Monday, January 28, 2019

கர்மவினையை மாற்றும் எளிய பரிகாரம் .

இந்த மனிதப் பிறவி ஆனது நாம் முன்ஜென்மத்தில் செய்த நல்ல தீய பலன்களின் தொகுப்பே.
அரசன் முதல் ஆண்டி வரை அவரவர் தகுதிக்கு ஏற்ப எல்லோருக்கும் பிரச்சனை உண்டு.
பிரச்சனை இல்லாத மனிதன் என்பவன் இங்கு இல்லை.
பணம் இருந்தால் எல்லாவற்றையும் மாற்ற முடியும் என்றாலும் பணம் இருப்பவனுக்கும் பிரச்சனை இல்லாமல் இல்லை .
பிரச்சனைகள் எல்லோருக்கும் இருந்தாலும் அது எந்த அளவு உள்ளது என்பதைப் பொறுத்தே வாழ்வில் இன்பம் துன்பம் நிர்ணயிக்கப்படுகிறது.
தேவைக்கேற்ற பணம் ,நிம்மதியான குடும்பம் ,நோய் நொடி கடன் இல்லாத வாழ்க்கை, படுத்தால் சட்டென தூங்கும் நிலை ,ஏழையாய் இருந்தாலும் இவை அமைய பெற்றவனே நிச்சயம் யோககாரன் .
ஒரு சிலருக்கு மட்டுமே இந்த அமைப்பு கிடைக்கிறது.
அவர்களுக்கும் பணக்காரன் ஆக ஆக வேண்டும் என்ற ஆசை அனைவரிடமும் உள்ளது
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே பெருமை.
இருந்தாலும் அவரவர் தகுதிக்கேற்ற பிரச்சனை இருக்கவே செய்கிறது அனைத்து தோஷங்களையும் நீக்கும் மிக எளிய பரிகாரம் ஒன்றும் உள்ளது பின்பற்றி பாருங்கள் நல்ல மாற்றம் கிடைக்கும்.
வேலை இல்லை வேலையில் உயர்வு இல்லை, திருமணம் ஆகவில்லை ,குழந்தை இல்லை ,கடன் வாட்டுகிறது ,நோயால் பிரச்சனை , கணவன்,மனைவி கருத்து வேறுபாடு என இவற்றை சுற்றியே எல்லோருக்கும் பிரச்சினை உண்டாகிறது.
மிக எளிய தீர்வு .
அதிகாலையில் நாலு மணிக்கு எழுந்து பல் துலக்கி காலைக்கடன் முடித்து ,குளித்து ,நீராடி விடியற்காலை நாலு முப்பது மணிக்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் உங்கள் குல தெய்வத்தையும் உங்கள் இஷ்டதெய்வத்தையும் உங்களுக்குத் தெரிந்த மந்திரம் மூலமும் அல்லது மனதார வேண்டியோ வருவது மிக நல்ல பலனை அளிக்கும் .
சுந்தர காண்டம் படிக்கலாம்.
அனைவருக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தினசரி சூரியன் உதயமாகும் வரை மனதை ஒரு நிலைப்படுத்தி கடவுளை வழிபட்டு வர எப்பேர்ப்பட்ட துன்பமானாலும் அதற்கு ஏற்ப ஒரு விடிவு பிறக்கும் .
குறிப்பாக லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வருவது சிறப்பு
தினமும் குறைந்தது 108 தடவை அந்த நேரத்தில் ஸ்ரீராமஜெயம் எழுதி வருவது மிக நல்ல பலனை அளிக்கும் .
அசைவம் சாப்பிடுவோரும்,மற்ற தீய பழக்கங்களை வைத்திருப்போரும் நிச்சயம் அதை விட்டுவிட்டு மனமொன்றி இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள்.
நிச்சயம் நல்ல மாற்றம் வரும் .
இங்கு 48 நாட்கள் ,108 நாட்கள் என குறிப்பிடப்படவில்லை .
அதை வாழ்வின் ஓர் அங்கமாக எடுத்துக்கொண்டு செய்ய வேண்டும்.
அதிகாலை சூரிய உதயம் ஆகும்போது சூரியனை வழிபடுதல் மிகவும் சிறப்பு .
சூரிய உதயம் ஆகும் முன்பு வீட்டை பெருக்கி ,வாசலில் கோலமிட்டு வெங்கடேஸ்வர சுப்ரபாதமோ ,கந்த சஷ்டி கவசம் அபிராமி அந்தாதி வீடுகளில் ஒலிக்கச் செய்யலாம் .
மாலை வேளை வீடுகளில் நெய் விளக்கு ஏற்றி உங்களுக்குத் தெரிந்த மந்திரத்தை மனதை ஒரு நிலைப்படுத்தி பூஜை செய்துவர நிச்சயம் நல்ல மாற்றம் உண்டு .
குறிப்பாக வீட்டில் பூஜையறையில் எந்நேரமும் அகல் விளக்கு எரிந்து கொண்டிருப்பது வீட்டில் எதிர்மறையான சக்தி நுழைவதை தவிர்க்கும்.
ராமநாமம் ஒலிக்குமிடத்தில் தோஷம் அண்வே அண்டாது.விதியும்,வினைப்பபயனும் மாறும்.
இது போக அந்த நாளின் நட்சத்திர அதிபதியையும், திதியையும் வழிபட்டுவந்தால் அது நிச்சயம் நல்ல மாற்றத்தை கொடுக்கும் .
உதாரணமாக திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமானையும் ,ஏகாதசி திதியில் பெருமாளையும் வழிபட்டு வர புண்ணியம் பெற்று மன நிம்மதியும் கிடைக்கும்.
குறிப்பிட்ட அந்த நாளின்அதிபதியை வழிபடுவது சிறப்பு .அந்த நாள் இனிய நாளாக மாறும்.
குறிப்பு ::
இந்த வழிபாட்டு முறையை பரிகாரமாக நினைத்து செய்ய வேண்டாம் அதை வாழ்வின் ஒரு பகுதியாக செய்துவர நிச்சயம் மாற்றம் உண்டு .
உரு ஏற கரு மாறும் கரு மாறினால் கர்ம வினை தீரும். முயற்சித்துப் பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும் .
நன்றி!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...