Tuesday, April 20, 2021

இதுவே ஒரு இந்துவா இருந்து இருந்தா டிவிலா தவைப்பு செய்தியா போட்டு இருப்பானுங்கா.

 ஆவடி அடுத்த மோரை நியூ காலனியை சேர்ந்தவர் ஸ்காட் டேவிட் (53). கிறிஸ்தவ மத போதகர். இவர், இதே பகுதி திருமலை நகரில் சர்ச் நடத்தி வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவருக்கும், ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு, சாலோம் நகரை சேர்ந்த 48 வயது பெண்ணுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த பெண் தனது குடும்ப கஷ்டங்களை டேவிட்டிடம் கூறியுள்ளார். அதற்கு அவர், ''ஜெபம் செய்தால் கஷ்டங்கள் தீர்ந்து விடும்,'' என அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். மேலும், அவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று ஜெபம் செய்து வந்துள்ளார். அப்போது அவர் அந்த பெண்ணிடம், 'எங்களது சர்ச்சுக்கு வந்து பிரார்த்தனை செய்யுங்கள் கஷ்டங்கள் முழுமையாக தீரும்,' என கூறி உள்ளார்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி அந்த பெண் திருமலை நகரில் உள்ள அவரது சர்ச்சுக்கு தனியாக சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது, அங்கு இருந்த ஸ்காட் டேவிட், திடீரென அவரை பின்னால் வந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டு அலறியுள்ளார். அதன் பிறகு, அந்த பெண் அங்கிருந்து வெளியே ஓடி வந்துள்ளார். மேலும், இதுகுறித்து அந்த பெண் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மத போதகர் ஸ்காட் டேவிட்டை நேற்று காலை கைது செய்தனர்.
May be an image of 1 person and text that says "சர்ச்சில் பிரார்த்தனை செய்தபோது பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர் கைது"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...