Saturday, December 2, 2023

வெள்ளையரிடமிருந்து கொள்ளையர்கள் கையில்...

 அந்நிய படையெடுப்புகள் அடித்த கொள்ளை,

ஆங்கில பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டல்கள் - இப்போது வேறு வடிவம் பெற்றிருக்கிறது...
மாநிலத்தில் சம்பந்தப்பட்ட துறைகள் இருந்தாலும், மாநிலத்தின் லஞ்ச ஒழிப்புத்துறை விழிப்பாக செயல்பட்டாலும், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என எந்த துறைகள் கண்கொத்தி பாம்பாக கவனித்துக் கொண்டிருந்தாலும் அதையும் தாண்டி பொது சொத்துக்களை சுரண்டி சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்றனர் அரசியல்வாதிகள்.
அத்தி பூத்தார் போல இதிலிருந்து வேறுபட்டு நிற்கும் நம் சம காலத்தவரை நீங்களே யார் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். (இப்படிப்பட்ட பதிவுகளுக்கு அவர்கள் மனம் வருத்தப்பட்டால் அவர்களிடம் வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்)
ஏதோ ஒரு கட்சிதான் இப்படி என்றில்லை. ஆட்சிக்கு வருபவர்கள் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள் என்பது முப்பது வருட அனுபவத்தில் நான் கண்ட உண்மை.
இதோ, 'குவாரிகளுக்கு டெண்டர் விடுகிறோம்' என்கிற பெயரில் பெரம்பலூரில் நடந்த அட்டூழியம் தொடர்பான குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான எனது கவர் ஸ்டோரி.
வேறு எங்காவது பிரச்சனை என்றால் மாவட்ட கலெக்டரிடம் போய் முறையிடலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலேயே புகுந்து அட்ராசிட்டி செய்தால் எங்கே போய் சொல்வது ?...
கட்டுரைகளை புத்தக வடிவில் படிக்க முடியவில்லை என்று கேட்ட எனது வெளிநாடு வாழ் நண்பர்களுக்காக இந்த பக்கங்கள் இங்கே பகிரப்படுகின்றன...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...