Wednesday, April 28, 2021

இறுதிக் கட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையக் கட்டுமானப் பணி.

 கட்டுமானப் பணிகள் நடைபெறும் சத்திரம் பேருந்து நிலையம்.

ரூ. 17.34 கோடியில் கட்டப்படும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
மாநகராட்சியின் ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குள்பட்ட சத்திரம் பேருந்து நிலையமானது 2.95 ஏக்கரில் உள்ளது. நாளொன்றுக்கு 285 பேருந்துகள் 4 நடையாக மொத்தம் 1,140 நடைகள் வந்து செல்கின்றன.
1979ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்தப் பேருந்து நிலையம் போதிய நடைபாதை வசதியில்லாமல், மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன், 15 பேருந்துகளை மட்டுமே நிறுத்தும் வகையில் இருந்தது. மேலும் பயணிகள் ஓய்வறை, பொருள்கள் பாதுகாப்பறை உள்ளிட்ட வசதிகளும் இல்லை. அணுகு சாலையிலும் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
எனவே பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளுடன், பேருந்துகள் சிரமமின்றி எளிதில் வந்து செல்லவும், நெரிசலைக் குறைக்கும் வகையிலும் இந்தப் பேருந்து நிலையத்தை ரூ.17.34 கோடியில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு, பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் பணிகள் தொடங்கின.
30 பேருந்துகளை நிறுத்தலாம்: புதிய பேருந்து நிலையமானது 30 பேருந்துகள் நிறுத்தும் வகையில் இரு தளங்களாக கட்டப்படுகிறன. தரைத்தளத்தில் 30 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 11 கடைகள், தாய்மாா்கள் பாலூட்டும் அறை, பொருள்கள் பாதுகாப்பறை, ஓய்வறை, கழிப்பிடம் அமையவுள்ளது.
முதல் தளத்தில் 17 கடைகள், 5 உணவகங்கள், காவல் உதவி மையம், கழிப்பிடம் அமைகிறது. இதுமட்டுமல்லாது, தரைத்தளத்தில் 350 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் கட்டப்படுகிறது.
இறுதிக்கட்டப் பணி: கடந்தாண்டு கரோனாவால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பின்னா் அளிக்கப்பட்ட தளா்வுகளைத் தொடா்ந்து பணிகளை மாநகராட்சி மீண்டும் விரைவுபடுத்தியது. மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், மாநகராட்சிப் பொறியாளா் உள்ளிட்டோா் அவ்வப்போது பணிகளை பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தியதன்பேரில் தற்போது, பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
கான்கிரீட் மேல்தளப் பூச்சு முடிந்துள்ளது. தரைத்தளப் பகுதியில் 90 சதத்துக்கும் மேற்பட்ட பணிகள், வாகன நிறுத்தப் பகுதியில் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளன. தாய்மாா்கள் பாலூட்டும் அறை, பொருள்கள் பாதுகாப்பறை, ஓய்வறை, கழிப்பிடம் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பேருந்துகள் செல்லும் இடம் குறித்த அறிவிப்பு பலகை, குடிநீா், மின் விளக்கு வசதி உள்ளிட்ட பணிகள் நிலுவையில் உள்ளன. ஒட்டுமொத்தமாக 90 சத பணிகள் முடிந்துள்ளன. இதரப் பணிகளையும் முடிந்து பேருந்துநிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.
May be an image of outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...