Tuesday, June 26, 2018

21 நாட்கள் வரை வெல்ல‍த்தில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால்.

21 நாட்கள் வரை வெல்ல‍த்தில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால் . . .

21 நாட்கள் வரை வெல்ல‍த்தில்  ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால் . . .
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 10, வெல்லம் – ஒன்றே முக்கால் கப்.
பெரிய நெல்லிக்காய்கள் 10 எண்ணிக்கை எடுத்து நன்றாக கழுவி, பிறகு ஈரம்போக சுத்த‍மான
துணியினால் துடைக்கவேண்டும்.  அதன்பிறகு கத்தியி னால் அனைத்து நெல்லிக்காய்களின் எல்லா பக்க‍ங்களி லும் சற்று ஆழமாக கீறி விட வேண்டும். அதன் பிறகு  சுத்த‍ மான வெல்ல‍த்தை இடித்து அதன் தூளை ஒருகப் எடுத்து வைத்துக்கொள்ள‍வேண்டும். இப்போது ஈரமில்லாத சிறிய‌ பாட்டில் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதில்ஒரு நெல்லிக் காயை போட்டு பின்பு கொஞ்சம் வெல்ல‍த்தூளை போட வேண்டும். பின் மீண்டும் ஒரு நெல்லிக்காயை போட்டு மீண்டும் வெல்லத்தூள் கொஞ்சம் போட வேண்டும் இப்ப‍டியே 10 நெல்லிக்காயையும் வெல்லத்தூளையும் போடவேண்டும். அதன்பிறகு மெல்லிய சுத்த‍மான வெள்ளைத் துணிகொண்டு  பாட் டிலின் வாயில் கட்டி, பிறகு பாட்டிலை மூடி வைத்து விட வேண்டும். சரியாக 21 நாட்கள் கழித்து இதை திற ந்து பார்த்தால், வெல்லம் உருகி, நெல்லிக்காயுடன் சேர்ந்திருக்கும்.  அதில் ஊறிய நெல்லிக்காய் , ஜாமூன் போல சுவையாக இருக்கும். அந்த சிரப்பில்  அவ்வ ளவு சத்து இருக்கிறது. இதனை இதனை தினம்தோ றும் ஒரு நெல்லி க்காய் வீதம் சாப்பிட்டு வர வேண் டும். இப்ப‍டியே சாப்பிட்டு வந்தால்  தலைமுடியில் தொடங்கி நம் உடலின் பல பாகங்கள் அனைத்தை யும் அழகுபடுத்துவதோடு இந்த‌ நெல்லிக்காய் பித்தத்தை போக்கி இள நரையைத் தடுக்கிறது. 

குறிப்பு
மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மட்டுமே உட் கொள்ள‍வேண்டிய ஒன்று. ஆகையால் அருகில் இருக் கும் சித்த‍ மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை யை செவிமடுத்து கேட்டபிறகு அதன்படி உட்கொண்டு வந்தால் தீங்கின்றி நன்மையே பயக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...