Monday, February 28, 2011

வெளிநாட்டு வேலை.....கவனிக்கப்பட வேண்டிய விஷயம்

வெளிநாட்டு வேலை.....கவனிக்கப்பட வேண்டிய விஷயம்

 இப்போது நிறைய பேருக்கு வரக்கூடிய வேலை விசயமாக மெயில் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கிணத்தில் விழக்கூடிய மாதிரிதான் இருக்கிறது.  விழிப்புணர்ச்சி இல்லாவிட்டால்.. உங்கள் கதை முடிந்ததுதான்.
நெறைய பேருக்கு வந்த மெய்லை கவனித்து பார்த்தால் எல்லாம்  மைக்ரோசாப்ட் வோர்ட் போர்மேடிலேயே டிசைன் பண்ணி இருக்கிறது. ஷார்ப்பாக பார்க்கவிட்டால் அச்சு அசலா ஒரிஜினல் போல இருக்கிறது. இதை சுட்டிக்காட்டி நண்பர்களிடம் சொன்னால் உடனே கோபம்  வருகிறது. நம் நண்பர்கள்  நல்லபடி வேலையில் இருந்தால் நமக்குதான் பெருமை. கண்ணை மூடிக்கொண்டு எதையும் நம்பினால் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் என்ன வித்தியாசம். இப்போது புதிதாக உங்களுக்கு மில்லியன் பரிசு விழுந்து இருக்கிறது என்று வேறு வருகிறது. இதை சில்லித்தனமாக எடுக்காமல் சீரியசாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஏமாந்தவர்கள் நிறைய பேர். ஏன் என்னுடைய நண்பர்கள் எத்தனை பேர் மெய்லை பார்த்து என்ன ஸ்டேப் எடுக்கலாம் மாப்ள என்று கெட்டவர்கள் நிறைய பேர். எனவே இது போன்ற மெயில் வந்தால் கண்ணை மூடிக்கொண்டு Delete செய்யலாம். கோபப்படுபவர்கள் ஏன்டா உனக்கு இந்த வேலை என நினைக்காமல் மேற்கொண்டு இதை follow செய்யலாமே. 
முதல்வேலையா அந்த ஹோட்டல் கம்பெனி வெப் சைட் ஈமெயில் அட்ட்ரசுக்கு இந்த அப்பாயின்மென்ட் ஆடர் லெட்டெர பார்வோர்ட் பண்ணி முழு விபரத்தையும் தெரிஞ்சுக்கோ
 இரண்டாவதா  வெளி நாட்டில் வேலையில் சேர்க்கும் ஏஜென்டின் நற்சாட்சி பத்திரங்களை உறுதி படுத்தவும் , குடியேற்ற நடைமுறைகள் பற்றி தகவல் தேட மற்றும் அணைத்து உதவிக்கும் இந்தியாவின் இலவச குடியேற்ற ஹெல்ப் லைன் நம்பர் 1800 11 3090 பி.எஸ்.என்.எல் லேன்ட் லைன் முலமாக மற்றும் உலகின் எந்த ஒரு மொபைல் மற்றும் லேன்ட் லைன் மூலமாக +91 - 11 - 4050 3090
இந்த அப்பாயின்மென்ட் ஆடர் உண்மை தாணு தெரிஞ்சுகோ.
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 
இன்டர்நெட் மற்றும் இமெயிலில் ஏமாறாமல் இருக்க சில வழிகள்
 
இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

சிறிது சலனப் பட்டாலும், நாம் நிதானம் தவறி, நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம்.

இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை இங்கு பார்க்கலாம்.

1. முன்பணம் கட்டாதீர்கள்:

ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளது, கடன் தீர்க்கப் பணம் தருகிறோம், பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம், இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்து, தூண்டிலிட்டு, பின்னர் அதற்கு சரி என்கையில், முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும். இதனை மிக அழகாக நியாயப்படுத்தியும் செய்தி தரப்படும்.

பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதே, செலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால், உங்கள் பணம் அவ்வளவு தான். அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளை, அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப் படுத்திவிடுவதே, நாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி.

2. அக்கவுண்ட் எண் தரலாமா?


மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில், உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். அக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டால், உங்கள் அக்கவுண்ட் அவ்வளவுதான்.

பைசா கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்தவும்.

3. தானாக தனி நபர் தகவல் தரலாமா?

ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் தந்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து கொண்டு, மாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும்.

4.போலி பேஸ்புக் செய்திகள்:


பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூட, உங்கள் அக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் - அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்தி உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார், நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் அக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம், உங்களைச் சிக்க வைக்கத்தான்.

5. வீடு தேடி வரும் பொருட்களை இணைய தளத்தில் வாங்க வேண்டாம்:


இணைய தள வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பலர் இதில் பொருட்களை வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர். ஆனால், நாம் நாள்தோறும் நம் வீட்டு வாசலில் விற்பனை செய்யப்படும், அடுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, இணைய தளத்தில் வாங்க வேண்டுமா? விலை குறைவாகக் காட்டிப் பின்னர், அனுப்பும் செலவு, செயல்படும் செலவு, இணைய வரி எனப் பல தலைப்புகளில் காசைக் கறந்துவிடுவார்கள். எனவே இந்த விஷயத்திலும் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
 
6. பெரும் தொகை பரிசாக விழுந்திருப்பதாக வரும் செய்திகளை நம்பாதீர்கள்

உங்கள் இமெயில் முகவரிக்கு எங்கள் குலுக்கலில் பெரும் தொகை (டாலர் மற்றும் ஈரோ வில் குறிப்பிடுவார்கள்) விழுந்திருக்கிறது. உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று தெரிவித்து தங்களிடம் அக்கௌன்ட் நம்பர் போன்ற தகவல்களை பெற முயற்சிப்பார்கள். எக்காரணத்தைக் கொண்டும் எந்த தகவலையும் கொடுத்து விடாதீர்கள். கொடுத்தால் அவ்வளவுதான் உங்கள் அக்கௌன்ட்லிருந்து நீங்கள் அறியாமலே பெரும் தொகை காணாது போய் விடும்.
அன்புதான் உங்கமேல ... அதான் இப்படி எழுத தோணுது. என் பதிவு சரியாய் இல்ல தவறா.  கருத்த எழுதுங்க அதுக்காக நீங்க நல்லவரா. இல்ல கேட்டவரானு கேக்காதிங்க.. யாரப்பா ஒருத்தரு  அழுவுற சவுண்டு கேக்குது.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...