Sunday, April 11, 2021

பிள்ளை வரம் அருளும் சுவாமி மலை.

 இனிய இல்லற வாழ்வில் இறைவன் திருவருளால்தான் மகப்பேறு வாய்க்கும்.

அருணகிரியார் திருப்புகழில் பாடிப் போற்றிய எந்தத் தலத்திலும் அன்றி, திருவேரகம் என்னும் இந்த சுவாமிமலையில் அருள்பாலிக்கும் சுவாமிநாதப் பெருமானிடம் ஒரு பிரார்த்தனை வைக்கிறார். என்ன தெரியுமா?
‘முருகப் பெருமானே ஓர் குழந்தை வடிவில் பத்து மாதம் மனையாளின் கர்ப்பத்தில் வந்து பிறந்து உச்சி மோந்து கொஞ்ச வேண்டும். தோளில் உறவாடியும், மடியில் விளையாடியும், மணிவாயால் முத்தம் கொடுக்க வேண்டும்’ என்று வேண்டுகிறார் அருணகிரியார்.
‘‘ஏரக வெற்பெனும் அற்புதமிக்க சுவாமிமலைப் பதி” என்று தீர்மானமாக அருணகிரியார் போற்றும் இத்தலம் மலையே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் கட்டு மலையில் உருவான கவின்மிகு திருக்கோயில். இங்குதான், ‘திரு எழுகூற்றிருக்கை’ என்னும் சித்ரகவியை பாடியுள்ளார் அருணகிரி. சுவாமிமலையில் உள்ள குருபரன் பதினாறு உலகத்தினில் உள்ள பக்தர்கள் எதை நினைத்தாலும் அதனை முழுதும் அளித்து அருள்பவன் என்கிறார். தனக்கு திருவடிகாட்டி அருளிய ஒப்பற்ற முருகன் என்றும் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.
தமிழ்நாட்டில் சுவாமிமலை என்ற பெயரில் அமைந்த பழைமையான திருத்தலம் இது ஒன்றுதான். ‘ஸ்வாமி’ என்பது முருகனுக்கே உரிய திருப்பெயர் என்பதை அமரகோசம் என்னும் நிகண்டு குறிப்பிடுகிறது. ‘ஸ்வயம்’ என்றால் எல்லாவற்றையும் தன்னகத்தே உடையவர் என்று பொருள்.
ஜெகமாயை உற்றென் அகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பம் உடலூறித்
தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாய் அளித்த பொருளாகி
மகவாவின் உச்சி விழிஆன னத்தில்
மலைநேர் புயத்தில் உறவாடி
மடிமீ தடுத்து விளையாடி நித்தம்
மணிவாயின் முத்தி தரவேணும்
இந்த ஞானபண்டிதனிடம் ‘ஞானப் புதல்வனைப்’ பெற்று இன்புறலாம் அல்லவா? அதுமட்டுமா! அவனிடம் சகல செல்வயோகமிக்க பெருவாழ்வும். சிவஞான முத்தியும் வேண்டிப் பெறலாம். அதற்கு மேற்காணும் திருப்புகழ் பாடல் உங்களுக்கு உதவும்.
May be an image of 2 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...