Friday, September 30, 2022

அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு தேர்தல் நடத்த... தடை! பழனிசாமி பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

 அ.தி.மு,க., பொதுச் செயலர் பதவிக்கு தேர்தல் நடத்த, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பொதுக் குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம் தொடர்ந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, கட்சியின் இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமிக்கு 'நோட்டீஸ்' அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிமுக, பொதுச் செயலர் ,பதவி, தடை, பழனிசாமி, உத்தரவு



சென்னையில், கடந்த ஜூலை 11ல் நடந்த அ.தி.மு.க., பொதுக் குழுவில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக முன்னாள் முதல்வர் பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வு, ஜூலை 11ல் நடந்த பொதுக் குழு செல்லாது என உத்தரவிட்டது.
இதையடுத்து, பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், பொதுக் குழு செல்லும் என்றும், பழனிசாமி இடைக்கால பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் உத்தரவிட்டது.


விசாரணை



இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ரஞ்சித் குமார், கிருஷ்ணகுமார் ஆகியோர் வாதிட்டதாவது:எங்கள் கட்சிக்காரர், அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளராக தொடர்கிறார். அவரது ஐந்துஆண்டு பதவிக் காலம் 2026 டிசம்பரில் தான் முடிவடைகிறது. அதற்கு மாறாக பொதுச் செயலர் தேர்வு செய்யப்படுவது செல்லாது.


நோட்டீஸ்



கட்சியின் பொதுக் குழுவைக் கூட்ட, ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் தேவை. ஆனால், சில காரணங்களை கூறி, இந்த விதிமுறையை டிவிஷன் பெஞ்ச் மாற்ற முடியாது. வழக்கு நிலுவையில் உள்ளபோது, நிரந்தர பொதுச் செயலரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

இதையடுத்து, 'இந்த வழக்கை விசாரிக்கும் வரை, பொதுச் செயலருக்கான தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை, நவ., 21ல் நடக்கும்' என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர். இதைத் தொடர்ந்து, 'பொதுச் செயலர் தேர்தலை நடத்த மாட்டோம்' என, பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்துள்ள வழக்கிற்கு பதில் அளிக்கும்படி, பழனிசாமி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்...!!!*_

 _*மனைவியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு கணவரின் உணர்வுப் பூர்வமாக எச்சரிக்கை...!!!*_

_*தன் மனைவியை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் கணவனிடம் கேட்டாள்... ஏங்க என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று...*_
_*ஆனால் அதை கணவன் சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்...*_
_*ஒரு நாள் மனைவி தன் கணவனிடம் வந்து கேட்டாள்.. ஏங்க நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்...*_
_*பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்... அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் கணவன் கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம் போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா??? என கேட்டார்...*_
_*மனைவி பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் கணவன் அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்...*_
_*அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...*_
_*கணவன் சொன்னார்.. .. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை அடைய இந்த நூல் உதவியாய் இருக்கிறது...*_
_*இதேபோலத்தான் உன் கணவனாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனது போல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்...*_
_*இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை... நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மனைவி தன்கணவனை கட்டி அணைத்துக் கொண்டாள்...!!!*_
_*ஆம் அன்பான மனைவிகளே... உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது...*_
_*எனவே கணவருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்...!!!*_
_*கணவனின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மனைவி, குடும்ப வாழ்வு
இனிமையாக
அமையும்........
May be an image of 2 people and people standing

காங்., தலைவர் பதவி:சசி தரூருக்கு எதிராக மல்லிகார்ஜுன கார்கே!

 'தேர்தலில் நடுநிலை வகிப்பேன்' எனக் கூறிய சோனியா, கட்சியை தன் முழு கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து வைத்திருப்பதற்காக, கடைசி நேரத்தில் தன் ஆதரவாளர் மல்லிகார்ஜுன கார்கேவை, சசி தரூருக்கு எதிராக களம் இறக்கி, நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதனால், காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.

காங், தலைவர் , பதவி, சசி தரூர், மல்லிகார்ஜுன கார்கே


காங்., தலைவர் தேர்தலில், ராகுல் போட்டியிடவில்லை என்பது உறுதியானதும், களத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறி, பல தலைவர்கள் பெயர்களும், ஊடகங்களில் அடிபடத் துவங்கின. முதல் ஆளாக கேரள மாநிலம், திருவனந்தபுரம் எம்.பி.,யான சசி தரூர், தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்து, சோனியாவை நேரடியாக சந்தித்து பேசினார்.அப்போது, 'யார் பக்கமும் நிற்க மாட்டேன்; புதிய தலைவருக்கான தேர்தலில் நடுநிலை வகிப்பேன்' என, சோனியா வாக்குறுதி அளித்தார். இருந்தாலும், சோனியாவின் குடும்பம் மற்றும் அவரது விசுவாசிகள் உஷாராகத் துவங்கினர்.ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிடம் பேசி, அவரை சோனியாவின் ஆசி பெற்ற மேலிட வேட்பாளராக நிறுத்த ஏற்பாடானது. அவரோ, கட்சித் தலைவராக, சோனியா - ராகுலின் அடிமையாகச் செயல்படுவதை விட, மாநிலத்தில் உள்ள அதிகாரமே சிறந்தது எனக் கருதி, தன் ஆதரவாளர்களை வைத்து அரங்கேற்றிய நாடகத்தால், அனைத்து ஏற்பாடுகளும் தவிடுபொடியாகின.

இதையடுத்து, வேறொரு நபரை தேடத் துவங்கிய சோனியா தரப்பு, கமல்நாத்தில் துவங்கி, முகுல் வாஸ்னிக், திக்விஜய் சிங் என பலரது பெயர்களையும் பரிசீலித்தும், ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தது.சோனியா குடும்பத்தைத் தாண்டி, வேறொரு நபரின் கட்டுப்பாட்டுக்கு கட்சி போனால், நிர்வாகம் கைமீறி விடும் எனக் கருதி, நேற்று முன்தினம் நள்ளிரவையும் தாண்டி நடந்த ஆலோசனையின் முடிவில், மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, சசி தரூரை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்து இருந்த திக்விஜய் சிங் அவசரமாக அழைக்கப்பட்டு, தன் முடிவை வாபஸ் வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.

பின், ஏற்கனவே அறிவித்திருந்தபடி, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, சசி தரூர் காலை 11:00 மணிக்கு தன் ஆதரவாளர்களுடன், மேளதாளங்கள் முழங்க, கழுத்தில் மாலைகளை அணிந்தபடி தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.தேர்தல் பணிக்குழு தலைவர் மதுசூதன் மிஸ்த்ரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக வந்தபோது, அவரது பேனா கை நழுவி கீழே விழுந்தது. அவரது ஆதரவாளர் கீழே குனிந்து அதை எடுத்துக் கொடுத்தார். அதை மற்றவர்கள் அபசகுனமாகக் கருதினாலும், சசி தரூர் அதைப் பொருட்படுத்தாமல் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முக்கிய தலைவர்கள், அறிமுகமான முகங்கள் என யாருமே சசி தரூர் உடன் இல்லை. கட்சி அலுவலக வளாகத்தில், அனைத்து தலைவர்களும் இருந்தனர்.அதே நேரத்தில் சில மணி நேரம் கழித்து மல்லிகார்ஜுன கார்கே வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது, அசோக் கெலாட், திக்விஜய் சிங், பவன்குமார் பன்சல் என, மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். வேட்பு மனுவில் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட, 30 தலைவர்கள் முன்மொழிந்தனர்.

இப்படி கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் உடன் வர வேண்டுமென்றும், அவ்வாறு செய்வதன் வாயிலாக, இவர் தான் தலைமையின் வேட்பாளர், சோனியா - ராகுல் ஆதரவு இவருக்குத் தான் என்பதை மறைமுகமாக உணர்த்த வேண்டுமென, கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்திருந்தது. வேட்பு மனு தாக்கல் சம்பவங்களில் இது அப்பட்டமாக தெரிந்தது. வேடிக்கை என்னவெனில், 'ஜி 23' குழுவின் முக்கிய உறுப்பினர்களாக இருந்து, சோனியாவுக்கு எதிராக கையெழுத்து போட்ட ஆனந்த் சர்மா, பூபிந்தர் சிங் ஹூடா, மணீஷ் திவாரி, பிரித்விராஜ் சவுகான் என எல்லாருமே, மல்லிகார்ஜுன கார்கே பின் அணிவகுத்தனர்.
சசி தரூர் தற்போது தனித்து விடப்பட்டுள்ளதால், சமமான போட்டி இருக்காது என்றே தெரிகிறது. 'தேர்தலில் நடுநிலை வகிப்பேன்' என்று வாக்குறுதி அளித்த சோனியாவின் தந்திரம், தற்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.தலைவராக இருந்த சீதாராம் கேசரியை, நியாயத்திற்கு புறம்பாக அதிரடியாக வெளியேற்றி, கட்சியை சோனியா கைப்பற்றியது முந்தைய வரலாறு.அதே பாணியில், கட்சியை தன் முழு கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து வைத்திருக்க, சோனியா தன் தீவிர விசுவாசியான மல்லிகார்ஜுன கார்கேவை வேட்பாளராக களம் இறக்கியுள்ளது, காங்., வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்த பின், மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:காந்தி, நேரு ஆகியோரின் கோட்பாடுகளை உள்வாங்கி, காங்., கொள்கைகளை சிறு வயது முதல் கடைப்பிடித்து, அவற்றை பிரசாரம் செய்தவன் என்ற அடிப்படையில் களத்திற்கு வந்துள்ளேன்.தேர்தலில் போட்டியிடும்படி என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி. வரும் 17ல் முடிவு தெரியும். நான் வெற்றி பெறுவேன் என உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஜார்க்கண்டை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.திரிபாயும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.இதனால் காங். தலைவருக்கான தேர்தலில் மும்முனைப்போட்டி நிலவுகிறது.


நான் தேர்வானால் மட்டுமே

மாற்றங்கள் நிகழும்!சசி தரூர் கூறியதாவது:பீஷ்மரைப் போன்றவர் மல்லிகார்ஜுன கார்கே. அவர் மீது பெரிதும் மதிப்பு வைத்துள்ளேன். இதற்காக போட்டியிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலில் போட்டியிடும்படி, நாடு முழுதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் என்னை வற்புறுத்தி உள்ளனர். தலைமையின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள் என சோனியா வாக்குறுதி அளித்துள்ளார். அவரது குடும்பம், இந்த தேர்தலில் நடுநிலை வகிக்கும் என நம்புகிறேன்.கட்சியின் எதிர்கால நலனுக்காக, என் யோசனை மற்றும் எதிர்கால கனவுகளை முன்வைப்பேன். மல்லிகார்ஜுன கார்கே தேர்வானால், அது தற்போதைய தலைமையின் தொடர்ச்சி தான்; நான் தேர்வானால் மட்டுமே புதிய மாற்றங்கள் நிகழும்.இவ்வாறு அவர் கூறினார்.



நீடிக்கிறது குழப்பம்

'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற அடிப்படையில் தான் அசோக் கெலாட், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. அதனால் தான் குழப்பமே நடந்தது. ஆனால், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே, அப்பதவியை ராஜினாமா செய்தாரா, இல்லையா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. 'அசோக் கெலாட்டிற்கு ஒரு நியாயம், இவருக்கு ஒரு நியாயமா?' என்ற குரல்களும் எழுகின்றன.



மன்னிப்பு கோரினார் தரூர்!

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி எம்.பி., சசி தரூர், தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில், இந்திய வரை
படம் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த படத்தில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இடம்பெறவில்லை.இது சர்ச்சையானது. சமூக வலைதள பயனாளர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இதை தொடர்ந்து திருத்தப்பட்ட வரைபடத்தை வெளியிட்ட சசி தரூர், 'யாரும் வேண்டுமென்றே இதுபோல செய்யமாட்டார்கள். தேர்தல் அறிக்கையை வடிவமைத்த குழுவினர் தவறு செய்துவிட்டனர். தவறு உடனடியாக திருத்தப்பட்டுவிட்டது. அதற்காக மன்னிப்பு கோருகிறேன்' என, தன் சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

 ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார். ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்..

அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலையில் குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள். கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..
அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்.
கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்.. பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே! இலையில் வைத்த ‘ஜாங்கிரியை’ மூத்தவனுக்கு பிடிக்கும்என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்.
ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? எல்லாம் கியா முய என்று கத்தி தொலையுதுங்க அத்தனையும் குரங்குகள்.! சொல்றதை கேட்க மாட்டேங்குது.. படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது.. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.. பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே… என்று பாய….
அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா… என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்.! விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், ‘ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற.. ஓஹோ, அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க…
அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.. இல்லாள் என்றும், மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை.
இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்ஒரு பெண்ணின் பங்கு தலையாயது. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது..ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..
இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால் தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்......

உயர்ந்த உள்ளம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.

 

😍❤️ இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்...
சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து சினிமா ஆசையால் ஈர்க்கப்பட்டு சென்னை வந்தவர்....
பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் தனக்கென
தனி இடத்தை பிடித்தவர் ....
இன்று அவர் ''வேல்முருகன் போர்வெல்ஸ்" என்று ஒரு சொந்தப்படம் எடுத்து வெளியிட்டு விட்டார்..... சொந்தமாய் ஒரு போர்வெல் லாரியை வாங்கி படத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார் ....
பின் தான் வாங்கிய அந்த போர்வெல் லாரியை பயன்படுத்தி தென் மாவட்ட
பகுதியில் மக்களுக்காக எந்தவித பைசாவும் வாங்காமல் இதுவரை 55 போர்வெல் குழாய் அமைத்து தந்து இருக்கிறார்... இன்னமும் தந்து கொண்டு இருக்கிறார்....
ஒரு போர்வெல் போட குறைந்தது 50,000 முதல் 70,000 வரை ஆகுமாம். அந்த பகுதியில் எந்த மக்கள் (ஏழை ) வந்து கேட்டாலும் அவர்களுக்கு தம் சொந்த செலவில் போர்வெல்
போட்டு கொடுத்து கொண்டு இருக்கிறார் ...அது போக தன் பிறந்த கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் திறந்து இலவச
கல்வி தந்து கொண்டு இருக்கிறார் அந்த படிக்காத மேதை ...
அவரின் பள்ளியை கவனித்து வருவது அவர் மனைவி சங்கீதா. இவர் ஒரு physiotherapist... உண்மையில் இந்த செய்தி கேள்விப்பட்டு நான் மிக மகிழ்ச்சி அடைந்தேன் ....இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார் என்றால் ..... அவரின் மனிதம் எவ்வளவு உயர்ந்தது ... ❤️
May be an image of 8 people, people standing and text that says "Kanja Karuppu Family"

அது வேற திருமா, இது வேற திருமா: வைரல் வீடியோ.

 தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அக்டோபர் 2ல் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. இதனை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், ‛திருமாவளவனின் மேல்முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல. குற்றவியல் சார்ந்த வழக்கு என்பதால் உச்சநீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும்' எனத்தெரிவித்தனர். இதற்கிடையே மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதனையடுத்து, பேரணிக்கு தடை செய்த தமிழக அரசு மற்றும் தமிழக போலீசுக்கும் வி.சி.க சார்பில் நன்றி தெரிவிப்பதாக திருமாவளவன் கூறியிருந்தார்.


ஆர்எஸ்எஸ்.,க்கு எதிராகவும், அவ்வமைப்பின் பேரணிக்கு எதிராகவும் உயர்நீதிமன்றம் சென்ற திருமாவளவன், ஆளும் திமுக.,வின் திட்டத்தின்படி, பேரணிக்கு அனுமதி மறுக்க காரணமாக இருந்துள்ளார். ஆனாலும் இன்று (செப்.,30) சென்னை உயர்நீதிமன்றம் வரும் நவம்பர் 6ல் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, இப்போது ஆர்எஸ்எஸ்.,ஐ எதிர்த்து நீதிமன்றம் சென்ற திருமாவளவன், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்எஸ்எஸ்.,சை பாராட்டி, அவர்களது கொள்கையை பாராட்டி பேசியதை மறந்துவிட்டாரா என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

2018ல் மதுரையில் தேசம் காப்போம் என்னும் மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது: (கூட்டத்தினரை பார்த்து) ஆர்எஸ்எஸ் இயக்கத்தினுடைய மாநில தலைவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? மதுரை மாவட்ட தலைவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? ஏன் தேசிய தலைவர் பெயர் உங்களுக்கு தெரியுமா? அவர்கள் என்றைக்காவது தங்களது பெயரை வால்போஸ்டர், சுவரொட்டிகளில் அச்சிட்டது உண்டா? துண்டறிக்கையிலே அச்சிட்டது உண்டா? என்றைக்காவது மேடையேறி பேசியது உண்டா? தன்னுடைய தலைவர் பின்னால் நின்றால் தான் தன்னுடைய முகம் தெரியும் தொலைக்காட்சியில் என்று என்றைக்காவது முண்டியடித்துக்கொண்டு மேடையிலே ஏறியது உண்டா? நான் மட்டும் ஏன் பின்னால் உட்கார வேண்டும், நானும் முன்னால் தான் உட்காருவேன் என்று முன்வரிசையிலே யாராவது வந்து முண்டியடித்துக்கொண்டு உட்கார்ந்து பார்த்தது உண்டா?


latest tamil news


ஆனால் டெடிகேடடாக, அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறார்கள். இன்னொன்றையும் சொல்லுகிறேன். அவர்கள், இந்தியா முழுதும் 13 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்திலே இன்றைய புள்ளிவிவரப்படி. அந்த 13 ஆயிரம் பேரும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள், முழுநேர பணியாளர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எம்.எல்.ஏ., ஆசை கிடையாது, எம்.பி., ஆசை கிடையாது, மந்திரி ஆசை கிடையாது, அவர்களுக்கு விளம்பர ஆசை கிடையாது, ஆனாலும் தன் வாழ்வை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டு பணியாற்றுகிறார்கள். அந்த தியாகத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எதற்காக? அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது, ஒரு கடமை உணர்ச்சி இருக்கிறது. அவர்கள் உள்வாங்கிக்கொண்ட கொள்கையின் மீது மிகப்பெரிய பிடிப்பு இருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் வெறி இருக்கிறது. இவ்வாறு திருமாவளவன் புகழ்ந்து பேசியுள்ளார்.

ஆர்எஸ்எஸ்.,சை எதிர்த்தாலும், முன்பு அதே ஆர்எஸ்எஸ்.,சை திருமாவளவன் புகழ்ந்து பேசியுள்ள இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கு பலரும் அது வேற திருமா, இது வேற திருமா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

*மன முதிர்ச்சி .

 ==============

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு
நம்மை திருத்திக்கொள்வது.
2. அனைவரையும் அப்படியே
ஏற்றுக்கொள்வது
3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள்
கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.
7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம்
நிரூபிப்பதை விடுவது
8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும்
என்ற நிலையை விடுதல்.
9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..
11.சந்தோஷம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல
என்பதை உணர்தல்.

தி.மு.க., - ஈ.வெ.ரா., ஏட்டிக்கு போட்டி: மறக்க முடியுமா?

 தங்களுக்கு ஈ.வெ.ரா., தான் பெரிய தலைவர் என்றும், ஈ.வெ.ரா., கண்டுபிடித்த திராவிட கொள்கையை தூக்கி பிடிப்பது தாங்கள் தான் என்றும், ஈ.வெ.ரா.,வை பின்பற்றுவதால் ஹிந்து மத எதிர்ப்பு அரசியல் செய்வதாகவும், ஈ.வெ.ரா., பாணியில் தமிழர்களை காப்பாற்ற வந்த ஒரே கட்சி தாங்கள் தான் என்றும் மார்தட்டி கொண்டிருக்கிறது தி.மு.க.,.

EV Ramasamy, DMK, Karunanidhi, M Karunanidhi, Annadurai, CN Annadurai, திமுக, ஈவெரா, ஏட்டிக்கு போட்டி


அதே தி.மு.க.,வுக்கும் ஈ.வெ.ரா.,வுக்கும் 1950, 60 களில் எப்படியெல்லாம் மோதல் நடந்தது கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று தெரிந்தால், இந்த கால இளைஞர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். இப்போதுள்ள மூத்த தி.மு.க., தலைவர்கள் இந்த விஷயம் நன்கு தெரிந்தே, எல்லாவற்றையும் மறைத்து கொண்டிருக்கிறார்கள்.

1949ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி ஈ.வெ.ரா., - மணியம்மை திருமணம் நடந்தது. அப்போது ஈ.வெ.ரா.,வுக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 27. அதுவரை, ஈ.வெ.ரா.,வின் பத்திரிகையில் பணியாற்றி கொண்டிருந்த அண்ணாதுரை, மகள் வயதை ஒட்டிய மணியம்மையை ஈ.வெ.ரா., திருமணம் செய்ததால் அதிருப்தியடைந்து, தனியாக சென்று 1949 செப்., 17ல் தி.மு.க.,வை ஆரம்பித்தார்.


latest tamil news


தனிக்கட்சியை அண்ணாதுரை ஆரம்பித்ததால் பிடிக்காத ஈ.வெ.ரா., ராஜாஜியை ஆதரித்தார். இது தி.மு.க.,விற்கு பிடிக்கவில்லை. எனவே, ஈ.வெ.ரா.,வை விமர்சித்ததுடன், பிராமணர்களை மற்றவர்களுக்கு எதிராக திருப்பிவிட்டு, இவர் மட்டும் பிராமணர்களுடன் உறவாடுவதாக கார்ட்டூன் வெளியிட்டது. மறுநாள், திமுக.,விற்கு எதிராக தனது விடுதலை இதழில் ஈ.வெ.ரா., தாக்கி எழுதினார். இப்படி இரு தரப்பினரும் மாறி மாறி மோதிக்கொண்டனர்.

சில நாட்கள் இது தொடர்ந்தது. ஆனால், இவ்வளவையும் மறந்துவிட்டு, தாங்கள் தான் ஈ.வெ.ரா.,வை காப்பாற்ற வந்தவர்கள் என்பது போல், அவரை தி.மு.க., தலையில் வைத்து கொண்டாடுகிறது. ஒரு காலத்தில் தி.மு.க.,வும் ஈ.வெ.ரா.,வும் எதிரும் புதிருமாக இருந்ததை இப்போது உள்ள தி.மு.க.,வினர் பலரும் மறந்துவிட்டனர் அல்லது வரலாறு தெரியாமல் இருக்கின்றனர்.

இப்படி எல்லாம் ஈ.வெ.ரா., பற்றியும் தி.மு.க., பற்றியும், சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர். ஈ.வெ.ரா., பற்றி, முரசொலியில் இடம் பெற்ற கார்ட்டூன் வைரலாகி பரவி வருகிறது.

சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.

 அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.

ஞாயிறு-அஷ்டமி, திங்கள்-நவமி, செவ்வாய்-சஷ்டி, புதன்-திரிதியை; வியாழன்-ஏகாதசி, வெள்ளி-திரயோதசி, சனி-சதுர்த்தசி திதி. இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் வெற்றி கிடைக்கும்.
ஞாயிறு-சதுர்த்தசி, திங்கள்-சஷ்டி, செவ்வாய்-சப்தமி, புதன்-துவிதியை, வியாழன்-அஷ்டமி, வெள்ளி-நவமி, சனி-சப்தமி மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று
அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்
*எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்
*1 பிரதமை் திதி
அதிபதி:
அக்னி பகவான்
பிரதமை திதியில் செய்யத்தக்க காரியம்:
உலோகம், மரம் இவைகளில் சிற்ப வேலைகள் பாய் முடைதல் படுக்கைக்கு சித்திர வேலை செய்தல் போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும்*
2. துதியை திதி
அதிபதி:
துவஷ்டா தேவதை
துதியை திதியில் செய்யத் தக்க காரியம்:
விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்கார்யம் வீடு கட்டுதல் நல்லது!
3. திருதியை திதி
அதிபதி:
பார்வதி
திருதியை திதியில் செய்யத்தக்க காரியம்:
வீடு கட்டுதல, கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை ,பார்வதி தேவதை என்பதால் கிரஹ பிரவேஷம் ,பெண் சேர்க்கை & பார்த்தல் போன்றதுக்கு உகந்ததிதி ஆகும்!
4. சதுர்த்தி திதி
அதிபதி:
கஜநாதன் (விநாயகர்)
சதுர்த்தி திதியில் செய்யத்தக்க காரியம்:
வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்யவும் சதுர்த்தி திதியில் நற்காரியம் செய்ய ஒரு மாதத்தில் பின்னமாகும், (சங்கடகர சதுர்த்தி இதற்கு விதிவிலக்கு ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி இதற்கு விதி விலக்கு )
5. பஞ்சமி திதி
அதிபதி:
சர்ப்பம்
பஞ்சமி திதியில் செய்யத் தக்க காரியம்:
இத்திதியில் செய்யும் கார்யம் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம் அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம் !
6. சஷ்டி திதி
அதிபதி:
முருகன்
சஷ்டி திதியில் செய்யத் தக்க காரியம்:
வேலைக்கு சேர, பசுமாடு வாங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க, மருந்து தயாரிக்க நன்று, நன்மையும் தீமையும் சரி பாதி என்பது பொது கணக்கு!
7. சப்தமி திதி
அதிபதி:
சூரியன்
சப்தமிதிதியில் செய்யத் தக்க காரியம்:
வீடுகட்ட, உபநயனம், விவாஹம், தேவதா பிரதிஸ்டை, இடம் மாற்ற ம், விவசாயம், துவிதியை, திருதியை பஞ்சமி திதியில் சொல்லப் பட்ட விஷயம் மற்றும் பொதுவாக முன்னோர் கர்மாக்களை செய்ய உகந்தது இத்திதி!
8. அஷ்டமி திதி
அதிபதி:
சிவபெருமான்
அஷ்டமிதிதியில் செய்யத்தக்க காரியம்:
யுத்தம், தான்யம், வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைக்கு உகந்த திதி இது!
9. நவமி திதி
அதிபதி:
பாராசக்தி
நவமிதிதியில் செய்யத்தக்க காரியம்:
பகைவரை சிறைபிடிக்க பகைவரை அழிக்க, நண்பர்களுக்குள் போதம் உண்டாக்க அதிக தோசம் உள்ள திதி அல்ல இது!
10. தசமி திதி
அதிபதி
ஆதிசேஷன்
தசமி திதியில் செய்யத் தக்க காரியம்:
தர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகுகேது பரிகாரம் செய்யவும், சரீரம் ஆரோக்கிய முயற்சி, மங்களகரமான காரியம், ஜலம், முக்கியஸ் தரை சந்திக்க உகந்தது இந்த திதி !
11. ஏகாதசி திதி
அதிபதி:
தர்ம தேவதை
ஏகாதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
பொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதி, விவாஹம், விவசாயம், ஆபரணம், வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவைகளை செய்யலாம்!
12. துவாதசி திதி
அதிபதி:
விஷ்ணு
துவாதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
விருந்துண்ண தனம், தான்யம் சம்பாதிப்பது, சுபசெலவுகள், தர்ம காரியம், நிலையுள்ள நிலையில்லா அனைத்தும் செய்யலாம். [திருவோணம் இணையும் துவாதசி மட்டும் ஆகாது]
13. திரயோதசி திதி
அதிபதி:
மன்மதன்
திரயோதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
அனைத்தும் செளபாக்கியமான மங்களகரமான காரியம், நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி & நீண்ட கால திரு மண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமண தடையை நீக்கும் பரிஹாரம் செய்ய உகந்த திதி ஆகும்!
14. சதுர்தசி திதி
அதிபதி:
கலிபுருஷன்
சதுர்தசி திதியில் செய்யத்தக்க காரியம்:
பல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை
– வளர்பிறையில் நாம் நாராயணனை வணங்கி வர வேண்டும்!
-தேய்பிறையில் சிவபெருமானை வணங்கி வரவேண்டும்!
-வளர்பிறை எனும் சுக்கில பட்ஷத்தில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகாரியம் தவிர்க்க வேண் டும்.
அமாவாசைக்கு முதல் நாளில், நம் முன்னோர் மற்றும் இறந்தவர்களுக்குண்டான காரியம் மட்டும் செய்யவும்!
பௌர்ணமியில் செய்ய தக்கவை: கடவுள் வழிபாடு மட்டும் செய்யவும், யாகம் , மங்களகரமான கார்யம், புஷ்டி தரும். மருந்துண்ணல் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...