இன்றைய பிராமணர்களின்
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Sunday, February 28, 2021
எங்கே பிராமணன்?
Saturday, February 27, 2021
💠💠மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!💠💠
புளி இரத்தத்தைச் சுண்ட வைக்கும் என்பது ஒரு மூட நம்பிக்கை. இரத்தத்தை முறிக்கக் கூடிய சத்து ஏதும் புளியில் இல்லை. புளியில் கால்சியம், வைட்டமின் ‘பி’, பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது.
தி.மு.க.,வுக்கு எதிராக ஐ.ஜே.கே., தூண்டி விடப்பட்டதா?
புதிய கூட்டணி அமைத்தது பற்றி ரவி பச்சமுத்து பேட்டி
''நாங்கள் எப்போதும், தி.மு.க.,வுடன் நிரந்தரமாக இருப்போம் என்று கூறியதில்லை. தற்போது, மக்களுக்கான கூட்டணியை அமைத்துள்ளோம்; எங்கள் கட்சியை சுய பரிசோதனை செய்யவும், உயிரூட்டம் தரவும், புதிய சிந்தனையுடன், புதிய பாதையை தேர்ந்தெடுத்துள்ளோம். அ.ம.மு.க.,வுடன் பேசி வருகிறோம். எந்த கட்சியும் எங்களை துாண்டிவிடவில்லை,'' என,இந்திய ஜனநாயக கட்சி தலைவர், ரவி பச்சமுத்து தெரிவித்தார்.

தி.மு.க., - எம்.பி.,யாக பாரிவேந்தர் செயல்பட்டு வரும் நிலையில், அவர் நிறுவனராக உள்ள, இந்திய ஜனநாயக கட்சி, தி.மு.க., கூட்டணியில் இருந்து, திடீரென விலகியுள்ளது. சமத்துவமக்கள் கட்சி தலைவர் சரத்குமாருடன் கைகோர்த்து, மூன்றாவது அணிக்கு அச்சாரமிட்டுள்ளது. இது தொடர்பாக, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, சிறப்பு பேட்டி:
2019 லோக்சபா தேர்தலில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், தி.மு.க., கூட்டணி சார்பில், பெரம்பலுார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திடீரென, அந்த கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?
தி.மு.க., கூட்டணியில் நிரந்தரமாக இருப்போம் என, அன்று நாங்கள் கூறவில்லை. இன்றும், தி.மு.க., மீது எங்களுக்கு நல்ல மரியாதை உண்டு. 'தி.மு.க.,வின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது' என, அவர்கள் சொல்லும் போது, கூட்டணியில் இருந்து, நாங்கள் வெளியே வந்திருக்கிறோம் என்றால், எங்களுக்கு, நிச்சயம் பதவி ஆசை இல்லை. தி.மு.க., மீது எங்களுக்கு எந்த ஒரு வருத்தமும் கிடையாது. புதிய சிந்தனையுடன், புதிய பாதையை தேர்ந்தெடுத்து, புதிய வழியில் செல்கிறோம்.
தி.மு.க., கூட்டணியில், உங்கள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கேட்டீர்கள்?
நாங்கள், 10 தொகுதிகள் கேட்டோம்; அவர்கள் மூன்று முதல் ஐந்து தொகுதிகள் தரலாம். அந்த தொகுதிகளை பெற்று, எங்கள் கட்சியை வளர்ப்பது சிரமம். இளைஞர் அணியினர், 50 தொகுதிகள் கேளுங்கள் என, வலியுறுத்தினர். அவர்கள் அனைவருக்கும், தி.மு.க.,வில் பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்பில்லை. அதேசமயம், அரசியலில் ஆர்வமாக வருகிற இளைஞர்களுக்கும், வாய்ப்பு தர வேண்டும். எங்கள் கட்சிக்கு சுய பரிசோதனையும் செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட, உங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா?
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொன்ன போது, எங்களுக்கு விருப்பம் இல்லைஎன்றோம். தற்போது நாங்கள், தனிச்சின்னத்தில் போட்டியிட, தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்துள்ளோம். விரைவில், என்ன சின்னம் என்பதை தெரியப்படுத்துவோம்.
பாரிவேந்தரின் நிலைப்பாடு என்ன?
என் தந்தை, தி.மு.க., - எம்.பி.,யாகவே இருப்பார். பெரம்பலுார் தொகுதிக்கு, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செம்மையாக செயல்படுத்தி வருகிறார். தொகுதி மக்கள் குறைகளை தீர்க்கும் பணிகளையும், அவர் சிறப்பாக செய்து வருகிறார். இதனால், எங்களுக்குள் எந்த முரண்பாடும் கிடையாது. நாங்களும், மக்களுக்கு சேவை செய்து தான் வருகிறோம்; புதிய அரசியலை நோக்கி பயணிக்கிறோம்.

நடிகர் சரத்குமாருடன் கூட்டணி எப்படி உருவானது?
நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல, எங்கள் இருவருக்கும் ஒருமித்த கருத்து இருந்ததால், கூட்டணி அமைத்தோம்.
நடிகர் கமல் தலைமையில், நீங்களும், சரத்குமாரும் இணைந்து, மூன்றாவது அணி உருவாக்கும் திட்டம் உள்ளதா?
கமலுடன் பேசியிருக்கிறோம். அவரது கட்சியில் பழ.கருப்பையா, பொன்ராஜ் போன்றவர்கள் இணைந்துள்ளனர். ஐந்து கட்சிகளின் தலைவர்களுடன் நாங்கள் பேசி வருகிறோம். இன்னும் ஓரிரு நாட்களில், நாங்கள் ஒருங்கிணைந்து, குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி,எங்கள் அணிக்கு பெயர் சூட்டி, முறையாக அறிவிப்போம். நாங்கள் மூன்றாவது அணி அல்ல; முதல் அணியாக மாறுவோம்.
அப்படியானால், உங்கள் அணிக்கு தலைவர் யார்?
ஐந்து பேரும் ஒருங்கிணைப்பாளர்களாக இருப்போம்.
ரஜினி மக்கள் மன்றத்தின் ஆதரவை கேட்பீர்களா?
கண்டிப்பாக கேட்போம். ரஜினியின் நண்பர் அர்ஜுனமூர்த்தியும், எங்களுடன் இணைந்துசெயல்படுவார்.
அ.ம.மு.க.,வும், உங்கள் அணியில் இணையுமா; உங்கள் அணிக்கு ஆதரவாக சசிகலாபிரசாரம் செய்வாரா?
தினகரனிடம் பேசியிருக்கிறோம். சசிகலா எங்களுக்காக, பிரசாரம் செய்வாரா என, எனக்கு தெரியாது.
உங்கள் அணியின் கொள்கை, செயல் திட்டங்கள் பற்றி?
அது குறித்து கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம்; விரைவில் அறிவிப்போம்.
முதல்வர் வேட்பாளராக, யாரை முன்னிலைப்படுத்துவீர்கள்?
தேர்தல் முடிவுக்கு பின், முதல்வரை தேர்வு செய்வோம்.
எத்தனை சதவீத ஓட்டுக்கள், உங்கள் அணிக்கு கிடைக்கும்?
நாங்கள், 30 சதவீத ஓட்டுக்களை எதிர்பார்க்கிேறாம். தேர்வு எழுதும் மாணவர், 50 மார்க்கை எதிர்பார்த்து எழுதுவார்; 30 மார்க் கிடைத்தாலும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
ஆளுங்கட்சியின் எதிர்ப்பு ஓட்டுக்கள், தி.மு.க.,விற்கு செல்லாமல் தடுக்கத்தான், உங்கள் அணி போட்டியிடுகிறதா?
அப்படியெல்லாம் இல்லை. நாங்கள் எந்த கட்சியையும், தவறாக விமர்சிக்க மாட்டோம்.திராவிட கட்சிகள், மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. ஒரு நிறுவனத்தில், புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள், உயர் பதவியை பெற, ஆர்வமாகவும், கடினமாகவும்உழைப்பர். அதேபோல, மக்களுக்கு தொண்டாற்ற வரும் புதியவர்கள், மக்களிடம் நல்ல பெயர் எடுக்க, நேர்மையானவர்களாக இருக்க விரும்புவர். அந்த அடிப்படையில் போட்டியிடுகிறோம்.
2016 சட்டசபை தேர்தலில், மக்கள் நல கூட்டணியால், தி.மு.க., ஆட்சிக்கு வராமல் தடுக்கப்பட்டது போல, இந்த தேர்தலிலும் மூன்றாவது அணி என்பது, தி.மு.க.,வின் வெற்றியைதடுக்கும் முயற்சியா?
யாருடைய வெற்றியும், தோல்வியும், மக்கள் கையில் தான் உள்ளது.
உங்கள் அணி யாருக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கு துாண்டுகோலாக, தேசிய கட்சி உள்ளதா?
மக்களுக்கு சாதகமாக இருக்கும்; எந்த கட்சியும் எங்களை துாண்டிவிடவில்லை.
கடைசி நேரத்தில் நீங்கள் அமைத்த கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணியா?
மக்களுக்கான கூட்டணி அமைத்துள்ளோம். கட்டடம் கட்டுவதற்கு மேஸ்திரி, கொத்தனார்,சித்தாள், எலக்ட்ரீஷிசன், பிளம்பர் போன்றவர்கள் தேவை. அதைப்போல, அனைத்து ஜாதிமக்களையும் சமமாக பாவித்து, அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க, புதிய சமுதாயம் படைக்க, நாங்கள், 'ஈகோ' பார்க்காமல் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
புது 'வார் ரூம்' அமைத்து, சமூக வலைதளங்கள் வாயிலாக எங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வோம். நாங்கள் தனித்தனியாக அல்ல; கூட்டாக பிரசாரம் செய்வோம்.தேர்தல் தேதி, திடீரென அறிவிக்கப்பட்டது. குறுகிய அவகாசமே உள்ளது. அதனால் தான்,நாங்கள் அவசரமாக இணைந்துள்ளோம். கொரோனா கால கட்டத்தில், தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிப்பது சிறிய கட்சிகளுக்கு சிரமம். நாங்கள் ஒன்றிைணந்தால் தான், எங்கள் கட்சிகள் உயிரோட்டமாக இருக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
Thursday, February 25, 2021
மங்கல வாழ்வு தரும் மாசி மக விரதம்.
பல்வேறு விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த விழா கொண்டாடப்படுகின்றது. மற்ற ஆண்டுகளில் வரும் மாசி மாதங்களில் மகம் நட்சத்திரம் வரும்பொழுது நாம் வழிபாடுகளை மேற்கொண்டால் தித்திப்பான வாழ்க்கை அமையும். இது சிவனின் மைந்தனான முருகப்பெருமானுக்கு உகந்த விரதமாகும். அன்றைய தினம், குழந்தையில்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்தால் தக்க விதத்தில் வாரிசுகள் உருவாகும்.
26.2.2021 (வெள்ளிக்கிழமை) மதியம் 11.58 மணிக்கு மேல் மகம் நட்சத்திரம் வருகிறது.
மறுநாள் (27.2.2021) மதியம் 11.33 மணி வரை உள்ளது. மலை வலம் வருவதன் மூலம் மகத்தான பலன்களைப் பெற இயலும்.
மனிதர்கள் இறைவனை வேண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டவையே விரதங்கள். பல்வேறு விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே பெருமை பெற்றதாக திகழ்கிறது.
ஏனெனில் அந்த நாளில்தான் பார்வதிதேவி, தக்கனின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆம்! அந்த நாள் அன்னையின் பிறந்த நாள். சக்தியாகிய உமாதேவியே தன்னுடைய மகளாக பிறக்க வேண்டும் என்று தக்கன் நினைத்தான். இதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். அந்த தவத்தின் பயனாக உமாதேவி, தக்கனின் மகளாக அவதரித்தாள்.
அந்த தெய்வக் குழந்தைக்கு ‘தாட்சாயிணி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தான் தக்கன். இறுதியில் தன் மகளை, சிவபெருமானுக்கே திருமணமும் செய்து வைத்தான். அன்னை உமாதேவி அவதரித்த நாள் மாசி மகம் என்பதால் அந்த நாள் புனிதமான நாளாக கொண்டாடப்படுகிறது.
மக நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் கேது பகவான். இவர் ஞானத்தையும், முக்தியையும் அருள்பவர். செல்வ வளம் சேரும் யோகத்தை வழங்கக் கூடியவர். மாசி மக நாளை, ‘கடலாடும் நாள்’ என்றும், ‘தீர்த்தமாடும் நாள்’ என்றும் அழைப்பார்கள். இந்நாளில் விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது சிறப்பான பலனைத் தரும்.
இவ்வாறு செய்வதால் சகல தோஷங்களும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். மாசி மகத்தில் விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். பின்னர் உலர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு சிவ சிந்தனையுடன், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். மதியம் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு விட்டு, இரவு பால், பழம் சாப்பிடலாம். அன்றைய தினம் முழுவதும் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாமல், இறைவனை நினைக்கும் ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும். தேவார, திருவாசக பாடல்களை பாராயணம் செய்யலாம்.
இந்த விரதத்தை கடைப்பிடித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
தீர்த்தமாடும் நிகழ்வின் சிறப்பினை எடுத்துரைக்க, ஒரு புராண வரலாற்றுக் கதையும் கூறப்படுகிறது.
ஒரு முறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதில் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். அதில் இருந்து விடுபட வருணன், சிவபெருமானை நினைத்து பிரார்த்தித்தான். இந்த நிலையில் வருணன் கட்டுண்டு கிடந்ததால், உலகில் மழையில்லாமல் வறட்சியும், பஞ்சமும் நிலவியது.
அனைத்து உயிர்களும் துன்பம் அடைந்தன. இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சந்தித்து முறையிட்டனர். வருண பகவானை விடுவிக்கும்படி ஈசனிடம் வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசி மக திருநாளாகும்.
விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானை வணங்கினார். பின்னர் ஈசனிடம், ‘இறைவா! நான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடலில் கிடந்தபோது, நீருக்குள் இருந்தபடியே உங்களை வணங்கினேன். அதன் பயனாக எனக்கு விடுதலைக் கிடைத்தது. அதே போல் மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி, இறைவனை வழிபடும் அனைவருக்கும் அவர்களின் பாவங்களையும், பிறவி துன்பங்களையும் நீக்கி அரு செய்ய வேண்டும்’ என்று கேட்டார்.
சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். அன்று முதல் தீர்த்த மாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. மாசிமகத்தன்று பிரசித்திப் பெற்ற புண்ணிய தலங் களில் ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேசுவரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வது நலன் தரும்.
Wednesday, February 24, 2021
*ஆயிரத்து 550 ரூபாயில் திருப்பதி தரிசனம் !
IRCTC வழங்கும் சூப்பர் சேவை !!!*
ஞானத்தை யாரிடம் கற்பது ?
”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
