Wednesday, March 23, 2011

எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம்ல...


* எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம்ல...

வடிவேலு பாணியில சொல்லப்போனா எவ்ளோ அடிச்சாலும் தாங்குற ஒருவரைத்தான் நாம இப்பவும் பிரதமரா வெச்சி வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கோம்.ஒரு மனுஷன் ஒருதடவை அசிங்கப்பட்டான்னா அடுத்த தடவை ச்சே.. போன தடவ தான் அசிங்கப் பட்டோம்.இந்த தடவை அசிங்கப் படக்கூடாதுன்னு தான் நெனைப்பாய்ங்க...ஆனா நம்ம பிரதமர் அப்படியெல்லாம் இல்ல,உச்சநீதிமன்றம் எவ்ளோ திட்டினாலும் கொஞ்சம் கூட காதுல வாங்கிக்காம நாங்கெல்லாம் அடி வாங்காத எடமே...கிடையாது,”எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம்”கிற கதையா எதைப்பத்தி கேட்டாலும் எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லி மழுப்புறதையே வாடிக்கையா வெச்சிக்கிட்டிருக்கார்.

“ஸார்...என்ன ஸார்...உங்க துறையில உள்ளவங்க இவ்ளோ ஊழல் பண்ணிருக்காங்க இதப் பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்கன்னு கேட்டா “அப்டியா...எனக்கு எதுவுமே தெரியாதே..? ன்னு ரொம்ப கூலா சொல்லிட்டி கெளம்பிடுறாரு...நேத்திக்கு கூட அணுசக்தி ஒப்பந்தத்துல மெஜாரிட்டி வேணும்கிறதுக்காக சகட்டுமேனிக்கு எல்லா கட்சி எம்.பி.க்களுக்கும் காசை வாரி இறைக்கிறதா விக்கிலீக்ஸ் இணையதளம் ஆதாரப்பூர்வமான செய்திகளை வெளியிட,கொதிச்சுப்போன எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை வழக்கம் போல நடத்த விடல...

சரி இந்த குற்றச்சாட்டைப் பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்கன்னு பிரதமர்கிட்ட கேட்டா அவரும் வழக்கம் போல இதப்பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்லிட்டார்.அதுவுமில்லாம முடிஞ்சி போன ஒரு விஷயத்தை மறுபடியும் கிளர்றது ரொம்ப வருத்தமளிக்குதுன்னு சொல்றார்.அதாவது நாங்க பணமே கொடுத்து நம்பிக்கை வாக்கெடுப்புல ஜெயிச்சிருந்தாலும் அது பழைய விஷயம் அதனால முடிஞ்சி போன அதை நீங்க கிளறக்கூடாதுன்னு சொல்றார். இதெப்படி இருக்கு? இப்படிப்பட்டவங்களை எல்லாம் ஆட்சியில உட்கார வெச்சி அழகு பாக்குற நம்ம நாட்டு மக்களை உச்சிமோந்துல பாராட்டணும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...