Thursday, February 16, 2012

குடும்பத்துக்குள் மோதலை உருவாக்கும் செயல்-கருணாநிதி

ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் மோதலை உருவாக்கி அதன் மூலம் வீரபாண்டி ஆறுமுகம் குளிர்காய்கிறார் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோபமடைந்துள்ளதாக, கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.
தி.மு.க கட்சியை தனது குடும்ப சொத்தாக்கி கொண்டதிறமைகருணாநிதிக்கே சாமர்த்தியம். இதனைத்தான் திமுகாவினர் "சாணக்கியத்துவம்" என்பார்கள்.
கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் ராஜாதிகார்சிறையில்ஒருவருடத்திற்கும் மேலாக வாடுகின்றார்.
தனது மகள் கனிமொழி திகாரில் இருக்கும்போது துடிதுடித்த கருணாநிதி
பூவை பத்து நிமிடம் அந்த சிறையில் வைத்தால் வாடிவிடும் என்று இதயம் பதறி அழுதவர்,
தனது மகளை காப்பாற்றி வெளியே கொண்டு வரத்தெரிந்த கருணாநிதிக்கு  ராசாவின் நினைவே மறந்துவிட்டது.

குடும்பத்தை தவிர வேறு எதையுமே சிந்திக்க தெரியாத ஒரு தலைமைக்கு இன்னமும் ஜால்ரா அடிப்பது ஒருசில ஜென்மங்கள் தங்களது பிறவிக்கடனாக நினைக்கின்றன.
வீரபாண்டிஆறுமுகம் எதிர்த்து நிற்கின்றார் என்றால் அதனை தாங்ககூட முடியாமல் கருணாநிதி துடிப்பது நியாயம்தானா?

அழகிரிக்கு ஆதரவாளராக இருப்பது தவறோ? அப்போ ஸ்டாலினுக்கு மட்டும் ஆதரவாளராக இருப்போர் நல்லவர்களா?
என்னதான் கருணாநிதி நடவடிக்கை எடுத்தாலும் கட்சிக்கு "பாலூற்றியது" என்னவோ பாலூற்றியது தான். இப்போது திமுகவின் நிலை நடைபிணம் தான்.

 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...