Saturday, July 28, 2012

பேஷ், பேஷ், ராமதாசு தேறிட்டாரு!!!!!!!

கட்சி ஆரம்பித்தப் புதிதில் தானோ, தனது உறவினர்களோ பதவிக்கு ஆசைப்பட்டால் முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடிக்கும்படி கூறியவர் இப்பெருந்தலைவர்.

ஆனால் கணிசமான வெற்றி கிடைத்ததும் தனது மகன் அன்புமணியின் பதவிக்காக அலைந்து திரிந்து பெற்றார். அப்போது இந்த வாக்குறுதியை நினைவுபடுத்தியபோது அப்போதைய கொபசெ பதிவாளர், அன்புமணிக்கு தனிக் குடும்பம் உண்டு ஆகவே ராமதாஸ் கூறியது அவரைக் கட்டுப்படுத்தாது என்றெல்லாம் கூறியதை நான் படித்துள்ளேன்.

இருப்பினும் இது ஒரு பிரச்சினைக்குரிய விஷயமாகவே அவ்வப்போது எழுப்பப் பட்டு வந்திருக்கிறது.

இப்போதை லேட்டஸ்ட் அறிக்கையில் ராமதாசர் ஜாக்கிரதையாகவே இருந்துள்ளார். அவர் விகடனுடனான பேட்டியில் கூறுவது.

1. நிச்சயம் எதிர்காலத்தில் நாங்கள் த்மிழகத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு வருவோம்.

2. அப்படிப் பொறுப்பேற்றுக் கொண்ட மூன்று மாதங்களுக்குள் தமிழகத்துள் ஒரு சொட்டு மது இல்லாமல் மாற்றிக் காட்டுவோம்.

3. அப்படிச் செய்யாவிட்டா மூன்று மாதம் முடிந்ததும் நாங்களே பதவி விலகிக் கொள்வோம்.

4. இதனை எங்கு வேண்டுமானாலும் எழுதிக் கொடுக்க நான் தயாரா இருக்கேன்.

(ஆனந்தவிகடன், 01.08.2012).

பேஷ், பேஷ், ராமதாசு தேறிட்டாரு. 1) எங்கே நிறைவேறுகிறது? அதன் பின்னால்தானே 2, 3 போன்றவை வரும்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...