Monday, July 23, 2012

ஜனாதிபதி தேர்தல் - கேவலமா இருக்கு?


மத்த தேர்தல் மாதிரி இது கிடையாது...குடியரசுத் தலைவர் போஸ்ட், ரொம்ப பலமான போஸ்ட்..நல்லா கவனிக்கணும்...
எத்தனை பேரு நிக்குறாங்க..ரெண்டு பேரு..
அவுகளை தேர்ந்தெடுக்க போறது யாரு??? நம்ம ஊரு மந்திரிங்க.

உள்ளூருல நடக்கிற எம்எல்ஏ  தேர்தல்ல நிச்சயம் 20 பேராவது நிப்பான்..சில சமயத்துல ஒரே பேருல 3 பேரு கூட இருப்பான்??? ஓட்டு  போட  வர்றது நம்ம ஊரு பாமர சனங்க..அவங்க செல்லாத ஓட்டு  போடுறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு..ஆனா நம்மளை எல்லாம் ஆட்டி படிக்கிற, நம்மளை ஆளுகின்ற ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி க்களோட ஓட்டு  செல்லாத ஓட்டா  மாறி இருக்கிறதை மாதிரியான கேவலம் இந்த உலகத்துல இந்தியாவுலதான்ய நடக்குது.இவனை நம்பி நம்ம நாட்டை எழுதி கொடுத்திருக்கோம்...

விளங்குமா இந்தியா? இந்த லட்சணத்துல சோனியா காந்தி அம்மா ஓட்டு  போடுறதுக்கு முந்துன நாளு  எல்லாருக்கும் மதிய விருந்து கொடுத்து ஓட்டு  எப்படி போடணும்னு ஸ்பெஷல்  கிளாஸ்  எடுத்திருக்கு னு  நியுஸ் வேற வந்துச்சு..

ஏன்யா??? இருக்கிற போட்டியாளர்கள் ரெண்டு பேரு...அந்த ரெண்டு பேரை கூட பார்த்து தேர்ந்தெடுக்க தெரியாதவன் எல்லாம் மந்திரி? ஓட்டு போட  விருப்பம் இல்லேனா பேசாம ஒதுங்கி போக வேண்டியதுதானே. அத விட்டுட்டு செல்லாத ஓட்டு  போட்டு கேவலப்படுத்தி இருக்கீங்களே!!!! 

தமிழ் நாட்டு மக்களை தொடர்ந்து இழிவு  பண்ணிக்கிட்டு இருக்கிற குரூப் இப்போ குடியரசுத் தலைவர் போஸ்ட்ல வேற இருக்கு, தமிழ் நாட்டோட நிலைமை இன்னும் சீரழியப் போகுது, அதுதான் உண்மை. இனி காங்கிரசுக்கு ஜால்ரா  போடலைனா அந்த ஸ்டேட்டுல  356 வந்திடும்னு நான் நினைக்கிறேன்...

சரி இந்த பிரணாப் பை தூக்கி உட்கார வைச்சதுமே அடுத்த பிரதமர் ராகுல் னு ஒரு செய்தி வருதே, அது வேற கதை சைடுல ஓடுது..

பொதுவா குடியரசுத் தலைவர் எந்த கட்சியை சார்ந்தவராகவும் இருக்க கூடாது னு  நான் கேள்விப் பட்டிருக்கின்றேன்..இவரு எப்படி இருக்கப் போறாரோ தெரியலை????

யார் இந்த பிரணாப் ஜி ?  ராஜீவ் காந்தி ஒதுக்கி வச்ச ஆளத்தான் இன்னிக்கு இந்த குடியரசுத் தலைவர் போஸ்ட் க்கு மிஸ்ஸஸ் ராஜீவ் காந்தி பரிந்துரைத்து இருக்காங்க..என்னே ஒரு பதி  பக்தி..நினைச்சாலே மெய் சிலிர்க்குது..

அந்த அம்மாவோட உண்மையான நோக்கம் என்ன? ராகுல் காந்தியை பிரதமராக்கி ஏற்கனவே டம்மி பீசா இருக்கிற பிரதமரை நிதியமைச்சரா மாத்துரதுதான் மெகா பிளான்னு  அவங்க கட்சிக்காரங்களே முனுமுனுக்கிறாங்க ..

பதவிங்கிறது தானா தேடி வரணும்? அதுக்குத்தான் மரியாதை எப்பவுமே உண்டு..தமிழ்நாட்டுச சிங்கம் அப்துல் கலாமுக்கு அது கிடைத்தது..

தற்போது கிடைத்த பதவி எப்படி என்பது அவனவன் மனசாட்சிக்கு தெரியும்???? ஏன்யா இதெல்லாம் ஒரு வெற்றி?? இதுக்கு பட்டாசு, இனிப்பு வேறயா??? ரொம்ப கேவலப்படுத்திக்கிட்டாங்க?

 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...