Monday, April 19, 2021

சுகம் தரும் அசோகாஷ்டமி நாளை!

 சுகம் தரும் மருதாணி மரத்திற்கு வட மொழியில் அசோகம் என்று பெயர்.

பங்குனிமாத அமாவாசையிலிருந்து எட்டாவது நாளில்வரும் அஷ்டமி திதிக்கு துன்பத்தை போக்கி இன்பத்தை தரும் சக்தி உள்ளது.
சோகம் என்றால்த துன்பம். அசோகம் என்றால் துன்பமில்லாதது. அதனால் அசோகாஷ்டமி என்று பெயர்.
ஶ்ரீராமநவமிஅன்றோ அல்லது அதற்கு முதல்நாளோவரும்.
அன்றுசுத்தமான இடங்களில் மருதாணி மரங்களை பயிர்செய்விக்கலாம்.
மருதாணிமரம் இருக்கும்இடத்திற்கு சென்று அதற்கு தண்ணீர் ஊற்றலாம்.
மூன்றுமுறை வலம்வரலாம்.
முட்கள்இல்லாமல் ஏழுமருதாணி இலைகளை பறித்து அதை கீழ்கண்ட ஸ்லோகம் வாயில்போட்டு மென்றுசாப்பிடலாம்.
த்வாம சோக நராபீஷ்ட மது மாஸ ஸமுத்பவ;
பிபாமி சோக ஸந்தப்தோ மாம் அசோகம் ஸதாகுரு.
ஓ மருதாணி மரமேஉனக்கு அசோகம் (துன்பத்தை போக்குபவன்) எனப்பெயர்அல்லவா. மதுஎன்னும் வஸந்தகாலத்தில்நீ உண்டாகிஇருக்கிறாய்.
நான்உனது அருளைபெறுவதற்காகஉனதுஇலைகளை சாப்பிடுகிறேன். நீ , பலவித துன்பங்களால் எரிக்கப்பட்டவனாய் இருக்கும் எனது துன்பங்களைவிலக்கி வஸந்தகாலம் போல் எவ்வித துன்பம்இல்லாமல்என்னை எப்போதும் பாதுகாப்பாயாக.. என்பது இதன் பொருள்.
இதைசொல்லி மருதாணிஇலைகளைசாப்பிடவேண்டும். இதனால் நம் உடலில் தங்கி இருக்கும் பற்பலநோய்கள், துன்பத்திற்கு காரணமான பாபங்களும் விலகுகிறது என்கிறது லிங்கபுராணம்.
மருதானிமரத்திற்குவடமொழியில்அசோகம்என்றுபெயர். ராவணன்இலங்கையில்சீதையைமருதாணிமரம்அடர்ந்தகாட்டில்சிறைவைத்தான்.
அரக்கிகளைபாதுகாப்பிற்குவைத்துஅவர்களைபயமுறுத்தசொன்னான்.
அரக்கிகளும்சீதையைபயமுறுத்தினார்கள். இதனால்பதிவிரதையானசீதாதேவிபத்துமாதங்களும்மிகதுன்பத்தைஅநுபவித்தாள். தனதுதுன்பங்களைசீதாதேவிஇந்தமருதாணிமரங்களிடம்சொல்லிஅழுதுகொண்டிருந்தாள்.
அந்தசீதாதேவியின்கதறலைகருணையோடுகேட்டஅசோகமரங்களும்தனதுகிளைகளாலும்இலைகளாலும்சீதையைசமாதானபடுத்தின. மரங்களும்சீதையைதுன்பத்திலிருந்துகாப்பாற்றுமாறு கடவுளை ப்ரார்தித்தன.
இறுதியில்சீதாராமர்அயோத்திக்குவந்துபட்டாபிஷேகம்செய்துகொண்டார். அப்போதுசீதைஇந்தஅசோகமரங்களைநோக்கிதங்களுக்குஎன்னவரம்வேண்டும்எனகேட்டார்.
பதிவிரதையானதங்களுக்குவந்தஇந்ததுன்பம்வேறுயாருக்கும்வரக்கூடாது, குறிப்பாக பதிவிரதைகளுக்கு வரக்கூடாது எனக்கேட்கசீதாதேவியும் மருதாணிமரங்களான உங்களையார்ஜலம்விட்டு வளர்க்கிறார்களோ , பூஜிக்கிறார்களோ, உன்இலையைகைகளில் பூசிகொள்கிறார்களோ, உன்இலைகளையார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்த துன்பமும்நேராது என்றுஶ்ரீராமரின் அனுமதியுடன் வரமளித்தாள்.
ஆகவேதான்திருமணம்போன்றசுபநிகழ்ச்சிகளில்மருதாணிஇலைகளைஅறைத்துகைகளில்பூசிகொள்கிறார்கள்.
சீதாதேவிமருதாணிமரங்களுக்குவரமளித்தநன்னாலேஅசோகாஷ்டமிநாளாகும்.
மேலும் சைத்ர மாதம் சுக்லபட்ச அஷ்டமி நாளில், பவானியாக வெளிப்பட்டாள் அம்பிகை. அந்த நாளே, “பவானி ஜயந்தி” என விசேஷமாக கொண்டாப்படுகிறது.
அந்த நாளில், பவானியை, அர்ச்சித்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும். அவரை சோகம் அண்டாமல் வாழ்க்கை ஆனந்தமாக அமையும் என்கிறது காசி காண்டம்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம் !
May be an image of standing and text that says 'Apr.12,2019 PhotoDirector'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...