Thursday, June 7, 2012

குஷ்புவின் இடுப்பை கிள்ளியது யார்? அவிழும் முடிச்சுக்கள்!


உலகின் மிகப்பெரிய ஜனனாயக நாட்டில் இப்படியொரு கொடூரமாஐயகோ நெஞ்சுபொறுக்கவில்லையேஅதுவும் கலாசாரம் , பண்பாடு என்றால் என்னவென்று உலகுக்குகற்றுத்தந்த தமிழ்நாட்டிலா இது நடந்ததுஅதிலும் "அஹம் பிரம்மாஸ்மிரேஞ்சில் நான்தமிழ் என கூறிக்கொண்டிருக்கும் தமிழின் காவலர்தமிழின் சேவகன்தமிழின் வாரிசு,முப்பதுவருடங்களாக ஆயிரமாயிரம் மாவீரர்களோடு போராடியும் பிரபாகரனால்அடையமுடியாமல் போன ஈழத்தமிழர்களின் விடிவை நான்கே மணத்தியாலங்களில்பெற்றுத்தந்த   என்றும் குமரன் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவிலா இது நடந்தது?வானகமேவையகமே ! என்னை வாழவைக்கும் தமிழகமே ! எங்கே இருந்தீர்கள் இதுநடக்கும்  போது?

தமிழுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூற வந்த "கற்புகுஷ்புவின் இடுப்பை யாரோகிள்ளியிருக்கிறார்கள்உலக அரசியலில் பரபரப்பாக பேசப்படும் இந்த வரலாறுசம்பவத்துக்கு பொறுப்பு கூறவேண்டிய பொறுப்பு யாருக்குமே இல்லை என்பது தான் என்வெறுப்பு. ( என்ன டி.ஆர் மாதிரி ஆயிட்டேன்தமிழுக்கு வயதென்னவென்று யாராவதுஉங்களைக்கேடால் எண்பத்தியொன்பது என்று தயங்காமல் கூறுங்கள்காரணம் அதுதான் எம் பெருமான் கலைஞரின் வயதுதமிழே அவர்அவரே தமிழ்அந்த தமிழின்விழாவில் தான் இப்படியொரு சோகம்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கருணாநிதியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அலையோ அலையென்று அலைந்து ஒருவழியாக கருணாநிதி நகர் பேரூந்து நிலையத்தில் தமிழைக்கண்டு தலையால் வணங்கி அந்த விழாவில் "முதல் வரிசையில்" ( நோட் த பாயிண்ட் யுவர் ஆனார்) அமர்ந்து இருந்தார் கற்புக்கரசி குஷ்பு. விழா முடிவில் மேடையிலிருந்து வெளியேற முயன்றவரின் இடுப்பு எதிர்பாராத சமயத்தில் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கின்றது. இதனால் குறித்த பிரதேசத்தில் பரபரப்பு நிலவியது. அட ! குறித்த பிரதேசம்ன்னு நான் சொன்னது விழா மேடையை.

அப்புறம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குசுபு சம்பவ இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். அழகிய கிழ மகனின் நற்பெயர் (?????) கெட்டுவிடும் என்பதாலும் , குசுபுவின் கற்பு போய்விடும் என்பதாலும் இப்படியொரு சம்பவமே நடக்கவில்லையென தலையால் அடித்துகொள்கிறது கோபாலபுரம். ஆனாலும் நம்பவம் நடந்திருப்பது உண்மையென்பதால் தலைவர் டாக்டர்.மு.கலைஞர் தலைமையில் பஞ்சாயத்து நடந்து முடிந்திருக்கிறது. நடந்த கட்சி கூட்டத்தில் ( ஏது கட்சி கூட்டமா? # பின்ன என்ன எட்டு எம்.எல்.ஏ க்களை வச்சுகிட்டு என்ன ஆட்சியா நடத்த இயலும்? இந்த மாதிரி இடுப்பு கிள்ளின கேஸ் , உள்பாவாட உருவின கேஸ்னு ஏதாச்சும் பஞ்சாயத்து பண்ணினா தானே பெருசுக்கு பொழுது போகும்)சாதகமான முடிவுகள் எட்ட‌ப்படாததால் , காதும் காதும் வைத்தால் போல் விசயத்தை ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸ் வரை கொண்டுபோயிருக்கிறார்கள்.

இன்று காலை விசேட விமானத்தில் சென்னை வந்த ஸ்கொட்லாண்ட் பொலிசார் கோல்கேற், பெப்சோடண்ட், டாபர் அப்டீன்னு இந்தியாவில இருக்கிற எல்லா டூத்பேஸ்ட்டுகளையும் போட்டு துலக்கு துலக்குன்னு துலக்கி நிறைய துப்பு துலக்கியிருக்கிறார்கள். அவைங்க என்ன ஐபதுரூவா வாங்கிட்டு ஆள விடுற பொலிசா? ஸ்கொட்லாண்ட் பொலிஸ் ஆச்சே , காலையில் வந்து துப்பு துலக்கி துப்பிவிட்டு மாலை விமானத்தில் மங்கோலியா போய்விட்டார்களாம். இப்போது விடயம் என்னவென்றால் இந்த அறிக்கையை பார்த்து அதிர்ந்து போன கோபாலபுரம் & கோவினர் , ஒரு கண்துடைப்புக்காக ஸ்கொட்லாண்ட் பொலிசை கூப்பிட்டால் இப்படி சங்கத்து ரகசியங்க‌ளை சந்தியில் விட்டு போயிருக்கிறர்களேன்னு அதிர்ந்து போனாய் அத்தனை அறிக்கை விபரங்களையும் உதயநிதி ஸ்டாலினின் ஆப்பிள் லாப் டாப்பில் சேமித்து வைத்திருக்கிறார்கள். இங்கு தான் நடந்திருக்கிறது மற்ருமொரு துயரம், ஒபாமாவின் அட்டாச் பாத்றுமுக்குள் புகுந்தே தகவல் திரட்டும் விக்கிலீக்ஸ் , நம்ம கருணாநிதியின் கதவே இல்லா கக்*சுக்குள் நுளையாதா என்ன? விளைவு விக்கிலீக்ஸ் திருடிய அந்த ஆய்வு அறிக்கையின் நகல் ஒன்றை எனக்கு அனுப்பினார் யூலியன் அசேஞ்சின் அஸிஸ்டெண்ட்.  இதோ அந்த அறிக்கையின் அடுத்த நகல் எனது கோடான கோடி வாசகர்களுக்காக....

From,
6/6/2012
ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸ்
வழக்கு எண் 420.
இறுதி அறிக்கை.
To,
கருணாநிதி
வருங்கால இந்திய பிரதமர்,
தமிழின காவலர்,
கோபாலபுரம்.


குஷ்புவின் இடுப்பை கிள்ளிய சூத்திரதாரி தொடர்பான அறிக்கை.
 (தங்களுக்குரியதும் ரகசியமானதும்)

மேற்படி சம்பவம் தொடர்பாக, குறிப்பிட்ட அந்த மர்ம நபர் குறித்தும், இந்த சம்பவத்தின் பின்னணி பற்றியும் எங்களுக்கு கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த அறிக்கையை சமர்ப்பிக்கிறோம்.

முதலில் , தாக்குதலுக்கு இலக்காகி இருக்கும் நபர் விழா மேடையில் அமர்ந்திருந்த இடம் , முன்வரிசை! அதாவது , தங்களது கட்சியின் வேர்கள், தூண்கள், துடைப்பகட்டைகள் எல்லாரும் அமர்ந்திருந்த இடம். கோடிகளை அடித்த கேடிகளும், அபகரிப்பு அப்பாட்டாக்கர்களுமே அங்கே இருந்திருக்கிறார்களே ஒழிய , வேறு வேலைவெட்டிகளை விட்டு கட்சிக்காக உழைத்த உண்மையான சேவகர்கள் யாரும் அங்கு அமர்ந்திருக்கவில்லை. ஆக‌ வேறு எவரும் உள்நுழைந்திருக்க முடியாத அந்த அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் , குஷ்புவில் இடுப்பை கிள்ளியது நிச்சயம் கட்சியின் அதியுயர் பீடத்தில் அமர்ந்திருக கூடிய ஒருவரே என்பது தெள்ளத்தெளிவாகிறது. இந்த சந்தேகம் உங்களுக்கும் வந்து , கோபால புரத்தில் உள்ள உங்களது கட்சி தலைமை அலுவலகத்தில்  "கள்வனைக்க் கண்டுபிடி"  என்ற ஆய்வு நடத்தி சூத்திரதாரியை கன்டுபிடிக்க நீங்கள் எடுத்திருந்த முயற்சியையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சூத்திரதாரி யார் என்ற எங்களது ஊகத்துக்கோ அல்லது உறுதியான முடிவுக்கோ போவதற்கு முன்னர் இந்த கிள்ளலுக்கு பின்னால் என்னவெல்லாம் சதிவலைகள் அல்லது திட்டமிடல்கள் மறைந்துள்ளன என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

குஷ்பு இலக்கு வைக்கப்பட காரணம் என்ன?

முதலில் தாக்குதலுக்குள்ளான குஷ்புவை பற்றி இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டுவது அவசியமாகின்றது, தற்போதைய கணவர் சுந்தர்.சி தவிர தனது சினிமா வாழ்க்கையில் வேறு எவருடனும் இணைத்து கிசுகிசுக்கப்படாதவர் இந்த குஷ்பு. அது போக வேறு எந்த நடிகருடனும்  சேர்ந்து வாழ்ந்திராதவர் குஷ்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது போல ஒரு முற்போக்கு வதியும் பெண்ணிய விடுதலை நாயகியுமான இவர் வாழ்வில் பல அற்புதமான கொள்கைகளை கடைப்பிடித்தவர் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது. திருமணத்துக்கு முன்னர் செக்ஸ் தப்பில்லை என்ற அதீத உத்தமமான கோட்பாட்டை இந்தியாவுக்கு அறிமுகம் செய்த பெருமைக்கு இரியவர். இந்த கொள்கைகள் இவரது வாழ்வில் இருந்து இவரால் எடுக்கப்பட்டதா என்பது இப்போது நமக்கு அவசியம் இல்லாத ஒரு தலைப்பு, ஆகவே அதை விடுவோம். ஆக சூத்திரதாரி குஷ்புவை இலக்கு வைத்ததற்கு அவரது இம்மாதிரியான முன்மாதிரி வாழ்க்கையும் , அவரது சிறந்த கொள்கைபிடிப்பும் முதல் காரணமாக இருந்திருக்கலாம். கொள்கை பிடிப்பு மட்டுமல்ல தி.மு.க வில் இப்போது இருக்கின்ற உயர் மட்ட அரசியல் புள்ளிகளில் நல்ல "தசைபிடிப்பு" இருப்பதும் இந்த கிள்ளல் சம்பவத்துக்கு தூண்டுகோலாய் இருந்திருக்கும் என்பதும் ஒரு வலிதான வாதமாய் இருக்கிறது.



தாக்குதலுக்கு விழா மேடையை சூத்திரதாரி இலக்கு வைக்க காரணம் என்ன?

ஜெயா டிவியில் "ஜாக்பாட்" பண்ணும் போதும் சரி, இப்போது முதுகில் பச்சை குத்திக்கொண்டு ஜாக்கட்டை திறந்துவிட்டு அலையும் போதும் சரி, குஷ்பு எப்போதும் நாகரீகமான உடையிலேயே வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் இலக்கு வைக்கப்பட முடியாத குஷ்பு இந்த விழா மேடையில் இலக்கு வைக்கப்பட காரணம் தி.மு.க வின் உள்துறை சமாச்சாரங்கள் பெரும்பாலும் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பதன் காரணமேயாகும். வெளிவந்த லஞ்ச , ஊழல், அபகரிப்பு தவிர இன்னும் வெளிவராத எத்தனையோ கோடிகள், மற்றும் கேடிகளது கணக்குகள் இதற்கு காரணம். ஆக தனது விரலுக்கு விருந்து கொடுக்க நினைத்த சூத்திரதாரி விழா மேடையை பயன் படுத்தக் காரணம் மேடை அமுக்கத்துக்குள் கமுக்கமாக காரியம் முடித்துவிடலாம் என்ற எண்னத்தில் தான் இந்த மேடையில் தனது நாடகத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவருகிறது.

இடுப்பு மேட்டர் அடுப்பு புகையாய் வெளிவர காரணம் என்ன?

விழா மேடையில் இடுப்பு கிள்ள‌ப்பட்டதும் ஆரம்பத்தில் அப்படி எதுவுமே நடக்காதது போன்று  அடக்கி வாசித்த குஷ்புவும் மற்றும் கோபாலபுரம் கோஷ்டியினரும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இந்த இடுப்பு தாக்குதலை மீடியாக்களுக்கு கசிய விட்டதன் காரணம் என்னவென்று பார்த்தோமானால் ஈழத்தமிழர் பிரச்சினையை காரணம் காட்டி சரிந்து போன அரசியல் செல்வாக்கை , இந்த இடுப்பு பிரச்சினையை கிளப்பிவிட்டு தமது அரசியல் இருப்பை தொடர்ந்து காட்டி ஆதாயம் தேடுவதற்கு தமிழ் குமரன் முனைவதாக ஹெவியாக நம்புகிறோம்.

பவர் ஸ்டார் பிரச்சினைக்கு அடுத்தபடியாக பதிவுலகில் இந்த பிரச்சினையும் பதிவுலகில் பட்டையை கிளப்ப தொடங்கியிருப்பதால் இண்லி, தமிழ் மணம், உடான்ஸ் ஆகிய திரட்டிகளில் விழும் ஓட்டுக்கள் தமக்கும் வந்து சேரும் என தமிழ் காவலன் கணக்குபோடுகிறார் என்பது எங்களுக்கு புரிகிறது.

ஆகவே வரும் வாரங்களில் விழுப்புரம், வண்ணாரப்பேட்டை, தென்மதுரை, காசிமேடு, நொச்சிக்குப்பம் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தி விழா முடிவில் இடுப்பு கிள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சரிந்த செல்வாக்கை பிடிக்க தமிழின விடிவெள்ளி காய் நகர்த்திவருகிறார். இதன் அடுத்த கட்டமாக எதிர்வரும் உள்ளூரட்சி தேர்தல்களில் பணம் கொடுத்து வாக்குகளை வாங்காமல் ஒரு ஓட்டுக்கு இரண்டு கிள்ளல் என்ற அடிப்படையில் வீடுவீடாக சென்று இடுப்பு காட்டும் வைபவமும் அரங்கேற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கள்ள ஓட்டுக்கு கொல்லைப்புறத்தில் வைத்து கள்ளக்கிள்ளல் வசதியும் செய்து தரவும் ஏற்பாடாகியுள்ளது. இதற்காக விசேட ஆடைவடிவமைப்புக்களும் மேற்கொள்ள‌ப்படவுள்ளன. இந்த‌திட்டத்தை அழகிரி தலைமையிலான திட்டகமிட்டி தயாரித்துள்ளது. இந்த திட்டத்தின் கோப்பு , ஒப்பமிடலுக்காக கருணாநிதியின் மேசையில் வைக்கப்பட்டுள்ள‌து. 

அடுத்த பொதுக்கூட்டத்துக்கு அழகிரி & கோ வடிவமைத்த ஆடை


ஆக இந்த இடுப்புக் கிள்ளலானது ஒரு காமவெறியின் வெளிப்பாடாக இருந்த போதிலும் அதை அப்படியே விட்டுவிடாமல் அரசியலாக்கி ஆதாயம் பார்க்கிறார் அரசியல் சாணி நக்கியார், சாரி... சாணக்கியர். இதைத்தான் ஸ்கொட்லாண்டில் " ஒரு இடுப்பில் இரண்டு கிள்ளல் " என்பார்கள்.

இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டதா அல்லது சடுதியான முடிவின் விளைவா?

எங்களது ஆய்வின் அடிப்படையில் இந்த தாக்குதல் கிட்டத்தட்ட முப்பது வருட திட்டமிடலின் வெளிப்பாடாகவே கருதுகின்றோம். சின்னத்தம்பி திரைப்படத்தில் இருந்தே சூத்திரதாரிக்கு குஷ்புமேல் ஒரு கண் இருந்திருக்க வேண்டும், தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்த சூத்திரதாரிக்கு ஜெயா டிவியின் "ஜாக்பாட்" நிகழ்ச்சியை விட்டு வெளியேறி குஷ்பு கோபாலபுரத்தில் குடியேறியது ஜாக்பாட் அடித்ததைப்போல ஆகியிருக்கிறது. எந்தவித பதவியும் வழங்கப்படாத ஒரு அடிப்படை உறுப்பினருக்கு ( ஆரம்பத்தில்) மேடைகளில் ஏறி பேசவும், வி.ஐ.பி வரிசைகளில் அமர இடம் கொடுக்கப்பட்டதும் இந்த "ஒப்பிரேஷன் இடுப்பு" தாக்குதலின் ஒரு அம்சமாகவே கருதுகின்றோம். ஒரு முப்பது வருட கச்சிதமான திட்டமிடல் இப்போது நிறைவேறியிருக்கின்றது.

யார் அந்த கிளு கிளு கில்மா மன்னன்?

வாதங்கள் , ஊகங்கள் மற்றும் சம்பவங்களின் கோர்வையை வைத்துப் பார்க்கும் போது எங்களால் இந்த இடுப்பைக் கிள்ளிய விரலுக்குரியவனை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. இந்த முடிவுக்கு வருவதற்கு எங்களால் இரண்டு சம்பவங்களை ஆதாரமாக முன்வைக்க முடியும்.

முதலாவது, குறித்த இந்த சம்பவம் இடம் பெற்று முடிந்தவுடன் எங்களது உதவியை நாடுவதற்கு முன்னர், உங்களது தலமை செயலகத்தில் "கள்வனைக்க் கண்டுபிடி" என்ற பெயரில் ஒரு மிஷன் நடத்தி இடுப்பு கிள்ளியவை கண்டுபிடிக்க முயறி செய்து தோற்றிருக்கிறீர்கள், இங்கு தான் எங்களது சந்தேகம் வலுக்கிறது. இந்த மிஷனில் நீங்கள் பயன்படுத்திய நுட்பம் சரிதான் ஆனால் அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது தான் கேள்வியே!

குஷ்புவை கண்ணை மூட சொல்லிவிட்டு , அந்த விழா மேடையில் இருந்த அனைவரையும் வரிசையில் வரச்சொல்லி  கிள்ள விட்டு "இவனா?" "இந்த கிள்ளலா?" என்று கேட்டிருக்கிறீர்கள். சுந்தர் .சி யைத்தவிர வேறு யாரும் கைவைத்திராத ந்த இடுப்பில் இன்னொரு அந்நிய கை படும்போது குஷ்புவால் இலகுவாக அடையாளம் கண்டு சொல்ல முடியும் என்ற உங்களது எண்ணம் சரியாக இருந்த போதிலும் , இங்கும் ஒரு தவறு நடந்திருக்கிறது அல்லது வேண்டுமென்றே தவற‌ விடப்பட்டிருகிறது. அதாவது விழாவுக்கே வராத சமயல் காரன் , வேலைக்காரன் எல்லாம் வந்து கிள்ளிவிட்டுப்போக "அடுத்து நீ வா, நீ வா" என்று கட்டளையிட்டுக்கொண்டிருந்த கோபாலபுரத்தின் காவலன் மட்டும் மிஸ்ஸிங்...... அவர் விழா மேடையில் இருந்தவரும் கூட..... இது தவறாக நடந்ததா? அல்லது தவறவிடப்பட்டதா?

அடுத்து, குஷ்புவின் உடம்பில் அவர் பச்சை குற்றிக்கொண்டு அதை காட்டவேண்டும் என்பதற்காக காற்றாட ஆடையுடுத்தி அங்கங்கே திறந்து விட்டிருக்கையில் இடுப்பு மட்டும் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது "கொழுக் மொழுக்" என்று இருப்பது மட்டும் தான் காரணமா அல்லது இடுப்பைத்தவிர மற்ற ஏனைய பிரதேசங்கள் எட்டாக்கனியாக இருப்பதுவா?

ஏன் என்றால் எழுந்து நிற்கக்கூடிய ஒருவருக்கு தாகுதல் இலக்காக இருக்க கூடியது எது என்பது யூ டியூப்பில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட ஜோதிகாவின் "ராஜா" பட சீனில்ஆகட்டும் சரி, சமந்தாவின் கடைதிறப்பு காணொளிலாகட்டும் சரி தெள்லத்தெளிவாக புரிந்திருக்கும். ஆனால் இங்கு வயது போன , அடுப்பு போன்ற ஒரு இடுப்பு இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கான காரணம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும், அதாவது தனது கைக்கு இடுப்பு மட்டுமே எட்டக்கூடிய ஒருவரே இந்த கில்மா செயலை நிகழ்த்தியிருக்கிறார். 

எழுந்து நிற்க முடியாத ஒருவர் அல்லது நாற்காலியில் உட்கார்ந்திருந்திருக்கக்கூடிய ஒருவரே இந்த சம்பவத்தின் சூத்திரதாரியாக இருக்கிறார். குஷ்புவின் இடது பக்கமாக அமர்ந்திருந்த அந்த மர்மமனிதனின் விரல்களே இந்த விபரீத விளையாட்டை விளையாடியிருக்கிறது. காரணம் அந்த கைகளுக்கு இடுப்பு மட்டுமே எட்டக்கூடிய தொலைவில் இருந்திருக்கிறது. வேறு இடங்கள் இலக்குகளாக இருந்திருந்தாலும் இயலாமை காரணமாக "சீ..சீ..இந்த பழம் புழிக்கும் என்று கணக்குப் போட்ட அந்த நரி , இடுப்பில் சொம்பு உருட்டி விளையாடியிருக்கிறது என்பதே நிதர்சனம்" அந்த நரி யாரென்றால்...... சே... பேனாவுக்கு மை இல்லை பின்பு இன்னொரு அறிக்கையில் சொல்கிறோம்.

தங்கள் உண்மையுள்ள‌
பற்றிக் ஷன் மாயத்தேவன்
துணை ஆய்வாளர்
ஸ்கொட்லாண் யார்ட் காவல்த்துறை.


தம்பீ...  தமிழ்க்கவிதை தும்பீ.. இது மாசு படாத கையப்பா....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...