Saturday, September 29, 2012

கலைஞரிடம் 12 கேள்விகள்? 0 பதில்கள்!

காங்கிரசின் கொள்கையும், திமுக கொள்கையும் ஒன்றா? எதில் மாறுபட்டு இருக்கின்றது? 12 கேள்விகளை கேட்டுப் பார்த்தோம்...பதில் உங்களை போன்றே நாங்களும் ஆவலில்???



  1. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசிற்கு வாக்கு சேகரிப்பீர்களா, இல்லை திமுக விற்கு வாக்கு கேட்பீர்களா?
  2. 1 .5 லட்சம் ஈழத் தமிழர்களை கொன்றது சரி என்று சொல்கின்றது காங்கிரஸ், திமுக வின் கொள்கையும் அதுதானா?
  3. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை கொண்டு வந்தே தீருவோம் என்கின்றது...திமுக வின் நிலையம் அதுதானா?
  4. திமுக வின் அடுத்த தலைவர் யார்? பேராசிரியர் அன்பழகனா? ஸ்டாலினா? அல்லது அழகிரியா? அல்லது கட்சிக்காக உங்கள் குடும்பத்துக்காக சிறைக்கெல்லாம் சென்று வந்த கனிமொழியா?
  5. டீசல் விலை ஏற்றம் மற்றும் சிலிண்டர் மானியம் கட்டுப்பாட்டினில் திமுக முழு ஆதரவா?
  6. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு தமிழக மக்களுக்கு ஆதரவா? எதிர்ப்பா?
  7. காவிரி நதிநீர்ப் பிரச்சினை விசயமாக தமிழ் நாட்டிற்கு என்ன செய்யப் போகின்றீர்கள்? தமிழ் நாட்டிற்கு பேசுவீர்களா? அல்லது கரு நாடகா விற்கு ஆதரவா?
  8. தமிழ் நாட்டு சட்டம் ஒழுங்கை ப்பற்றி அதிகமாக கவலைப்படும் நீங்கள், உங்கள் ஆட்சியில் நடந்த தொடர் கொள்ளைகளில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எத்தனை பேரை கைது செய்து உள்ளே அடைத்தீர்கள்??
  9. உங்கள் ஆட்சியில் இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை உங்கள் அமைச்சர்கள் முன்னிலையில் துடி துடிக்க கொல்லப்பட்டு இறந்தாரே...அதற்க்கு நீங்கள் கொடுத்த தண்டனை என்ன? ஆகத்து 30 , இல் உங்கள் கட்சி மந்திரி மாலைராஜா தலித் இனத்தை சார்ந்த காளியப்பனை தாக்கியதற்கு நீங்கள் அளித்த தண்டனை என்ன?
  10. கிரானைட் ஊழலில் தற்போது பதுங்கி இருக்கும் உங்கள் அழகிரி மகனின் நடவடிக்கை குறித்து நீங்கள் சொல்ல போவது என்ன? உங்கள் ஆட்சியில்தானே அந்த ஊழல் நடந்து இருக்கின்றது?? இல்லை என்று மறுக்க முடியுமா?
  11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக பிப்ரவரி 19  சட்டத்திற்கும், நீதிக்கும் பெரும் வன்முறை வெடித்ததே..அதை உங்களால் தடுக்க முடிந்ததா?
  12. ஒவ்வொரு நாளும் என் இன மீனவச் சமுதாயம் இலங்கையால் கொல்லப்பட்டார்களே...ஏன் என்று கேட்க உங்களுக்கு துணிவிருந்ததா?
முக்கிய குறிப்பு..மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம்...நான் கண்டனம் தெரிவித்து விட்டேன், கவிதை எழுதி விட்டேன்..எனது நாளேட்டில் கருத்து தெரிவித்து விட்டேன்..பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டேன் என்று சொன்னதையே சொல்லாமல் வேறு ஆக்கப்பூர்வமான பதில்களை எதிர்பார்க்கின்றோம்...கிடைக்குமா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...