dass and interrogated ChandraShekhar, Swamy, T.N. Seshan and Narasimha Rao, it would have helped the Commission….”
ஜெயின் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட பின்னரும்
இவர்களது வெளிநாட்டு பயணங்கள், மற்றும் தொடர்புகள் பற்றிய தகவல்களை எல்லாம் சி.பி.ஐ-யும் சிறப்புப் புலனாய்வும் தீவிர கவனத்தில் எடுத்துகொண்டு விசாரணை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
( நான் முன்னதாகச் சொல்லியிருந்த, (Part4)
தமிழக டிஜிபி மோகன் தாசின் ‘the Assasination’
நாவல் நினைவிற்கு வருகிறதா …?
அந்த நாவலின்படி பாதர் மூன்சைன்னுக்கு (சந்திராசாமி)
ஜார்வின் (ராஜீவ் காந்தி) மீது போபர்ஸ் இராணுவ பீரங்கி
பேரத்திலிருந்து விரோதம் தொடங்குகிறது.
டிஜிபி மோகன் தாஸ் கூறியிருந்த மற்றொரு முக்கியமான தகவல், சிறப்பு புலன் விசாரணைக்குழுவின் தலைவரை
திருமதி சோனியா காந்தி தான் தேர்ந்தெடுத்தார் என்பது….!!! )
புலன் விசாரணை தொடக்கம் முதல் – சுப்ரீம் கோர்ட் வரை – அனைத்து உண்மைகளையும் குழப்பி,
பல சாட்சியங்களையும் அழித்து அல்லது மறைத்து -
புலிகள் மட்டும் தான் இதற்குக் காரணம் என்கிற
பிடிவாதமான ஒரு முடிவு திணிக்கப்பட்டிருக்கிறது
என்று சி.பி.ஐ- மீது ஒரு சாரார் குற்றம் சாட்டினால் -
அதற்கான சரியான விளக்கங்களையோ, பின்னணிகளைக்
குறித்த காரணங்களையோ -
சம்பந்தப்பட்டவர்கள் கொடுக்காமல்,
இந்த வாதங்கள் புறம் தள்ளப்பட்டது ஏன்….?
யாரைக் காப்பாற்ற….?
சந்திராசாமியையா …?
சுப்ரமணியன் சுவாமியையா …?
அல்லது காங்கிரஸ் தலைவர் யாரையாவதா …?

சாமிகளின் சாகசங்கள் தொடர்கிறது…… சிவராசன் தப்பிக்க சந்திராசாமி உதவியா …?

chandra and subramanian swamy
(  சேர்ந்தே இருந்தவர்கள் தான்  –  சந்திராசாமியும் அவரது நண்பர் சுப்ரமணியன் சுவாமியும் …….  !!!  )
——-
அரசியல்வாதி என்கிற போர்வையில் இயங்கிக்
கொண்டிருக்கிற ஒரு political blackmailer பற்றிய
இடுகைத் தொடர் இது. பயங்கரமான கிரிமினல் மூளை,
பல முக்கிய மனிதர்களைப் பற்றிய தனிப்பட்ட
ரகசியங்கள் கைவசம், (தற்போதைக்கு மத்தியில்
ஆளும் கட்சியின் அதிகாரத் துணை ) ஆகியவை
இந்தப் பெரியமனிதரின் பலம்.
நான் இந்த இடுகைத் தொடரில் தரும் தகவல்களை
ஏதோ எரிச்சல் காரணமாக எழுதப்படுகிற இடுகை என்று யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் இங்கு எழுதும் அத்தனை விஷயங்களுக்கும் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. (பல விஷயங்கள் பப்ளிக் டொமெய்னிலேயே உள்ளன ). பெரும்பாலான மக்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட்ட மற்றும் பெரும்பாலான மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லாத பல தகவல்களை சேகரித்து நான் இங்கு தருகிறேன். இதில் எதுவுமே என் கற்பனை அல்ல.
இந்த தலைப்பில் நான் இதற்கு முன் தந்த தகவல்களுக்கும் இனி தரவிருக்கின்ற தகவல்களுக்கும் இது பொருந்தும்.
முதலில் தனித்தனியான சில தகவல்கள் -
—————
அமெரிக்காவில் BCCI bank scam-ஐ விசாரிக்க
William Carry என்கிற அமெரிக்க செனட்டர் தலைமையில்
ஒரு சப்-கமிட்டி நியமிக்கப்பட்டது. அந்த கமிட்டி
BCCI bank-ன் கணக்குகளை பரிசீலித்த பிறகு
சில தகவல்களை வெளியிட்டது. அதன்படி -
உலக அளவில் அறியப்பட்ட ஆயுத வியாபாரிகளான -
(international arms dealers )
Adnan Khashoggi,
Ernie Miller
ஆகியோர் அந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தது
கண்டறியப்பட்டது. இதில் விசேஷம் என்னவென்றால், இவர்கள் இருவரும் சாமியார் சந்திராசாமியின் சீடர்கள்.
இந்த கமிட்டி மேலும் வெளியிட்ட தகவல் -
இவர்களது கணக்கிலிருந்து விடுதலைப்புலிகளுக்கு
84 மில்லியன் டாலர் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது.
அந்தப் பரிமாற்றம் ராஜீவ் கொலை தொடர்புடையதாக
இருக்கலாம்….
——————-
ராஜீவ் கொலை வழக்கு விசாரணையின் போது
ஜூலை 17, 1991 அன்று – மிராசுதார் ஷண்முகம் என்பவர் SIT யிடம் சிக்கினார்.
மே 1, 1991 -அன்று சிவராசன் குழுவினர் இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக தமிழகம் வந்து சேர்ந்தபோதுஷண்முகம் தான் அவர்களை வரவேற்று அதன் பின் பல விஷயங்களில் அவர்களுக்கு உதவியாக இருந்தவர்.
அவர் வசம் ராஜீவ் கொலைக்கான சதித்திட்டம் மற்றும்
அதில் சம்பந்தப்பட்டிருந்த இந்திய அரசியல்வாதிகள் பற்றிய சில தகவல்கள் ரகசிய குறிப்புகளாக (coded messages ) இருந்தன என்று ஒரு செய்தி. SIT அவரை விசாரணைக்காக பிடித்து, தன் பாதுகாப்பில் வைத்திருந்தபோது, அவர் தப்பித்து ஓடி விட்டதாக SIT- யால் பிறகு சொல்லப்பட்டது.
பிற்பாடு அவர், பிணமாக ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரிடமிருந்த ராஜீவ் கொலை பற்றிய விவரங்கள் அடங்கிய ரகசியத் தகவல்கள் என்ன ஆயின என்பது பற்றிய விஷயம் எதுவுமே பின்னர் வெளிவரவில்லை.
முன்னாள் தமிழக டிஜிபி மோகன் தாஸ் இது பற்றிக்
கூறும்போது,
“சண்முகம் தற்கொலை செய்துகொண்டிருக்க முடியாது -
அவர் நிச்சயமாகக் கொலை தான் செய்யப்பட்டிருக்கிறார்.
SIT பிடியிலிருந்தபோதும், அங்கிருந்து தப்பி ஓடியபோதும், வெள்ளை வேட்டி கட்டியிருந்த சண்முகம் – பின்னர் பிணமாகத் தொங்கும்போது லுங்கியில் தொங்கிக் கொண்டிருந்தது எப்படி ..?” என்று வினா எழுப்பினார்…. ஆனால் – பதில் ஏதும் கிடைக்கவில்லை….
——————–
முன்னாள் மத்திய அமைச்சர் கே.கே.திவாரி
“ராஜீவ் கொலைக்கான சதித்திட்டம் உதித்தது
சந்திராசாமியிடமிருந்து தான். அவருடன் சில
அந்நிய சக்திகளும் சேர்ந்திருந்தன” என்று கூறினார்.
ஆனால், இது அவரது அனுமானம் மட்டுமே. அவரால்
ஆதாரங்கள் எதையும் கொடுக்க முடியவில்லை.
————–
இந்த கொலையில் புலிகள் மட்டும் தான் சம்பந்தப்பட்டிருந்தனரா அல்லது இதன் பின்னணியில் உள்நாட்டு, வெளிநாட்டு சதி எதாவது இருக்கிறதா என்பதைப் பற்றி,
இந்தக் கொலை பற்றி தீவிரமாக விசாரித்த ஜெயின் கமிஷனால் எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.
ஆனால், நரசிம்ம ராவ் அரசு ஜெயின் கமிஷனிடமிருந்த
பல தகவல்களை மறைத்ததும்,
கமிஷனின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தராததும்,
கொலைக்குற்றத்தின் பின்னணியில் இருந்த சில முக்கிய மனிதர்களை பாதுகாக்க நரசிம்ம ராவ் அரசு முயன்றதோ என்கிற எண்ணத்தை உண்டு பண்ணுவது உண்மை.
சந்திராசாமிக்கும், சுப்ரமணியன் சுவாமிக்கும்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்த தொடர்புகள்
குறித்து பலர், ஜெயின் கமிஷன் உட்பட பல இடங்களில் கேள்விகள் எழுப்பினர்.
ஜெயின் கமிஷன், சுப்ரமணியன் சுவாமியை தீவிர சிபியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தது.
ஆனாலும், சிபிஐ இவர்களை விசாரிப்பதில் அக்கரை
காட்டவில்லை. ஏனோ …?
அந்த சாமிக்கும், இந்த சாமிகளுக்கும் தான் வெளிச்சம்….!!!
————————
ஜெ. ரங்கனாத்….40 வயதுடைய இவர்
கர்னாடகாவில் வசித்து வந்த ஒரு தமிழர்.
சிவராசனும், சுபாவும் – தன்னுடைய வீட்டில் இருக்கிறார்கள் என்ற தகவலை போலீசுக்குத் தெரிவித்தவரே இவர் தான்.
ஆனால், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக
ஆகஸ்டு 18,1991-அன்று, SIT யால் இவரும் கைது
செய்யப்பட்டு, ராஜீவ் கொலைவழக்கில் ஒரு குற்றவாளியாக ( 26வது எண் ) சேர்க்கப்பட்டு, அவருக்கும், முதலில் சிறப்பு நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ( பின்னர், ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பிறகு, அப்பீலில் – 1998, மே 11 அன்றுசுப்ரீம் கோர்ட்டால் ரங்கனாத் விடுவிக்கப்பட்டார்.)
வழக்கு நடந்து கொண்டிருந்த போது, ஜெயிலில் இருந்தே இந்த ரங்கனாத் ‘Outlook,’ ஆங்கில செய்தி இதழில் பணிபுரிந்து வந்த செய்தியாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் மூலமாக ஜெயின் கமிஷனுக்கு ஒரு வாக்குமூலம் கொடுத்தார்.
கொலைக்கும்பலைச் சேர்ந்த சிவராசன், சுபா ஆகியோரும், அவர்களைச் சேர்ந்த இன்னும் 5 பேரும்,
1991, ஆகஸ்ட் 6-ந்தேதி – ரங்கனாத் வீட்டின் பின்புற வாசல்
வழியே, பலவந்தமாக உள்ளே நுழைந்து ஆகஸ்ட்            20-ந்தேதி பிணமாகப் பிடிபடும் வரை அங்கேயே தங்கி இருந்தனர்.
அவர்கள் தன் வீட்டில் தங்கி இருக்கும் விவரத்தை
போலீசுக்குத் தெரிவித்தவரே ரங்கனாத் தான். பின்னர்,
குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது
செய்யப்பட்டு தண்டனை பெற்றவரும் அவரே.
அவர் வீட்டில் தங்கி இருந்தபோது, சிவராசன், சுபா
ஆகியோர் பேசிக்கொண்டிருந்த பல விஷயங்களைப்
பற்றிய விவரங்களை அறிந்தவர்கள் இந்த
ரங்கனாத் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மட்டுமே.
ஜெயின் கமிஷன் முன்னர் ரங்கனாத் கொடுத்த
வாக்குமூலத்தில் அவர் சிபிஐ மீது பல குற்றச்சாட்டுக்களை கூறி இருக்கிறார்.
சிவராசனும், அவனது கூட்டாளிகளும், பத்திரமாக
இந்தியாவை விட்டு வெளியேறி, மேற்கத்திய நாடு ஒன்றுக்கு தப்பிச்செல்ல உதவுவதாக சந்திராசாமி கூறி இருந்தாராம்.
சந்திராசாமி மற்றும் சில முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பது அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது தனக்கு தெரிய வந்தது என்றும்,
ஆனால் இந்த தகவல்களை எல்லாம் ரங்கனாத் சிபிஐ யிடம் கூறியபோது, அவர்கள் பதிவு செய்ய மறுத்து விட்டனராம்.
ராஜீவ் காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகள் காரணம் என்கிற தியரியை விட்டு வெளியே வழக்கை கொண்டு செல்ல சிபிஐ விரும்பவில்லை -என்று புகார் சொல்லி இருக்கிறார் ரங்கனாத். எந்தவித அரசியல் தொடர்போ, பின்னணியோ இல்லாத தன் சாட்சியத்தை, ஜெயின் கமிஷன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் ரங்கனாத்.
அதிகபட்ச பாதுகாப்பைக் கொண்டிருந்த பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரங்கனாத், சிறை அதிகாரியின் ஒப்புதல் கையெழுத்துடன், தன்னிடம் பேட்டி கண்ட outlook -இதழின் செய்தியாளர் திரு பன்னீர்செல்வம் கேட்ட பல கேள்விகளுக்கு
பதில் கூறி இருக்கிறார்.
பொதிந்திருக்கும் மிக முக்கியமான ரகசியங்கள் பல
அவற்றிலிருந்து வெளி வருகின்றன -
கேள்வி – சிவராசனும், சுபாவும் – தங்களுக்கு சந்திராசாமியுடன் உள்ள தொடர்பு பற்றி உங்களிடம் கூறினார்களா …?
பதில் – அவர்கள், சந்திராசாமியோடு தங்களுக்குள்ள
தொடர்புகளைப் பற்றி என்னிடம் கூறினார்கள். அதோடு,  கர்னாடகாவைச் சேர்ந்த, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இருந்த ஒரு காங்கிரஸ் தலைவரைப் பற்றியும் – அவர் மூலம் ராஜீவ் காந்தியின் சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்கள் தங்களுக்கு எப்படிக் கிடைத்தன என்பதைப்பற்றியும் கூட கூறினாகள்.
அதுமட்டுமல்லாமல், சிவராசன், சந்திராசாமியை
தன்னுடைய ‘God Father’ என்றும் கூறினான்.,

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...