Friday, September 7, 2012

கலைஞர் ஆட்சியின்போது, கிரானைட் கம்பெனியிடம் பணம் பெற்ற செயலாளர் …வெளிவந்திருக்கும் தகவல் !

கலைஞர் ஆட்சியின்போது வீட்டு வசதி வாரியத்தில் -
வீடு மற்றும் நில ஒதுக்கீடு சம்பந்தமாக நடைபெற்ற சில
முறைகேடுகளை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ்
பெற்று வெளியிட்டு பெரும் பரபரப்பு ஏற்படுத்தினார்  
சமூக ஆர்வலர் திரு.கோபாலகிருஷ்ணன்.
அவர் மூலமாகவே இப்போது கிரானைட் ஊழல் தொடர்பான
சில பரபரப்பான விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன.
இப்போது வெளிவந்திருக்கும் விவரங்கள் -
கலைஞரின் 3 செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய
திரு தேவராஜ் என்பவரின் மகள் தீபா என்பவரின் பெயரில்
வீட்டு வசதி வாரியத்தின் சென்னை திருவான்மியூர்
புறநகர்த் திட்டத்தின் அடிப்படையில் கலைஞர் ஆட்சியின்
போது  ஒரு வீட்டு மனை ஒதுக்கப்பட்டிருக்கிறது.
காமராஜ் நகர்  ஏரியாவில் 543 என்கிற எண்ணை கொண்ட
அந்த மனை “சமூக சேவகர்” என்று காரணம் காட்டி
தீபாவிற்கு விசேஷமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
4466 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மனை
ரூபாய் ஒரு கோடியே எட்டு லட்சத்து ஏழு ஆயிரத்து
எழுநூற்று இருபது (1,08,07,720/-)க்கு விற்பனை
செய்யப்பட்டு இருக்கிறது. விண்ணப்ப மனுவில் தீபா
தன் தந்தையின் ரேஷன் கார்டையும் சான்றிதழாக
அளித்திருக்கிறார். இதற்கான விற்பனை ஒப்பந்தம்
11/02/2009 அன்று போடப்பட்டிருக்கிறது. அதில்,
தீபா தன் புகைப்படத்தை ஒட்டி கையெழுத்தும்
போட்டிருக்கிறார்.
இந்த மனைக்கான தொகை மொத்தம் 5 தவணைகளில்
செலுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான முதல் தவணையை
இவர் கொடுக்கவில்லை. இவர் சார்பாக மதுரையைச்
சேர்ந்த ஒரு கிரானைட் நிறுவனம் கொடுத்திருக்கிறது !
முதல் தவணையாக  43,50,000/- ரூபாயை
(நாற்பத்துமூன்று லட்சத்து ஐம்பதாயிரம்) மதுரையைச்
சேர்ந்த ஸ்ரீ முருகன் எண்டர்ப்ரைசஸ் என்கிற கிரானைட்
நிறுவனத்தால், செக் மூலம், (ஒரு லெட்டர்
ஹெட் பேப்பரில், செக் நம்பரையும் குறிப்பிட்டு)
12/07/2008 அன்று செலுத்தப்பட்டிருக்கிறது ! அதை
ஏற்றுக் கொண்டு வீட்டு வசதி வாரியம் 15/07/2008
அன்று ரசீதும் கொடுத்திருக்கிறது. இது ஒரு பக்கோடா
கம்பெனி என்பது லெட்டர் ஹெட் லட்சணத்தைப்
பார்த்தாலே தெரிகிறது.(ஒளி நகல் கீழே)
இந்த கிரானைட் நிறுவனம், அன்றையதினம் முதல்வராக
இருந்தவரின் செயலாளரின் மகளுக்காக இவ்வளவு பெரிய
தொகையை செலுத்தியது  ஏன்  என்கிற கேள்வி
இப்போது எழுந்திருக்கிறது !
- எப்போதோ படித்த அவ்வையார்  பாடல்
வரிகள் இப்போது  நினைவிற்கு வருகின்றன.
“நெல்லுக்கிரைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே  பொசியுமாம்”  
“புல்”லுக்குப் பொசிந்திருப்பது மேலே பார்க்கும்போது
தெரிகிறது !
அப்படியானால் “நெல் … ?”
உங்களுக்கு எதாவது தோன்றுகிறதா ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...