Tuesday, November 29, 2011

யார் இப்போது முட்டாள்? - சிறுவர் கதைகள், இந்தியா - சில கேவலமான(வேதனையான) உண்மைகள்.


அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா ஒரு நாள் ஒரு குறுகலான ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்.

அதே பாதையின் மறு முனையில் இருந்து ஒரு முரட்டு ஆள் வந்து கொண்டிருந்தான். எதிரில் வருவது யார் என்று அறிந்த அந்த முரடன் வேண்டுமென்றே வழியை மறைத்துக் கொண்டு வழி விடாமல் நின்றான்.

வழியை விடுங்கள் என்று பெர்னாட்ஷா அமைதியாக கேட்டார்.

அந்த முரடனோ முட்டாள்களுக்கு வழிவிடுவது என் வழக்கமில்லை என்று கூறி வழியை மறைத்துக் கொண்டான்.

பெர்னாட்ஷா சிரித்துக்கொண்டே எனது பழக்கம் வேறு விதமானது, ' நான் முட்டாள்களுக்கு வழிவிட்டு விலகி நிற்பேன்' என்று கூறிவிட்டு பாதையில் ஒரு புறமாக விலகி நின்றார்.

மிகவும் சாதுர்யமாக அவமானப்படுத்தப்பட்ட அந்த முரடன் பெர்னாட்ஷாவை முறைத்துக்கொண்டு அவரைக் கடந்து சென்றான்.

இது எப்படி இருக்கு?
 

இந்தியா - சில கேவலமான(வேதனையான) உண்மைகள்.

கூடங்குளம் பற்றி மறுபடியும் ஏதாவது சொல்றாரோ?


  • அத்தியாவசிய தேவையான நல்ல அரிசியின் விலை கிலோ ரூ. 30 லிருந்து ரூ. 40 ரூபாய்.                                                                                                ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது ...!!
  • ரேசன் கடையில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்...!!
  • வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம்.        ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம் ...!!
  • ஒரு Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து      சேர்வதில்லை ...!!

இதுவும் ஒரு கேவலமான உண்மை 
  • ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை ...!!
  • அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன ...!!
  • குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது ...!!
  • மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் ...!!
  • கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை... அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!
  • குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம் ...!!!!

எனக்கு இந்த கேவலமான உண்மைகளை மெயில் அனுப்பி படிக்க (சிந்திக்க) வைத்த பிரகாஷ்க்கு நன்றிகள். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...