Sunday, November 13, 2011

ராஜபக்சே வீட்டுக்கு சேவகம் செய்யும் இந்திய கடல்படை!

 கச்சத்தீவு கடல் பகுதியில், ராமேஸ்வரம் மீனவர்கள், நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். மாலை 6 மணிக்கு, நான்கு கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர் தாசன் படகு உட்பட, 10க்கும் மேற்பட்ட படகிலிருந்த வலைகளை வெட்டி, கடலில் வீசினர்.

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், மீனவர் விக்டருடைய படகின் முன்பகுதி சேதமடைந்தது. இலங்கை கடற்படையினர் வெறிச்செயல் தொடர்ந்து அரங்கேறுவதால், மீனவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது.

சிந்திக்கவும்: இந்தியாவே உனது கப்பல் படை எங்கே போனது. ராஜ்பக்சே வீட்டு கழிவறையை கழுவவா? உனது நீர்மூழ்கி கப்பல்களும், ராடார்களும் எங்கே போனது. ஈழத்திலே  கடைசி கட்ட யுத்தத்தின் போது தமிழ்  போராளிகள் கடல்வழியே தப்பி செல்லவோ அல்லது ஆயுதம் கொண்டுவரவோ விடாமல் பாதுகாத்து முற்றுகை போட்டு ராஜபக்சேவுக்கு விசுவாசமாக வலை ஆட்ட தெரிந்ததல்லவா இப்போது எமது மீனவர்களை பாதுக்காக்க முடியவில்லையா.

உனது விசுவாசம் எல்லாம் ராஜபக்சே உடந்தானா? ஓ.... தமிழர்கள் உனக்கு அந்நியர்கள் ஆச்சே.. சீக்கிரம் தனிதமிழ் நாடு அமையும் அதன் கப்பல்படை சிங்கள கயவர்களை ஓட ஓட விரட்டும். தனிதமிழ் நாட்டின் கப்பல்படையை சேர்ந்த கப்பல்களும், நீர் மூழ்கி கப்பல்களும் தமிழக மீனவர்களை பாதுகாக்க களமிறக்கப்படும் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...