Thursday, August 6, 2020

புத்தகம் எப்போது வெளியீடு !

 நிகழ்கால தமிழகத்தை கட்டியமைத்த கடவுள் கருணாநிதி என்று ஒரு கூட்டம் சொல்லி திரிகிறது.

இது எத்தனை பெரிய பம்மாத்து?

இதற்கு பதில் சொல்லலாம் என்று எழுத உட்கார்ந்த பிறகுதான் நான் ஒரு புத்தகம் எழுத வேண்டியுள்ளது என்று உணர்கிறேன்.

இதான் திமுக வின் டெக்னிக். போகிற போக்கில் ஒரு பெரும் பொய்யை சொல்லி செல்வார்கள்.
அவர்கள் எழுதுவது வெறும் இரண்டு வரிகளே!

ஆனால் அது பொய் என்று நிறுவ நாம் ஒரு புத்தகமே எழுத வேண்டும்.

அவ்வளவு கஷ்டப்பட்டு ராவும் பகலுமாக எழுதி முன்னே கொண்டு வைத்தால் இதெல்லாம் ஜாதி காழ்ப்புணர்வில் சொல்கிறீர்கள் என்று ஒற்றை அடியில் சொல்லி நகர்ந்து விடும் மூடர்களை கொண்ட கூட்டம் இந்த திமுக.

ஒரே ஒரு உதாரணம். கடந்த 4 மாதங்களில் மட்டும் பாருங்கள். இவர்கள் மீது வைக்கப்படும் எந்த குற்றசாட்டுக்கும் பதிலே சொல்ல மாட்டார்கள்.
மேலே மேலே சம்பந்தமில்லாமல் விஷயங்களில் தாவி தொடர்ந்து பொய்களை சொல்லிக் கொண்டே செல்வார்கள்.

தமிழக மக்களில் 70% மக்களின் மூடத்தனத்தின், சுயநலத்தில் ஜாதி அபிமானத்தின் மீது வைத்திருக்கும் அசாத்தியமான நம்பிக்கை !

இது ஒன்றே இவர்களை இத்தனை நாள் வாழ வைத்திருக்கிறது. வளர வைத்திருக்கிறது.
ஒரு நல்லாட்சி எப்படி இருக்கும் என்பதை மறந்தே போன ஒரு கூட்டம் நாம். மறக்கடித்த கூட்டம் இவர்கள்.

ஒரு 50 ஆண்டுகால தவறுகளை களைய சரியான தலைமை இல்லையென்றால் இன்னும் 100 வருடங்கள் ஆகலாம்.

Image may contain: one or more people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...