Monday, November 7, 2011

இவர்களை விட்டுவிட்டு கனிமொழியை மட்டும் தண்டிப்பது நியாயமா..?

நியாயமா..?

கடந்த 100 நாட்களாக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் தகவல் கனிமொழி ஊழல் பற்றியதே. அவர் கைது மற்றும் அதற்கு பின் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா..? கிடைக்காதா.. ? என்ற பிரச்சனை பரவலாக பேசப்பட்டு வருகிறது..

இப்படி ஆளாளுக்கு அவரை இம்சிப்பது ஏன்என்று தெரியவில்லை. அப்படி என்ன செய்துவிட்டார் அவர். தனக்கு நெருக்கமான ஒரு அமைச்சரிடம் வெறும் 200 கோடி பணம்பெற்று அதை தமிழக மக்களும், உலக மக்களும் பயன்பெரும் வகையில் கலைஞர் பெயரில் பல்வேறு தொலைகாட்சி சானல்களை தானே தொடங்கினார் அதைஎப்படி தவறு என்று சொல்வது. அந்த பணத்துக்கு ஏதாவது ‌வாங்கி செலவு ஏதாவது செய்துவிட்டாரா என்ன..?

வெறும் 200 கோடிக்கு போர்கொடி தூக்கும் நீங்கள் கீழ்கண்டவர்கள் தவறு செய்யும்போது ஏன் வாயை மூடிக்கொண்டு இருந்திர்கள்.. முதல் அவர்களை கேளுங்கள் அப்புறம் கனிமொழியை கேட்க்கலாம்.


சிவாஜி தி பாஸ் என்ற பெயரில் ஒருவர் பல்லாயிரம் கோடி ஊழல் செய்து தன்னுடைய பெயரில் கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை என்று அமைத்துக்கொண்டார். அதற்கு நீங்கள் அமைதியால் இல்லாவிட்டாலும் பரவாயில்லை பாராட்டி வெற்றி கொண்டாட்டம் செய்தீர்கள். அவரை சூப்பர்ஸ்டார் என்று தலையில் தூக்கிவச்சி கொண்டாடினீர்கள்..!


கந்தசாமி என்ற ஒருவர், வருமானவரித் துறையில் பணிபுரிந்துக்கொண்டு வரிஏய்ப்பு செய்பவர்களிடம் இருந்து பணத்தை சுருட்டி அவர் இஷ்டத்துக்கு யார்யாருக்கோ கொடுத்தார். அப்போது நீங்கள் ஏன் எதற்கு என்று கேட்டீர்களா...!

தற்போது கூட மங்காத்தா ஆடுவதாக சொல்லி இரண்டு போலீஸ் அதிகாரிகள்  500 கோடியை அபேஷ் செய்தார்கள் அதற்கு தைதட்டி பாராட்டினீர்கள்...

இவர்களெல்லாம் பலநூறு‌கோடி ஊழல் செய்து விட்டு சந்தோஷமாக வெளியில் இருக்கிறார்கள். பாவம் கனிமொழியை மட்டும் உள்ளே வைத்திருப்பது கொஞ்சம் கூட நியாயம் இல்லை தானே...


இதையெல்லாம் தவறு என்று சொல்லாத நீங்கள் ஒன்றும் தெரியாத வெறும் 200 கோடியை மட்டுமே வாங்கிய கனிமொழியை மட்டும் குறைசொல்வது எந்தவிதத்தில் நியாயம்...

(கனிமொழியை பற்றிய பரபரப்பு செய்திகளுக்கு மத்தியில் அதே குற்றத்தை வைத்துக்கொண்டு ஒரு நகைச்சுவை பதிவு...)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...