மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.
இலஞ்சம் கொடுத்து அரசு இயந்திரத்தைத் தங்களுக்குச் சாதகமாகத் திருப்பிக் கொண்டு அப்பாவிகளின் வேலைகளை ஓரம் கட்டச் சொல்வோரை அரசியல் பணியாளர்களும் அரசியல்வாதிகளும் பிடித்துக் கொடுக்க ஊக்குவிக்க வேண்டும்.
மக்கள் தாங்களாகவே வலியவந்து லஞ்சம் கொடுக்கிறார்கள் என்றும், அவர்கள் கோரிக்கைகளில் உள்ள குற்றம், குறைகள், அநியாயங்களை மறைத்து அவர்களுக்குச் சாதகமாக வேலைகளைச் செய்துகொடுக்கும்படி லஞ்சம் கொடுத்து வற்புறுத்துகிறார்கள் என்றும், தனக்கு முன்னதாகக் காத்திருப்போரின் வேலை எப்படியோ போகட்டும், தனது வேலையை முன்னதாக முடித்துக் கொடு என்று, மக்கள் இலஞ்சம் கொடுத்து நெருக்குகிறார்கள் என்றும், அரசுப் பணியாளர்களும், அரசியல்வாதிகளும் கூறுகிறார்கள். இவர்கள் லஞ்சம் கொடுக்க வருவோரைப் பிடித்துக் கொடுக்க வேண்டும். பிடித்துக் கொடுப்போரை அரசாங்கம் கீழ்க்கண்டவாறு ஊக்குவிக்க வேண்டும்.
இப்படிச் செய்யும் அரசுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, விருப்ப இட்ட மாற்றம், பணி முதிர்வின்போது பணி நீட்டிப்பு, வட்டியில்லா வீட்டுக் கடன், வாகனக் கடன் அளிப்பது, அவற்றில் முன்னுரிமை அளிப்பது போன்றவற்றின் மூலம் இலஞ்சம் வாங்காத அரசு ஊழியர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இந்த நற்பணியச் செய்யும்போது இலஞ்சம் வாங்காத நேர்மையான அரசு ஊழியர்கள் கொல்லப்பட்டு விட்டால், கொல்லப்பட்டவரின் பிள்ளைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கவும், அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கவும் வேண்டும். இச்செயல்கள் மக்கள் சுமக்கும் ஊழல் சுமையைக் குறைப்பதால், இவைகளுக்கு ஆகும் செலவைக். அரசு சுமையாகக் கணக்கிடக் கூடாது.
விளையாட்டு வீரர்களுக்கெல்லாம் ஊக்கம் கொடுக்கிற நாம், சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படும் இத்தகைய மெய்யான அரசு ஊழியர்களுக்கும் ஊக்கம் கொடுக்கவேண்டும். இது மென்மேலும் சமூகத்திற்கு நற்பயனையே அதிகரிக்கச் செய்யுமே தவிர, அரசாங்கத்திற்குச் சுமையாகாது.
இதேபோல் தனக்கு இலஞ்சம் கொடுக்கபவரைப் பிடித்துக் கொடுக்கும் அரசியல்வாதிகளுக்குத் தேர்தல்களில் போட்டியிடும் செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவை எல்லாம் நல்லாட்சி அமையவும், தங்கள் ஆட்சி என்றென்றும் தொடரவும் வழி வகுக்கும்.
தமிழக அரசாங்கம் இவைகளுக்கு அவசியமான வழிவகைகளைச் செது நல்லாட்சி அமைப்பதில் இந்தியாவிற்கு முன்னோடியாக வழிகாட்ட வேண்டும்.
இத்திட்டத்தினை சுமார் 10 வருட காலத்திற்குப் பரிசோதனையாக நடத்தினால் கூடப்போதும்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment