Tuesday, June 26, 2018

வ‌ணக்க‍ம் – பின்ன‍ணியில் உள்ள‍ அரிய தத்துவம்.

வ‌ணக்க‍ம் – பின்ன‍ணியில் உள்ள‍ அரிய தத்துவம்

வ‌ணக்க‍ம் ( #Vanakkam ) – பின்ன‍ணியில் உள்ள‍ அரிய தத்துவம்
வலதுகரம் நாம் என பொருள்படும், இடதுகரம் நம்முன் அல்லது
நம்மனதில் நிற்பவர்கள் என பொருள்படும்.
வணக்கம் சொல்லும் பொழுது இருகரம் கூப்புவதன் அர்த்தம் என்ன ?
நண்பர்கள். உறவினர்கள். விருத்தினர்கள். மற்றும் அனைவரையும் வரவேற்கும் போது இரு கரங்களையும் இதயத்தின் முன் நிறுத்தி (கை களை கூப்பி) சிரம்தாழ்த்தி வரவேற்க வேண்டும். நம் கரங்களை இத யத்தின் முன் நிறுத்துவதால் இதயபூர்வமாகவும். சிரம் தாழ்த்து வதால் பணிவுடனும். வரவேற்கின்றோம் என்று பொருள் படும்.
தாய் தந்தையை வணங்குதல், வரவேற்றல் :
தாய்தந்தையை வணங்கும்போது முகத்தின்முன் கரங்கூப்பி வணங்க வேண்டும். (ஓர் மனிதனை அடையாளம் காண்பது என்றால் முகத்தை வைத்தே அடையாளம் காண்போம்.) நம்மை இந்த உலகிற்கு அறிமுகப் படுத்தியதால் தாய் தந்தையை முகத்தின் முன் கரங் கூப்பி வணங்க வேண்டும்.
குருவை வணங்குதல், வரவேற்றல்:
குருவை வணங்கும்போது நெற்றிக்குநேர் கரங்கூப்பி வணங்க வேண்டும். நம் சிந்தனையை தூண்டி நம்மை சித்தித்து செயற்பட வைத்தவர் என்பதினால். குருவை நெற்றிக்குநேர் கரங்கூப்பி வணங்க வேண்டும்.
கடவுளை வணங்குதல்:
கடவுளை வணங்கும் போது இருகரங்களையும் தலைக்குமேல் உயர்த்தி கூப்பி வணங்க வேண்டும். கடவுள் அனைத்தையும் கடந்த வர். அனைத்தையும் நமக்கு தந்தவர். எப்பொழுதும் எம்மை ஆள்ப வர் என்பதனால் நம் கரங்களை முடிந்த அளவிற்க்கு தலைமேல் உயர்த்தி கூப்பி வணங்கவேண்டும்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...