Friday, April 27, 2012

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் குடும்ப அரசியலுமே

கழக கண் மணிகளே! குவாட்டர் கட்டிங் செய்வோம்! ஓடியாங்க! 
இன்று உலகிலுள்ள மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளின் அரசியல் பொருளாதார நிலமைகளை உன்னிப்பாக அவாதானித்தால் ஒவ்வோர் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அந் நாடுகளில் ஆட்சியில் உள்ளோரின் சிறப்பான திட்டமிடலும், வழி நடத்தலும் தான் காரணமாக இருக்கும். ஆனால் நம்ம இந்திய நாடுகளில், இலங்கை ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளோட புள்ளைங்க நிலமை தான் சிறப்பாக இருக்கும். இதற்கான காரணம் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் மந்திரிகளின் சீரிய பணியும், குடும்ப அரசியலுமே ஆகும். என்றைக்கு எம் தலைவர்கள் மக்கள் மேல் தீவிர அக்கறை கொண்டு நாட்டின் முன்னேற்றம் பத்தி சிந்திக்கிறாங்களோ, அன்றைக்கு தான் நம்ம நாடுகளின் வீதிகள் பள பளக்கும், ஏழைகள் இல்லாது நம்ம நாடுகள் பொருளாதாரத்தில் வலுவாக வளர்சியடையும்.
வெளிநாட்டு அரசியல் ஆட்சிப் பீடங்களில் அல்லக்கைஸ், அடிவருடிகள், செம்பு தூக்கிகள், கழக கண்மணிகள் மாதிரி ஆளுங்க கெடையவே கெடையாது. அப்படி யாராச்சும் எந்த நாட்டிலையாச்சும் இருந்தாங்க என்றா, தமது கட்சியை அவமதித்து விட்டார்களே எனும் காரணத்தால் என்றாவது ஓர் நாள் ஆர்ப்பாட்டம் நடத்துவார்களே அன்றி எம்மைப் போல கேவலமாக கட்சியை வேட்டித் துண்டாக கட்டி, ஐயோ என் வேட்டி அவுந்து போச்சே என கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டாங்க. நம்ம நாடுகளில் மாத்திரம் இந்த விசித்திரம் நடந்தேறுதுங்க. ஒவ்வோர் அரசியல்வாதியும் சாதாரண மக்களை முட்டாளாக்கி தன் சொந்த மக்களை சொகுசு வாழ்க்கை வாழப் பண்றான். இதனை அறியாத அற்ப பதர்களாக இலங்கை, இந்திய வாழ் அப்பாவி மக்களும் கட்சி தொண்டர்களும் தம் வாழ்க்கையினை தொலைக்கின்றார்கள்.
ஒவ்வோர் அரசியல்வாதிக்கும் செம்பு தூக்கும்/ பஞ்சாயத்து பஞ்சர் மணிகள், அல்லக்கைஸ், அடிவருடிகள் என்னைக்காச்சும் ஓருவாட்டி, நம் தலைவனிடம் சொந்தமா டீவி ஸ்டேசன் இருக்கே, பத்திரிக்கை இருக்கே, நெரம்ப பணம் இருக்கே இது போல பணம் எப்போது நம்ம கைக்கு வரும்? நம்ம புள்ளைங்களை நாம எப்போது முன்னேற்றலாம் என்று சிந்தித்திருப்பாங்களா? அரசியல்வாதிகளின் காலை நக்கி, அவர்களுக்கு துதி பாடல் செய்யும் இந்திய வாழ் புத்தி ஜீவிகள் செய்யும் மகா தவறு! ஒரு குருவி ரொட்டிக்கும், குச்சி மிட்டாய்க்கும், குவாட்டர் போத்தலுக்கும் ஆசைப்பட்டு ஒட்டு மொத்த இனத்தையுமே கூட்டி கொடுப்பதாகும்! 
நம்ம தலைவர் இம்புட்டு பணம் வச்சிருக்காரே! ஆசியாவிலே முதல் பத்து இடத்தினுள் வரக் கூடிய பணக்காரர் வரிசைல நம்ம தலைவர் இருக்காரே! அவர் வசம் உள்ள சொத்துக்களை தமிழ் நாட்டில் உள்ள ஏழைங்களுக்கு வாரி வழங்கினாலே நாட்டில உள்ள ஏழைங்க எண்ணிக்கை குறைஞ்சிடும். தொழில் வாய்ப்புக்கள் பெருகும், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும், இன்னும் கொஞ்ச காலத்தில நாட்டில் அனைத்து மக்களும் சரி நிகர் சமனாய் மதிக்கப்படுவாங்க. தமிழகம், இலங்கை என்றால் அனைத்து மேலை நாட்டவரும் அடடா... அபிவிருத்தியில் புரட்சி செய்த அதிசய நாடுகள் என்று வியப்படைவாங்க என்றெல்லாம் எண்ணியிருப்பாங்களா?

தங்க புள்ளைங்களும் வாழ கூடாது! தங்க சொந்த பந்தங்கள், ஊர்க்காரங்க, உறவுக்காரங்களும் முன்னேற கூடாது. மக்களை பல காலமாக ஏமாற்றி கொண்டிருக்கும் மஞ்சள் துண்டு மகான் மட்டும் முன்னேறனும் எனும் ஆசைல குவாட்டருக்கு ஆசைப்பட்டு ஒரு இனத்தையே முட்டாளாக்கிறோம் எனும் உண்மையினை உணராது இந்த அல்லக்கைஸ் இருப்பதனை நினைக்கையில் சிரிப்பு சிரிப்பா வருதுங்க. சாகப் போற 90 வயசிலையும் நம்ம கழக கொழுந்து கருநாய்நிதி ஒட்டு மொத்த தொண்டர்களையும் முட்டாளாக்கி சுவிஸ் பேங்கில முதலீடு செய்து சொகுசா தன்னோட வாழ்க்கையினை ஓட்டுறாரு! ஆனா குவாட்டருக்கு ஆசைப்பட்ட நாம மட்டும் கலைஞரை நம்புங்க மக்களே! உங்களுக்கு விடிவு பொறக்கும் எனச் சொல்லி எம்மை நாமே முட்டாளாக்கி கொண்டிருக்கிறோம்! 
திமுக அல்லக்கைஸ்களே! அடிவருடிகளே! முட்டாள்களே! நீங்க பண்ண வேண்டியது யாதெனில் மல்லாக்கா படுத்து எச்சில் துப்பி பாருங்க. அந்த எச்சில் உங்க மேல தான் விழுகிறது எனும் உண்மையாச்சும் உங்க மர மண்டைக்கு வந்தா ஓடிப் போயி கழக கொழுந்தை கட்சியை விட்டு விரட்டுங்க. உங்க கட்சில எவன் ஒருத்தன் ஊழல், லஞ்சம், குடும்ப அரசியல், சுய நலம் இல்லாம இருக்கானோ அவனை கழகத்திற்கு தலைவனாக்கி அழகு பாருங்க. அப்புறமா பாருங்க கழகமும் ஒளி பெறும். எம் தாய்த் தேசமும் விடிவு பெறும்! இந்த மாதிரி அரசியல்வியாதிங்க எப்போது ஒழிவாங்க என்று ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்பார்த்திட்டு இருக்கு. அந்த நல்ல நாள் என்னைக்கு வருதோ... அன்னைக்கு தான் இலங்கை இந்திய மக்கள் வாழ்வில் விடியல் பிறக்கும்! 

இது குவாட்டருக்கும், கவுன்சிலர் பதவிக்கும் ஆசை கொள்ளும் கழக கண் மணிகளுக்கு புரியுமா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...