Saturday, December 2, 2023

*லட்சுமண ஐயர்*

 லட்சுமண ஐயரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர் 2011ல் மறைந்தார். அவர் மறைவுக்கு 20 பேர் வந்திருந்தனர்.

380 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர். அனாதை போல் இறந்தது அதிர்ச்சி அளிக்கலாம். கொஞ்சம் அதிர்ச்சியைப் பாக்கி வையுங்கள்.
அப்பா ஶ்ரீனிவாச ஐயர் கோபிச்செட்டிப் பாளையத்தின் சட்டமன்ற உறுப்பினர். மகனும் கோபிச் செட்டிப் பாளைய மன்றத் தலைவராகப் பணியாற்றியவர் தான். இருந்தாலும் வெறும் 20 பேர் தான் அவர் மரணத்துக்கு வந்தார்கள் என்றால் அது தான் தமிழ் நாடு. #திராவிடமாடல் என்பது அதுதான்.
லட்சுமண ஐயர், அவர்தம் மனைவி என்று குடும்பமாக சிறையில் இருந்த நேரம் உண்டு. இப்போது போல் ஊழல் வழக்கெல்லாம் இல்லை. விடுதலைப் போராட்டத்துக்காகச் சிறை சென்றார். மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம். கோவை, பவானி, அலிப்பூர், பெல்லாரி என்று சிறை.
1931ல் காந்தியடிகள் சொன்னபடி,தன் வீட்டில் ஹரிஜனங்களைச் சேர்ந்த்தார் லட்சுமண ஐயர். ஜாதிப் பிரஷ்டம் செய்தார்கள்.
ராஜாஜி சொன்னதற்காக நரிக்குரவர் இனச் சிறுவன் ஒருவனைச் சேர்த்துக்கொண்டு ஒரு மாணவர் விடுதி துவங்கினார். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி அது.
1944ல் வார்தா செல்கிறார் லட்சுமண ஐயர். 'நீ பிராமணனா?' என்று கேட்கிறார் காந்தி. 'விடுதலைப் போருக்குப் பலர் இருக்கிறார்கள். நீ உன் ஊருக்குப் போய் ஹரிஜன சேவை செய்' என்று ஆணை இடுகிறார். காந்தியடிகள் சொல்படி லட்சுமண ஐயர் கோபியில் ஹரிஜனங்களுக்கான குடியிருப்புகள் கட்டுகிறார்.
1952, 56 ஆண்டுகளில் கோபி குடிநீர் திட்டம் கொண்டுவருகிறார்.
1986ல் கோபி நகரமன்றத் தலைவராகிறார் ஐயர். மனிதக் கழிவுகளை மனிதன் அகற்றுவதைத் தடை செய்ய வழிவகுக்கிறார். உலர் கழிவறைகள் இல்லாமல், நீர் உள்ள கழிவறைளைக் கட்ட உதவுகிறார்.
கோபியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஐயர் தானகாமக் கொடுத்த இடத்தில் கட்டப்பட்டவை.
2011ல் ஐயர் மறைந்தார். அவர் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்படவில்லை.
ஐயர் மறைந்த அன்று ஒரு தலித் பெண் மட்டும் பெரும் குரலுடன் ஒப்பாரி வைக்கிறாள். ஐயர் உதவியில் பட்டதாரியான பெண் அவள் என்று கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தன் நூலில் எழுதுகிறார்.
ஐயர் மறைந்த அன்று மாவட்ட கலெக்டர் அந்த ஊர் வழியாகச் செல்கிறார். ஆனால் அஞ்சலி செலுத்த நேரமில்லை. தேசத்திற்காக உழைக்க வேண்டாமா சார் ?
ஒரு மந்திரி வரவில்லை. ஒரு எம்.எல்.ஏ.வரவில்லை. ஒரு கவுன்சிலர் வரவில்லை.
ஆங்.. மறந்துவிட்டேனே. கோட்டாட்சியர் வந்தார். அஞ்சலி செலுத்த அல்ல. தியாகி மறைவு என்றால் ரூ 2000 கொடுக்குமாம் அரசு. அதைக் கொடுக்க வந்தார். அவரது குடும்பத்தினர் அதையும் ஹரிஜன சேவைக்கு வழங்கிவிட்டனர்.
380 ஏக்கருக்குச் சொந்தக்காரரான ஐயரின் மகன்களுக்கு என்று விட்டுச்சென்றது அவர் வாழ்ந்த அவரது வீடு மட்டுமே.
அடடா மறந்துவிட்டேனே. ஐயர் இறந்த போதுதான் யாரும் வரவில்லை. ஆனால் அவர் இருந்த போது, ராஜாஜி, ராமசாமி நாயக்கர், காமராஜர் போன்றவர்கள் அவர் வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிறார்கள். நண்பரின் வீட்டிற்கு வராமல் இருப்பார்களா என்ன ?
சரிதான் போங்கள். இதையும் மறந்துவிட்டேன். ஐயரின் கண்களையும் தானமாகக் கொடுத்துவிட்டாராம், ஊரையே தானமாகக் கொடுத்த வள்ளல் லட்சுமண ஐயர்.
இவரைப் பற்றி எந்த வரலாற்று நூலிலும் தேட வேண்டாம். இருக்காது. அதுதான் #திராவிடமாடல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இது பெரியாறு மண்ணுடா...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...