Monday, July 9, 2012

முரசொலி ஆண்டி-போண்டிகள்


ஆண்டி-போண்டிகள் எழுப்பும் கேள்வி..!





2ஜி- கனிமொழி, தயாளு அம்மாளை கைது செய்ய முகாந்திரம் உள்ளது: அமலாக்கப் பிரிவு


2-ஜி ஊழல் வழக்கு விவகாரத்தில், கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி பணம் தரப்பட்ட வழக்கில், கனிமொழி மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உரிய முகாந்திரம் உள்ளது என்று மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2ஜி வழக்கு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு முன்பு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் இருந்து 2ஜி உரிமம் பெற்ற டிபி குரூப் நிறுவனம், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி மற்றும் மகள் கனிமொழி பங்குதாரர்களாக உள்ள கலைஞர் டிவிக்கு ரூ.223.55 கோடி பணம் கொடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ரூ. 200 கோடி பணம் முறைகேடாக கருணாநிதி குடும்பத்தினரால் பெறப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் கனிமொழி, தயாளு அம்மாள் ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது.

அதேபோல, மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்து முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் குடும்பத்தாருக்கு சொந்தமான சன் டைரக்ட் டிவி லிமிடெட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது பற்றியும் விசாரணை நடத்தினோம். இந்த விவகாரத்தில், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏர்செல் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து அந்த நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்க நிர்ப்பந்தப்படுத்தியுள்ளார். நிறுவனம் கைமாறிய பிறகே ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வழங்கியுள்ளார். மேலும், அதன் பின்னர் மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ.549.96 கோடி பணத்தை முதலீடு செய்துள்ளது.

இது குறித்தும் சிபிஐ துணையுடன் விசாரணை நடத்தினோம். கடந்த மே மாதம் மலேசியாவில் விசாரணை நடத்தப்பட்டது. அது குறித்து மலேசிய அதிகாரிகளிடம் இருந்து மேலும் சில தகவல்கள் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தனர்.  ஜேபிசி விசாரணையின்போது, சில உறுப்பினர்கள், 2ஜி ஊழல் வழக்கை அமலாக்கப்பிரிவினர் மெதுவாக விசாரணை நடத்துவததாக குற்றம் சாட்டினர்.

சாட்சிகள் பட்டியலில் வாஜ்பாய், ப.சிதம்பரம்

இதற்கிடையே 2-ஜி ஊழல் வழக்கில் தயாரிக்கப்பட்டுள்ள சாட்சிகள் பட்டியலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் பெயர்களை சேர்த்துள்ளனர். ஆனால், சாட்சிப் பட்டியலில் வாஜ்பாயின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஜேபிசி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த சந்திப்பின்போது ஆஜராகுமாறு 2ஜி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் தொலைத்தொடர்புத்துறை செயலாளர் சித்தார் பெகுராவுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது.

நன்றி : தேட்ஸ்தமிழ்.காம்

- மேற்படி செய்தி தேட்ஸ்தமிழ்.காம்-ல் வெளிவந்திருக்கிறது. இது சம்பந்தமான எனது கருத்தை முரசொலியில் தினமும் வெளிவரும் ஆண்டி-போண்டி கார்ட்டூன் வடிவத்தில் என் மனதுக்குத் தோன்றியதை இங்கே எழுதியிருக்கிறேன்..

ஆண்டி : என்ன போண்டியாரே..! டெல்லி அரசியல்ல இப்பவும் நம்ம கைதான ஓங்கியிருக்கு..?

போண்டி : அட போறுமய்யா உன் அலட்டலு.. டெல்லிக்காரன் நமக்குன்னு வைச்சிருக்கான் பாரு ஆப்பை.. நம்ம எம்.பி.க்களின் சப்போர்ட்டோடு மன்னமோகனசிங்கின் அற்புதமான தலைமை நிர்வாகத்தில் இருக்கும் இந்த ஆட்சில, நம்ம மேலேயே குத்தம் சொல்றானுக முட்டாப் பயலுவ..! இப்படிப்பட்ட திராவிட இயக்கத் துரோக சிந்தனை கொண்ட அதிகாரிகளை வேலைக்கு வைச்சிருக்கிற நம்ம பிரதமரை முட்டாள்ன்னு சொல்றதா.. இல்ல.. இதைக்கூட அவர்கிட்ட கேட்க முடியாத அளவுக்கு தைரியமில்லாத கோழையா இருக்கோமே.. நம்மளைக் குத்தம் சொல்றதா..? ஒண்ணுமே புரியலை ஓய்..!

ஆண்டி : நமக்குத்தான் கோபாலபுரம், மயிலாப்பூர்ன்னு ஒண்ணுக்கு ரெண்டு ரைடக்ட் ஹாட்லைன் இருக்கே..? சிங்குக்கு போனை போட்டு "நாங்க என்ன திருடங்களா..? எங்க குடும்பம் என்ன திருட்டுக் குடும்பமா..? அப்புறம் ஏண்டா வெண்ணை என்கிட்ட ஆதரவு கேட்டு பிச்சையெடுத்து நீ பிரதமரா இருக்குற..? என் ஆதரவோட ஆட்சி செய்யற இந்த நேரத்துல உன்னோட ஆபீஸருங்க என் குடும்பத்தை திருடங்கன்னு சொல்றாய்ங்க.. இதைக் கேட்கக்கூட முடியலைன்னா நீ என்ன மயித்துக்கு என் ஆதரவுல பிரதமரா இருக்குற"ன்னு நாலு வார்த்தை நறுக்குன்னு கேக்க வேண்டியதுதானே..? இல்லாட்டி இந்த மத்திய அரசு "திராவிட இயக்க விரோத அரசு.. நமது இயக்கத்தின் மீது அநியாய பழி சுமத்தி நம்மை அழிக்கப் பாக்குது"ன்னு வழக்கமான புலம்பலை பாடிட்டு "ஆதரவை வாபஸ் வாங்குறோம்"னு சொல்லலாமே..? டெல்லிக்காரன் அலறியடிச்சிட்டு ஓடி வந்திர மாட்டான்..? ஏன் நம்ம தலீவரு இதைச் செய்ய மாட்டேன்றாரு..?

இதற்கு போண்டி என்ன பதில் சொல்வார் என்பதை மிகச் சரியாக யூகித்து எழுதுபவர்களுக்கு அடுத்து வரக் கூடிய 4-ஜி அலைக்கற்றையின் ஒட்டு மொத்த உரிமை ஏலத்திற்கு முதல் நாளே உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தரப்படும்..!


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...