Monday, October 8, 2012

போராடுவோம் போராடுவோம் கலர் கலரா சட்டை போட்டு போராடுவோம்...

குலைஞர் கருப்பு சட்டை போராட்டம் அறிவிச்சாலும் அறிவிச்சார்...தமிழ்நாடு அரசியல் வட்டாரம் சூடுப்பிடிக்குது...

கைலாபுரம் தோட்டத்தில்...

பன்புமணி: அப்பா, அப்பா எங்கப்பா இருக்க...கொஞ்சநாள் சவுண்டு இல்லாம இருந்தா மக்கள் நம்மளை மறந்துடுவாங்கப்பா..இப்ப பாரு குலைஞர் கருப்பு சட்டை போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொல்லி தொண்டர்களை உற்சாகமா வெச்சிக்கிட்டு இருக்காரு...

கோவதாஸ்: தம்பி நாம எந்த திராவிட கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம்.. திராவிட கட்சிகளை தமிழ்நாட்டில் இருந்து ஒழிப்பதே நம் வேலை...

பன்புமணி: யப்பா..நான் என்ன சொன்னா நீ என்ன சொல்ற...யப்பா போராட்டம் எதுனா டிசைன் டிசைனா அறிவிச்சி    இருக்கும் கொஞ்சம் தொண்டர்களையும் உற்சாகப்படுத்துப்பா..

கோவதாஸ்: அடிக்கடி கூட்டணி இல்லை இல்லைன்னு சொல்லி அதுவே தானா வந்துட்டுப்பா...சரி போராட்டம் தானே அறிவிச்சிடலாம்.. எல்லாரும் கருப்பு வேஷ்டி கட்டிகிட்டு போராட்டம் என்று சொல்லிடுவோமா?

பன்புமணி: யப்பா...அப்படியே காப்பி அடிச்ச மாதிரி இருக்கும்பா...வேற எதுனா வித்தியாசமா ட்ரை செய்யனும்...மொத்த தமிழ்நாடே திரும்பிபார்க்கனும்..

கோவதாஸ்: அப்ப இயற்கை ஆடை போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொல்லிடுவோமா?

பன்புமணி: யப்பா என் பையனே ஷேம் ஷேம் பப்பி ஷேம் என்று சிரிப்பான்...

கோவதாஸ்: தம்பி இயற்கை ஆடைன்னா அது இல்ல...இலை தழைய எல்லாம் வெச்சி தச்சி அதைப்போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொல்லிடுவோமா?

பன்புமணி: சூப்பர் ஐடியா..இப்படி செஞ்சா எல்லாரும் நம்மளைதான் பார்ப்பாங்க...

கோவதாஸ்: தம்பி அப்படி மொத்த தமிழ்நாடே திரும்பி பார்த்துச்சுன்னா..வரும் எம்.பி எலக்சனில் 10 சீட்டு வாங்குறோம்..உன்னை ராஜ்யசபா எம்பி ஆக்குறோம்...

பன்புமணி: திரும்ப நான் எம்பியா...

கோவதாஸ்: ஆமாம் நீ எம்பி ஆவுற.(இருவரும் 5 ஸ்டார் ரமேஷ் ,சுரேஷ் மாதிரி எம்.பி ஆவுறோம் என்று சொல்லிக்கிட்டே இருக்காங்க.)


********************
கபாலபுரம் வீட்டு முன்பு நிறைய கூட்டம்...

குலைஞர்: என்னய்யா இப்பதான் நாம ஆட்சியில் இல்லையே எதுக்கு இவ்வளோ கூட்டம் கூடியிருக்கு? பாசதலைவனுக்கு பாராட்டு விழா சீசன் 2 ன்னு எனக்கு தெரியாம எதுவும் ஏற்பாடு செஞ்சிட்டிங்களா?

ஏற்காடார்: (ஆஹா உள்ளுக்குள் இன்னும் அப்படி ஒரு ஆசை இருக்கா...அலர்ட் ஆகிக்கடா ஆறுமுகம்...) அது வந்து தலைவரே... திருப்பூர்ல இருந்து ஆளுங்க எல்லாம் வந்திருக்காங்க...உங்களை பார்த்து மனுக்கொடுக்கனுமாம்...

குலைஞர்: பாருய்யா இந்த ஆட்சியில் முதல்வரை சந்திச்சி மனுக்கொடுக்கக்கூட முடியாத நிலையில்.எக்ஸ் முதல்வர்கிட்ட மனுக்கொடுக்க வந்திருக்காங்க...

ஏற்காடார்: இல்லை தலைவரை இதை உங்ககிட்ட கொடுக்கதான் வந்திருக்காங்க..இதுக்கு நீங்கதான் உதவி செய்யமுடியுமாம்..

குலைஞர்: வரசொல்லுய்யா உதவி செஞ்சிடுவோம்...

(மனுக்கொடுக்க வந்தவங்க எல்லாம்) அய்யா நீங்கதான்யா எங்க வாழ்கையில் ஒளிவிளக்கேத்தனும்...

குலைஞர்: என்ன செய்யனும் என்று சொல்லுங்க செஞ்சிடலாம்...

ம.கொ.வ: அய்யா...கருப்பு கலர் சட்டை மட்டும் போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொன்னதை மாத்தி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கலர் சட்டை போட்டுக்கிட்டு போராட்டம் என்று அறிவிச்சா எங்கள் வாழ்கை நலமாக இருக்கும் அய்யா...

குலைஞர்: திருப்பூர் மக்களின் துயரத்தை போக்கும் வகையில் இந்த வாரம் கிளிப்பச்சை வாரம்....உடன்பிறப்பே இந்த வாரம் முழுவதும் கிளிப்பச்சையில் சட்டைப்போட்டுக்கிட்டு போராடும் படி கேட்டுக்கிறேன்...


புதுகை அப்துல்லா: தைக்கக்கொடுத்திருந்த 10 கருப்பு சட்டை ஆர்டர் கேன்சல்...இந்த வாரம் கிளிப்பச்சை வாரம்.

*******************
பாயகம் அலுவலகத்தில்...
பஞ்சில்சம்பத்:  அண்ணே...நீங்க போட்டு இருக்கும் துண்டுல இருந்து ஒரு மீட்டர் துணியை கட் செஞ்சி சட்டையா தச்சி போட்டுக்கிட்டு குலைஞர் போராட்டம் அறிவிச்சிட்டாரு...இப்படியே இருந்தா ஆளாளுக்கு ஒரு மீட்டர் கட் செஞ்சா நமக்கு கர்சீப்தான் மிஞ்சும் எதுனா செஞ்சி...புது டைப்பா போராட்டம் அறிவிச்சிடுங்க.

பைகோ: (இந்தியா மேப்ப எடுக்கிறார்...)தம்பி இந்த இடத்தில் தான் நாம இருக்கோம்...இங்கிருந்து ஆந்திரா பார்டர் 600 கி,மீ., அங்கிருந்து கர்நாடகா பார்டர் 1200 கி,மீ..அங்கிருந்து மத்திய பிரதேஷ் 3000கிமீ அங்கிருந்து டெல்லி அதுதான் நம்மளோட போராட்டம் நடக்கும் இடம்..அப்படியே நேஷ்னல் ஹைவேஸ்ஸை புடிச்சு 140 கி,மீ ஸ்பீட்ல நடந்துபோனோம் என்றால் 10 நாளில் டெல்லி போயிடலாம்..
பஞ்சில்சம்பத்: அண்ணே போராட்டம் எதுனா சொல்லுன்னா...விஜயகாந்த்படத்தில் குண்டுவைக்க வரும் தீவிரவாதி மாதிரி மேப்ப வெச்சி ஸ்கெட்ச் போட்டுக்கிட்டு இருக்க...வீ வாண்ட் மோர் எமோசன்...
பைகோ: அப்படிங்கிறீயா...சரி வுடு... வெள்ளைக்கலர் சட்டை, வெள்ளைக்கலர் வேஷ்டி, கருப்பு துண்டுடன்..அப்படியே கத்திபாரா ரோட்டை புடிக்கிறோம் பீச்சில் போய் போராடுறோம்...
பஞ்சில்சம்பத்: (போராட்டம் நடக்கும் என்று சொன்ன இடத்தில் சோகமா உட்காந்திருக்கார்..)அங்கே சோகமாக வரும் பைகோவை பார்த்து அண்ணேன்னு கதறிக்கிட்டு போகிறார்...
பைகோ: உனக்கும் அடிச்சிட்டாய்ங்களா..
பஞ்சில்சம்பத்: ஆமான்னே... நாம வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொல்லும் அன்னைக்குதான் ஹோலி கொண்டாடி நம்ம சட்டைய எல்லாம் கலர் கலரா மாத்திட்டானுங்கன்னே...
பைகோ: தம்பி...நாம உப்பு விக்கப்போனா மழை பெய்யிது...மாவு விக்கப்போனா காத்து அடிக்குது...
பஞ்சில்சம்பத்: சீட்டுக்கேட்டு போனா போயஸ் கார்டன் கதவை சாத்துது..அவ்வ்வ்வ்வ்
பைகோ: அவ்வ்வ்வ் கலங்காதே தம்பி கலங்காதே...அடுத்த மாசம் எவரஸ்ட் சிகரத்தில் போராட்டத்தை வைக்கிறோம்...எவன் நம்ம மேல கலர் அடிக்கிறான்னு பார்க்கலாம்...
பஞ்சில்சம்பத்: சிக்கநடைப்போட்டு சிகரத்தில் ஏறு....

************************************
நாங்களும் தமிழர் அலுவலகத்தில் கோமான்...
கோமான்: சட்டைய போடாதவன் தான் தமிழன்...அவன் தான் ஒரு அப்பனுக்கு பிறந்தவன் என்று பேசி சட்டையே போடாம ஒரு போராட்டத்தை அறிவிச்சிடலாமா?
அசிஸ்டெண்ட்: அண்ணே சூப்பரு...உங்க கண்ணுல கொஞ்சம் மிளகாய் பொடிய தூவுறோம்...அப்படியே கண்கள் இரத்த சிகப்பில் இருக்க நீங்க நரம்பு புடைக்க தமிழ்நாட்டில் இருக்கிறவன், சட்டை போட்டவன் எல்லாரையும் திட்டுறீங்க.. போராட்டம் செம சூடு பிடிக்குது..அங்க குலைஞரை திட்டி ஒரு சாங் வைக்கிறோம்...
ஆஹா போராட்டத்தைக்கூட சினிமா ஷூட்டிங் மாதிரியே டிஸ்கஸ் செய்யிறாய்ங்களே...நாம தப்பான இடத்துக்கு வந்துட்டோமோ?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...