Wednesday, April 21, 2021

சென்னை திரும்பினார் ஸ்டாலின்.

 கொடைக்கானலில் குடும்பத்துடன் ஐந்து நாட்கள் ஓய்வில் இருந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று சென்னை திரும்பினார்.

 சென்னை திரும்பினார்  ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஏப்ரல், 16ல், ஸ்டாலின் குடும்பத்தினருடன் வந்தார். பாம்பார்புரம் தனியார் சொகுசு விடுதியில் தங்கினார். மன்னவனுார் ஆட்டுப் பண்ணையில் முயல், செம்மறி ஆடுகளை, குடும்பத்துடன் பார்த்து ரசித்தார்.இதர நாட்களில், பேரக் குழந்தைகளுடன் விடுதி உள்விளையாட்டு அரங்கில் பொழுது போக்கினார்.

ஐந்து நாட்கள் ஓய்வுக்குப் பின், நேற்று மதியம், 2:45 மணிக்கு, விடுதியில் இருந்து காரில் குடும்பத்தினருடன் புறப்பட்ட ஸ்டாலின், மதுரை விமான நிலையம் சென்றார்.அங்கிருந்து இரவு, 7:00 மணிக்கு சென்னை கிளம்பினார். கொடைக்கானலில் தங்கியிருந்த நாட்களில், கட்சியினர் யாரையும் அவர் சந்திக்கவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...