Thursday, February 16, 2012

நக்கீரன் கோபால் செய்த ஆபாசம் அக்கிரமம்,அராஜகம்,,


புலனாய்வு பத்திரிக்கை என கூறி கொள்ளும் நக்கீரன் ஒரு தலைபட்சமாகவே கடந்த பல வருடங்களாக செய்திகளை வெளியிட்டுவருவதுசிறுகுழந்தைகளுக்கு கூட தெரியும்.

தவறு செய்யும் ஒருவரை பற்றி செய்தி வெளியிடும் நக்கீரன் அதே நேரத்தில் அவர் செய்த நல்ல விஷயங்களை வெளியிடுவதில்லை.
அதே போல ஒருவர் செய்த நல்ல விஷயங்களை வெளியிடும் அதே வேளையில் அவர் மீதுள்ள தவறுகளை மறைப்பதிலும் நக்கீரன் கண்ணும் கருத்துமாக இருந்தது தான் வரலாறு.

ஒரு மாநில முதல்வரை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து அட்டை படத்தில் செய்தி வெளியிடுவதற்கு பெயர் தான் புலனாய்வு தன்மையா?. பத்திரிக்கை தர்மமா? எந்த தர்மத்திற்கும் அது பத்திரிக்கை தர்மம் உள்பட ஒரு அளவு உள்ளது.

முதல்வர் ஜெ.ஜெயல்லிதா மீது அவதூறு செய்திகளை போடுவது நக்கீரன் செய்யும் அராஜகம், அராஜகத்தின் உச்சகட்டம், கேட்டால் பத்திரிகை தர்மம்

இந்த அளவு கோபத்தைக் கிளறிய நக்கீரன் கட்டுரைத் தலைப்பை பார்த்தால் நடு நிலையாளர்கள் மட்டுமல்ல திமுக வினரே கூட ஆபாசம் என்பதை ஒப்புக் கொள்வார்கள்

முதலமைச்சர் பிறந்த சாதியின் மீது இந்த அளவு வெறுப்பும் வன்மமும் இருக்கிறது  என்பதை அறியமுடிகிறது.

அதே நேரத்தில் வேறு மதத்தினர் அல்லது சாதியினர் பற்றி இவ்வளவு கொச்சையாக, அநாகரீகமாக எழுதும் துணிவு நக்கீரன் கோபாலுக்கு உண்டா?

தி.மு.க. தலைவர் ஜனநாயக நாட்டில் இப்படி நடக்ககூடாது என்று இது பற்றி கருத்துக்கூறியிருக்கிறார். தினகரன் பத்திரிக்கையை எரித்த போது இது அவருக்கு தெரியவில்லை. 

 மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா? சாத்தான் வேதம் ஒதுவதுபோல் இருக்கிறது. இவர் பேசுகிறார் ஜனநாயகத்தை பற்றி வெட்ககேடு..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...