Thursday, October 11, 2012

இருளும் இருள் சார்ந்த இடமும் -தமிழகம்


தமிழகம் எனும் திறந்த வெளியில்
எங்கும் இருட்டு எதிலும் இருட்டு
சென்னையில் மட்டும் ஒரு மணி நேரம்
மற்ற எல்லா மாவட்டங்களிலும்
கிட்டதட்ட 16 மணி நேரங்கள் மின் தடை

எட்டு மணி நேர வேலையை மக்கள் விரும்புவது போல்
மின்சாரமும் இப்போ வெறும் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறது  .

அது சரி மின் வெட்டு என்பதை மக்கள் இப்போது பழகி கொண்டே விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் .


 கலைஞர் ஆட்சியில் ஐந்து மணி நேரம் வரை இருந்த மின் வெட்டை எல்லா ஊடகங்களும் ஒப்பாரி வைத்தே ஆட்சிக்கு ஆப்பு வைத்தனர்

       அதன் பின் இப்போதைய புர்ர்ர்ர்ர்ர்ரட்சி தலிவி ஆட்சியில்
வெறும் ஐந்தே மணி நேரம் மட்டும் கரண்ட் இருந்தாலும்
எவனும் எங்கேயும் குரல் கொடுக்க மாட்டேங்கறான்..

ஏன்???

நான் ஏழாம் கிளாஸ் பாஸ் ன்னே நீங்க  SSLC பெயில் னே
எனும் காமெடிபோல்
அப்போ 5 மணி நேரம் கரண்ட் இல்லை இப்போ5 மணி நேரம் கரண்ட் இருக்குல்ல

 இல்லாதது பெருசா இருக்குறது பெருசா ன்னு நினைச்சு விட்டாய்ங்க போலிருக்கு

  அந்நிய நாட்டு தூதரகங்கள் இருக்காம் ,
அலுவலகங்கள் இருக்காம்
அதனால் சென்னை யில் மட்டும் கரண்ட் கட் பண்ண மாட்டாங்களாம்

வெளிநாட்டுக்காரனுடன் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒப்பந்தம் ன்னு சொல்லி போஸ் கொடுத்தீங்களே அதன் விளைவு தானே இது

பத்தாயிரம் கோடிக்கு மேல் முதலீடு பண்ற வெளிநாட்டுகாரனுக்கு எண்டா மானிய விலையில தடையில்லா மின்சாரம் ?
நீங்க நிறுத்திட்டா உடனே அவனே தயாரிக்க வழி பார்க்க போறான்

அடப்பாவிகளா

சிவகாசி கோயம்புத்தூர் நகரங்களில் உள்ளவங் களுக்கு  இது தானே சீசன்....

பட்டாசு ,டைரி ,காலண்டர் தொழில் செய்ய முடியல்லன்னா 
எவ்வளவு இழப்பு ? 

எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும்,,,,,

அங்கு மட்டுமில்ல எல்லா ஊரிலேயும் இரவுல எல்லா மக்களும் நடுத்தெருவில தான் நிற்கிறானுங்க...

இல்லாத கரண்டுக்கு கரெக்டா பணம் கியூ வில் நின்னு கட்டுறவன்
இருக்குற வரைக்கும் இந்த நிலை தொடரத்தான் செய்யும் ,

கொஞ்ச நாளில்  தமிழக மாவட்டங்கள் எல்லாம் 
இருளும் இருள் சார்ந்த பகுதியாக அடையாளம் காணப்படலாம்.
இனி.....

வெளிநாட்டு தூதரகங்கள் ,நிறுவனங்கள் எல்லாம் விவசாயத்தையும் தொழிலையும் நமக்காக செய்யும் என எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...