Thursday, November 3, 2011

மீண்டும் சிறை கனிமொழிக்கு.... தோல்வியில் கலைஞரின் ராஜதந்திரம்..



 

ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி கடந்த 5மாத காலமாக சிறையில் இருக்கும் கனிமொழிக்கு இன்றாவது ஜாமின் கிடைத்து விடுமா என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பில் தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் டில்லியில் முகாமிட்டு காத்திருக்கின்றனர். 


கடந்த 24 ம் தேதி ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது . இதில் சி.பி.ஐ., தனது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. இதனால் அவரை நீதிபதி ஜாமினில் விடுதலை செய்வார் என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக தீபாவளி கொண்டாடும் நேரத்தில் அவர் வெளியே வருவது கூடுதல் எதிர்ப்பார்ப்பாகவும் இருந்தது.


தொலைதொடர்பு துறையில் ராஜா அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேட்டில் எம்.பி.,கனிமொழிக்கும் தொடர்பு இருந்தது சி.பி.ஐ., மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆதாயம் பெற்றதற்காக ஸ்வான் என்ற நிறுவனத்தினர் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடியை கொடுத்தனர். இது கடனாக பெறப்பட்டது என்று கனி மொழி சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த வழக்கில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக சி.பி.ஐ., தாக்கல் செய்திருந்த குற்றச்சாட்டை ஏற்று ஆதாராம் இருப்பதாக உணவர்வதாகவும் நீதிபதி ஓ.பி.,சைனி கூறியிருந்தார். குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகி விட்டால் ஜாமின் வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்த கருத்தின்படி இன்று ஜாமின் கிடைக்குமா என்பது தெரிந்து விடும் .


கனிமொழியுடன் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குனர் ஆசீப்பால்வா, திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி மற்றும் ராஜீவ்அகர்வால் ஆகியோர் ஜாமின் கேட்டுள்ளனர்.


மனு விசாரணை வருவதையொட்டி இன்று கனிமொழி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அனைத்துதரப்பிலும் ஜாமின் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சியாக ஜாமின் மறுக்கப்பட்டு இந்த விசாரணை வரும் 11 -ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் கலைஞர் டில்லியில் முகாமிட்டு செய்த ஏற்பாடுகள் ஏதும்  எடுபடுவதாக தெரியவில்லை. ஊழல் செய்தவர்கள் காலம் முழுக்க ஜெயில்தான் இருக்கவேண்டும். அரசியவாதிகளுக்கு ஆதரவாக இல்லாதல் நீதிமன்றங்களின் செயல்பாட்டு ஒரு சபாஷ் போடடே ஆகவேண்டும்.

இனி என்னவாகும் பொருத்திருந்து பார்ப்போம்..........

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...