Friday, April 30, 2021

பலர் கூறக் கேட்டது.

 பெண்_பார்க்கும்_படலத்தில்

அனுபவப் பட்டவர்களின் சர்வே ரிப்போர்ட்.
பலர் கூறக் கேட்டது.
கொஞ்சம் படித்து, ரசித்து வாய்விட்டுச் சிரித்துத்தான் பாருங்களேன்! வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்! நிச்சயமாக ஆயுளும் கூடும்!
1 மாப்பிள்ளயின் உயரம் ஒரு சென்டிமீட்டர் கம்மியா இருக்கு- வேண்டாம்!
2 போலீஸ் மாப்பிள்ளை – வேண்டாம்!
3 வக்கீல் மாப்பிள்ளை – வேண்டாம்!
4 சொந்த பிசினெஸ்ஸா ? ஏகப் பட்ட கடன் இருக்கலாம் – அதனால் வேண்டாம்!
5 எட்டாம் தேதியில் பிறந்திருக்கார் – அதனால் வேண்டாம்!
6 தலைப் பையனுக்கும் தலைப் பெண்ணிற்கும் ஆகாது- வேண்டாம்!
7 விசாகம் நட்சத்திரம் மூத்த மைத்துனருக்கு ஆகாது – வேண்டாம்!
8 மூலம் கண்டிப்பாய் ஆகாது- வேண்டாம்!
9 பையன் ரொம்ப கட்டையா இருக்கான் – வேண்டாம்!
10 காக்கா கருப்பு பரவாயில்லை , அதை விடக் கருப்பா இருக்கார்- வேண்டாம்!
11 மாப்பிள்ளை சிவப்பு தான் , ஆனால் லட்சணம் இல்லை- வேண்டாம்!
12 ஜாதகம் சரியில்லை , அதனால் வேண்டாம்!
13 சுக்கிரன் ராகு சேர்ந்து இருக்கு – அதனால் வேண்டாம்!
14 ராகு கேது தோஷம் இருக்கு – வேண்டாம்!
15 கால சர்ப்ப தோஷம் கடுமையாய் இருக்கு – வேண்டாம்!
16 குண்டு உடம்பாய் இருக்கு – அதனால் வேண்டாம்!
17 வயசு வித்தியாசம் ரொம்ப சாஸ்தியா இருக்கு – வேண்டாம்!
18 ஒரே பையன் தான் , அம்மா செல்லம் போல – அதனால் வேண்டாம்!
19 ரொம்பப் பெரிய இடமா இருக்கு – அதனால் வேண்டாம்!
20 குடியிருக்க வீடு கூட இல்லை – அதனால் வேண்டாம்!
21 பையன் வாங்கிற சம்பளம் வாடகைக்கே பத்தாது – அதனால் வேண்டாம்!
22 குடும்பப் பின்னணி சரியில்லை – அதனால் வேண்டாம்!
23 நாங்க சைவம் – நீங்க அசைவம் – அதனால் இப்போது ஐடியா இல்லை!
24 நம்மள விட ஜாதி அந்தஸ்த்தில் கொஞ்சம் கம்மி – வேண்டாம்!
25 படிப்பு பத்தாது – அதனால் வேண்டாம்!
26 ஒல்லிக் குச்சியா இருக்கார் – ஆகாது!
27 இந்தப் பையனை ஏற்கனவே பாத்திட்டோம் – வேண்டாம்!
28 ஒரு பொண்ணு அவங்க வீட்டில திரும்பி வந்துடுச்சு – அதனால் வேண்டாம்!
29 சும்மா தான் பதிவு பண்ணி வச்சோம்- அவசரம்னா வேற இடம் பார்த்துக்குங்க!
30 கப்பலில் வேலை ? எப்ப வீட்டுக்கு வருவான்னு தெரியாது – வேண்டாம்!
31 மாப்பிள்ளையோட அப்பா சுத்த தண்ணீர் வண்டி போல வேண்டாம்!
32 ஒரு சில பொண்ணு வீட்டுக் காரங்க தங்களைப் பற்றிய விவரம் கொடுக்கும் போது , நிபந்தனைகள் மற்றும் சில விதிகள் கூறி ஜாதகம் கொடுப்பார்கள்.
லக்கினத்தில் சனி செவ்வாய் சேரக் கூடாது ., இரண்டில் சனி, ஐந்தில் சனி , ஏழில் சனி , சனி – செவ்வாய் சேரக் கூடாது ., சூரியன் -செவ்வாய் எந்தக் கட்டத்திலும் சேரக் கூடாது. இரண்டு-எட்டில் ராகு கேது இருக்கக் கூடாது!
33 தமிழ் நாட்டு எல்லை தாண்டித் தர மாட்டோம் -வேற இடம் பார்த்துக்கோங்கோ!
34 ஜாதகத்தை மாற்றிக் கொடுத்திட்டாங்க – ஆரம்பமே இப்படியா ?
35 ரொம்ப காலமாய் ஜாதகம் மார்க்கெட்டில் சுத்துது – வேண்டாம்!
36 படிப்பிலே பொய் சொல்லிட்டாங்க – வேண்டாம்!
37 மாப்பிள்ளை வீட்டார் வருமானம் இன்றி இருக்கும் போது பெண்ணின்!
வருமானத்தில் காலம் ஓட்டினால் கண்டிப்பாய் பெண் தர மாட்டோம்!
38 பத்து ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி வாங்கிட்டுத் கொடுப்போம்- சம்மதமா?
39 மாப்பிள்ளை கொஞ்சமாகத் தான் குடிப்பானாம் – அதனால் வேண்டாம்!
40 பழைய காதலி இன்னும் தொடர்பில் தான் இருக்கிறாள் – அதனால் வேண்டாம்!
41 ஜாதகத்தில் எதிர்காலம் கேள்விக் குறியாக இருக்கு – அதனால் வேண்டாம்!
42 பெண்ணின் படிப்புக்கு மாப்பிள்ளை படிப்பு கம்மியாக இருக்கு – வேண்டாம்!
43 பெண் வீட்டில் நல்ல வசதி -பையன் வீட்டில் கம்மி- வேண்டவே வேண்டாம்!
44 தை மாசம் தலைக் கல்யாணம் செய்ய மாட்டோம்!
45 பிறந்த மாசத்தில் கல்யாணம் ஆகாது – வேண்டாம்!
46 அக்கினி நட்சத்திரம் கல்யாணம் ஆகவே ஆகாது!
47 கார்த்திகை தீபம் வந்துருச்சு -அப்புறம் பாத்துக்கலாம் – அதனால் வேண்டாம்!
48 இதை எல்லாம் தாண்டி வருபவர்களுக்கு சிவப்புக் கம்பளம் வரவேற்பு உண்டு!
49 அரசு உத்தியோகம் மற்றும் வங்கி வேலையைத் தவிர மற்றவர்கள் அணுக வேண்டாம்!
50 வாடகை நிறைய வருதுன்னு சொல்லிட்டு வண்டி ஒட்டுகிறவர்கள் வரவே வேண்டாம்!
51 விவசாயத்தை நம்பி பெண் கொடுக்கிற மாதிரி ஐடியா இல்லை!
52 கோவிலில் பூ கேட்டுப் பார்த்தோம் , சாமியே சம்மதிக்க வில்லை என்று மொத்தத்தையும் ரிட்டன் செய்து விடுவார்கள்!
53 இன்னும் விட்டுப் போன விஷயங்கள் நிறைய உண்டு – அதை நீங்கள் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
54 எங்க ஜாதி தவிர வேற ஜாதிக்கு இட ஒதுக்கீடு இல்லை ( இங்கேயும் வந்துட்டிங்களா ?)
55 ரொம்ப தூரமா இருக்கு ? நாங்க இங்க பக்கத்தில தான் பார்க்கிறோம்
56 இந்த பொண்ணு வீட்டுக் காரங்கிட்ட பேசிப் பேசியே ., அப்படி என்ன கேட்டுப் போய்ட்டாங்க! இந்தப் பையனின் கல்யாணம் முடிந்தவுடன் பாகப் பிரிவினை பண்ணி சொத்தை மாத்திக் கொடுத்திருவீங்களா ?🍁🍁🍁🍁

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...