Tuesday, February 23, 2021

முடிவு செய்கிறது.

 *யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள்,* *விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.*

*அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.*
*வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.*
*யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.*
*நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.*
*வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.*
*மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள்.*
*தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.*
*பணம் இருந்தால் நீங்கள் உயர்ந்தவன் குணம் இருந்தால் நீங்கள் குப்பை.*
*நடித்தால் நீங்கள் நல்லவன்.*
*உண்மை பேசினால் பைத்தியக்காரன்.*
*அன்பு காட்டினால் ஏமாளி.*
*எடுத்துச் சொன்னால் கோமாளி.*
*இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து.*
*அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி.*
*பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்.*
*நிலவை....தூரத்தில் இருந்து ரசிப்பதை போல.*
*சில உறவுகளையும்..... தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.*
*சில வலிகள் இல்லாமல் இருக்கலாம்.*
*தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதி மட்டும் உங்கள் ஆயுதமாக வைத்துக்கொள்ளுங்கள்.அவர்களுக்கு புரியவைக்க வரும் காலம் ஒன்று உள்ளது.*
*சிந்தித்து செயல்படுங்கள்.* *இதுவும் கடந்து போகும் அல்லது இதுவும் பழகி போகும்.*
*நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்.*
*ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.*
*யாரும் உங்கள் கண்ணீரை பார்ப்பதில்லை.*
*யாரும் உங்கள் கவலைகளை பார்ப்பதில்லை.*
*யாரும் உங்கள் வலிகளை பார்ப்பதில்லை.*
*ஆனால் எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்.*
*மனிதனும் வாழை மரமும் ஒன்று தான். தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள்.*
*தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.*
*இந்த பதிவு எல்லோருக்கும் பொருந்தும் என்பதால் பதிவிட தோன்றியது.*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...