Saturday, March 31, 2018

தாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில எளிய வழிகள்.

தாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில எளிய வழிகள்
1. நீங்கள்தான் திறமைசாலி என்று நீங்களே உங்களது மனதிற்குள் நூறுமுறை கூறிக்கொள்ளுங்கள் அப்போதுதான்
உங்கள் அடி மனதில் நீங்கள் திறமைசாலி என்பது அழுத்தமாக பதியும். அப்ப‍டி பதிந்தால் தான் நீங்கள் உங்கள் எதிரே இருப்ப‍வர்க ளுடன் பேசி, அவர்களுக்கு நீங்கள் சொல்ல‍விரும்பும் கருத்தைப் புரிய வைக்க‍ முடியும்.
2. நீங்கள் பேசும்போது உங்களுக்கு எதிரே இருப்ப‍வர்கள், முட்டாள்கள் என்று எண்ணிக்கொண்டு பேசுங்க ள். அப்போது தான் உங்களுக்குள் தைரியம் பிறக்கும் நீங்கள் பேச விரும்பியதை பேசமுடியும், அ தைப்போல அவர்கள்பேசி நீங்கள் கேட்கும்போது அவர்களை சிறந் த அறிவாளிகளாக எண் ணிக்கொள்ளுங்கள் ஏனெ ன்றால், பிறர் பேசுவதில் உ ள்ள‍ நல்ல‍ கருத்துக்களும் உங்களது வாழ்க்கைக்கு உதவும் வகையில் இருக்க‍ க் கூடும் ஆகையால் அவர் கள் பேசுவதை அலட்சியம் செய்யாமல், அறிவுப்பூர்மான அவர்க ளது பேச்சைக் கேளுங்கள்.
3. எந்த ஒரு இடத்திற்குச் சென்றாலும், அங்கு உங்களுக்குத் தேவையான விவ ரங்களைக் கேட்கச்செல்லும்போது அ ங்கு நீங்கள் கேட்கவிரும்பியதை கேட் காமல் தயங்கி தயங்கி நிற்கக் கூடாது.
4. எந்த இடத்திற்கு நீங்கள் சென்றாலும், அங்கே உங்களது நடையின் வேகத்தை க் கூட்டுங்கள். அங்கே நிமிர்ந்து நில்லுங்கள். பிறரை பார்த்துப் பேசும்போது அவர்களது கண்களைப் பார்த்துப் பேசுங்கள்
5. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங் கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கு ம் சம்பந்தமில்லைஎன்பதை ஏற்றுகொ ள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித் தாலும் தான், நான் அழகு என்று நினை ப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்க ளே ரசியுங்கள்.
6. எந்த மொழி சரளமாக பேச முடிய வில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலரு க்கு அவரவர் தாய் மொழி யையே சரியாகப் பேசத் தெரியாதென்று.
7. உங்களால் எது முடியாது. உங்க ளுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்,அதை வி ரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய் முயற்சி செய் யுங்கள்.
8. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அ மைவதில்லை என்பதே உண்மை .
9. உங்களுக்கு எதுவும் தெரியா து. எதிரில் நிற்பவருக்கு எல்லா மே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ண ம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.
10. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத் துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரி ந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள் விகளை சரியாக புரியவைத்தவர்கள்.
11. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வர ப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங் கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்துவிட்டு முன் செல் லுங்கள்.
12. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிரா கரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில் லை, நிராகரித்தவருக்கே என்பதை புரி ந்துக்கொள்ளுங்க ள்.
13. மாற்றத்தை வெளியில் தேடாமல் உங் களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மை யை எளிதில் போக்கி விடலாம்.

உங்கள் ராசிக்கு எந்த‌ சனி பிடித்திருக்கிறது என்பதை அறிய வேண்டுமா?

உங்கள் ராசிக்கு எந்த‌ சனி பிடித்திருக்கிறது என்பதை அறிய வேண்டுமா?

இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு உள்ளிட்ட‍ பல
சனீஸ்வர தலங்களில் சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தேறின• இந்த சனிப்பெ யர்ச்சியானது இராசிகள் மேஷம் (Mesha, Aries), ரிஷபம் (Vrishabha, Taurus), மிதுனம் (Mithuna, Gemini), கடகம் (Karka, Cancer ), சிம்ம‍ம் (Simha, Leo), கன்னி (Kanya ,Virgo), துலாம் (Tula, Libra ), விருச்சிகம் (Vrishchika, Scorpio), தனுசு ( Dhanu, Sagittarius), மகரம் (Makara, Capricorn), கும்பம் (Kumbha, Aquarius), மீனம் (Meena, Pisces) ஆகிய 12 இராசிகள் ஒவ்வொன்றிக்கும் என்ன வகையான சனி பிடித்திருக்கி றது என்பதை இங்கு காண்போம்.
மேஷம்:
பாக்கிய சனி தந்தை – தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் – பணப் பிரச்சனை
ரிஷபம்:
அஷ்டம சனி அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை
மிதுனம்:
கண்டக சனி வாகனங்களில் செல்லும் போது கவனம் – வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற மன சஞ்சலம்
கடகம்:
ரண ருண சனி உடல்நலத்தில் கவனம் தேவை
சிம்மம்:
பஞ்சம சனி குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம்
கன்னி:
அர்த்தாஷ்டம சனி வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்க தடை
துலாம்:
தைரிய வீர்ய சனி தைரிய அதிகரிக்கும் – மதியூகம் வெளிப்படும்
விருச்சிகம்:
வாக்குச் சனி வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் தேவை
தனுசு:
ஜென்ம சனி அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை
மகரம்:
விரைய சனி வீண் விரையம் ஏற்படுதல்
கும்பம்:
லாப சனி அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகரிக்கும்
மீனம்:
தொழில் சனி தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம்.

சுக்கிரன் சுகபோகங்களை அள்ளித்தரும் ராசிக்காரர்கள் யார் யார்.

சுக்கிரன் சுகபோகங்களை அள்ளித்தரும் ராசிக்காரர்கள் யார் யார்?

சுக்கிரன் சுகபோகங்களை அள்ளித்தரும் ராசிக்காரர்கள் யார் யார்?
12 ராசிகளை வைத்த‍ ஒரு மனிதனின் வாழ்க்கையை கணக்கிடப்படுகிறது. அந்த
வகையில் சுக்கிரன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதல் நெருப்பு ராசியான மேஷத்தில் சஞ்சாரம் செய்யப்போகிறார். இந்த சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்க ளுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்ப்போம். (மீனத்தில் இருந்து மேஷத்திற்கு இடம் மாறிய சுக்கிரன்: 12 ராசிகளுக்கு மான பலன்கள்)
மேஷம்
சுக்கிரன் 2 மற்றும் 7ம் வீடுகளுக்கு ஆதிபத்யம் பெறுவதால் சுக்கிரன் தரும் பலன்க ள் மிக முக்கிய மானைவயாகும். உங்கள் ராசிக்கு 12வது இடத்தில் அமர்ந்து சுப விரையங்களை ஏற்படுத்தி வந்த சுக்கிரன், இன்று முதல் உங்கள் ராசியில் அமர்கி றார். வார்த்தைகளில் நளினமும் சாதுா்யமும் பளிச்சிடும். ஆடை ஆபரணம் வாகன ம் வீடு வழியில் ஆதாயம் இருக்கிறது. வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்க ளை வாங்குவீா்கள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதியா் சமேதமாக ஆலய தரிசனம் செல்ல நேரம் கூடி வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கும். மகாலட்சுமிக்கு சந்தனம், குங்குமம் வாங்கி கொடுக்கலாம்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு 12வது இடத்தில் ராசி அதிபதி சுக்கிரன் அமர்கிறார். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கூடி வரும். வாழ்க்கைத் துணையின் மூலம் எதிர்பாராத செலவு கள் ஏற்படும். செய்யும் காரியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மற்றவா்க ளின் யோசனைகளின் போல் அவசரமாக தகாத காரியத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு உரிய பரிகாரம் செய்வதால் மன நிம்மதி உடல் ஆரோக்கியம் மேம்படும் பண வருவாய் அதிகரிப்ப தோடு சுப விரைய செலவுகளும் ஏற்படும். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாத பெருமாளை தரிசனம் செய்து வரலாம்.
மிதுனம்
உங்கள் ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வது சிறப்பான அம்சம். பணவரவு அதிகரிக்கும் வாகன வசதி வாங்கக் கூடிய காலம் கைகூடி வந் துள்ளது. குழந்தைகள் வழியில் நல்லது நடக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சிலர் வீடு மனை வாங்கலாம். மேலும் நன்மைகள் பல நடக்க தினசரி நெற்றியில் சந்தனம் பூசி வரலாம்.
கடகம்
உங்கள் ராசிக்கு 10வது இடமான கர்ம ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானமாகும். பணியிடத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கு ம். பணவரவு எதிர்பாராத வகையில் வரும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும் வாழ்க்கைத்துணையின் வழியில் நல்லது நடக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கு ம். உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் பிரச்சினைகள், நோய்களை உடனடியாக கவனிக்க வேண்டும். நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க வெள்ளிக்கிழமைகளில் ருத்ரஅபிஷேகம் செய்யலாம்.
சிம்மம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 9வது இடமான தர்ம ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். சமூ கத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணவருவாய் அதிகரிக்கும் கால கட்டம் இது. குடும்பத்தோடு பிரபல கோவில்களுக்கு சென்று வருவீர்கள். உடல் ஆரோக்கி யமாக இருந்தாலும் பணிச்சுமை அதிகரிக்கும் இதனால் மனஉளைச்சல் ஏற்படும். பரிகாரமாக வெள்ளிக்கிழமைகளில் கோவில்களுக்கு நெய் வாங்கி அம்மனுக்கு அபிஷேகம் செய்ய தரலாம்.
கன்னி
உங்கள் ராசிக்கு 8 ஆம் இடமான அட்டம பாவத்தில் சுக்கிரன் அமா்ந்திருப்பது பாதி ப்பை ஏற்படுத்தும். பண வருவாய் அதிகாித்தாலும் மன நிம்மதியும் திருப்தியும் இரு க்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி சுப நிகழ்ச்சி என செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு வீடு நிலம் வாகனம் வாங்கும் யோகம் வரும். ஆடை ஆபரணம் வாகனம் நிலம் வீடு வாங்குவதற்கான யோகம் கூடி வரும். குடும்பத்தில் தம்பதியா் மன மகிழ்ச்சியாக இருப்பார்கள். சிலர் கடன் வாங்க வேண்டியிருக்கும் உடல் ஆரோக் கியத்தில் எச்சரிக்கை தேவை. பசுவிற்கு தானம் கொடுங்கள்
துலாம்
மேஷம் ராசியில் அமர்ந்து சுக்கிரன் தனது 7வது பார்வையால் துலாம் ராசியை பார் க்கிறார். இது நன்மை தரும் அமைப்பாகும். தனது ஆட்சி வீட்டினை ஏழாம் பார்வை யாக பார்க்கிறார் சுக்கிரன். உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் சுக்கிரன் அமா்ந்திருப்பது சிறப்பான காலம். சிலருக்கு காதல் ஏற்படும் காலமாகும். பெண்கள் வழியில் உதவி கள் கிடைக்கும். நண்பா்கள் சோ்க்கையில் எச்சாிக்கை தேவை. பண வருவாய் அதிகாிக்கும். நல்வாய்ப்பானது தேடி வரும். தம்பதியா் மனமகிழ்ச்சியாய் இருக்கும் காலம் இதுவாகும். உடல் ஆரோக்கியம் விசயத்தில் கவனம் தேவை. வெள்ளிக் கிழ மைகளில் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்க.
விருச்சிகம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைந்திருப்பது நல்லதல்ல. உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டிய காலமிது. பணியிடங்களில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய கால மிது. என்னதால் வேலை செய்தாலும் அதற்கு அங்கீகாரம் இல்லையே என்ற கவலைகள், சங்கடங்கள் சூழும் காலமிது. வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியை வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்வதன் மூலம் பாதிப்புகள் குறையும்.
தனுசு
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் அமர்ந்துள்ளதன் மூலம் காதல் உணர்வுகள் அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்ப தால் வாழ்க்கைத் துணையை அழைத்துக் கொண்டு உல்லாச பயணம் செல்லலாம். சிலருக்கு காதல் மலரும்காலமிது. காதலிக்கும் பெண்ணிடம் தைரியமாக காதலை சொல்லலாம். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். மகாவிஷ்ணுவை தினசரியும் வணங்க மேலும் நல்லது நடக்கும்.
மகரம்
உங்கள் ராசிக்கு 4வது இடத்தில் சுக்கிரன் அமர இருப்பதால் வீட்டிற்குத்தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வண்டி வாக னம் வாங்கும் போது மட்டும் பார்த்து கவனித்து வாங்க வேண்டும். வீட்டுக்குத் தே வையான அலங்கார பொருட்களை வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் அதிகம் வைக்க வேண்டிய நேரமிது. மனைவி குழந்தைகளினால் மகிழ்ச்சி ஏற்படும். சிவபெருமான் பார்வதியை பச்சரிசி கொண்டு வணங்கலாம். நெற்றியில் தினசரியும் குங்குமம் வைக்க மேலும் நல்லது நடக்கும்.
கும்பம்
உங்கள் ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் குடியேறியுள்ளார் சுக்கிரன். சுக்கிரனால் பணியிடத்தில் நல்ல விசயங்கள் அதிகரிக்கும். உங்களின் பேச்சுத் திற மையும், அழகியல் உணர்வும் அதிகரிக்கும். உடல் நலத்தில் சின்னச்சின்ன பாதிப்புக ள் ஏற்படும் என்பதால் அலட்சியம் செய்யவேண்டாம். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் வாகன பயணத்தில் கவனம் தேவை. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வணங்குங்கள். சனிக்கிழமைகளில் ஹனுமன் சாலீசா படிக்க நன்மை அதிகரிக்கும்.
மீனம்
ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். பண வரு வாய் அதிகரிப்பதோடு வீட்டில் சந்தோச அலைகள் வீசும் காலமிது. மனைவியுடன் உறவில் உற்சாகம் பிறக்கும். திருமணம், விருந்து விஷேசங்களுக்கு சென்று வருவீ ர்கள். பண வரவு அதிகரிக்கும் வீட்டிற்குதேவையாக பொருட்களை வாங்கி சேர்ப்பீர் கள். தொழில் நண்பர்களுடன் உறவு மேம்படும். வீட்டில் சமூகத்தில் மதிப்பு மரியா தை கூடும். பேசும் வார்த்தைகளில் இனிமை அதிகரிக்கும். சிலருக்கு புதிய வாய்ப்பு கள் தேடி வரும்.வெள்ளிக்கிழமைகளில் வெண் சந்தனத்தை சிலருக்கு தானமாக தரலாம்.

நுரையீரலுக்கு கெடுதலை விளைவிக்கும் கொசு விரட்டிகள் !!!

வீட்டை எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும், கொசுக்கள் மட்டும் எங்கிருந்து தான் வருகிறதோ தெரியவில்லை. அவ்வாறு கொசுக்கள் வருவதால் இரவில் நன்றாக தூங்க முடியாமல் அவஸ் தைபடுகிறோம். இந்த அவஸ்தை யை நீக்க கடைகளில் கொசுக்க ளை விரட்ட விற்கப்படும் கொசு வர்த்தி, மேட், கிரீம் போன்ற பொரு ட்களைப் பயன்படுத்துகிறோம். அவ் வாறு அவற்றை பயன்படுத்துவதா ல் நம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று தற்போதைய ஆய்வி ல் தெரிய வந்துள்ளது. அதிலும் ஒரு கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை, 100 சிகரெட்களுக்கு சமம் என்றும் அவர்கள் கூறுகின் றனர்.
மேலும் அந்த ஆய்வில் கொசுக்க ளை விரட்ட பயன்படுத்தும் பொரு ட்களில் கொசுக்களை அழிக்கும் கெமிக்கலான அலெத்ரின் (alletrin) இருக்கிறது. இது கொசுக்களை மட் டும் அழிப்பதில்லை, நமது நுரையிர ல்களையும் அழிக்கிறது. ஏனெனில் அதனை இரவில் தூக்கும்போது அதி கம் சுவாசிப்பதால், நமது உடலில் நல்ல ஆக்ஸிஜன் செல்வது தடைபட்டு, மாசுபட்டிருக்கும் காற்றை சுவாசிப்பதால், நுரையீரலில் அந்த காற்று அடைபட்டு, நுரையீரலின் அரையை பாதி க்கிறது.
சிலர் கொசுக்களுக்கு பயந்து மாலை நேரத்தில் இருந்தே, வீட்டு ஜன் னல்கள், கதவுகள் என்று அனைத்தை யும் அடைத்துவிட்டு, இந்த கொசு விரட் டிகளை போட்டுவிடுகின்றனர். அது மட் டுமல்லாமல், அவ்வாறு அடைத்து விடு வதால், வீட்டில் சமைக்கும்போது வரு ம் புகை, இந்த கொசு விரட்டிகளால் வரும் புகை என்று வீட்டில் நல்ல காற் றைவிட, அசுத்தமான காற்று இருப்பதா ல், அவற்றை சுவாசிக்கும் போது, அந்த கொசு விரட்டிகளில் உள்ள விஷம் உடலில் வந்துவிட்டது என்பத ற்கு அறிகுறியாக முதலில் சளி, காய்ச்சல் என்று ஆரம்பிக்கும்.
இவை மூன்று நாட்கள் நீடித்தால், அதனை அலர்ஜி என்று முடிவு செய்து, அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு ஒரு நோயா ளியாக நாமே ஏற்படுத்திக் கொள் கிறோம். பின்னர் அந்நிலை சற்று படிப்படியாக முன்னேறிய தன் அறிகுறியாக, உடலில் ஆஸ்துமா என்னும் நோய் வந்து விடுகிறது. சில பிறந்த குழந்தைகள் அந்த மேட் புகையை சுவாசித்தால், வ லிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று லக்னோ கிஸ் ஜோர் ஜின் மருத்துவப் பல்கலைக் கழகத்தி ல் கூறப்படுகிறது. அதுமட்டு மல் லாமல், அந்த புகையை சுவாசிப்பதால் சில சமயங்களில் சிலரு க்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்த வல்லது என்றும், கொசு விரட்டி யில் உள்ள டயோக்சின் புற்றுநோயை உரு வாக்க வல்லது என்றும் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
ஆகவே கொசுக்களை விரட்ட பணத்தை செலவழித்து கொசு விரட்டிகளை வாங்குவதை வி ட, ஈஸியாக கொசு வலைகளை கட்டி சுத்தமான காற்றை சுவா சித்து, ஆரோக்கியமாக வாழ லாம் என்றும் கூறு கின்றனர்.

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.
1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…
காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.
வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.
ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…
ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…
பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…
விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…
மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…
உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…
மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…
வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…
அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…
ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…
அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…
ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…
ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…
ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…
உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…
தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…
ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…
பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…
10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…
யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…
நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…
பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…
10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…
போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…
வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…
வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…
ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…
10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…
10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…
பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…
கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…
பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…
தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…
12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…
இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…
உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...