Monday, November 16, 2015

அப்துல்கலாம் காப்பாற்றப்பட்டார்‏‏

அரசியல்வாதிகளை பொறுத்தவரை எல்லா விஷயங்களிலும்மிகவும் விழிப்போடு இருப்பார்கள்விழிப்புணர்வு இல்லாதஅரசியல் வாதிகள் இந்தியாவின் முளை முடுக்குகளில் போய்தேடினால் கூட கிடைக்க மாட்டார்கள் இதை படிப்பதற்குஆச்சர்யமாக இருக்கும்தேசிய கீதத்தை கூட தப்பு இல்லாமல்பாடத் தெரியாத அரசியல்வாதிகளுக்கு விழிப்புணர்வாஇது என்னஇந்த ஆள் எதாவது பகல் கனவு கண்டு அது கலையாமலேபேசுகிறானா என்று நீங்கள் யோசிக்கலாம்அப்படியெல்லாம்ஒன்றுமில்லை சுய உணர்வோடு தான் பேசுகிறேன்எழுதுகிறேன்.
 
எந்ததொரு விஷயத்தையும் உடனடியாக தீர்த்து விட்டால் தங்களதுபிழைப்பு நடக்காது என்பதில் நமது அரசியல்வாதிகளுக்குஇருக்கும் விழிப்புணர்வை பற்றி தான் சொல்கிறேனே தவிர எதோஅவர்களுக்கு பொருளாதாரம் சர்வதேச பிரச்சனைகள்சாக்கடையை ஒழித்து கட்டுவது போன்றவற்றில் விழிப்புணர்வுவந்துவிட்டதாக நான் கருதியதாக நீங்கள் நினைத்தால் அதற்குநான் பொறுப்பல்ல.
 
                    ஒரு நாற்பதுஐம்பது வருஷயங்களுக்கு முன்புதமிழ்நாட்டின் சந்து பொந்துகளில் எல்லாம் தரையை பெருக்கும்அளவிற்கு தோளில் துண்டு போட்ட உடன்பிறப்புகள்வடக்கிலிருந்து இந்திமொழி வருகிறதுதமிழ் மொழியைகொன்றுவிட்டு தான் மத்திய அரசு மறு காரியம் பார்க்கும்.  தமிழைகாப்பாற்றுவதற்கு கழகத்தை விட்டால் வேறு நாதியில்லைஎங்களுக்கு ஒட்டு போடுங்கள்பதவியில் அமர்ந்தோமோஇல்லையோ எங்கும் தமிழ்எதிலும் தமிழ் என்று கொண்டுவந்துவிட்டு தான் மறுகாரியம் பார்ப்போம் என்றும் குதிகுதியெனகுதிப்பார்கள்.  கரகரப்பான கழகத்தின் பேச்சுக்கு அறிவை கடன்கொடுத்து ஒட்டுகளும் போட்டு விட்டோம்.  1967-ல் அரியனைஏறியவர்கள்
 
2010 முடிய போகும் இந்த காலம் வரை தமிழக்காக ஒரு துரும்பைகூட கிள்ளிபோடவில்லையென்பது வேறு விஷயம்எங்கே தமிழ்,எங்கே தமிழ் என்று தேட வைத்து விட்டார்கள்.
 
தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்துபடுத்த தானைதலைவர்கள்தனது பேரன் பேத்திகள் ஆங்கிலத்தில் உரையாடுவதுகண்டு ஆனந்த கடலில் முழ்கி தத்தளிக்கின்றனர்ஒட்டு போட்டஅருமை தமிழனோ தங்களது பிள்ளைகளின் அறிவை ஆங்கிலபீடத்தில் பலிகொடுத்து விட்டு மொழியற்ற அனாதையாக ஆகபோவது கூடத் தெரியாமல் செம்மொழி மாநாட்டிற்கு வண்டியேறிகொண்டிருக்கிறார்.  தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினால் பலநாட்டுஅறிஞர்கள் வந்து நல்ல கருத்துக்களை சொல்வார்கள் அதைகாதார கேட்போம் என்ற ஆசையினாலாஅல்லவே  அல்ல.  கழககண்மணிகள் தமிழ் வளர்க்க ஊற்றி கொடுக்கும் மதுக்கோப்பைகளுக்காகவும்பிரியாணிக்காகவும் தான் எங்கள் ஊர்தமிழன் கொங்கு மண்டலம் புறப்படுகிறான்.
 
இந்தி தமிழகத்திற்குள் வந்தால் இங்கிருக்கும் நல்ல இயல்புகள்எல்லாம
போய்விடும்.  வடபுலத்து பண்பாரடுகள் கலச்சாரம் தமிழ்பண்பாட்டை சிதைத்துவிடும்.  தமிழ்நாட்டை தமிழன் ஆள முடியாது.தமிழ் பேசுபவர்கள் அனைவரும் இரண்டாம் தர குடிமக்களாகி விடுவார்கள் தமிழக வளமெல்லாம் சுரண்டிக் கொண்டு போகப்பட்டுவிடும்.  தமிழன் என்ற இனமே பூண்டற்று அழிந்துவிடும் என்றுமேடை தோறும் பேசிய உடன்பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும்தமிழனை தமிழ்மொழியை காப்பாற்ற தனிப்படை அமைப்போம்என்று நெற்றி நரம்பு புடைக்க கத்தினார்கள்.  அத்தோடு மட்டும்நின்றார்களாஇந்தி ஆதிகத்தை ஒழிக்க வேண்டுமென்றால்வடபுலத்து ஆக்கிர மிப்பிலிருந்து விடுபட வேண்டும் என்றால்தமிழன் தனிநாடு காண வேண்டுமென்று போர் முரசுகொட்டினார்கள்.
 
 
 
    தின்ணையில் படுத்தேனும் திராவிடநாடு வாங்குவோம் என்றார்ஒருவர்.  அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றார்வேறொருவர்.  தமிழன் நம்பினான் எந்த காலத்திலும் நடைபெறவேமுடியாத பச்சை பொய்களை கொட்டி வித்த வியாபாரதலைவர்களை இன்றும் நம்புகிறான்.  நாளையும் நம்பி ஏமாறத்தயாராக இருக்கிறான்.  ஆடுகளே வந்து கழுத்தை நீட்டி என்னைவெட்டு என்று சொல்லும் போது கசாப்பு கடைக்காரன் என்னசெய்வான்.   பாவம் மேடை பேச்சாளர்களையும்திரைப்படநடிகர்களையும்பகல் வேடதாரர்களையும் தங்களது ரச்சகர்கள்என்று தமிழன் நினைக்கும் வரை இந்த நாடு உருப்படாது.
 
ராஜ்வ் காந்தி அனுப்பிய இந்திய அமைதி காப்புபடை  இலங்கையில்தமிழர்களை ரத்த சிந்த வைத்ததாம் ஒட்டுமொத்த தமிழ்இனத்தையே அவமானம் படுத்தியதாம் அதனால் அந்த படைஅந்நிய நாட்டில் பணி முடித்து தாயகம் திரும்பிய போதுதமிழகத்தின் முதல்வராக இருந்த திருக்குவளை தந்த திருமகனார்ராணுவத்தை வரவேற்க கூட போக மறுத்தார்.  நான் இந்தியஅரசியல் சானத்திற்கு கட்டுப்பட்ட முதலமைச்சர் என்பதை விட சகதமிழனின் துயரத்தில் பங்கெடுத்து கொண்ட சாதாரண தமிழனாகஇருப்பதே பெருமை என்பது போல் நடந்து கொண்டார்.
 
இன்று இலங்கையில் தமிழ்மக்கள் அனைவரும் நயவஞ்சகமுறையில் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள்.  உரிமைக்கு குரல்கொடுத்த வீர மறவர்களின் குரல்வளை நெரிக்கப்பட்டு விட்டதுலட்ச கணக்கான தமிழ் பிணங்கள் காக்கைக்கும் கழகுக்கும்இரையாக்கப்பட்டு விட்டன.  பசியாலும் நோயாலும் பண்பாடுமிக்கதமிழர்கள் மிருகங்களை விட கேவலமாக முள்வேலிகளுக்குள்அடைப்பட்டு கிடக்கிறார்கள் அமைதிப்படையை வரவேற்க மறுத்த,தமிழர்களுக்காகவே வாழ்வேன்தாழ்வேன் என்ற வீரஉரையாற்றிய முதுபெரும் அரசியல் சாண்க்கியர் முத்தமிழ்அறிஞர்உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் என்று தனக்குதானே பட்டம் வழங்கி கௌரவித்து கொண்ட தமிழகத்தின்முதல்வர் சினிமா கலை விழாக்களில் தன்னை மறந்து உறங்கிகொண்டிருக்கிறார்.
உறங்குபவனை எழுப்பாதேஅவன் அந்த நேரத்தில் மட்டுமாவதுபாவம் செய்யாமல் இருப்பான் என்று பெரியவர்கள் சொல்வார்கள்ஆனால் கலைஞர் அவர்கள் தனக்கும்தன் குடும்பத்திற்கும் தன்பதவிக்கும்  இடைஞ்சல் வந்து விடக் கூடாது என்பதில்அக்கறையோடு இருக்கிறார்.  அந்த அக்கறையின் வெளிபாடுத் தான்வேலுப்பிள்ளை பிரபாகரனின் வயோதிக தாயார் மருத்துவசிகிச்சைக்காக சென்னைக்கு வந்த போது ஆகாயவிமானநிலையத்திலே திருப்பியனுப்ப சாணக்கிய திட்டம் வகுத்தது.
 
தம்பி பிரபாகரனை வீரன்சூரன்தியாகி என்றுயெல்லாம் போற்றிபுகழ்ந்தவர் விடுதலை புலிகளின் தனிநாடு கோக்கைக்கு போர்பரணி பாடியவர் புலி உறுப்பினர் இறந்த போது தனியொருஇரங்கற்பாவே  வடித்துச் கொடுத்த சங்க தமிழ்றிஞர் தனதுபதவிக்காக புலிகளின் போராட்டம் நியாமற்றது என்றதையும்
 
சிங்கள அரசுக்க அடி பணிவதில் தவறில்லை என்றதையும் காதாரகேட்ட பின்பும் தமிழர்கள் இவரை தலைவர் என்று ஏற்றுகொண்டிருப்பதும் விதியின் விளையாட்டு என்று சொல்வதை தவிரவேறு என்ன சொல்வது.
 
 
   இன்று கூட தமிழுக்காகவும்தமிழர்காகவும் அயராதுபாடுபடுவதாக சொல்லும் கருணாநிதி நமக்காக என்னசெய்திருக்கிறார்.  என்பதை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும்கழகங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டஅனைகட்டுகள் எத்தனை தரமான பாலங்கள் எத்தனை,ஆயிரகணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகொடுக்கும் தொழில் கூடங்கள் எத்தனைபுதிய பல்கலைகழகங்கள்கல்லுரிகள்பள்ளி கூடங்கள் எத்தனை நாற்பத்திமுன்று வருடங்களில் விரல் விட்டு எண்ணி விடலாம் முன்னேற்றதிட்டங்களின் பலனை.
 
புண்ணுக்கு புனகு புசுவது போல் பழைய திட்டங்களுக்கு புதியபெயர்கள் சூட்டப்படுகிறதே தவிர மற்றப்படி நடப்பதெல்லாம்வெறும் கேலி கூத்துகள் தான் காமராஜன் மதிய உணவு திட்டம்சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது.  அது என்னவோ பெரியகொடைவள்ளல் தனமாக விளம்பரப்படுத்தப்பட்டதே தவிரஉண்மையா பலன் அதில் எதுவுமில்லை கலைஞர் புதிதாககெட்டுபோன அரிசி சாதத்தில் வாரம் இரண்டு முட்டை தருகிறார்அந்த முட்டை சத்துணவு பொறுப்பாளர் ஆயா மற்றும்ஆசிரியர்களின் வயிற்றை நிரம்பிய பிறகு தான் குழந்தைகளின்தட்டுகளில் வந்து விழகிறது.
 
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று பெயளவில் விளம்பரம்உண்மையில் நடப்பது என்ன ஒரு ஏக்கருக்கும் மேல் நிலம்வைத்திருப்பவருக்கு தான் இலவச சலுகை அதுவும் மின்சாரஇணைப்பு பெற வருட கணக்கில் காத்திருக்க வேண்டும்அதிகாரிகளுக்கு வெல்ல கட்டிகளை கணக்கில்லாமல் கொடுத்தால்கூட விண்ணப்பம் நகராது.  மேஜைக்கு மேஜை கப்பம் கட்டி கைசலித்து போன விவசாயிகளின் எண்ணிக்கை தான் அதிகமே தவிரஉடனடியாக பலன் பெற்றது ஆயிரத்தில் ஒருவர் தான்.  இலவசமின்சாரம் என்பது எல்லாம் சரி வெயில் காலத்தில் வயிலுக்குதண்ணீர் பாய்ச்ச மின்சாரம் எங்கே வருகிறது.
 
மின்சார தட்டுபாடு அதனால் குறிப்பிட்ட நேரத்தில் தான் கரண்ட்வரும் என்று மின்சார இலாக்கா அறிவிக்கிறதுவருடந்தோறும்இந்த அறிவிப்பை தான் பார்க்கிறோமே தவிர மின்சார உற்பத்தியைஅதிகரிக்க இவர்கள் எடுத்திருக்கும் நடவடிக்கை என்னவென்றுசல்லடை போட்டு தேடினாலும் ஒன்றும்
கிடைக்கவில்லை மின்சார உற்பத்தியை தனியார் வசம் ஒப்படைக்கபோகிறார்களாம்.  ஒரு அரசாங்கத்தாலேயே உற்பத்தியை அதிகக்கமுடியாத போது தனியாரால் எப்படி முடியும்?  முடியும்.  தனியாரிடம்ஒப்படைத்தால் தானே இவர்களின் மிக நீண்ட சட்டைப் பை நிரம்பும்அரசாங்க உற்பத்தி செய்தால் பரதேசி மக்கள் தானேபயணடைவார்கள் தமிழ்நாட்டிற்காக உயிரையும் கொடுக்கசித்தமாக இருக்கும் இந்த உத்தமர்களுக்கு என்ன பயன்.
 
இவையெல்லாம் கூட கிடக்கட்டும் தமிழ் மொழியைவளர்ப்பதற்காக ஆட்சிக்கு வந்த இவர்கள் மொழி வளர்ச்சிக்காகசெய்தது என்ன.  தமிழ் கற்பிக்கும் பள்ளி கூடங்கள் வருடத்திற்குஆயிரத்திற்கு மேல் முடப்படுகிறது.   
தமிழை பயிற்று மொழியாககொண்ட படித்த இளைஞர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது.
 
சட்டம்மருத்துவம்பொறியியல்கணினிதுறை போன்றவற்றைஆங்கிலத்தில் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை உள்ளது,  தமிழ்குழந்தைகள் பச்சை நிற பென்சிலை எடுத்து வா என்றால் புரியாமல்விழித்து க்கிரின்  (green) பென்சிலை எடு என்றால் மட்டுமே எடுக்ககூடிய அளவிற்கு மொழி தேய்ந்து கரைந்து மறைந்து கொண்டுஇருக்கிறது ஆனால் செம்மொழி தகுதியை தமிழ் பெற்று விட்டதுஎன்று பல ஆயிரம் கோடியை கழக தமிழ் ஆர்வலர்கள் சுருட்டிகொண்டிருக்கிறார்கள்.
 
 
இந்த நிலையில் செம்மொழி மாநாடு கோவையில் நடந்தது.  அந்தவிழாவிற்கு அப்துல்கலாமல் அழைக்கப்படவில்லை என்று சிலஅப்பாவிகள் வருத்தப்படுகிறார்கள்.  விஞ்ஞானி ஆனாலும் கூடதமிழை மறக்காத  தூயவர் தமிழிலேயே பதவி பிராமணம் எடுத்துக்கொண்ட தலைமை குடிமகன் தமிழையும் தேசத்தையும் சுவாசமாககொண்ட நல்லவர் தமிழக்கு செம்மொழி தகுதியை வாங்கித் தந்தஉண்மை தொண்டர் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தால்.
 
 
    செவ்வாயழை தோட்டத்தில் சீட்டாடும் குரங்குகளான வாலிவைரமுத்து கூட்டத்தார்கள் இடையில்வட்டமிடும் கழகுகளானஅழகிரிதயாநிதிமாறன் கும்பலுக்கு மத்தியில்வாய்பிளந்துநிற்கும் ஒநாய்களான கனிமொழிகயல்விழி போன்றஅரைவேக்காட்டு மேதாவிகளுக்கு இடையில் சுற்றி வளைக்கும்மலை பாம்புகளான ஸ்டாலின்ராசாத்தி அம்மாள் நெருக்குதலுக்குஇடையில் பாவம் மாட்டிக் கொண்டு திக்கு முக்காடி போயிருப்பார்ஜெயலலிதா இரவோடு இரவாக கலைஞரை கைது  செய்த போதுஐய்யோ காப்பாற்றுங்கள் என்று கத்தினாரே அதே போலஅப்துல்கலாம் கத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நல்லவேளை கலைஞர் புண்ணியத்தில் நல்லவர்களின் நகைப்பிற்குஇடம் தராமல் செத்து போன இலங்கை தமிழர்களின் சாபத்திற்குஆளாகாமல் செத்து கொண்டிருக்கும் உலக தமிழர்களின்கோபத்திற்கு இறையாகாமல் அப்துல் கலாம் காப்பாற்றப்பட்டார்.  அதுவரையில் உலக தமிழர்களின் ஒரே தலைவருக்கு நன்றி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...