Tuesday, February 2, 2021

சேவைதுறையின் மாபெரும் அவமானம்.

 காஞ்சிமடத்தில் சர்ச்சை என்றால் நித்திசாமி விவகாரம் என்றால் வளைத்து வளைத்து எழுதும் தமிழக பத்திரிகைகள் பிரபல மோசடி போதகர் பால் தினகரன் பற்றி சத்தமே இல்லை


இந்து சாமியார் என்றால் உடனே போலி சாமியார் என கதறும் ஊடகங்களுக்கு தினகரனை "மோசடி போதகர்" என சொல்ல விருப்பமே இல்லை


ஏன்?


அதுதான் தெரியவில்லை


இதுவே இந்து சாமியார் என்றால் இந்நேரம் நக்கீரன் போன்றவையும் இன்னும் பல திராவிட ஊடகங்களும் எப்படியெல்லாம் எழுதியிருக்கும் தெரியுமா?


"5 ஆயிரம் கிலோ தங்கம், உலகின் மிகபெரிய வைரகுவியல் உள்ளிட்ட பல லட்சம் கோடி புதையல் கண்டுபிடிப்பு"


"100 கிலோ கோகேய்ன், 5000 கிலோ காட்டமைன் உள்ளிட்ட போதை வஸ்துகள் கைபற்றபட்டன"


"இந்த போதகருக்கும் 4 எழுத்து நடிகைக்கு தொடர்பா? 40 எழுத்து நடிகை அங்கு அடிக்கடி வருவாரா?"


"கல்வி கூடம் எனும் பெயரில் காமகூடம் நடத்தினார், போதனை எனும் பெயரில் பொருள் குவித்தார், முடிசவிழும் மர்மங்கள்"


"5000 இளம்பெண்கள் பாதிக்கபட்டு கருகலைப்பு நடந்ததா? மத்திய அமைச்சர்களுக்கு சப்ளை செய்யபட்டார்களா? தொழிலதிபருக்கு விருந்து வைத்தாரா சாமியார்?"


"அடையாளம் தெரியாத 10 கொலைக்கும் போதகருக்கும் தொடர்பா?"


"அமெரிக்கா அருகே தனி நாடு வாங்கினாரா போதகர்? பரபரப்பு புலனாய்வு"


இப்படி பல நூறு தலைப்புகளில் பொளந்து கட்டியிருப்பார்கள், ஆனால் அகபட்டவன் கிறிஸ்தவ போதகர் என்பதால் அவரை "போதகர்" எனும் வார்த்தையோடு நிறுத்தி கொள்கின்றார்கள்


இதுதான் தமிழக ஊடக தர்மம், நாட்டின் 4வது தூண் என சொல்லும் சேவைதுறையின் மாபெரும் அவமானம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...