Wednesday, January 30, 2019

'நாம் மட்டும் தமிழர்'

சாதி மாநாடு நடத்துறதே தவறு. இதுல தமிழர்கள் வந்தேறி-னு சொன்னா விடுவாங்களா?! இந்நேரம் மதிமுக அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்தே அப்பெண்மணியைத் தூக்கியிருக்க வேண்டும்.
அதே நேரத்தில், இதற்குத் திராவிடம் தான் காரணம் என்று கூச்சல் போடும், 'நாம் மட்டும் தமிழர்' மற்றும் 'தமிழ் சுத்த இரத்தம்' மற்றும் 'சாதித் தமிழர்' கும்பலுக்கு என்னுடைய கடுமையான எச்சரிக்கை.
ஒரு தடவை உன்னய வந்தேறி-னு சொன்னதுக்கு இந்த கத்து கத்துறியே!
தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்த தெலுங்கு பேசுபவர்களையும், கன்னடம் பேசுபவர்களையும், மற்ற மொழி பேசுபவர்களையும் மூச்சுக்கு முன்னூறு தடவை வந்தேறினு சொன்னீங்களேடா... அவனுக்கு எப்படி இருந்திருக்கும்.
தமிழ்நாட்டுக்குள்ள வந்துட்டியா? நீ நல்லவனா, நேர்மையானவனா, மக்களுக்கு நல்லது செய்றவனா இருந்தா போதும். உன் நிறம், இனம், மொழி, அடையாளம் என்ற எதையுமே நீ மாத்திக்க தேவையில்லை. குறைந்த பட்சம் தமிழ் பேசுனா போதும்.
வெளிநாட்டுல 'Refugees are welcome' னு சொல்றது, ஆனால் உள்ளூர்ல அடுத்தவன வந்தேறி-னு சொல்றது. இதுக்கு பெயர் என்ன தெரியுமா? 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...