Friday, December 9, 2011

வீழ்வது முல்லையாக இருந்தாலும், வாழ்வது பிள்ளையாக இருக்கட்டும்!


தி.மு.க. வின் அவசரச் செயற்குழுக் கூடுகிறது என்றாலே…. தேசமே அலறுகிறது.
அந்தக் கூட்டத்தின் முடிவை அறிந்துகொள்ள, ஐ.நா. சபை ஆவலுடன் காத்திருக்கிறது….
அமெரிக்க நாட்டின் அதிபர் ஒபாமா கூடப் படபடப்பில் இருப்பதாகக் கேள்வி…..
ஒவ்வொரு முறை அது கூடும்போதும் அப்படித்தான் எதிபார்ப்புடன் இருப்பார்கள்……
ஆனால், கடைசியில்…..
போண்டாவுக்குச் சட்னி போதவில்லை, இனிமேல் சட்னியை மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்காமல் நாமே தயார் செய்துகொள்ளவேண்டும் என்பது போன்ற தீர்மானங்களைப் போட்டுவிட்டுக் கலைந்துவிடுவார்கள்.
இந்த முறையும் அட்சரம் பிசகாமல் அதுதான் நடந்திருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாகப் பிரதமருக்குக் கடிதம் எழுதுகிற முழு அதிகாரத்தையும், தலைவருக்கே அளிப்பது என்கிற ஆவேசமான தீர்மானம் ஒன்றைத்தான் மறதியாக விட்டுவிட்டார்கள்.

அணை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம், தி.மு.க.வுக்கு அதிர்ச்சியைத் தருகிறதாம்……அதற்காக- உண்ணாவிரதப் போராட்டமும், மனிதச்சங்கிலிப் போராட்டமும் நடத்தப் போகிறார்களாம்….. (ஒரே வரியில் நாடகம் நடத்தப் போகிறோம் என்று சொல்லியிருக்கலாம்).
நீங்கள் நடத்தாத உண்ணாவிரதமா?…. கருணாநிதி தனது தள்ளாத வயதான காலத்திலும் கூட, உண்ணாவிரதமிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற நினைக்கிறார் என்று மக்கள் நினைக்க வேண்டுமாம்…..
உலகத்திலேயே அந்தமாதிரி மூன்று மணிநேர உண்ணாவிரதத்தை உங்களைத்தவிர வேறு யார் நடத்திவிட முடியும்?
கொத்துக் கொத்தாக எம் தமிழ் உறவுகளைப் பிய்த்து எறிந்துகொண்டிருந்த போதுகூடக் கொஞ்சம் கூடப் பதறாமல், துடிக்காமல்…. மனைவியும் துணைவியும் அருகிருக்க நீங்கள் நடத்திய அந்த மெரீனா பீச் நாடகத்தை நாடு எப்படி மறக்கும்?
மீண்டும் அதே நாடகமா?….

அய்யோ…. தி.மு.க உண்ணாவிரதம் இருக்கிறதே என்று அப்படியே மத்திய அரசு ஆடிப்போய்விடுமாக்கும்? ஆகும் வேலை ஏதாவது இருந்தால் பாருங்கள், இது போன்ற அரசியல் விளம்பரங்கள் தயவு செய்து வேண்டாம்..
பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் நெருக்கடி கொடுத்தாலே போதும். உங்களது பலத்தைக் கொண்டு மத்திய அரசை நீங்கள் மிரட்டினாலே போதும்….. அல்லது டில்லி சென்று பார்லிமெண்ட் வளாகத்தில் உண்ணாவிரதம் இருங்கள் போதும்…. கவனம் திரும்பும்.
வாரிசுகளுக்குப் பதவி வாங்குவதற்காக மட்டும் என்ன மிரட்டு மிரட்டினீர்கள்?…. அதில் பாதியையாவது இப்போது காட்டக்கூடாதா?
அப்புறம் எதற்கு இந்த பில்ட் அப் எல்லாம்? இன்னைக்கு ஒரு நூறு, இருநூறு – பிஸ்லரி வாட்டர் பாட்டில் வேஸ்ட் ஆனதுதான் மிச்சம். அணையாவது? டேமாவது? தண்ணியாவது?……
கடிதம் எழுதுவது, உண்ணாவிரதம் என்பது….. இதெல்லாம் ஊரை ஏமாற்றுகிற வேலை- உங்களைப் பொருத்தவரை!
உங்களால் முடியும்….நீங்கள் மனது வைத்தால்! ஆனால், நாட்டு நலன் காப்பதைவிட….. அவசர வேலைகள் அதிகம் உங்களுக்கு இருப்பதால்…. இப்படி சர்க்கஸ் காட்டுவதைதவிர உங்களுக்கும் வேறு வழியில்லை என்பது, எங்களுக்கும் புரியாமல் இல்லை.
தி.மு.க……. மீண்டும் தி.மு.க.வாக மாறும்போது பார்க்கலாம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...