Saturday, September 22, 2012

வலியப் போய் உறவாடும் இந்தியா… திரும்பத் திரும்ப அவமானப்படுத்தும் இலங்கை…!


டெல்லி: இலங்கை நமது நட்பு நாடு, உறவு நாடு, பாரம்பரிய நட்பு உள்ள நாடு என்று வாய் கிழிய இந்தியத் தலைவர்கள் பேசி வருகிறார்கள்.
ஆனால் மறுபக்கம் இலங்கையோ, இந்தியாவை பகை நாடாகவே பார்க்கிறது. இந்தியாவின் பரம விரோதியான சீனாவுக்கு ஒப்பந்தங்களையும் திட்டங்களையும் தூக்கிக் கொடுத்து வருகிறது. இலங்கையை கிட்டத்தட்ட சீனாவுக்கு திறந்திவிட்டிருக்கும் இலங்கை, புதிதாக சீனாவுடன் 16 முக்கிய ஒப்பந்தங்களை போட்டுள்ளது.
இலங்கையுடன் நெருக்கமாக இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ள ரொம்பவே மெனக்கெடுகிறது இந்தியா. ஆனால் இலங்கையோ சீனாவுடன்தான் ரொம்பவே உறவாடி வருகிறது. இந்தியாவுக்கு எந்தத் திட்டத்தையும் கொடுக்க யோசிக்கும் இலங்கை, சீனா கேட்டால் மட்டும் உடனே தூக்கிக் கொடுத்து விடுகிறது. இப்போது பாகிஸ்தான்தான் உண்மையான நட்பு நாடு என்று வேறு ராஜபக்சே முழங்கியிருக்கிறார்,
இந்தியா கேட்டு வந்த பல முக்கியத் திட்டங்களையும் தர மறுத்த இலங்கை அவற்றை சீனாவுக்கே கொடுத்து இந்தியாவை கடும் கோபத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் இலங்கைக்கு சமீபத்தில் சீனத் தலைவர் வூ பங்குவோ விஜயம் செய்தபோது முக்கியமான 16 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களாகும். ஒப்பந்தங்களின் மொத்தத் தொகை 760 பில்லியன் அமெரிக்க டாலர்.
வூ பங்குவோ என்பவர் அதிபர் ஹூ ஜின்டாவோவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆவார். ஈழத்தில் போரை இலங்கை முடித்த பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள முதல் சீன முக்கியத் தலைவர் இந்த பங்குவோ.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் ஆசியாவின் அற்புதமாக இலங்கை மாறும் என்றும் சீனா வர்ணித்துள்ளது. இது இந்தியாவுக்கு கவலை தரக் கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை.
விசா விதி விலக்கு, கடலோர மேம்பாடு, பொருளாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ஏற்றுமதி, இறக்குமதி முதலீடுகள் உள்ளிட்டவை இந்த ஒப்பந்தங்களில் சில.
இவரது வருகைக்கு முன்பாக சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங் லீ வந்து போயிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இலங்கை மீது தாங்கள் வைத்துள்ள அரசியல் நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவது போல இந்த ஒப்பந்தங்கள் அமைந்துள்ளதாக சீனா கூறியுள்ளது. மேலும், சீனாவை மிகப் பெரிய சக்தியாக மாற்றும் வகையிலான ஒப்பந்தங்களாக இவை அமைந்துள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.
மறுபக்கம், ஒவ்வொரு ஆண்டும் சீனா- இலங்கை இடையிலான வர்த்தக அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. 2011ல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக அளவு 3.14 பில்லியன் டாலராக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 49.8 சதவீதம் அதிகமாகும்.
இலங்கையில் நடந்து வரும் பல்வேறு முக்கியமான கட்டுமானப் பணிகளிலும் சீனாதான் முக்கியப் பங்காற்றி வருகிறது. பிற நாடுகளுக்கு, ஏன் இந்தியாவுக்குக் கூட இதில் இடமளிப்பதில்லை இலங்கை.
மேலும் மிகப் பெரிய அளவிலான திட்டமாக இருந்தால் முதலில் சீனாவைத்தான் நாடுகிறது இலங்கை. நட்பு நாடான இந்தியாவை அது கண்டு கொள்வதே இல்லை.
இலங்கையின் இந்த செயல் இந்தியாவை அவமானத்தில் நெளிய வைத்துள்ளது. ஆனாலும் இலங்கையை இந்தியாவால் கண்டிக்க முடியவில்லை. அப்படிக் கேட்டால், இந்தியாவுக்காக நாங்கள் போரை நடத்தினோம் என பந்தை திருப்பி அடிக்கிறார் ராஜபக்சே.
ஆனால் கொஞ்சமும் வெட்கமோ உள்ளார்ந்த தர்மமோ இல்லாமல் ராஜபக்சே இந்தியா வருவதும், அவருக்கு இந்தியா உபசாரம் செய்வதும் தொடர்கிறது.
விடுதலைப் புலிகள் என்ற சக்தி இருந்தவரை, சீனா, பாகிஸ்தான் என அத்தனை இந்திய விரோத நாடுகளும் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் மூடிக்கொண்டிருந்தது, இந்திய மூட அரசியல்வாதிகளுக்கு எப்போது புரியப் போகிறதோ!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...