Thursday, August 6, 2020

தமிழக அரசு தவறாக பாதையில் செல்லுகிறது.

 திமுக ஏன் இந்த மும்மொழி கொள்கையை எதிர்க்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது. எது வந்தாலும் எதிர்ப்பது என்பது அவர்கள் நிலை.

ஆனால் அதிமுக?? அடுத்த தேர்தலை மனதில் கொண்டு முட்டாள்தனமாக திமுகவின் வீரியத்தை முனை மழுங்க செய்வதாக நினைத்து கொண்டு தவறு செய்து விட்டது.

திமுக வை முந்திக் கொண்டு செயல்பட்டு தான் அதற்கு பயப்படுவடுவதை ஒத்துக் கொண்டு விட்டது.

இப்போது என்ன நடக்கும்? திமுக வழக்கம் போல் "பார்த்தியா!! பயந்துட்டாங்க!" என்று மார் தட்டும்.

எவனாவது இதற்காக ஒட்டை மாத்தி அதிமுகவுக்கு குத்த போறானா?

வாய்ப்பேயில்ல ராசா!
எப்படியும் ஜாதி பார்த்து காசு வாங்கிட்டு குத்த போறானுங்க

ஆக தோற்றாலும் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் வகையில் இது ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பு இல்லை, மாறி வரும் உலகுக்கு ஏற்ப தமிழக அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்தும் திட்டம் இது என்ற உண்மையை உரத்து கூறி செல்லும் வாய்ப்பை இழந்து நிற்கிறது.

அது சரி! அதுக்கெல்லாம் முதுகெலும்பு வேணுமே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...