Tuesday, November 15, 2011

புற்று நோயை அழிக்கும் வீரிய மருந்து கண்டுபிடிப்பு

உயிர் கொல்லி நோயான புற்று நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு புற்று நோயை முற்றிலும் அழிக்க கூடிய வீரியமான மருந்தை கண்டுபிடித்துள்ளனர். 
 புற்று நோயை அழிக்கும்
 
வீரிய மருந்து கண்டுபிடிப்பு
“கேஜி 5” என்றழைக்கப்படும் இந்த அதிசய மருந்து புற்று நோய் பாதித்துள்ள “செல்”களை முற்றிலும் அழிக்கும் தன்மை கொண்டது. இந்த மருந்து புற்றுநோய் செல்களை தற்கொலை செய்து கொள்ள செய்து அது மேலும் பரவாமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது. இந்த மருந்து இன்னும் 5 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
 
இதுகுறித்து விஞ்ஞானி பேராசிரியர் டேவிட் செரேஷ் கூறும்போது, இந்த அதிசய மருந்து மாத்திரைகள் வடிவில் வழங்கப்பட உள்ளது. இது மிக சிறிதளவில் மட்டுமே பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் புற்று நோய் மேலும் பரவாமல் முற்றிலும் குணமாக்கும் என்றார்.
 

புற்றுநோயை உருவாக்கும் ரீஃபைண்ட் ஆயில்

கீரீம்,  எடிபிள் கம் ஆகியவற்றை எடுத்த பிறகு உருவாகும் எண்ணெய் தான் ரீஃபைண்டு ஆயில். முற்றிலும் தண்ணீர் போன்ற ஒரு திரவம் தான் ரீஃபைண்ட் ஆயில். சமையலில் உணவு பொறிக்கப்படும் போது, அதிகச் சூட்டினால் இந்த எண்ணெய் போன்ற திரவம் முற்றிலுமாய் சிதைந்து விடுகின்றதாம். இந்த எண்ணெய்யை உட்கொள்வதால் தான், ஆஸ்துமா, தைராய்டு, புற்று நோய் ஏற்படுகிறதாம். கூவிக் கூவி மீடியாக்களில் பல்வேறு கலர் கலரான விளம்பரங்கள் மூலம் இன்று சமையல் எண்ணெய் மார்க்கெட் படு சூடு பிடித்திருக்கின்றது. இந்த எண்ணெய் தான் பல்வேறு நோய்களுக்கும் காரணம் என்று விஜயபாரதத்தில் வெளியான கட்டுரையை தினமணிக் கதிர் வெளியிட்டு இருக்கிறது. கீழே இருப்பது அதன் கட்டிங். படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.



  

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...