Saturday, March 17, 2012

பாவ மன்னிப்பு கோரவும், பரிகாரம் செய்யவும் – கலைஞருக்கு கடைசி வாய்ப்பு …

பாவ மன்னிப்பு கோரவும்,
பரிகாரம் செய்யவும் -
கலைஞருக்கு கடைசி வாய்ப்பு …


கலைஞர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார் -
பிரதமருக்கு விசேஷ கடிதம் அனுப்பியும்,
டி.ஆர்.பாலு மூலமாக தூது அனுப்பியும்,
இன்று பாராளுமன்றத்தில் திருச்சி சிவாவின்
பேச்சின் மூலமாகவும் -

ஐ.நா.சபையின் ஜெனீவா  மனித உரிமைகள்
மாநாட்டில் -

இலங்கைக்கு ஆதரவான நிலை எதையும்
இந்தியா மேற்கொள்ளக்கூடாது என்றும்,

இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும்
தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் -

இது குறித்து மத்திய அரசு தன் நிலையை
வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும்.

வாய்மூடி மௌனியாக இருந்த
பிரதமர் மன்மோகன் சிங்கும் இறுதியாகத்  
திருவாய் மலர்ந்தருளி விட்டார்.

இலங்கைக்கு விரோதமாக எந்த
நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபடாது என்றும்,
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா
ஆதரிக்காது என்றும்,
கடிதம் எழுதி விளக்கி விட்டார்.

இந்த நிலையில் – கலைஞர் செய்யக்கூடியது
ஒன்றே ஒன்று தான்.

40,000 தமிழர்களை மே 2009ல் துடிதுடிக்க
அழித்த சக்திகளுக்குத் துணை போன பாவத்திற்கு
மனமார வருந்தி மன்னிப்புக் கேட்கும் விதமாகவும்,
ஒரு பாவப் பரிகாரமாகவும், பிராயச்சித்தமாகவும்  –

மத்திய அரசுக்கு வெளிப்படையாக தன் நிலையை
அறிவிக்க வேண்டும். தன் கோரிக்கையை மத்திய
அரசு ஏற்க முடியாது என்கிற பட்சத்தில்,

கொலைபாதக இலங்கை அரசுக்கு இந்தியா
துணை போகத்தான் செய்யும் என்கிற பட்சத்தில் -

தான் அந்தப் பாவத்தில் தொடர்ந்து பங்கேற்க முடியாது
என்றும்,  திமுக – மத்திய அரசுக்கு ஆதரவைத்
தொடர இயலாது என்றும் தைரியமாக
அறிவிக்க வேண்டும்.

ஒரு மம்தா பானர்ஜியால் சாதிக்க முடிந்ததை,
கலைஞரால் செய்ய முடியாதா என்ன ?

சரித்திரத்தில் – தன் இடம் என்ன என்பதை
இறுதியாக தீர்மானம் செய்யக்கூடிய இன்னொரு
வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்திருக்கிறது.

இதையும் செய்யவில்லை என்றால் – பாவமன்னிப்பு
கோரவும், பரிகாரம் தேடவும் கலைஞருக்கு
கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பையும்
தவற விடுகின்றார் என்றே பொருள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...